< அப்போஸ்தலர் 1 >

1 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ಹೇ ಥಿಯಫಿಲ, ಯೀಶುಃ ಸ್ವಮನೋನೀತಾನ್ ಪ್ರೇರಿತಾನ್ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಸಮಾದಿಶ್ಯ ಯಸ್ಮಿನ್ ದಿನೇ ಸ್ವರ್ಗಮಾರೋಹತ್ ಯಾಂ ಯಾಂ ಕ್ರಿಯಾಮಕರೋತ್ ಯದ್ಯದ್ ಉಪಾದಿಶಚ್ಚ ತಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಪೂರ್ವ್ವಂ ಮಯಾ ಲಿಖಿತಾನಿ|
2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ಸ ಸ್ವನಿಧನದುಃಖಭೋಗಾತ್ ಪರಮ್ ಅನೇಕಪ್ರತ್ಯಯಕ್ಷಪ್ರಮಾಣೌಃ ಸ್ವಂ ಸಜೀವಂ ದರ್ಶಯಿತ್ವಾ
3 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ಚತ್ವಾರಿಂಶದ್ದಿನಾನಿ ಯಾವತ್ ತೇಭ್ಯಃ ಪ್ರೇರಿತೇಭ್ಯೋ ದರ್ಶನಂ ದತ್ತ್ವೇಶ್ವರೀಯರಾಜ್ಯಸ್ಯ ವರ್ಣನಮ ಅಕರೋತ್|
4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ಅನನ್ತರಂ ತೇಷಾಂ ಸಭಾಂ ಕೃತ್ವಾ ಇತ್ಯಾಜ್ಞಾಪಯತ್, ಯೂಯಂ ಯಿರೂಶಾಲಮೋಽನ್ಯತ್ರ ಗಮನಮಕೃತ್ವಾ ಯಸ್ತಿನ್ ಪಿತ್ರಾಙ್ಗೀಕೃತೇ ಮಮ ವದನಾತ್ ಕಥಾ ಅಶೃಣುತ ತತ್ಪ್ರಾಪ್ತಿಮ್ ಅಪೇಕ್ಷ್ಯ ತಿಷ್ಠತ|
5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ಯೋಹನ್ ಜಲೇ ಮಜ್ಜಿತಾವಾನ್ ಕಿನ್ತ್ವಲ್ಪದಿನಮಧ್ಯೇ ಯೂಯಂ ಪವಿತ್ರ ಆತ್ಮನಿ ಮಜ್ಜಿತಾ ಭವಿಷ್ಯಥ|
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ಪಶ್ಚಾತ್ ತೇ ಸರ್ವ್ವೇ ಮಿಲಿತ್ವಾ ತಮ್ ಅಪೃಚ್ಛನ್ ಹೇ ಪ್ರಭೋ ಭವಾನ್ ಕಿಮಿದಾನೀಂ ಪುನರಪಿ ರಾಜ್ಯಮ್ ಇಸ್ರಾಯೇಲೀಯಲೋಕಾನಾಂ ಕರೇಷು ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ?
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ತತಃ ಸೋವದತ್ ಯಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಕಾಲಾನ್ ಸಮಯಾಂಶ್ಚ ಪಿತಾ ಸ್ವವಶೇಽಸ್ಥಾಪಯತ್ ತಾನ್ ಜ್ಞಾತೃಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಧಿಕಾರೋ ನ ಜಾಯತೇ|
8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಸು ಪವಿತ್ರಸ್ಯಾತ್ಮನ ಆವಿರ್ಭಾವೇ ಸತಿ ಯೂಯಂ ಶಕ್ತಿಂ ಪ್ರಾಪ್ಯ ಯಿರೂಶಾಲಮಿ ಸಮಸ್ತಯಿಹೂದಾಶೋಮಿರೋಣದೇಶಯೋಃ ಪೃಥಿವ್ಯಾಃ ಸೀಮಾಂ ಯಾವದ್ ಯಾವನ್ತೋ ದೇಶಾಸ್ತೇಷು ಯರ್ವ್ವೇಷು ಚ ಮಯಿ ಸಾಕ್ಷ್ಯಂ ದಾಸ್ಯಥ|
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ಇತಿ ವಾಕ್ಯಮುಕ್ತ್ವಾ ಸ ತೇಷಾಂ ಸಮಕ್ಷಂ ಸ್ವರ್ಗಂ ನೀತೋಽಭವತ್, ತತೋ ಮೇಘಮಾರುಹ್ಯ ತೇಷಾಂ ದೃಷ್ಟೇರಗೋಚರೋಽಭವತ್|
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ಯಸ್ಮಿನ್ ಸಮಯೇ ತೇ ವಿಹಾಯಸಂ ಪ್ರತ್ಯನನ್ಯದೃಷ್ಟ್ಯಾ ತಸ್ಯ ತಾದೃಶಮ್ ಊರ್ದ್ವ್ವಗಮನಮ್ ಅಪಶ್ಯನ್ ತಸ್ಮಿನ್ನೇವ ಸಮಯೇ ಶುಕ್ಲವಸ್ತ್ರೌ ದ್ವೌ ಜನೌ ತೇಷಾಂ ಸನ್ನಿಧೌ ದಣ್ಡಾಯಮಾನೌ ಕಥಿತವನ್ತೌ,
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ಹೇ ಗಾಲೀಲೀಯಲೋಕಾ ಯೂಯಂ ಕಿಮರ್ಥಂ ಗಗಣಂ ಪ್ರತಿ ನಿರೀಕ್ಷ್ಯ ದಣ್ಡಾಯಮಾನಾಸ್ತಿಷ್ಠಥ? ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪಾತ್ ಸ್ವರ್ಗಂ ನೀತೋ ಯೋ ಯೀಶುಸ್ತಂ ಯೂಯಂ ಯಥಾ ಸ್ವರ್ಗಮ್ ಆರೋಹನ್ತಮ್ ಅದರ್ಶಮ್ ತಥಾ ಸ ಪುನಶ್ಚಾಗಮಿಷ್ಯತಿ|
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ತತಃ ಪರಂ ತೇ ಜೈತುನನಾಮ್ನಃ ಪರ್ವ್ವತಾದ್ ವಿಶ್ರಾಮವಾರಸ್ಯ ಪಥಃ ಪರಿಮಾಣಮ್ ಅರ್ಥಾತ್ ಪ್ರಾಯೇಣಾರ್ದ್ಧಕ್ರೋಶಂ ದುರಸ್ಥಂ ಯಿರೂಶಾಲಮ್ನಗರಂ ಪರಾವೃತ್ಯಾಗಚ್ಛನ್|
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ನಗರಂ ಪ್ರವಿಶ್ಯ ಪಿತರೋ ಯಾಕೂಬ್ ಯೋಹನ್ ಆನ್ದ್ರಿಯಃ ಫಿಲಿಪಃ ಥೋಮಾ ಬರ್ಥಜಮಯೋ ಮಥಿರಾಲ್ಫೀಯಪುತ್ರೋ ಯಾಕೂಬ್ ಉದ್ಯೋಗಾ ಶಿಮೋನ್ ಯಾಕೂಬೋ ಭ್ರಾತಾ ಯಿಹೂದಾ ಏತೇ ಸರ್ವ್ವೇ ಯತ್ರ ಸ್ಥಾನೇ ಪ್ರವಸನ್ತಿ ತಸ್ಮಿನ್ ಉಪರಿತನಪ್ರಕೋಷ್ಠೇ ಪ್ರಾವಿಶನ್|
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ಪಶ್ಚಾದ್ ಇಮೇ ಕಿಯತ್ಯಃ ಸ್ತ್ರಿಯಶ್ಚ ಯೀಶೋ ರ್ಮಾತಾ ಮರಿಯಮ್ ತಸ್ಯ ಭ್ರಾತರಶ್ಚೈತೇ ಸರ್ವ್ವ ಏಕಚಿತ್ತೀಭೂತ ಸತತಂ ವಿನಯೇನ ವಿನಯೇನ ಪ್ರಾರ್ಥಯನ್ತ|
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ತತ್ರ ಸ್ಥಾನೇ ಸಾಕಲ್ಯೇನ ವಿಂಶತ್ಯಧಿಕಶತಂ ಶಿಷ್ಯಾ ಆಸನ್| ತತಃ ಪಿತರಸ್ತೇಷಾಂ ಮಧ್ಯೇ ತಿಷ್ಠನ್ ಉಕ್ತವಾನ್
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
ಹೇ ಭ್ರಾತೃಗಣ ಯೀಶುಧಾರಿಣಾಂ ಲೋಕಾನಾಂ ಪಥದರ್ಶಕೋ ಯೋ ಯಿಹೂದಾಸ್ತಸ್ಮಿನ್ ದಾಯೂದಾ ಪವಿತ್ರ ಆತ್ಮಾ ಯಾಂ ಕಥಾಂ ಕಥಯಾಮಾಸ ತಸ್ಯಾಃ ಪ್ರತ್ಯಕ್ಷೀಭವನಸ್ಯಾವಶ್ಯಕತ್ವಮ್ ಆಸೀತ್|
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ಸ ಜನೋಽಸ್ಮಾಕಂ ಮಧ್ಯವರ್ತ್ತೀ ಸನ್ ಅಸ್ಯಾಃ ಸೇವಾಯಾ ಅಂಶಮ್ ಅಲಭತ|
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ತದನನ್ತರಂ ಕುಕರ್ಮ್ಮಣಾ ಲಬ್ಧಂ ಯನ್ಮೂಲ್ಯಂ ತೇನ ಕ್ಷೇತ್ರಮೇಕಂ ಕ್ರೀತಮ್ ಅಪರಂ ತಸ್ಮಿನ್ ಅಧೋಮುಖೇ ಭೃಮೌ ಪತಿತೇ ಸತಿ ತಸ್ಯೋದರಸ್ಯ ವಿದೀರ್ಣತ್ವಾತ್ ಸರ್ವ್ವಾ ನಾಡ್ಯೋ ನಿರಗಚ್ಛನ್|
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ಏತಾಂ ಕಥಾಂ ಯಿರೂಶಾಲಮ್ನಿವಾಸಿನಃ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ವಿದಾನ್ತಿ; ತೇಷಾಂ ನಿಜಭಾಷಯಾ ತತ್ಕ್ಷೇತ್ರಞ್ಚ ಹಕಲ್ದಾಮಾ, ಅರ್ಥಾತ್ ರಕ್ತಕ್ಷೇತ್ರಮಿತಿ ವಿಖ್ಯಾತಮಾಸ್ತೇ|
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
ಅನ್ಯಚ್ಚ, ನಿಕೇತನಂ ತದೀಯನ್ತು ಶುನ್ಯಮೇವ ಭವಿಷ್ಯತಿ| ತಸ್ಯ ದೂಷ್ಯೇ ನಿವಾಸಾರ್ಥಂ ಕೋಪಿ ಸ್ಥಾಸ್ಯತಿ ನೈವ ಹಿ| ಅನ್ಯ ಏವ ಜನಸ್ತಸ್ಯ ಪದಂ ಸಂಪ್ರಾಪ್ಸ್ಯತಿ ಧ್ರುವಂ| ಇತ್ಥಂ ಗೀತಪುಸ್ತಕೇ ಲಿಖಿತಮಾಸ್ತೇ|
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
ಅತೋ ಯೋಹನೋ ಮಜ್ಜನಮ್ ಆರಭ್ಯಾಸ್ಮಾಕಂ ಸಮೀಪಾತ್ ಪ್ರಭೋ ರ್ಯೀಶೋಃ ಸ್ವರ್ಗಾರೋಹಣದಿನಂ ಯಾವತ್ ಸೋಸ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಯಾವನ್ತಿ ದಿನಾನಿ ಯಾಪಿತವಾನ್
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ತಾವನ್ತಿ ದಿನಾನಿ ಯೇ ಮಾನವಾ ಅಸ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ತಿಷ್ಠನ್ತಿ ತೇಷಾಮ್ ಏಕೇನ ಜನೇನಾಸ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಯೀಶೋರುತ್ಥಾನೇ ಸಾಕ್ಷಿಣಾ ಭವಿತವ್ಯಂ|
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ಅತೋ ಯಸ್ಯ ರೂಢಿ ರ್ಯುಷ್ಟೋ ಯಂ ಬರ್ಶಬ್ಬೇತ್ಯುಕ್ತ್ವಾಹೂಯನ್ತಿ ಸ ಯೂಷಫ್ ಮತಥಿಶ್ಚ ದ್ವಾವೇತೌ ಪೃಥಕ್ ಕೃತ್ವಾ ತ ಈಶ್ವರಸ್ಯ ಸನ್ನಿಧೌ ಪ್ರಾರ್ಯ್ಯ ಕಥಿತವನ್ತಃ,
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
ಹೇ ಸರ್ವ್ವಾನ್ತರ್ಯ್ಯಾಮಿನ್ ಪರಮೇಶ್ವರ, ಯಿಹೂದಾಃ ಸೇವನಪ್ರೇರಿತತ್ವಪದಚ್ಯುತಃ
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ಸನ್ ನಿಜಸ್ಥಾನಮ್ ಅಗಚ್ಛತ್, ತತ್ಪದಂ ಲಬ್ಧುಮ್ ಏನಯೋ ರ್ಜನಯೋ ರ್ಮಧ್ಯೇ ಭವತಾ ಕೋಽಭಿರುಚಿತಸ್ತದಸ್ಮಾನ್ ದರ್ಶ್ಯತಾಂ|
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ತತೋ ಗುಟಿಕಾಪಾಟೇ ಕೃತೇ ಮತಥಿರ್ನಿರಚೀಯತ ತಸ್ಮಾತ್ ಸೋನ್ಯೇಷಾಮ್ ಏಕಾದಶಾನಾಂ ಪ್ರರಿತಾನಾಂ ಮಧ್ಯೇ ಗಣಿತೋಭವತ್|

< அப்போஸ்தலர் 1 >