< யோபு 29 >

1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Йов а луат дин ноу кувынтул ын пилде ши а зис:
2 “கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
„О, кум ну пот сэ фиу ка ын луниле трекуте, ка ын зилеле кынд мэ пэзя Думнезеу,
3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
кынд кандела Луй стрэлучя дясупра капулуй меу ши лумина Луй мэ кэлэузя ын ынтунерик!
4 தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
Кум ну сунт ка ын зилеле путерий меле, кынд Думнезеу вегя ка ун приетен песте кортул меу,
5 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
кынд Чел Атотпутерник ынкэ ера ку мине ши кынд копиий мей стэтяу ын журул меу;
6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
кынд ми се скэлдау паший ын смынтынэ ши стынка вэрса лынгэ мине пырае де унтделемн!
7 நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
Дакэ ешям сэ мэ дук ла поарта четэций ши дакэ ымь прегэтям ун скаун ын пяцэ,
8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
тинерий се трэӂяу ынапой ла апропиеря мя, бэтрыний се скулау ши стэтяу ын пичоаре.
9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
Май-марий ышь опряу кувынтэриле ши ышь пуняу мына ла гурэ.
10 ௧0 பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
Гласул кэпетениилор тэчя ши ли се липя лимба де черул гурий.
11 ௧௧ என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
Урекя каре мэ аузя мэ нумя феричит, окюл каре мэ ведя мэ лэуда.
12 ௧௨ முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
Кэч скэпам пе сэракул каре черя ажутор ши пе орфанул липсит де сприжин.
13 ௧௩ அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
Бинекувынтаря ненорочитулуй веня песте мине, умплям де букурие инима вэдувей.
14 ௧௪ நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
Мэ ымбрэкам ку дрептатя ши-й служям де ымбрэкэминте, неприхэниря ымь ера манта ши турбан.
15 ௧௫ நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
Орбулуй ый ерам окь ши шкьопулуй, пичор.
16 ௧௬ நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Челор ненорочиць ле ерам татэ ши черчетам причина челуй некуноскут.
17 ௧௭ நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
Рупям фалка челуй недрепт ши-й смулӂям прада дин динць.
18 ௧௮ என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
Атунч зичям: ‘Ын куйбул меу вой мури, зилеле меле вор фи мулте ка нисипул.
19 ௧௯ என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
Апа ва пэтрунде ын рэдэчиниле меле, роуа ва ста тоатэ ноаптя песте рамуриле меле.
20 ௨0 என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
Слава мя ва ынверзи неынчетат ши аркул ымь ва ынтинери ын мынэ.’
21 ௨௧ எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
Оамений мэ аскултау ши аштептау, тэчяу ынаинтя сфатурилор меле.
22 ௨௨ என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
Дупэ кувынтэриле меле, ничунул ну рэспундя ши кувынтул меу ера пентру тоць о роуэ бинефэкэтоаре.
23 ௨௩ மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
Мэ аштептау ка пе плоае, кэскау гура ка дупэ плоая де примэварэ.
24 ௨௪ நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
Кынд ли се ынмуя инима, ле зымбям ши ну путяу изгони сенинэтатя де пе фрунтя мя.
25 ௨௫ அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
Ымь плэчя сэ мэ дук ла ей ши мэ ашезам ын фрунтя лор; ерам ка ун ымпэрат ын мижлокул уней оштирь, ка ун мынгыетор лынгэ ниште ынтристаць.

< யோபு 29 >