< அப்போஸ்தலர் 4 >

1 பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,
ⲁ̅ⲈⲨⲤⲀϪⲒ ⲆⲈ ⲚⲈⲘ ⲠⲒⲖⲀⲞⲤ ⲀⲨⲦⲰⲞⲨⲚⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲞⲨ ⲚϪⲈⲚⲒⲞⲨⲎⲂ ⲚⲈⲘ ⲚⲒⲤⲀⲦⲎⲄⲞⲨⲤ ⲚⲦⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲚⲈⲘ ⲚⲒⲤⲀⲆⲆⲞⲨⲔⲈⲞⲤ.
2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து,
ⲃ̅ⲈⲨϮ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲀⲨ ϪⲈ ⲚⲀⲨϮⲤⲂⲰ ⲘⲠⲒⲖⲀⲞⲤ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲚⲀⲨϨⲒⲰⲒϢ ϦⲈⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲚϮⲀⲚⲀⲤⲦⲀⲤⲒⲤ ϮⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ.
3 அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲒⲚⲒ ⲚⲚⲞⲨϪⲒϪ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲞⲨ ⲀⲨϨⲒⲦⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲀⲢⲈϨ ⲈⲢⲰⲞⲨ ϢⲀ ⲠⲈϤⲢⲀⲤϮ ⲚⲈⲀ ⲢⲞⲨϨⲒ ϨⲎⲆⲎ ϢⲰⲠⲒ ⲠⲈ.
4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
ⲇ̅ⲞⲨⲘⲎϢ ⲆⲈ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲈⲠⲒⲤⲀϪⲒ ⲀⲨⲚⲀϨϮ ⲞⲨⲞϨ ⲀⲨϢⲰⲠⲒ ⲚϪⲈⲦⲎⲠⲒ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲈⲦⲀⲨⲚⲀϨϮ ⲈⲨⲈⲢ Ⲉ- ⲚϢⲞ.
5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்,
ⲉ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲈⲦⲀ ⲠⲈϤⲢⲀⲤϮ ϢⲰⲠⲒ ⲀⲨⲐⲰⲞⲨϮ ⲚϪⲈⲚⲒⲀⲢⲬⲰⲚ ⲚⲈⲘ ⲚⲞⲨⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲚⲈⲘ ⲚⲒⲤⲀϦ ϦⲈⲚⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ.
6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
ⲋ̅ⲚⲈⲘ ⲀⲚⲚⲀ ⲚⲈⲘ ⲔⲀⲒⲀⲪⲀ ⲚⲒⲀⲢⲬⲎⲈⲢⲈⲨⲤ ⲚⲈⲘ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲚⲈⲘ ⲀⲖⲈⲜⲀⲚⲆⲢⲞⲤ ⲚⲈⲘ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦϢⲞⲠ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲄⲈⲚⲞⲤ ⲚⲦⲈϮⲘⲈⲦⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ.
7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
ⲍ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲦⲀϨⲰⲞⲨ ⲈⲢⲀⲦⲞⲨ ϦⲈⲚⲦⲞⲨⲘⲎϮ ⲚⲀⲨϢⲒⲚⲒ ⲘⲘⲰⲞⲨ ⲠⲈ ϪⲈ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲀϢ ⲚϪⲞⲘ ⲒⲈ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲀϢ ⲚⲢⲀⲚ ⲀⲢⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲪⲀⲒ ⲚⲐⲰⲦⲈⲚ.
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
ⲏ̅ⲦⲞⲦⲈ ⲠⲈⲦⲢⲞⲤ ⲀϤⲘⲞϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ⲚⲒⲀⲢⲬⲰⲚ ⲚⲦⲈⲠⲒⲖⲀⲞⲤ ⲚⲈⲘ ⲚⲒⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ.
9 வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால்,
ⲑ̅ⲒⲤϪⲈ ⲀⲚⲞⲚ ⲘⲪⲞⲞⲨ ⲤⲈⲈⲢⲀⲚⲀⲔⲢⲒⲚⲒⲚ ⲘⲘⲞⲚ ⲈⲐⲂⲈⲞⲨ ϨⲰⲂ ⲈⲚⲀⲚⲈϤ ⲈⲀϤϢⲰⲠⲒ ⲚⲞⲨⲢⲰⲘⲒ ⲚϪⲰⲂ ϪⲈ ⲈⲦⲀ ⲪⲀⲒ ⲞⲨϪⲀⲒ ϦⲈⲚⲚⲒⲘ.
10 ௧0 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
ⲓ̅ⲘⲀⲢⲈ ⲠⲒϨⲰⲂ ⲞⲨⲞⲚϨ ⲈⲢⲰⲦⲈⲚ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲖⲀⲞⲤ ⲦⲎⲢϤ ⲚⲦⲈⲠⲒⲤⲖ ϪⲈ ϦⲈⲚⲪⲢⲀⲚ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲒⲚⲀⲌⲰⲢⲈⲞⲤ ⲪⲀⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲦⲀⲦⲈⲚⲀϢϤ ⲪⲀⲒ ⲈⲦⲀ ⲪⲚⲞⲨϮ ⲦⲞⲨⲚⲞⲤϤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲪⲀⲒ ϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲚϪⲈⲪⲀⲒ ⲘⲠⲈⲦⲈⲚⲘⲐⲞ ⲈϤⲞⲨⲞϪ.
11 ௧௧ வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
ⲓ̅ⲁ̅ⲪⲀⲒ ⲠⲈ ⲠⲒⲰⲚⲒ ⲈⲦⲀⲨϢⲞϢϤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲚⲎ ⲈⲦⲔⲰⲦ ⲪⲀⲒ ⲀϤϢⲰⲠⲒ ⲚⲞⲨϪⲰϪ ⲚⲖⲀⲔϨ.
12 ௧௨ அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
ⲓ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲘⲘⲞⲚ ⲔⲈⲞⲨⲀⲒ ⲈⲢⲈ ⲪⲚⲞϨⲈⲘ ϢⲞⲠ ⲚϦⲎⲦϤ ⲞⲨⲆⲈ ⲘⲘⲞⲚ ⲔⲈⲢⲀⲚ ⲤⲀⲠⲈⲤⲎⲦ ⲚⲦⲪⲈ ⲈⲀⲨⲦⲎⲒϤ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲪⲎ ⲈⲦⲈϨⲰϮ ⲚⲦⲞⲨⲚⲞϨⲈⲘ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦϤ.
13 ௧௩ பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
ⲓ̅ⲅ̅ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲆⲈ ⲈⲦⲠⲀⲢⲢⲎⲤⲒⲀ ⲘⲠⲈⲦⲢⲞⲤ ⲚⲈⲘ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲈⲘⲒ ϪⲈ ϨⲀⲚⲢⲰⲘⲒ ⲚⲈⲚⲤⲈⲤⲰⲞⲨⲚ ⲚⲤϦⲀⲒ ⲀⲚ ⲞⲨⲞϨ ϨⲀⲚⲒⲆⲒⲰⲦⲎⲤ ⲚⲈⲚⲀⲨⲈⲢϢⲪⲎⲢⲒ ⲠⲈ ⲚⲀⲨⲤⲰⲞⲨⲚ ⲆⲈ ⲘⲘⲰⲞⲨ ϪⲈ ⲚⲀⲨⲬⲎ ⲚⲈⲘ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈ.
14 ௧௪ சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.
ⲓ̅ⲇ̅ⲠⲒⲔⲈⲢⲰⲘⲒ ⲆⲈ ⲚⲀⲨⲚⲀⲨ ⲈⲢⲞϤ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲚⲈⲘⲰⲞⲨ ⲈⲀϤⲞⲨϪⲀⲒ ⲚⲀⲨϢϮ ⲆⲈ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲀⲨ ⲚϨⲖⲒ ⲀⲚ ⲠⲈ.
15 ௧௫ அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
ⲓ̅ⲉ̅ⲈⲦⲀⲨⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲆⲈ ⲚⲤⲈϨⲒⲦⲞⲨ ⲤⲀⲂⲞⲖ ⲘⲠⲒⲘⲀ ⲚϮϨⲀⲠ ⲚⲀⲨⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲚⲞⲨⲈⲢⲎⲞⲨ.
16 ௧௬ இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
ⲓ̅ⲋ̅ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲈⲚⲚⲀⲀⲒϤ ⲚⲚⲀⲒⲢⲰⲘⲒ ⲞⲦⲒ ⲘⲈⲚ ⲀϤϢⲰⲠⲒ ⲚϪⲈⲞⲨⲘⲎⲒⲚⲒ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦⲞⲨ ⲈϤⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ⲤⲈⲤⲰⲞⲨⲚ ⲚϪⲈⲚⲎ ⲦⲎⲢⲞⲨ ⲈⲦϢⲞⲠ ϦⲈⲚⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞⲚ ⲈϪⲰⲖ ⲈⲂⲞⲖ.
17 ௧௭ ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
ⲓ̅ⲍ̅ⲀⲖⲖⲀ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϢⲦⲈⲘ ⲠⲒϨⲰⲂ ⲤⲰⲢ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲖⲀⲞⲤ ⲚϨⲞⲨⲞ ⲘⲀⲢⲈⲚⲚⲞϢⲠⲞⲨ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨϢⲦⲈⲘⲤⲀϪⲒ ⲚⲈⲘ ϨⲖⲒ ⲚⲢⲰⲘⲒ ϦⲈⲚⲠⲀⲒⲢⲀⲚ.
18 ௧௮ அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ⲓ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ ⲀⲨϨⲞⲚϨⲈⲚ ⲚⲰⲞⲨ ⲈϢⲦⲈⲘⲈⲢⲞⲨⲰ ⲈⲠⲦⲎⲢϤ ⲞⲨⲆⲈ ⲈϢⲦⲈⲘϮ ⲤⲂⲰ ϦⲈⲚⲪⲢⲀⲚ ⲚⲒⲎⲤⲞⲨⲤ.
19 ௧௯ பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
ⲓ̅ⲑ̅ⲠⲈⲦⲢⲞⲤ ⲆⲈ ⲚⲈⲘ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲰⲞⲨ ⲒⲤϪⲈ ⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ ⲦⲈ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲤⲰⲦⲈⲘ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ ⲈϨⲞⲦⲈ ⲪⲚⲞⲨϮ ⲘⲀϨⲀⲠ.
20 ௨0 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
ⲕ̅ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲄⲀⲢ ⲘⲘⲞⲚ ⲀⲚⲞⲚ ⲚⲎ ⲈⲦⲀⲚⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲚⲤⲞⲐⲘⲞⲨ ⲈϢⲦⲈⲘⲤⲀϪⲒ ⲘⲘⲰⲞⲨ.
21 ௨௧ நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
ⲕ̅ⲁ̅ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲈⲦⲀⲨⲚⲞϢⲠⲞⲨ ⲀⲨⲬⲀⲨ ⲈⲂⲞⲖ ⲘⲠⲞⲨϪⲈⲘ ϨⲖⲒ ⲚⲖⲰⲒϪⲒ ⲈⲢⲰⲞⲨ ⲈⲐⲂⲈ ⲠⲒⲢⲎϮ ⲚⲈⲢⲔⲞⲖⲀⲌⲒⲚ ⲘⲘⲰⲞⲨ ⲈⲐⲂⲈ ⲠⲒⲖⲀⲞⲤ ϪⲈ ⲚⲀⲢⲈ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ϮⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲐⲂⲈ ⲪⲎ ⲈⲦⲀϤϢⲰⲠⲒ.
22 ௨௨ அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
ⲕ̅ⲃ̅ⲚⲈ ⲀϤⲈⲢϨⲞⲨⲞ ⲘⲚⲢⲞⲘⲠⲒ ⲚϪⲈⲠⲒⲢⲰⲘⲒ ⲈⲦⲀ ⲠⲀⲒϨⲰⲂ ⲘⲘⲎⲒⲚⲒ ⲚⲞⲨϪⲀⲒ ϢⲰⲠⲒ ϨⲒⲰⲦϤ.
23 ௨௩ அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
ⲕ̅ⲅ̅ⲈⲦⲀⲨⲬⲀⲨ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲀⲨⲒ ϢⲀ ⲚⲎ ⲈⲦⲈⲚⲰⲞⲨ ⲀⲨⲦⲀⲘⲰⲞⲨ ⲈϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲀ ⲚⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲚⲈⲘ ⲚⲒⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲀⲒⲦⲞⲨ ⲚⲰⲞⲨ.
24 ௨௪ அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
ⲕ̅ⲇ̅ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲀⲨϬⲒⲤⲒ ⲚⲦⲞⲨⲤⲘⲎ ⲈϨⲢⲎⲒ ϨⲀ ⲪⲚⲞⲨϮ ⲈⲨⲤⲞⲠ ⲠⲈϪⲰⲞⲨ ϪⲈ ⲠⲈⲚⲚⲎⲂ ⲚⲐⲞⲔ ⲠⲈⲦⲀⲔⲐⲀⲘⲒⲞ ⲚⲦⲪⲈ ⲚⲈⲘ ⲠⲔⲀϨⲒ ⲪⲒⲞⲘ ⲚⲈⲘ ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈ ⲚϦⲎⲦϤ.
25 ௨௫ யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
ⲕ̅ⲉ̅ⲪⲎ ⲈⲦⲀϤϪⲞⲤ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲢⲰϤ ⲘⲠⲈⲚⲒⲰⲦ ⲆⲀⲨⲒⲆ ⲈⲐⲂⲈ ⲠⲈⲔⲀⲖⲞⲨ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲀⲨⲰϢ ⲈⲂⲞⲖ ⲚϪⲈϨⲀⲚⲈⲐⲚⲞⲤ ϨⲀⲚⲖⲀⲞⲤ ⲀⲨⲈⲢⲘⲈⲖⲈⲦⲀⲚ ⲚϨⲀⲚⲠⲈⲦϢⲞⲨⲒⲦ.
26 ௨௬ கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
ⲕ̅ⲋ̅ⲀⲨⲞϨⲒ ⲈⲢⲀⲦⲞⲨ ⲚϪⲈⲚⲒⲞⲨⲢⲰⲞⲨ ⲚⲦⲈⲠⲔⲀϨⲒ ⲚⲒⲔⲈⲀⲢⲬⲰⲚ ⲀⲨⲐⲰⲞⲨϮ ⲈⲨⲘⲀ ⲈϮ ⲞⲨⲂⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲈⲘ ⲠⲈϤⲬⲢⲤ.
27 ௨௭ அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
ⲕ̅ⲍ̅ϦⲈⲚ ⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ ⲄⲀⲢ ⲀⲨⲐⲰⲞⲨϮ ϦⲈⲚⲦⲀⲒⲠⲞⲖⲒⲤ ⲈϪⲈⲚ ⲠⲈⲔⲀⲖⲞⲨ ⲒⲎⲤⲞⲨⲤ ⲪⲎ ⲈⲦⲀⲔⲐⲀϨⲤϤ ⲚϪⲈⲎⲢⲰⲆⲎⲤ ⲚⲈⲘ ⲠⲞⲚⲦⲒⲞⲤ ⲠⲒⲖⲀⲦⲞⲤ ⲚⲈⲘ ϨⲀⲚⲔⲈⲈⲐⲚⲞⲤ ⲚⲈⲘ ϨⲀⲚⲖⲀⲞⲤ ⲚⲦⲈⲠⲒⲤⲖ.
28 ௨௮ ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
ⲕ̅ⲏ̅ⲈⲒⲢⲒ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲀ ⲦⲈⲔϪⲒϪ ⲚⲈⲘ ⲠⲈⲔⲤⲞϬⲚⲒ ⲈⲢϢⲞⲢⲠ ⲈⲐⲢⲞⲨϢⲰⲠⲒ.
29 ௨௯ இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
ⲕ̅ⲑ̅ⲞⲨⲞϨ ϮⲚⲞⲨ ⲠϬⲞⲒⲤ ⲤⲞⲘⲤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲚⲞⲨϪⲰⲚⲦ ⲘⲎⲒⲤ ⲚⲚⲈⲔⲈⲂⲒⲀⲒⲔ ⲈⲐⲢⲞⲨⲤⲀϪⲒ ϦⲈⲚⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲒⲂⲈⲚ
30 ௩0 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
ⲗ̅ϦⲈⲚ ⲠϪⲒⲚⲐⲢⲈⲔⲤⲞⲨⲦⲰⲚ ⲦⲈⲔϪⲒϪ ⲈⲂⲞⲖ ⲈϨⲀⲚⲦⲀⲖϬⲞ ⲚⲈⲘ ϨⲀⲚⲘⲎⲒⲚⲒ ⲚⲈⲘ ϨⲀⲚϢⲪⲎ ⲢⲒ ⲈⲐⲢⲞⲨϢⲰⲠⲒ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠⲈⲔⲀⲖⲞⲨ ⲈⲐⲞⲨⲀⲂ ⲒⲎⲤⲞⲨⲤ.
31 ௩௧ அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
ⲗ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲦⲰⲂϨ ⲀϤⲔⲒⲘ ⲚϪⲈⲠⲒⲘⲀ ⲈⲚⲀⲨⲐⲞⲨⲎⲦ ⲚϦⲎⲦϤ ⲞⲨⲞϨ ⲀⲨⲘⲞϨ ⲦⲎⲢⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲤⲀϪⲒ ⲘⲠⲒⲤⲀϪⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲘⲠⲀⲢⲢⲎ ⲤⲒⲀ.
32 ௩௨ திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
ⲗ̅ⲃ̅ⲚⲒⲘⲎϢ ⲆⲈ ⲈⲦⲀⲨⲚⲀϨϮ ⲚⲀⲨⲞⲒ ⲚⲞⲨϨⲎ ⲦⲚⲞⲨⲰⲦ ⲚⲈⲘ ⲞⲨⲮⲨⲬⲎ ⲚⲞⲨⲰⲦ ⲚⲈⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲠⲈ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲞⲨϨⲖⲒ ⲚⲦⲈⲚⲈϤϨⲨⲠⲀⲢⲬⲞⲚⲦⲀ ϪⲈ ⲚⲞⲨϤ ⲚⲈⲀⲖⲖⲀ ⲚⲀⲢⲈ ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ϢⲞⲠ ⲚⲰⲞⲨ ϦⲈⲚⲞⲨⲘⲈⲦϢⲪⲎⲢ.
33 ௩௩ கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
ⲗ̅ⲅ̅ⲈϨⲢⲎⲒ ⲆⲈ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲚϪⲞⲘ ⲚⲀⲢⲈ ⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ϮⲚϮⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ϦⲀ ⲦⲀⲚⲀⲤⲦⲀⲤⲒⲤ ⲚⲦⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲞⲨⲚⲒϢϮ ⲆⲈ ⲚϨⲘⲞⲦ ⲚⲀϤϨⲒϪⲰⲞⲨ ⲦⲎⲢⲞⲨ ⲠⲈ.
34 ௩௪ நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து,
ⲗ̅ⲇ̅ⲚⲈ ⲘⲘⲞⲚ ⲠⲈⲦⲈⲢⲬⲢⲒⲀ ⲄⲀⲢ ⲚϦⲎⲦⲞⲨ ⲠⲈ ⲚⲎ ⲄⲀⲢ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚⲦⲞⲨ ⲒⲞϨⲒ ⲘⲘⲀⲨ ⲚⲀⲨϮ ⲘⲘⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ⲚⲀⲨⲒⲚⲒ ⲚⲦⲦⲒⲘⲎ ⲚⲚⲎ ⲈϢⲀⲨⲦⲎⲒⲦⲞⲨ ⲈⲂⲞⲖ
35 ௩௫ அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
ⲗ̅ⲉ̅ⲚⲀⲨⲬⲰ ⲘⲘⲰⲞⲨ ϦⲀⲢⲀⲦⲞⲨ ⲚⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ⲚⲀⲨϮ ⲆⲈ ⲘⲪⲞⲨⲀⲒ ⲪⲞⲨⲀⲒ ⲘⲠⲈⲦⲈϤⲈⲢⲬⲢⲒⲀ ⲘⲘⲞϤ.
36 ௩௬ சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
ⲗ̅ⲋ̅ⲒⲰⲤⲎⲪ ⲆⲈ ⲪⲎ ⲈⲦⲀⲨϮⲢⲈⲚϤ ϪⲈ ⲂⲀⲢⲤⲀⲂⲀⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ⲈⲦⲈ ⲪⲎ ⲠⲈ ⲈϢⲀⲨⲞⲨⲀϨⲘⲈϤ ϪⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲠϮϨⲞ ⲈⲞⲨⲖⲈⲨⲒⲦⲎⲤ ⲠⲈ ⲚⲔⲨⲠⲢⲒⲞⲤ ϦⲈⲚⲠⲈϤⲄⲈⲚⲞⲤ.
37 ௩௭ தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
ⲗ̅ⲍ̅ⲈⲞⲨⲞⲚⲦⲈϤ ⲒⲞϨⲒ ⲘⲘⲀⲨ ⲀϤⲦⲎⲒϤ ⲈⲂⲞⲖ ⲀϤⲒⲚⲒ ⲚⲚⲒⲬⲢⲎⲘⲀ ⲀϤⲬⲀⲨ ϦⲀⲦⲈⲚ ⲚⲈⲚϬⲀⲖⲀⲨϪ ⲚⲚⲒⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ.

< அப்போஸ்தலர் 4 >