< யோபு 36 >

1 பின்னும் எலிகூ:
UElihu waseqhubeka wathi:
2 “நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.
Ngibekezelela kancinyane, ngizakubonisa ukuthi kuseselamazwi ngoNkulunkulu.
3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.
Ngizathatha ulwazi lwami luvela khatshana, nginike ukulunga kuMenzi wami.
4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Ngoba isibili amazwi ami kawayisiwo amanga; opheleleyo elwazini ulawe.
5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
Khangela, uNkulunkulu ulamandla, njalo keyisi; mkhulu emandleni okuqedisisa.
6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
Kayekeli omubi aphile, kodwa unika abayanga okulungileyo.
7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.
Kasusi amehlo akhe kolungileyo, kodwa balamakhosi esihlalweni sobukhosi; yebo, uyawahlalisa phakade, abesephakama.
8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
Njalo uba bebotshiwe ngezibopho, bethunjwe ngezintambo zenhlupheko,
9 அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
abesebatshela isenzo sabo, leziphambeko zabo, ukuthi zazilamandla.
10 ௧0 அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
Uyavula indlebe yabo ekulayweni, alaye baphenduke ebubini.
11 ௧௧ அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.
Uba belalela, bamkhonze, bazachitha insuku zabo kokuhle, leminyaka yabo ezintokozweni.
12 ௧௨ அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.
Kodwa uba bengalaleli, bazadlula ngomkhonto, baphele bengelalwazi.
13 ௧௩ மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.
Labangamesabiyo uNkulunkulu ngenhliziyo babuthelela intukuthelo; kabakhali esebabophile.
14 ௧௪ அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.
Umphefumulo wabo uzafela ebutsheni, lempilo yabo phakathi kwezinkotshana.
15 ௧௫ சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.
Uzakhulula ohluphekayo ekuhluphekeni kwakhe, avule indlebe yabo ecindezelweni.
16 ௧௬ அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
Yebo, lawe wakuhuga ukuthi uphume emlonyeni wocindezelo uye endaweni ebanzi, okungelacindezelo kuyo, lokuphezu kwetafula lakho kuzagcwala amanono.
17 ௧௭ ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
Kodwa ugcwalise isigwebo somubi; isigwebo lokulunga kukubambile.
18 ௧௮ கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.
Qaphela ulaka lungakuhugeli ekuklolodeni, lobukhulu benhlawulo bungakuphambuli.
19 ௧௯ உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
Ubengalinganisa inotho yakho, ukuthi ubungebe ecindezelweni, lemizamo yonke elamandla?
20 ௨0 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
Ungakhefuzeleli lobobusuku bokususwa kwabantu endaweni yabo.
21 ௨௧ பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
Qaphela, ungaphendukeli ebubini, ngoba ukhethe lokho kulokuhlupheka.
22 ௨௨ இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
Khangela, uNkulunkulu uziphakamisa ngamandla akhe; ngubani ongumfundisi njengaye?
23 ௨௩ அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
Ngubani ommisele indlela yakhe? Kumbe ngubani othe: Wenze ububi?
24 ௨௪ மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
Khumbula ukuthi ukhulise umsebenzi wakhe, abahlabela ngawo abantu.
25 ௨௫ எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.
Bonke abantu bayawubona; umuntu uyawukhangela ekhatshana.
26 ௨௬ இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
Khangela, uNkulunkulu uphakeme, njalo kasimazi, lenani leminyaka yakhe kayilakuhlolwa.
27 ௨௭ அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
Ngoba wenyusa amathonsi amanzi, ahlambulule izulu njengenkungu yawo;
28 ௨௮ அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
amayezi alithululela phansi, lithonte kakhulu phezu komuntu.
29 ௨௯ மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
Yebo, kukhona yini ongaqedisisa ukwendlaleka kwamayezi, umsindo wedumba lakhe?
30 ௩0 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.
Khangela, wendlala ukukhanya kwakhe phezu kwawo, agubuzele impande zolwandle.
31 ௩௧ அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.
Ngoba ngawo uyehlulela abantu, anike ukudla ngobunengi.
32 ௩௨ அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
Ngezandla usibekela ukukhanya, abesekulaya ngalelo elingena phakathi.
33 ௩௩ அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.
Umdumo wakhe ubika ngakho, lenkomo ngenkungu eyenyukayo.

< யோபு 36 >