< அப்போஸ்தலர் 1 >

1 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ⲁ̅ⲡⲓϩⲟⲩⲓⲧ ⲙⲉⲛ ⳿ⲛⲥⲁϫⲓ ⲁⲓⲁⲓϥ ⲉⲑⲃⲉ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲱ ⲑⲉⲟⲫⲩⲗⲗⲉ ϧⲉⲛ ⲛⲏ⳿ⲉⲧⲁ Ⲓⲏ̅ⲥ̅ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲉⲁⲓⲧⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲉϯ⳿ⲥⲃⲱ.
2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ⲃ̅ϣⲁ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲁϥϩⲟⲛϩⲉⲛ ⳿ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⲛⲏ⳿ⲉⲧⲁϥⲥⲟⲧⲡⲟⲩ ⲁⲩⲟⲗϥ ⳿ⲉ⳿ⲧⲫⲉ.
3 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ⲅ̅ⲛⲁⲓ ⳿ⲉⲧⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲉϥⲟⲛϧ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⳿ⲉⲧⲁϥϣⲉⲡ⳿ⲙⲕⲁϩ ϧⲉⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲙⲙⲏⲓⲛⲓ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ ⲙ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲉϥⲟⲩⲟⲛϩ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲉϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲟⲩ ⲉⲑⲃⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ⲇ̅ⲟⲩⲟϩ ⲉϥⲟⲩⲱⲙ ⲛⲉⲙⲱⲟⲩ ⲁϥϩⲟⲛϩⲉⲛ ⲛⲱⲟⲩ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲫⲱⲣϫ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲛⲒⲗ̅ⲏ̅ⲙ̅ ⲁⲗⲗⲁ ⳿ⲉⲟϩⲓ ⳿ⲙⲡⲓⲱϣ ⳿ⲛⲧⲉ Ⲫ̇ⲓⲱⲧ ⲫⲏ⳿ⲉⲧ⳿ⲁⲣⲉⲧⲉⲛⲥⲟⲑⲙⲉϥ ⳿ⲛⲧⲟⲧ.
5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ⲉ̅ϫⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲙⲉⲛ ⲁϥϯⲱⲙⲥ ϧⲉⲛ ⲟⲩⲙⲱⲟⲩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⲥⲉⲛⲁⲉⲙⲥ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲁⲛ ⳿ⲁ ⲛⲁⲓ ϣⲱⲡⲓ.
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ⲋ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲙⲉⲛ ⲟⲩⲛ ⳿ⲉⲧⲁⲩⲑⲱⲟⲩϯ ⲛⲁⲩϣⲓⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡ⳪ ⲓⲉ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲁⲓⲥⲏⲟⲩ ⳿ⲭⲛⲁ⳿ⲧⲫⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲉⲠⲓ̅ⲥ̅ⲗ̅.
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲫⲱⲧⲉⲛ ⲁⲛ ⲡⲉ ⳿ⲉ⳿ⲉⲙⲓ ⳿ⲉϩⲁⲛ⳿ⲭⲣⲟⲛⲟⲥ ⲓⲉ ϩⲁⲛⲥⲏⲟⲩ ⲛⲁⲓ ⳿ⲉⲧⲁ Ⲫ̇ⲓⲱⲧ ⲭⲁⲩ ϧⲁ ⲡⲉϥⲉⲣϣⲓϣⲓ.
8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ⲏ̅ⲁⲗⲗⲁ ⳿ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉϭⲓ ⳿ⲛⲟⲩϫⲟⲙ ⳿ⲉϣⲱⲡ ⳿ⲁⲣⲉϣⲁⲛ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⳿ⲓ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲟⲩⲟϩ ⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲱⲡⲓ ⲛⲏⲓ ⳿ⲙⲙⲉⲑⲣⲉ ϧⲉⲛ Ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲛⲉⲙ ϯⲒⲟⲩⲇⲉ⳿ⲁ ⲧⲏⲣⲥ ⲛⲉⲙ ⳿ⲧⲤⲁⲙⲁⲣⲓ⳿ⲁ ⲛⲉⲙ ϣⲁ ⲁⲩⲣⲏϫϥ ⳿ⲙ⳿ⲡⲕⲁϩⲓ.
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ⲑ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲓ ⳿ⲉⲧⲁϥϫⲟⲧⲟⲩ ⲉⲩⲥⲟⲙⲥ ⲁⲩϥⲓⲧϥ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⲟⲩⲟϩ ⲟⲩϭⲏⲡⲓ ⲁⲥϣⲟⲡⲥ ⳿ⲉⲣⲟⲥ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ⲛⲟⲩⲃⲁⲗ.
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ⲓ̅ⲛⲁⲩⲟⲓ ⲇⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲛⲁⲩⲓⲟⲣⲉⲙ ⲟⲩⲁⲓ ⲟⲩⲃⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲉϥⲙⲟϣⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲣⲱⲙⲓ ⲃ̅ ⲁⲩ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⲛⲁϩⲣⲁⲩ ϧⲉⲛ ϩⲁⲛϩⲉⲃⲥⲱ ⲉⲩⲟⲩⲟⲃϣ.
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ⲓ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲛⲓⲣⲱⲙⲓ ⲛⲓⲄⲁⲗⲓⲗⲉⲟⲥ ⲁϧⲱⲧⲉⲛ ⲧⲉⲧⲉⲛ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲣⲉⲧⲉⲛⲥⲟⲙⲥ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲫⲁⲓ ⲡⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲧⲁⲩⲟⲗϥ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲣⲱⲧⲉⲛ ⲫⲁⲓ ⲟⲛ ⲡⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲉϥⲛⲏⲟⲩ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲉⲧ⳿ⲁⲣⲉⲧⲉⲛⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲉϥⲙⲟϣⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ.
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ⲓ̅ⲃ̅ⲧⲟⲧⲉ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⳿ⲉⲒⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ⲡⲓⲧⲱⲟⲩ ⳿ⲉϣⲁⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲫⲁⲛⲓϫⲱⲓⲧ ⲉⲧϧⲉⲛⲧ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲒⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲛⲟⲩⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⳿ⲙⲙⲟϣⲓ.
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ⲓ̅ⲅ̅ⲧⲟⲧⲉ ⳿ⲉⲧⲁⲩϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⲁⲩϣⲉ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲟⲩⲙⲁ ⲉϥⲥⲁ⳿ⲡϣⲱⲓ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲛⲁϥϣⲟⲡ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲛϫⲉ Ⲡⲉⲧⲣⲟⲥ ⲛⲉⲙ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ Ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲛⲉⲙ Ⲁⲛ⳿ⲇⲣⲉⲁⲥ Ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲛⲉⲙ Ⲑⲱⲙⲁⲥ Ⲃⲁⲣⲑⲟⲗⲟⲙⲉⲟⲥ ⲛⲉⲙ Ⲙⲁⲧⲑⲉⲟⲥ Ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲫⲁ Ⲁⲗⲫⲉⲟⲥ ⲛⲉⲙ Ⲥⲓⲙⲱⲛ ⲡⲓⲣⲉϥⲭⲟϩ ⲛⲉⲙ Ⲓⲟⲩⲇⲁⲥ ⲫⲁ Ⲓⲁⲕⲱⲃⲟⲥ.
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ⲓ̅ⲇ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲉⲩⲙⲏⲛ ⲉⲩⲥⲟⲡ ⳿ⲉϯ ⲡⲣⲟⲥⲉⲩⲭⲏ ⲛⲉⲙ ϩⲁⲛϩⲓ⳿ⲟⲙⲓ ⲛⲉⲙ Ⲙⲁⲣⲓ⳿ⲁ ⳿ⲑⲙⲁⲩ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ⲛⲉⲙ ⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ.
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ⲓ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲁⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲁϥⲧⲱⲛϥ ⳿ⲛϫⲉ Ⲡⲉⲧⲣⲟⲥ ϧⲉⲛ ⳿ⲑⲙⲏϯ ⳿ⲛⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲏϣ ⲇⲉ ⲉⲩⲑⲟⲩⲏⲧ ϩⲓ ⲫⲁⲓ ⳿ⲉⲫⲁⲓ ⳿ⲉⲛⲁⲩⲛⲁⲉⲣⲣ̅ⲕ̅ ⳿ⲛⲣⲁⲛ ⲡⲉϫⲁϥ.
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
ⲓ̅ⲋ̅ⲛⲓⲣⲱⲙⲓ ⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ϩⲱϯ ⲡⲉ ⳿ⲛⲧⲉⲥϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ⲑⲏ⳿ⲉⲧⲁϥⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲛϫⲟⲥ ⳿ⲛϫⲉ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲣⲱϥ ⳿ⲛⲆⲁⲩⲓⲇ ⲉⲑⲃⲉ Ⲓⲟⲩⲇⲁⲥ ⲫⲏ⳿ⲉⲧⲁϥⲉⲣϭⲁⲩⲙⲱⲓⲧ ⳿ⲛⲛⲏ⳿ⲉⲧⲁⲩ⳿ⲁⲙⲁϩⲓ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅.
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ⲓ̅ⲍ̅ϫⲉ ⲛⲁϥⲏⲡ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲉⲛ ⲡⲉ ⲟⲩⲟϩ ⳿ⲁ ⲡⲓⲱⲡ ⳿ⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲙⲡⲓ⳿ⲕⲗⲏⲣⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓⲇⲓ⳿ⲁⲕⲟⲛⲓⲁ.
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ⲓ̅ⲏ̅ⲫⲁⲓ ⲙⲉⲛ ⲟⲩⲛ ⲁϥϣⲱⲡ ⳿ⲛⲟⲩⲓⲟϩⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲫⲃⲉⲭⲉ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲁⲇⲓⲕⲓⲁ ⲟⲩⲟϩ ⲁϥϩⲉⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲉϥϩⲟ ⲁϥⲕⲱϣ ϧⲉⲛ ⲧⲉϥⲙⲏϯ ⲟⲩⲟϩ ⲛⲏⲉⲧⲥⲁϧⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲫⲱⲛ ⳿ⲉⲃⲟⲗ.
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲁϥⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧϣⲟⲡ ϧⲉⲛ Ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲥⲉⲙⲟⲩϯ ⳿ⲉ⳿ⲫⲣⲁⲛ ⳿ⲙⲡⲓⲓⲟϩⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϧⲉⲛ ⲧⲟⲩⲁⲥⲡⲓ ϫⲉ ⲁⲭⲉⲗⲇⲁⲙⲁⲅ ⳿ⲉⲧⲉ ⲡⲓⲓⲟϩⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲓ⳿ⲥⲛⲟϥ.
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
ⲕ̅⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⲅⲁⲣ ϩⲓ ⳿ⲡϫⲱⲙ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲯⲁⲗⲙⲟⲥ ϫⲉ ⲧⲉϥⲉⲣⲃⲓ ⲙⲁⲣⲉⲥϣⲱϥ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧϣⲟⲡ ⳿ⲛϧⲏⲧⲥ ⲧⲉϥⲙ⳿ⲉⲧⲉⲡⲓⲥⲕⲟⲡⲟⲥ ⲙⲁⲣⲉ ⲕⲉⲟⲩⲁⲓ ϭⲓⲧⲥ.
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
ⲕ̅ⲁ̅ϩⲱϯ ⲟⲩⲛ ϧⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ ⳿ⲉⲧⲁⲩ⳿Ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲛϧⲏⲧⲉⲛ ϧⲉⲛ ⲡⲓⲥⲏⲟⲩ ⲧⲏⲣϥ ⳿ⲉⲧⲁϥ⳿Ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓϫⲱⲛ ⳿ⲛϫⲉ ⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅.
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ⲕ̅ⲃ̅⳿ⲉⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⲓⲥϫⲉⲛ ⲡⲓⲱⲙⲥ ⳿ⲛⲧⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ϣⲁ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲁⲩⲟⲗϥ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲣⲟⲛ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲛⲛⲁⲓ ⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲛⲉⲙⲁⲛ ϧⲁ ⲧⲉϥ⳿ⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ.
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ⲕ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲧⲁϩⲉ ⲃ̅ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ Ⲓⲱⲥⲏⲫ ⲫⲏ⳿⳿ⲉⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲃⲁⲣⲥⲁⲃⲃⲁⲥ ⲫⲏ⳿ⲉⲧⲁⲩϯⲣⲉⲛϥ ϫⲉ ⲓⲟⲩⲥⲧⲟⲥ ⲛⲉⲙ ⲙⲁⲑⲓⲁⲥ.
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩⲧⲱⲃϩ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ Ⲡ⳪ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉⲧⲥⲱⲟⲩⲛ ⳿ⲙ⳿ⲡϩⲏⲧ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲟⲩⲟⲛϩ ⳿ⲙⲫⲏ⳿ⲉⲧⲁⲕⲥⲟⲧⲡϥ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲁⲓⲃ̅ ⲟⲩⲁⲓ.
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ⲕ̅ⲉ̅⳿ⲉϭⲓ ⳿ⲉ⳿ⲫⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲧⲁⲓⲇⲓ⳿ⲁⲕⲟⲛⲓⲁ ⲛⲉⲙ ⲧⲁⲓⲙⲉⲧⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲑⲏ⳿ⲉⲧⲁϥⲉⲣⲡⲁⲣⲁⲃⲉⲛⲓⲛ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛϫⲉ Ⲓⲟⲩⲇⲁⲥ ⲉⲁϥϣⲉⲛⲁϥ ⳿ⲉⲡⲉϥⲙⲁ ⳿ⲉⲧⲉ ⲫⲱϥ ⲡⲉ.
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲁⲩϯ⳿ⲕⲗⲏⲣⲟⲥ ⲛⲱⲟⲩ ⳿ⲁ ⲡⲓ⳿ⲕⲗⲏⲣⲟⲥ ⳿ⲓ ⳿ⲉϫⲉⲛ ⲙⲁⲑⲓⲁⲥ ⲁⲩⲟⲡϥ ⲛⲉⲙ ⲡⲓⲓ̅ⲁ̅ ⳿ⲛ⳿ⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ.

< அப்போஸ்தலர் 1 >