< அப்போஸ்தலர் 1 >
1 ௧ 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ଏ ୱାରିନି ତିୟପିଲ୍, ଇମ୍ଣି ଦିନ୍ ଜିସୁ ଜାର୍ ବାଚିକିତି ପକ୍ୟାତାକାରିଂ ପୁଇପୁୟା ଜିବନ୍ ଲାହାଙ୍ଗ୍ ବଲ୍ ହିଜ଼ି ଜପି ଅୟାତାନ୍,
2 ௨ அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ବାଦାଡ଼୍ତ ଦୁମ୍ନି ପାତେକ୍ ଇମ୍ଣି ସବୁ କାମାୟ୍ କିଜ଼ି ମାଚାର୍ ଆରି ବଲ୍ ହିଜ଼ି ମାଚାର୍, ହେ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଲେକିକିଜ଼ି ମାଚାଙ୍ଗ୍ । ବାଦାଡ଼୍ତ ଦୁମ୍ନି ଆଗେ ଇମ୍ଣାକାରିଂ ହେୱାନ୍ ଜାର୍ ପକ୍ୟାତାକାର୍ ଲାକେ ବାଚି କିଜ଼ି ମାଚାନ୍, ହେୱାରିଂ ହେୱାନ୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ସାକ୍ତିତାଂ ବଲ୍ ହିଜ଼ି ମାଚାନ୍ ।
3 ௩ அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ଜିସୁ ପା ଜାର୍ ଦୁକ୍ବଗ୍ ପାଚେ ଆଦେକ୍ ପାର୍ମାଣ୍ ହୁକେ ହେୱାର୍ ତାକେ ଜାର୍ତିଂ ଜିଜ଼ି ମାନାକା ଚଚ୍ଚାନ୍, ଆରେ ରିକଡ଼ି ଦିନ୍ ପାତେକ୍ ତାଇନାତ୍ ହେୱାରିଂ ଚଞ୍ଜ୍ୟା ଆଜ଼ି ଇସ୍ୱର୍ତି ରାଜିନି ବିସ୍ରେ ଇଚାନ୍ ।
4 ௪ அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ରଗ ହେୱାର୍ ହୁକେ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍ କୁଚ୍ନି ୱେଡ଼ାଲିଂ ଜିସୁ ହେୱାରିଂ ଇ ବଲ୍ ହିଜ଼ି, “ଏପେଙ୍ଗ୍ ଜିରୁସାଲମ୍ତାଂ ହାଲ୍ମାଟ୍, ମାତର୍ ଆବାତି ଇମ୍ଣି ପାର୍ମାଣ୍ ବିସ୍ରେ ନା ତାଙ୍ଗ୍ ୱେଚାଦେର୍ଣ୍ଣା, ହେବେ କାସିମାନାଟ୍;
5 ௫ ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ଇନେକିଦେଂକି ଜହନ୍ ଏସ୍ତ ବାପ୍ତିସିମ୍ ହିତାନ୍ ସତ୍, ମାତର୍ ଅଲପ୍ ଦିନ୍ ବିସ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତ ବାପ୍ତିସିମ୍ ଆନାଦେର୍ ।”
6 ௬ அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ଲାଗିଂ ହେୱାର୍ ରବେ ରୁଣ୍ଡା ଆଜ଼ି ହେୱାନିଂ ଗୱାରି କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍; “ଏ ମାପ୍ରୁ, ଏନ୍ ଇନାକା ଇ ସମୁତ ଇସ୍ରାଏଲ୍ କେଇଦ ଆରେରଗ ରାଜିନି ବଜ୍ ହେଲାୟ୍ କିନାୟା?”
7 ௭ அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ହେୱାନ୍ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଇମ୍ଣି ୱିଜ଼ୁ କାଡ଼୍ କି ସମୁ ଆବା ଜାର୍ ଆଦିକାର୍ ତାରେନ୍ ଇଡ଼୍ତାନ୍ନା ହେଦାଂ ମିଦାଙ୍ଗ୍ ପୁନି ବିସ୍ରେ ଆକାୟ୍ ।
8 ௮ பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ମାତର୍ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ମି ଜପି ଜୁଜ଼ି ୱାତିସ୍, ଏପେଙ୍ଗ୍ ସାକ୍ତି ପାୟାନାଦେର୍, ଆରେ ଜିରୁସାଲମ୍ ୱିଜ଼ୁ ଜିହୁଦା ରାଜି ଆରି ସମିରଣ୍ ଆରେ ପୁର୍ତିନି ହାରିହାରା ହାନ୍ଦି ପାତେକ୍ ପା ନା ସାକି ଆନାଦେର୍ ।”
9 ௯ இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ହେୱାନ୍ ଇ ୱିଜ଼ୁ କାତା ଇଚି ପାଚେ ହେୱାର୍ ହୁଡ଼ୁ ହୁଡ଼ୁ ହେୱାନ୍ ଜପି ଅୟାତାନ୍, ଆରେ ଅଲପ୍ ବାଦାଡ଼୍ତ ହେୱାନିଂ ହେୱାର୍ ନଞ୍ଜର୍ତାଂ ଦେହା ଆତାନ୍ ।
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ଜିସୁ ହାଲୁ ହାଲୁ ହେୱାର୍ ବାଦାଡ଼୍ ନିପ ମିଟ୍କିୱାଦାଂ ହୁଡ଼୍ନାରା, ଇ ଲାକେ ସମୁତ, ହୁଡ଼ାଟ୍, ଡ଼ିଞ୍ଜ୍ନି ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପାତାକାର୍ ରିକାର୍ ଆଣ୍ଡ୍ରାଙ୍ଗ୍ ହେୱାର୍ ଲାଗାଂ ଇକାୱାତାର୍,
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ଆରେ ହେୱାର୍ ଇଚାର୍, “ଏ ଗାଲିଲିୟର୍ ଲକୁ, ଇନାକିଦେଂ ଏପେଙ୍ଗ୍ ବାଦାଡ଼୍ ନିପ ହୁଡ଼୍ଜି ନିଲ୍ତାଦେର୍ଣ୍ଣା? ଇ ଇମ୍ଣି ଜିସୁ ମିତାଙ୍ଗ୍ ବାଦାଡ଼୍ତ ଅୟାତାନ୍, ହେୱାନିଂ ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍ ବାନି ବାଦାଡ଼୍ତ ହାନାକା ହୁଡ଼୍ତାଦେର୍, ହେୱାନ୍ ହେ ଲାକେ ମାଜ଼୍ଦି ୱାନାନ୍ ।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ଇଦାଂ ପାଚେ ପକ୍ୟାତାକାର୍ ଜିତ୍ ଇନି ମାଡ଼ିତାଂ ଜିରୁସାଲମ୍ତ ମାସ୍ଦି ୱାତାର୍ । ହେ ଜିରୁସାଲମ୍ ଲାଗେ, ର ଜମ୍ନିବାର୍ନି ହାଜ଼ି ର କିଲମିଟର୍ ଦେହା ମାଚାତ୍ ।
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ହେୱାର୍, ଇଚିସ୍ ପିତର୍, ଜହନ୍, ଜାକୁବ୍, ଆନ୍ଦ୍ରିୟ, ପିଲିପ୍, ତମା, ବାର୍ତଲମି, ମାତିଉ, ଆଲପିତି ମେହି ଜାକୁବ୍, ତିର୍କାଡ଼୍ ସିମନ୍ ଆରି ଜାକୁବ୍ତି ମେହି ଜିହୁଦା, ଜିରୁସାଲମ୍ ଗାଡ଼୍ ବିତ୍ରେ ହଣ୍ଜି, ଇମ୍ଣି ଜପ୍ଣି ବାକ୍ରାତ ହେୱାର୍ ବାହା କିଜ଼ି ମାଚାର୍, ହେବେ ହାଚାର୍ ।
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ଇୱାର୍ ୱିଜ଼ାର୍ କଗ୍ଲେରାହିଂ ହୁକେ ଆରି ଜିସୁତି ତେହି ମରିୟମ୍ ଆରି ହେୱାର୍ତି ଟଣ୍ଡାର୍ ଲାହାଙ୍ଗ୍ ର ମାନ୍ତ ପାର୍ତାନାତ ଲାଗା ଆଜ଼ି ମାଚାର୍ ।
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ହେ ପାର୍ତାନା ୱେଡ଼ାଲିଂ ପିତର୍ ତର୍ଦି ଟଣ୍ଡାର୍ ବିତ୍ରେ ମାଦି ଇଞ୍ଜ ଇଚାନ୍ ହେବେ ଜିସୁ ଆନ୍ମାନ୍ତାଂ ଚକଡ଼ି ଜାଣ୍ ରବେ ମାଚାର୍,
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
“ଟଣ୍ଡାର୍, ଆରେ ତଣ୍ଦେକ୍ ଇମ୍ଣି ଇସ୍କାରିତ୍ ଜିହୁଦା ଜିସୁଙ୍ଗ୍ ଆହ୍ନି ମାନାୟାରିଂ ହାଜ଼ି ଚଚ୍ଚି ମାଚାନ୍, ହେ ବିସ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ପୁର୍ବେତାଂ ଦାଉଦ୍ତି ୱେଇଦାଂ ଇନାକା ଇଞ୍ଜି ମାଚାର୍, ହେ ସାସ୍ତର୍ ବଚନ୍ ପୁରାଦେଂ ଲଡ଼ା ମାଚାତ୍;
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ମା ଦଲ୍ଦ ରୱାନ୍ ଇଞ୍ଜି ଗାଣାକିୟାଜ଼ି ମାଚାନ୍ ଆରି ହେବା ପାଦ୍ତ ମେହାଆଜ଼ି ମାଚାନ୍ ।”
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ଇ ମାନାୟ୍ ଜିହୁଦା ଅଦାର୍ମି ମଲ୍ ହୁକେ ର ବୁମି କଡ଼୍ଜି ମାଚାନ୍, ଆରେ, ହେୱାନ୍ କାପ୍ଡ଼ା ଇଡ଼୍ୟାଜ଼ି ଆର୍ତିଲେ ହେୱାନ୍ତି ପଟ ପାଡ଼୍ତାତ୍ ଆରି ୱାହିଂ ହସି ହାଚିକ୍;
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ଆରେ, ଇଦାଂ ଜିରୁସାଲମ୍ ଗାଡ଼୍ଦ ବାହାକିତି ୱିଜ଼ାକାର୍ ପୁଚିଲେ ହେ ବୁମି ହେୱାର୍ତି ଜାର୍ ବେରଣ୍ତ “ହକଲ୍ଦମା” ଇଚିସ୍ “ନେତେର୍ ବୁମି” ଇଞ୍ଜି ପୁଟାତାତ୍ ।
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
“ଆରେ ପତିତ ଲେକାମାନାତ୍, ‘ହେୱାନ୍ତି ବାହା ମେଲାୟେତ୍, ହେବେ ଇନେର୍ ବାହା କିମେନ୍ ।’ ଆରି ହେୱାନ୍ କାମାୟ୍ତ ଆରେ ବିନ୍ନିକାନ୍ ପାୟାୟେନ୍ ।”
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
“ଲାଗିଂ, ମାପ୍ରୁ ଜିସୁ ଜହନ୍ ହୁକେ ବାପ୍ତିସିମ୍ ଅନି ସମୁତାଂ ଆରମ୍ କିଜ଼ି, ମା ଲାଗାଂ ଜପିତାଂ ଅୟାନି ଦିନ୍ ପାତେକ୍ ଏଚେକ୍ ସମୁ ମା ବିତ୍ରେ ବୁଲା ଚାଲା ଆଜ଼ି ମାଚାର୍ ।
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ହେ ସମୁ ଇମ୍ଣି ମାନାୟାର୍ ମା ହାଙ୍ଗ୍ଦାକାର୍ ଆତାର୍ଣ୍ଣା, ହେୱାର୍ ବିତ୍ରେତାଂ ଜହନ୍ ବାପ୍ତିସିମ୍ ଅଜ଼ି ମା ଲାହାଂ ହେୱାନ୍ତି ଆରେ ନିଂନାକା ସାକି ଆଦେଂ ଲଡ଼ା ।”
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ହେବେ ହେୱାର୍ ରିୟାରିଂ, ଇଚିସ୍ ଜସେପ୍ତିଂ, ଇନେରିଂ ବର୍ସବା ଇଞ୍ଜି ଇନାର୍ ଆରି ଇନେର୍ର୍ତି କୁକ୍ନି ତର୍ ଜୁସ୍ତ, ଆରି ମତିୟ ବିନେ ତର୍ ହିତାର୍,
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
ଇ ପାର୍ତାନା କିତାର୍, “ମାପ୍ରୁ ସବୁ ଲକାର୍ତି ଚିନ୍ତା ପୁନି ମାପ୍ରୁ ଇ ରିୟାର୍ ବିତ୍ରେତାଂ ମି ହୁକେ ଇନେର୍ ବାଚି କିୟାତାନ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେଚ୍ଚାଟ୍,
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ଇ ମାନାୟ୍, ଜିହୁଦାତି ବାହାତ ପକ୍ୟାତି ହେବା ପାଦ୍ କାମାୟ୍ କିନାନ୍ ।”
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ଆରେ, ହେୱାର୍ ହେ ରିୟାର୍ କାଜିଂ ଦରମ୍ଗୁଲି କିତାର୍, ଆରେ ମତିୟ ତର୍ଦ ଦରମ୍ଗୁଲି ନିଂତାତ୍; ହେବେ ହେୱାନ୍ ଏଗାର୍ ଜାଣ୍ ପକ୍ୟାତାକାର୍ ଲାହାଂ ମିହାତାନ୍ ।