< அப்போஸ்தலர் 1 >

1 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
תאופילוס היקר, במכתבי הראשון סיפרתי לך על חייו, מעשיו ותורתו של ישוע המשיח, וכיצד עלה לשמים, לאחר שנתן לשליחיו הנבחרים הוראות נוספות בגבורת רוח הקודש.
2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
3 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
במשך ארבעים יום לאחר צליבתו נגלה ישוע אל השליחים פעמים אחדות, והוכיח להם בדרכים שונות שהוא אכן חי. בהזדמנויות אלה הוא גם שוחח איתם על מלכות האלוהים.
4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
באחת הפגישות האלה הורה ישוע לתלמידיו שלא יעזבו את ירושלים עד שיבוא עליהם רוח הקודש, כפי שהבטיח להם האב. ישוע שוחח איתם על כך פעמים רבות בעבר.
5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
”יוחנן הטביל אתכם במים, “הזכיר להם ישוע,”אולם בעוד ימים אחדים תיטבלו ברוח הקודש!“
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
כשנגלה אליהם ישוע בפעם אחרת, שאלו אותו:”אדון, האם אתה עומד להשיב את המלכות לישראל?“
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
”האב הוא הקובע תאריכים אלה, “ענה ישוע,”ואינכם צריכים לדעת אותם.
8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
אולם כשרוח הקודש יצלח עליכם, תקבלו כוח וסמכות להיות עדים לי בירושלים, ביהודה ושומרון ועד קצה העולם.“
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
זמן קצר לאחר מכן עלה ישוע לשמים לעיני תלמידיו, ונעלם בתוך ענן.
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
בעוד התלמידים מאמצים את עיניהם כדי לזכות במבט נוסף, עמדו ביניהם לפתע שני אנשים לבושים גלימות לבנות,
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ואמרו:”אנשי הגליל, מדוע אתם עומדים ומביטים לשמים? ישוע אמנם עלה לשמים, אך יום אחד הוא יחזור בדיוק כפי שהלך מכם!“
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
כשקרה הדבר הזה הם היו בהר־הזיתים, ועתה חזרו ברגל לירושלים (מרחק של פחות מקילומטר).
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
כשהגיעו העירה, הם התאספו לתפילה בחדר העלייה שבו גרו. באסיפה זאת נכחו האנשים הבאים: פטרוס, יוחנן ויעקב, ‎אַנְדְּרֵי, פיליפוס, תומא, בר־תלמי, מתתיהו, יעקב בן־חלפי, שמעון מהקנאים, יהודה בן־יעקב ואחיו של ישוע. היו שם גם נשים אחדות, וביניהן אמו של ישוע.
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
אסיפת התפילה נמשכה ימים אחדים, ויום אחד, כשנכחו שם מאה ועשרים איש, קם שמעון פטרוס ואמר:
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
”אחים, נבואות התנ״ך צריכות היו להתקיים בנוגע ליהודה, אשר בגד בישוע והוביל אליו את ההמון, שהרי רוח הקודש דיבר על כך לפני זמן רב בפי דוד המלך.
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
יהודה היה אחד מאיתנו; הוא נבחר בדיוק כמונו להיות שליח.
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
בכסף שקיבל תמורת הבגידה הוא קנה לעצמו שדה, ושם מצא את מותו – הוא נפל ארצה על פניו, בטנו נבקעה ומעיו נשפכו החוצה.
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
הידיעה על מותו התפשטה במהירות בין כל תושבי ירושלים, והם מכנים את המקום ההוא בשפתם’חקל דמא‘, שפירושו’שדה־הדם‘.
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
דוד המלך ניבא על כך בתהלים, ואמר שביתו יהיה שומם ושאיש לא יישב בו. ובמקום אחר אמר דוד שתפקידו (של יהודה) יינתן למישהו אחר.
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
”משום כך עלינו לבחור במישהו אחר, אשר ימלא את מקומו של יהודה, ויצטרף אלינו בעדותנו על תחייתו של ישוע אדוננו. הבה נבחר באדם שהיה איתנו מאז הימים הראשונים – מאז שישוע נטבל על־ידי יוחנן ועד שנלקח מאיתנו לשמים.“
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
הנאספים נקבו בשני שמות: יוסף יוסטוס (שנקרא גם”בר־שבא“) ומתתיהו.
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
לאחר מכן התפללו כולם וביקשו שייבחר האדם הנכון.”אלוהים, “התפללו,”אתה המכיר כל לב, הראה נא לנו במי מהשניים בחרת למלא את מקומו של יהודה הבוגד, שהלך למקום הראוי לו!“
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
הם הפילו גורל כדי לבחור בין שני המועמדים, ושמו של מתתיהו עלה בגורל. באותו יום הצטרף מתתיהו אל אחד־עשר השליחים.

< அப்போஸ்தலர் 1 >