< யோவான் 12 >

1 பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார்.
ⲁ̅ⲓ̅ⲥ̅ ϭⲉ ϩⲁⲑⲏ ⲛ̅ⲥⲟⲟⲩ ⲛ̅ϩⲟⲟⲩ ⲉⲡⲡⲁⲥⲭⲁ ⲁϥⲉ͡ⲓ ⲉⲃⲏⲑⲁⲛⲓⲁ ⲡⲙⲁ ⲉⲛⲉⲣⲉⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲙ̅ⲙⲟϥ ⲡⲉⲛⲧⲁⲓ̅ⲥ̅ ⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ.
2 அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான்.
ⲃ̅ⲁⲩⲉ͡ⲓⲣⲉ ϭⲉ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲇⲉⲓⲡⲛⲟⲛ ⲙ̅ⲡⲙⲁ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲙⲁⲣⲑⲁ ⲇⲓⲁⲕⲟⲛⲓ. ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲇⲉ ⲛⲉⲟⲩⲁ ⲡⲉ ⲛ̅ⲛⲉⲧⲛⲏϫ ⲛⲙ̅ⲙⲁϥ.
3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.
ⲅ̅ⲙⲁⲣⲓⲁ ϭⲉ ⲁⲥϫⲓ ⲛ̅ⲟⲩⲗⲓⲧⲣⲁ ⲛ̅ⲥⲟϭⲛ ⲛ̅ⲛⲁⲣⲇⲟⲥ ⲙ̅ⲡⲓⲥⲧⲓⲕⲏ ⲉⲛⲁϣⲉⲥⲟⲩⲛⲧⲥ̅ ⲁⲥⲧⲱϩⲥ̅ ⲛ̅ⲟⲩⲉⲣⲏⲧⲉ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲁⲩⲱ ⲁⲥϥⲱⲧⲉ ⲛ̅ⲛⲉϥⲟⲩⲉⲣⲏⲧⲉ ϩⲙ̅ⲡϥⲱ ⲛ̅ⲧⲉⲥⲁⲡⲉ. ⲁⲡⲏⲓ̈ ⲇⲉ ⲙⲟⲩϩ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲥⲧⲟⲓ̈ ⲙⲡ̅ⲥⲟϭⲛ̅.
4 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
ⲇ̅ⲡⲉϫⲉⲓ̈ⲟⲩⲇⲁⲥ ⲡⲓⲥⲕⲁⲣⲓⲱⲧⲏⲥ ⲟⲩⲁ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲡⲉⲧⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙ̅ⲙⲟϥ.
5 இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான்.
ⲉ̅ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ⲙ̅ⲡⲟⲩϯⲡⲉⲉ͡ⲓⲥⲟϭⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲁϣⲙⲛⲧ̅ϣⲉ ⲛ̅ⲥⲁⲧⲉⲉⲣⲉ ⲛ̅ⲥⲉⲧⲁⲁⲩ ⲛ̅ⲛ̅ϩⲏⲕⲉ.
6 அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான்.
ⲋ̅ⲛ̅ⲧⲁϥϫⲉⲡⲁⲓ̈ ⲇⲉ. ⲉⲃⲟⲗ ⲁⲛ ϫⲉ ⲡⲉϥⲣⲟⲟⲩϣ ⲡⲉ ⲉⲧⲃⲉⲛ̅ϩⲏⲕⲉ. ⲁⲗⲗⲁ ϫⲉ ⲛⲉⲩⲣⲉϥϫⲓⲟⲩⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲉⲣⲉⲡⲉⲅⲗⲱⲥⲥⲟⲕⲟⲙⲟⲛ ⲛ̅ⲧⲟⲟⲧϥ̅ ⲛⲉϥϩⲱϥⲧ̅ ⲛ̅ⲛⲉⲧⲟⲩⲛⲟⲩϫⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉⲣⲟϥ.
7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
ⲍ̅ⲡⲉϫⲁϥ ϭⲉ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ⲁⲗⲱⲧⲛ ϩⲁⲣⲟⲥ ϫⲉ ⲉⲥⲉϩⲁⲣⲉϩ ⲉⲣⲟϥ ⲉⲡⲉϩⲟⲟⲩ ⲛ̅ⲧⲁⲕⲁⲉⲓⲥⲉ.
8 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார்.
ⲏ̅ⲛ̅ϩⲏⲕⲉ ⲅⲁⲣ ⲛⲙ̅ⲙⲏⲧⲛ̅ ⲛ̅ⲟⲩⲟⲓ̈ϣ ⲛⲓⲙ. ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛ̅ϯⲛⲙ̅ⲙⲏⲧⲛ̅ ⲁⲛ ⲛ̅ⲟⲩⲟⲓ̈ϣ ⲛⲓⲙ.
9 அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள்.
ⲑ̅ⲟⲩⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲉⲛⲁϣⲱϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲁⲩⲉⲓⲙⲉ ϫⲉ ϥⲙ̅ⲙⲁⲩ. ⲁⲩⲱ ⲁⲩⲉ͡ⲓ ⲉⲧⲃⲉⲓ̅ⲥ̅ ⲁⲛ ⲙ̅ⲙⲁⲧⲉ ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲟⲛ ⲉⲩⲉⲛⲁⲩ ⲉⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲡⲉⲛⲧⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ
10 ௧0 லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால்,
ⲓ̅ⲁⲩϫⲓϣⲟϫⲛⲉ ϭⲉ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲙⲟⲩⲟⲩⲧ ⲙ̅ⲡⲕⲉⲗⲁⲍⲁⲣⲟⲥ
11 ௧௧ பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள்.
ⲓ̅ⲁ̅ϫⲉ ⲛⲉⲣⲉϩⲁϩ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲃⲏⲕ ⲉⲧⲃⲏⲏⲧϥ ⲁⲩⲱ ⲛⲉⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲓ̅ⲥ̅.
12 ௧௨ அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு,
ⲓ̅ⲃ̅ⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲟⲩⲙⲏⲏϣⲉ ⲉⲛⲁϣⲱϥ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩⲉ͡ⲓ ⲉⲡϣⲁ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ̅ ϫⲉ ⲓ̅ⲥ̅ ⲛⲏⲩ ⲉⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ
13 ௧௩ குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள்.
ⲓ̅ⲅ̅ⲁⲩϫⲓ ⲛ̅ϩⲉⲛⲃⲁ ϩⲛ̅ϩⲉⲛⲃⲛ̅ⲛⲉ ⲁⲩⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ⲉⲧⲱⲙⲛⲧ̅ ⲉⲣⲟϥ ⲁⲩⲱ ⲁⲩⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲱⲥⲁⲛⲛⲁ. ϥⲥⲙⲁⲙⲁⲁⲧ ⲛ̅ϭⲓⲡⲉⲧⲛⲏⲩ ϩⲙ̅ⲡⲣⲁⲛ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲧⲉⲡⲓⲥⲣⲁⲏⲗ.
14 ௧௪ அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி,
ⲓ̅ⲇ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥϩⲉ ⲉⲩⲉ͡ⲓⲱ ⲁϥⲁⲗⲉ ⲉⲣⲟϥ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧⲥⲏϩ.
15 ௧௫ இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார்.
ⲓ̅ⲉ̅ϫⲉ ⲙ̅ⲡⲣ̅ⲣ̅ϩⲟⲧⲉ ⲧϣⲉⲉⲣⲉ ⲛ̅ⲥⲓⲱⲛ ϫⲉ ⲉⲓⲥⲡⲟⲩⲣ̅ⲣⲟ ⲛⲏⲩ ⲛⲉ ⲉϥϩⲙⲟⲟⲥ ⲉϫⲛ̅ⲟⲩⲥⲏϭ ⲛ̅ⲉⲓⲱ.
16 ௧௬ இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
ⲓ̅ⲋ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲙ̅ⲡⲟⲩⲉ͡ⲓⲙⲉ ⲉⲛⲁⲓ̈ ⲛ̅ϣⲟⲣⲡ̅. ⲁⲗⲗⲁ ⲛ̅ⲧⲉⲣⲉϥϫⲓⲉⲟⲟⲩ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ⲧⲟⲧⲉ ⲁⲩⲣ̅ⲡⲙⲉⲩⲉ ϫⲉ ⲛⲉⲣⲉⲛⲁⲓ̈ ⲥⲏϩ ⲉⲧⲃⲏⲏⲧϥ̅ ⲁⲩⲱ ⲛⲁⲓ̈ ⲛⲉ ⲛ̅ⲧⲁⲩⲁⲁⲩ ⲛⲁϥ.
17 ௧௭ அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள்.
ⲓ̅ⲍ̅ⲛⲉϥⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ϭⲉ ⲛ̅ϭⲓⲡⲙⲏⲏϣⲉ ⲉⲧⲛⲙ̅ⲙⲁϥ ϫⲉ ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲧⲁⲫⲟⲥ ⲁⲩⲱ ⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ.
18 ௧௮ அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
ⲓ̅ⲏ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲟⲛ ⲁⲡⲙⲏⲏϣⲉ ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲏⲧϥ̅ ϫⲉ ⲁϥⲥⲱⲧⲙ̅ ϫⲉ ⲁϥⲣ̅ⲡⲉⲓ̈ⲙⲁⲓ̈ⲛ.
19 ௧௯ அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள்.
ⲓ̅ⲑ̅ⲛⲉⲫⲁⲣⲓⲥⲁⲓⲟⲥ ϭⲉ ⲡⲉϫⲁⲩ ⲛ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ. ϫⲉ ⲧⲉⲧⲛ̅ⲛⲁⲩ ϫⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϯϩⲏⲩ ⲁⲛ ⲗ̅ⲗⲁⲁⲩ. ⲉⲓⲥⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁϥⲃⲱⲕ ϩⲓⲡⲁϩⲟⲩ ⲙ̅ⲙⲟϥ.
20 ௨0 பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்தவர்களில் கிரேக்கர்கள் சிலர் இருந்தனர்.
ⲕ̅ⲛⲉⲩⲛ̅ϩⲉⲛⲟⲩⲉⲓ̈ⲉⲛⲓⲛ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲃⲏⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲟⲩⲱϣⲧ̅ ⲙ̅ⲡϣⲁ.
21 ௨௧ அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
ⲕ̅ⲁ̅ⲛⲁⲓ̈ ϭⲉ ⲁⲩϯⲡⲉⲩⲟⲓ̈ ⲉⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲡⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲃⲏⲇⲥⲁⲓ̈ⲇⲁ ⲛ̅ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲩⲱ ⲁⲩⲥⲉⲡⲥⲱⲡϥ̅ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲧⲛ̅ⲟⲩⲱϣ ⲉⲛⲁⲩ ⲉⲓ̅ⲥ̅.
22 ௨௨ பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲉ͡ⲓ ⲁϥϫⲟⲟⲥ ⲉⲁⲛⲇⲣⲉⲁⲥ. ⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲇⲉ ⲛⲙ̅ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲁⲩϫⲟⲟⲥ ⲉⲓ̅ⲥ̅.
23 ௨௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
ⲕ̅ⲅ̅ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲩ. ϫⲉ ⲁⲧⲉⲩⲛⲟⲩ ⲉ͡ⲓ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϫⲓⲉⲟⲟⲩ ⲛ̅ϭⲓⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ.
24 ௨௪ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
ⲕ̅ⲇ̅ϩⲁⲙⲏⲛ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲉⲣⲉⲧⲙ̅ⲧⲃⲗ̅ⲃⲓⲗⲉ ⲛ̅ⲥⲟⲩⲟ ϩⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲕⲁϩ ⲛⲥ̅ⲙⲟⲩ. ϣⲁⲥϭⲱ ⲙⲁⲩⲁⲁⲥ. ⲉϣⲱⲡⲉ ⲇⲉ ⲉⲥϣⲁⲛⲙⲟⲩ. ϣⲁⲥϯⲟⲩⲕⲁⲣⲡⲟⲥ ⲉⲛⲁϣⲱϥ.
25 ௨௫ தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
ⲕ̅ⲉ̅ⲡⲉⲧⲙⲉ ⲛ̅ⲧⲉϥⲯⲩⲭⲏ ϥⲛⲁⲥⲟⲣⲙⲉⲥ. ⲁⲩⲱ ⲡⲉⲧⲙⲟⲥⲧⲉ ⲛ̅ⲧⲉϥⲯⲩⲭⲏ ϩⲙ̅ⲡⲉⲓ̈ⲕⲟⲥⲙⲟⲥ. ϥⲛⲁϩⲉ ⲉⲣⲟⲥ ⲉⲩⲱⲛϩ ϣⲁⲉⲛⲉϩ. (aiōnios g166)
26 ௨௬ ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
ⲕ̅ⲋ̅ⲉϣⲱⲡⲉ ⲟⲩⲛⲟⲩⲁ ⲛⲁⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁⲓ̈. ⲙⲁⲣⲉϥⲟⲩⲁϩϥ ⲛ̅ⲥⲱⲉ͡ⲓ. ⲁⲩⲱ ⲡⲙⲁ ⲁⲛⲟⲕ ⲉϯⲙ̅ⲙⲟϥ. ⲡⲁⲕⲉⲇⲓⲁⲕⲟⲛⲟⲥ ⲛⲁϣⲱⲡⲉ ⲙ̅ⲙⲁⲩ. ⲉⲣϣⲁⲟⲩⲁ ⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁⲓ̈. ⲡⲁⲓ̈ⲱⲧ ⲛⲁⲧⲁⲓ̈ⲟϥ.
27 ௨௭ இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன்.
ⲕ̅ⲍ̅ⲧⲉⲛⲟⲩ ⲁⲧⲁⲯⲩⲭⲏ ϣⲧⲟⲣⲧⲣ̅ ⲁⲩⲱ ⲟⲩ ⲡⲉϯⲛⲁϫⲟⲟϥ. ⲡⲁⲓ̈ⲱⲧ ⲙⲁⲧⲟⲩϫⲟⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲉⲓ̈ⲟⲩⲛⲟⲩ. ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲁⲓ̈ⲉ͡ⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲧⲉⲓ̈ⲟⲩⲛⲟⲩ.
28 ௨௮ பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது.
ⲕ̅ⲏ̅ⲡⲁⲓ̈ⲱⲧ ϯⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲉⲕⲣⲁⲛ. ⲁⲩⲥⲙⲏ ϭⲉ ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉ. ϫⲉ ⲁⲓ̈ϯⲉⲟⲟⲩ ⲁⲩⲱ ⲟⲛ ϯⲛⲁϯⲉⲟⲟⲩ.
29 ௨௯ அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
ⲕ̅ⲑ̅ⲡⲙⲏⲏϣⲉ ⲉⲧⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲉⲧⲥⲱⲧⲙ̅ ⲛⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲟⲩϩⲣⲟⲩ ⲙ̅ⲡⲉ ⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ. ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ⲛⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲡⲉ ⲛ̅ⲧⲁϥϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁϥ.
30 ௩0 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது.
ⲗ̅ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ⲛ̅ⲧⲁⲧⲉⲓ̈ⲥⲙⲏ ⲉ͡ⲓ ⲁⲛ ⲉⲧⲃⲏⲏⲧ ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉⲧⲏⲩⲧⲛ̅.
31 ௩௧ இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
ⲗ̅ⲁ̅ⲧⲉⲛⲟⲩ ⲧⲉⲕⲣⲓⲥⲓⲥ ⲧⲉ ⲙ̅ⲡⲉⲓ̈ⲕⲟⲥⲙⲟⲥ. ⲧⲉⲛⲟⲩ ⲡⲁⲣⲭⲱⲛ ⲙ̅ⲡⲉⲓ̈ⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲉⲛⲁⲛⲟϫϥ ⲉⲡⲉⲥⲏⲧ.
32 ௩௨ பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார்.
ⲗ̅ⲃ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ⲉⲩϣⲁⲛϫⲁⲥⲧ̅ ⲉⲃⲟⲗ ϩⲓϫⲙ̅ⲡⲕⲁϩ. ϯⲛⲁⲥⲉⲕⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ϣⲁⲣⲟⲉ͡ⲓ.
33 ௩௩ இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
ⲗ̅ⲅ̅ⲛⲉϥϫⲱ ⲇⲉ ⲙ̅ⲡⲁⲓ̈ ⲛⲉϥⲥⲏⲙⲁⲛⲉ ϫⲉ ⲉϥⲛⲁⲙⲟⲩ ϩⲛ̅ⲁϣ ⲙ̅ⲙⲟⲩ.
34 ௩௪ மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
ⲗ̅ⲇ̅ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ϭⲉ ⲛⲁϥ ⲛ̅ϭⲓⲡⲙⲏⲏϣⲉ ϫⲉ ⲁⲛⲟⲛ ⲁⲛⲥⲱⲧⲙ̅ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ϫⲉ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲛⲁϣⲱⲡⲉ ϣⲁⲉⲛⲉϩ. ⲁⲩⲱ ⲛ̅ⲁϣ ⲛ̅ϩⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲕϫⲱ ⲙ̅ⲙⲟⲥ̅ ϫⲉ ϩⲁⲡⲥ̅ ⲉⲧⲣⲉⲩϫⲉⲥⲧⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲣⲱⲙⲉ. (aiōn g165)
35 ௩௫ அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான்.
ⲗ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ϭⲉ ⲛⲁⲩ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅. ϫⲉ ⲉⲧⲓ ⲕⲉⲕⲟⲩⲉ͡ⲓ ⲛ̅ⲟⲩⲟⲓ̈ϣ ⲡⲉ ⲉⲣⲉⲡⲟⲩⲟⲓ̈ⲛ ϣⲟⲟⲡ ⲛⲙ̅ⲙⲏⲧⲛ̅. ⲙⲟⲟϣⲉ ϩⲟⲥⲟⲛ ⲟⲩⲛ̅ⲧⲏⲧⲛ̅ⲡⲟⲩⲟⲓ̈ⲛ ϫⲉ ⲛ̅ⲛⲉⲡⲕⲁⲕⲉ ⲧⲁϩⲉⲧⲏⲩⲧⲛ̅. ⲁⲩⲱ ⲡⲉⲧⲙⲟⲟϣⲉ ϩⲙ̅ⲡⲕⲁⲕⲉ ⲛϥ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲉϥⲛⲁ ⲉⲧⲱⲛ.
36 ௩௬ ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
ⲗ̅ⲋ̅ϩⲟⲥⲟⲛ ⲟⲩⲛ̅ⲧⲏⲧⲛ̅ⲡⲟⲩⲟⲓ̈ⲛ. ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲟⲩⲟⲓ̈ⲛ ϫⲉⲕⲁⲥ ⲉⲧⲉⲧⲛⲉϣⲱⲡⲉ ⲛϣ̅ⲏⲣⲉ ⲛ̅ⲧⲉⲡⲟⲩⲟⲓ̈ⲛ. ⲛⲁⲓ̈ ⲁϥϫⲟⲟⲩ ⲛ̅ϭⲓⲓ̅ⲥ̅ ⲁⲩⲱ ⲁϥⲃⲱⲕ ⲁϥϩⲟⲡϥ̅ ⲉⲣⲟⲟⲩ.
37 ௩௭ அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
ⲗ̅ⲍ̅ⲛⲉⲓ̈ⲙⲁⲓ̈ⲛ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲉⲁϥⲁⲁⲩ ⲙ̅ⲡⲉⲩⲙ̅ⲧⲟ ⲉⲃⲟⲗ. ⲙ̅ⲡⲟⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ.
38 ௩௮ “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ⲗ̅ⲏ̅ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲡϣⲁϫⲉ ⲛ̅ⲏⲥⲁⲓ̈ⲁⲥ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲡⲉⲛⲧⲁϥϫⲟⲟϥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲓⲙ ⲡⲉ ⲛ̅ⲧⲁϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲉⲛϩⲣⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲡⲉϭⲃⲟⲉ͡ⲓ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲛ̅ⲧⲁϥϭⲱⲗⲡ ⲉⲛⲓⲙ.
39 ௩௯ ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்:
ⲗ̅ⲑ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲙ̅ⲡⲟⲩϣϭⲙ̅ϭⲟⲙ ⲉⲡⲓⲥⲧⲉⲩⲉ ϫⲉ ⲁϥϫⲟⲟⲥ ⲟⲛ ⲛ̅ϭⲓⲏⲥⲁⲓ̈ⲁⲥ
40 ௪0 அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
ⲙ̅ϫⲉ ⲁϥⲧⲱⲙ ⲛ̅ⲛⲉⲩⲃⲁⲗ ⲁⲩⲱ ⲁϥⲧⲱⲙ ⲙ̅ⲡⲉⲩϩⲏⲧ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲉⲩⲛⲁⲩ ϩⲛ̅ⲛⲉⲩⲃⲁⲗ ⲁⲩⲱ ⲛ̅ⲥⲉⲛⲟⲉ͡ⲓ ϩⲙ̅ⲡⲉⲩϩⲏⲧ ⲛ̅ⲥⲉⲕⲟⲧⲟⲩ ⲧⲁⲧⲁⲗϭⲟⲟⲩ.
41 ௪௧ ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
ⲙ̅ⲁ̅ⲛⲁⲓ̈ ⲁϥϫⲟⲟⲩ ⲛ̅ϭⲓⲏⲥⲁⲓ̈ⲁⲥ ϫⲉ ⲁϥⲛⲁⲩ ⲉⲡⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲁϥϣⲁϫⲉ ⲉⲧⲃⲏⲏⲧϥ.
42 ௪௨ ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள்.
ⲙ̅ⲃ̅ϩⲟⲙⲟⲓⲱⲥ ⲙⲉⲛⲧⲟⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛ̅ⲁⲣⲭⲱⲛ ⲁϩⲁϩ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ. ⲁⲗⲗⲁ ⲉⲧⲃⲉⲛⲉⲫⲁⲣⲓⲥⲁⲓⲟⲥ ⲛⲉⲩϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲁⲛ ⲡⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲉⲩϣⲱⲡⲉ ⲛ̅ⲁⲡⲟⲥⲩⲛⲁⲅⲱⲅⲟⲥ.
43 ௪௩ அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்.
ⲙ̅ⲅ̅ⲁⲩⲙⲉⲣⲉⲡⲉⲟⲟⲩ ⲅⲁⲣ ⲛ̅ⲣ̅ⲣⲱⲙⲉ ⲉϩⲟⲩⲉⲡⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
44 ௪௪ அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்.
ⲙ̅ⲇ̅ⲓ̅ⲥ̅ ϭⲉ ⲁϥⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ. ϫⲉ ⲡⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲓ̈. ⲛⲉϥⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲉⲓ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲉⲡⲉⲛⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲉ͡ⲓ.
45 ௪௫ என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.
ⲙ̅ⲉ̅ⲁⲩⲱ ⲡⲉⲧⲛⲁⲩ ⲉⲣⲟⲉ͡ⲓ. ⲉϥⲛⲁⲩ ⲉⲡⲉⲛⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲉ͡ⲓ.
46 ௪௬ என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்.
ⲙ̅ⲋ̅ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲡⲟⲩⲟⲉⲓⲛ ⲉⲛⲧⲁⲉ͡ⲓ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ϫⲉⲕⲁⲥ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲉ͡ⲓ ⲛ̅ⲛⲉϥϭⲱ ϩⲙ̅ⲡⲕⲁⲕⲉ.
47 ௪௭ ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்.
ⲙ̅ⲍ̅ⲁⲩⲱ ⲉⲣϣⲁⲟⲩⲁ ⲥⲱⲧⲙ̅ ⲉⲛⲁϣⲁϫⲉ ⲛϥ̅ϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ. ⲁⲛⲟⲕ ⲛ̅ϯⲛⲁⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲙⲟϥ ⲁⲛ. ⲛⲧⲁⲓ̈ⲉ͡ⲓ ⲅⲁⲣ ⲁⲛ ϫⲉ ⲉⲉ͡ⲓⲉⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ. ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲉⲉ͡ⲓⲉⲛⲁϩⲙⲉϥ.
48 ௪௮ என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
ⲙ̅ⲏ̅ⲡⲉⲧⲁⲑⲉⲧⲓ ⲙ̅ⲙⲟⲉ͡ⲓ ⲉⲛϥ̅ϫⲓ ⲁⲛ ⲛ̅ⲛⲁϣⲁϫⲉ ⲟⲩⲛⲧϥ̅ⲡⲉⲧⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲡϣⲁϫⲉ ⲉⲛⲧⲁⲓ̈ϫⲟⲟϥ ⲛ̅ⲧⲟϥ ⲡⲉⲧⲛⲁⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲙⲟϥ ϩⲙ̅ⲡϩⲁⲉ ⲛ̅ϩⲟⲟⲩ
49 ௪௯ நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
ⲙ̅ⲑ̅ϫⲉ ⲁⲛⲟⲕ ⲛ̅ⲧⲁⲓ̈ϣⲁϫⲉ ⲁⲛ ϩⲁⲣⲟⲓ̈ ⲙ̅ⲙⲁⲩⲁⲁⲧ. ⲁⲗⲗⲁ ⲡⲁⲓ̈ⲱⲧ ⲉⲛⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ̈ ⲛ̅ⲧⲟϥ ⲡⲉ ⲛ̅ⲧⲁϥϯ ⲛⲁⲓ̈ ⲛ̅ⲟⲩⲉⲛⲧⲟⲗⲏ ϫⲉ ⲟⲩ ⲡⲉϯⲛⲁϫⲟⲟϥ ⲁⲩⲱ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲧⲁⲩⲟϥ.
50 ௫0 அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
ⲛ̅ⲁⲩⲱ ϯⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲧⲉϥⲉⲛⲧⲟⲗⲏ ⲟⲩⲱⲛϩ ϣⲁⲉⲛⲉϩ ⲧⲉ. ⲛⲉϯϫⲱ ϭⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲁⲛⲟⲕ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲛⲧⲁⲡⲁⲓ̈ⲱⲧ ϫⲟⲟⲥ ⲛⲁⲓ̈ ⲧⲁⲓ̈ ⲧⲉ ⲑⲉ ⲉϯϣⲁϫⲉ ⲙ̅ⲙⲟⲥ· (aiōnios g166)

< யோவான் 12 >