< அப்போஸ்தலர் 3 >

1 ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
ペトロとヨハネが,第九時の祈りの時間に神殿に上って行った。
2 அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.
母の胎を出た時から足の不自由な人が運ばれて来た。神殿に入る人たちから施しを求めるために,神殿の「美し」と呼ばれる門のところに毎日置いてもらっていたのである。
3 அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
ペトロとヨハネが神殿に入ろうとするのを見て,施しをもらいたいと頼んだ。
4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
ペトロはヨハネと共に彼をじっと見つめて,「わたしたちを見なさい」と言った。
5 அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
彼は,彼らから何かをもらえることを期待して,それに従った。
6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
しかしペトロは言った,「銀や金はわたしにはないが,わたしが持っているものをあなたにあげよう。ナザレのイエス・キリストの名において,立ち上がって歩きなさい!」
7 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
彼の右手をつかんで起き上がらせた。すぐに彼の足とくるぶしの骨とは強くされた。
8 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.
彼は踊り上がって立ち,歩き始めた。歩いたり,跳ねたり,神を賛美したりしながら,彼らと共に神殿の中に入って行った。
9 அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
民はみな,彼が歩き回って神を賛美しているのを見た。
10 ௧0 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.
これがいつも神殿の「美しの門」のところに座って施しを求めていた者だと気づいた。彼に起きたことを知って,驚きと仰天とに満たされた。
11 ௧௧ சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
足が不自由であったが今ではいやされたその人がペトロとヨハネにすがりついていると,民はみな非常に驚いて,「ソロモンの回廊」と呼ばれる所にいた彼らのところに走り寄ってきた。
12 ௧௨ பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?
これを見て,ペトロは民に答えた。「イスラエルの人たち,なぜこの人のことで驚き怪しむのですか。どうして,わたしたちが自分の力や信心によってこの人を歩かせたかのように,わたしたちを見つめているのですか。
13 ௧௩ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
アブラハム,イサク,ヤコブの神,わたしたちの父祖たちの神は,ご自分の召使いイエスに栄光を与えられましたが,あなた方は彼を引き渡し,ピラトが釈放しようと決めていたのに,その前で彼を否認しました。
14 ௧௪ பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு,
そして,あの聖なる正しい方を否認して,人殺しの者を許すよう求め,
15 ௧௫ ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
命の君主を殺しました。しかし,神は彼を死んだ者たちの中から起こされました。わたしたちはそのことの証人です。
16 ௧௬ அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
その方の名が,その名に対する信仰によって,あなた方が見知っているこの人を強くしたのです。そうです,彼を通しての信仰が,あなた方すべての前でこの人に完全な健康を与えたのです。
17 ௧௭ சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்
「さて,兄弟たち,あなた方が無知のためにあのようなことをしたのであり,あなた方の支配者たちも同様だったことを,わたしは知っています。
18 ௧௮ கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
しかし神は,そのすべての預言者たちの口によって予告されていた事柄,すなわち,キリストが苦しみを受けることを,このようにして果たされたのです。
19 ௧௯ ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,
「ですから,あなた方の罪を塗り消していただくために,悔い改めて立ち返りなさい。それは,主のみ前からさわやかにする時期が来て,
20 ௨0 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.
あなた方のために前もって定められていたキリスト・イエスを遣わしていただけるようにするためです。
21 ௨௧ உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
神が昔からその聖なる預言者たちの口によって語られたすべてのものの回復の時期まで,天はこの方を受け入れておかなければならないのです。 (aiōn g165)
22 ௨௨ மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.
実際,モーセは父祖たちにこう言いました。『主なる神は,あなた方の兄弟たちの中から,わたしのような預言者をあなた方のために起こされるだろう。あなた方は,彼があなた方に語るすべての事柄について,彼に聞き従わなければならない。
23 ௨௩ அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
この預言者に聞き従わない魂はすべて,民の中から完全に滅ぼされるだろう』。
24 ௨௪ சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.
実に,サムエルをはじめとするすべての預言者たちも,後に続いて語った者たちも,やはりこの日々のことを告げました。
25 ௨௫ நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
あなた方はその預言者たちの子らであり,神がアブラハムに,『あなたの子孫にあって地上のすべての部族が祝福を受けるだろう』と言って,あなた方の父祖たちと結ばれた,あの契約の子らです。
26 ௨௬ அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
神は,ご自分の召使いイエスを起こして,まずあなた方のもとに遣わされました。それは,彼があなた方をおのおのの悪から立ち返らせて,あなた方を祝福するためなのです」。

< அப்போஸ்தலர் 3 >