< யோவான் 1 >

1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
আদৌ ৱাদ আসীৎ স চ ৱাদ ঈশ্ৱৰেণ সাৰ্ধমাসীৎ স ৱাদঃ স্ৱযমীশ্ৱৰ এৱ|
2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
স আদাৱীশ্ৱৰেণ সহাসীৎ|
3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
তেন সৰ্ৱ্ৱং ৱস্তু সসৃজে সৰ্ৱ্ৱেষু সৃষ্টৱস্তুষু কিমপি ৱস্তু তেনাসৃষ্টং নাস্তি|
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
স জীৱনস্যাকাৰঃ, তচ্চ জীৱনং মনুষ্যাণাং জ্যোতিঃ
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
তজ্জ্যোতিৰন্ধকাৰে প্ৰচকাশে কিন্ত্ৱন্ধকাৰস্তন্ন জগ্ৰাহ|
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
যোহন্ নামক একো মনুজ ঈশ্ৱৰেণ প্ৰেষযাঞ্চক্ৰে|
7 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
তদ্ৱাৰা যথা সৰ্ৱ্ৱে ৱিশ্ৱসন্তি তদৰ্থং স তজ্জ্যোতিষি প্ৰমাণং দাতুং সাক্ষিস্ৱৰূপো ভূৎৱাগমৎ,
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
স স্ৱযং তজ্জ্যোতি ৰ্ন কিন্তু তজ্জ্যোতিষি প্ৰমাণং দাতুমাগমৎ|
9 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
জগত্যাগত্য যঃ সৰ্ৱ্ৱমনুজেভ্যো দীপ্তিং দদাতি তদেৱ সত্যজ্যোতিঃ|
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
১০স যজ্জগদসৃজৎ তন্মদ্য এৱ স আসীৎ কিন্তু জগতো লোকাস্তং নাজানন্|
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
১১নিজাধিকাৰং স আগচ্ছৎ কিন্তু প্ৰজাস্তং নাগৃহ্লন্|
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
১২তথাপি যে যে তমগৃহ্লন্ অৰ্থাৎ তস্য নাম্নি ৱ্যশ্ৱসন্ তেভ্য ঈশ্ৱৰস্য পুত্ৰা ভৱিতুম্ অধিকাৰম্ অদদাৎ|
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
১৩তেষাং জনিঃ শোণিতান্ন শাৰীৰিকাভিলাষান্ন মানৱানামিচ্ছাতো ন কিন্ত্ৱীশ্ৱৰাদভৱৎ|
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
১৪স ৱাদো মনুষ্যৰূপেণাৱতীৰ্য্য সত্যতানুগ্ৰহাভ্যাং পৰিপূৰ্ণঃ সন্ সাৰ্ধম্ অস্মাভি ৰ্ন্যৱসৎ ততঃ পিতুৰদ্ৱিতীযপুত্ৰস্য যোগ্যো যো মহিমা তং মহিমানং তস্যাপশ্যাম|
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
১৫ততো যোহনপি প্ৰচাৰ্য্য সাক্ষ্যমিদং দত্তৱান্ যো মম পশ্চাদ্ আগমিষ্যতি স মত্তো গুৰুতৰঃ; যতো মৎপূৰ্ৱ্ৱং স ৱিদ্যমান আসীৎ; যদৰ্থম্ অহং সাক্ষ্যমিদম্ অদাং স এষঃ|
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
১৬অপৰঞ্চ তস্য পূৰ্ণতাযা ৱযং সৰ্ৱ্ৱে ক্ৰমশঃ ক্ৰমশোনুগ্ৰহং প্ৰাপ্তাঃ|
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
১৭মূসাদ্ৱাৰা ৱ্যৱস্থা দত্তা কিন্ত্ৱনুগ্ৰহঃ সত্যৎৱঞ্চ যীশুখ্ৰীষ্টদ্ৱাৰা সমুপাতিষ্ঠতাং|
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
১৮কোপি মনুজ ঈশ্ৱৰং কদাপি নাপশ্যৎ কিন্তু পিতুঃ ক্ৰোডস্থোঽদ্ৱিতীযঃ পুত্ৰস্তং প্ৰকাশযৎ|
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
১৯ৎৱং কঃ? ইতি ৱাক্যং প্ৰেষ্টুং যদা যিহূদীযলোকা যাজকান্ লেৱিলোকাংশ্চ যিৰূশালমো যোহনঃ সমীপে প্ৰেষযামাসুঃ,
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
২০তদা স স্ৱীকৃতৱান্ নাপহ্নূতৱান্ নাহম্ অভিষিক্ত ইত্যঙ্গীকৃতৱান্|
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
২১তদা তেঽপৃচ্ছন্ তৰ্হি কো ভৱান্? কিং এলিযঃ? সোৱদৎ ন; ততস্তেঽপৃচ্ছন্ তৰ্হি ভৱান্ স ভৱিষ্যদ্ৱাদী? সোৱদৎ নাহং সঃ|
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
২২তদা তেঽপৃচ্ছন্ তৰ্হি ভৱান্ কঃ? ৱযং গৎৱা প্ৰেৰকান্ ৎৱযি কিং ৱক্ষ্যামঃ? স্ৱস্মিন্ কিং ৱদসি?
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
২৩তদা সোৱদৎ| পৰমেশস্য পন্থানং পৰিষ্কুৰুত সৰ্ৱ্ৱতঃ| ইতীদং প্ৰান্তৰে ৱাক্যং ৱদতঃ কস্যচিদ্ৰৱঃ| কথামিমাং যস্মিন্ যিশযিযো ভৱিষ্যদ্ৱাদী লিখিতৱান্ সোহম্|
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
২৪যে প্ৰেষিতাস্তে ফিৰূশিলোকাঃ|
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
২৫তদা তেঽপৃচ্ছন্ যদি নাভিষিক্তোসি এলিযোসি ন স ভৱিষ্যদ্ৱাদ্যপি নাসি চ, তৰ্হি লোকান্ মজ্জযসি কুতঃ?
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
২৬ততো যোহন্ প্ৰত্যৱোচৎ, তোযেঽহং মজ্জযামীতি সত্যং কিন্তু যং যূযং ন জানীথ তাদৃশ একো জনো যুষ্মাকং মধ্য উপতিষ্ঠতি|
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
২৭স মৎপশ্চাদ্ আগতোপি মৎপূৰ্ৱ্ৱং ৱৰ্ত্তমান আসীৎ তস্য পাদুকাবন্ধনং মোচযিতুমপি নাহং যোগ্যোস্মি|
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
২৮যৰ্দ্দননদ্যাঃ পাৰস্থবৈথবাৰাযাং যস্মিন্স্থানে যোহনমজ্জযৎ তস্মিন স্থানে সৰ্ৱ্ৱমেতদ্ অঘটত|
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
২৯পৰেঽহনি যোহন্ স্ৱনিকটমাগচ্ছন্তং যিশুং ৱিলোক্য প্ৰাৱোচৎ জগতঃ পাপমোচকম্ ঈশ্ৱৰস্য মেষশাৱকং পশ্যত|
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
৩০যো মম পশ্চাদাগমিষ্যতি স মত্তো গুৰুতৰঃ, যতো হেতোৰ্মৎপূৰ্ৱ্ৱং সোঽৱৰ্ত্তত যস্মিন্নহং কথামিমাং কথিতৱান্ স এৱাযং|
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
৩১অপৰং নাহমেনং প্ৰত্যভিজ্ঞাতৱান্ কিন্তু ইস্ৰাযেল্লোকা এনং যথা পৰিচিন্ৱন্তি তদভিপ্ৰাযেণাহং জলে মজ্জযিতুমাগচ্ছম্|
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
৩২পুনশ্চ যোহনপৰমেকং প্ৰমাণং দৎৱা কথিতৱান্ ৱিহাযসঃ কপোতৱদ্ অৱতৰন্তমাত্মানম্ অস্যোপৰ্য্যৱতিষ্ঠন্তং চ দৃষ্টৱানহম্|
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
৩৩নাহমেনং প্ৰত্যভিজ্ঞাতৱান্ ইতি সত্যং কিন্তু যো জলে মজ্জযিতুং মাং প্ৰৈৰযৎ স এৱেমাং কথামকথযৎ যস্যোপৰ্য্যাত্মানম্ অৱতৰন্তম্ অৱতিষ্ঠন্তঞ্চ দ্ৰক্ষযসি সএৱ পৱিত্ৰে আত্মনি মজ্জযিষ্যতি|
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
৩৪অৱস্তন্নিৰীক্ষ্যাযম্ ঈশ্ৱৰস্য তনয ইতি প্ৰমাণং দদামি|
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
৩৫পৰেঽহনি যোহন্ দ্ৱাভ্যাং শিষ্যাভ্যাং সাৰ্দ্ধেং তিষ্ঠন্
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
৩৬যিশুং গচ্ছন্তং ৱিলোক্য গদিতৱান্, ঈশ্ৱৰস্য মেষশাৱকং পশ্যতং|
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
৩৭ইমাং কথাং শ্ৰুৎৱা দ্ৱৌ শিষ্যৌ যীশোঃ পশ্চাদ্ ঈযতুঃ|
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
৩৮ততো যীশুঃ পৰাৱৃত্য তৌ পশ্চাদ্ আগচ্ছন্তৌ দৃষ্ট্ৱা পৃষ্টৱান্ যুৱাং কিং গৱেশযথঃ? তাৱপৃচ্ছতাং হে ৰব্বি অৰ্থাৎ হে গুৰো ভৱান্ কুত্ৰ তিষ্ঠতি?
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
৩৯ততঃ সোৱাদিৎ এত্য পশ্যতং| ততো দিৱসস্য তৃতীযপ্ৰহৰস্য গতৎৱাৎ তৌ তদ্দিনং তস্য সঙ্গেঽস্থাতাং|
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
৪০যৌ দ্ৱৌ যোহনো ৱাক্যং শ্ৰুৎৱা যিশোঃ পশ্চাদ্ আগমতাং তযোঃ শিমোন্পিতৰস্য ভ্ৰাতা আন্দ্ৰিযঃ
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
৪১স ইৎৱা প্ৰথমং নিজসোদৰং শিমোনং সাক্ষাৎপ্ৰাপ্য কথিতৱান্ ৱযং খ্ৰীষ্টম্ অৰ্থাৎ অভিষিক্তপুৰুষং সাক্ষাৎকৃতৱন্তঃ|
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
৪২পশ্চাৎ স তং যিশোঃ সমীপম্ আনযৎ| তদা যীশুস্তং দৃষ্ট্ৱাৱদৎ ৎৱং যূনসঃ পুত্ৰঃ শিমোন্ কিন্তু ৎৱন্নামধেযং কৈফাঃ ৱা পিতৰঃ অৰ্থাৎ প্ৰস্তৰো ভৱিষ্যতি|
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
৪৩পৰেঽহনি যীশৌ গালীলং গন্তুং নিশ্চিতচেতসি সতি ফিলিপনামানং জনং সাক্ষাৎপ্ৰাপ্যাৱোচৎ মম পশ্চাদ্ আগচ্ছ|
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
৪৪বৈৎসৈদানাম্নি যস্মিন্ গ্ৰামে পিতৰান্দ্ৰিযযোৰ্ৱাস আসীৎ তস্মিন্ গ্ৰামে তস্য ফিলিপস্য ৱসতিৰাসীৎ|
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
৪৫পশ্চাৎ ফিলিপো নিথনেলং সাক্ষাৎপ্ৰাপ্যাৱদৎ মূসা ৱ্যৱস্থা গ্ৰন্থে ভৱিষ্যদ্ৱাদিনাং গ্ৰন্থেষু চ যস্যাখ্যানং লিখিতমাস্তে তং যূষফঃ পুত্ৰং নাসৰতীযং যীশুং সাক্ষাদ্ অকাৰ্ষ্ম ৱযং|
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
৪৬তদা নিথনেল্ কথিতৱান্ নাসৰন্নগৰাত কিং কশ্চিদুত্তম উৎপন্তুং শক্নোতি? ততঃ ফিলিপো ঽৱোচৎ এত্য পশ্য|
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
৪৭অপৰঞ্চ যীশুঃ স্ৱস্য সমীপং তম্ আগচ্ছন্তং দৃষ্ট্ৱা ৱ্যাহৃতৱান্, পশ্যাযং নিষ্কপটঃ সত্য ইস্ৰাযেল্লোকঃ|
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
৪৮ততঃ সোৱদদ্, ভৱান্ মাং কথং প্ৰত্যভিজানাতি? যীশুৰৱাদীৎ ফিলিপস্য আহ্ৱানাৎ পূৰ্ৱ্ৱং যদা ৎৱমুডুম্বৰস্য তৰোৰ্মূলেঽস্থাস্তদা ৎৱামদৰ্শম্|
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
৪৯নিথনেল্ অচকথৎ, হে গুৰো ভৱান্ নিতান্তম্ ঈশ্ৱৰস্য পুত্ৰোসি, ভৱান্ ইস্ৰাযেল্ৱংশস্য ৰাজা|
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
৫০ততো যীশু ৰ্ৱ্যাহৰৎ, ৎৱামুডুম্বৰস্য পাদপস্য মূলে দৃষ্টৱানাহং মমৈতস্মাদ্ৱাক্যাৎ কিং ৎৱং ৱ্যশ্ৱসীঃ? এতস্মাদপ্যাশ্চৰ্য্যাণি কাৰ্য্যাণি দ্ৰক্ষ্যসি|
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
৫১অন্যচ্চাৱাদীদ্ যুষ্মানহং যথাৰ্থং ৱদামি, ইতঃ পৰং মোচিতে মেঘদ্ৱাৰে তস্মান্মনুজসূনুনা ঈশ্ৱৰস্য দূতগণম্ অৱৰোহন্তমাৰোহন্তঞ্চ দ্ৰক্ষ্যথ|

< யோவான் 1 >