< அப்போஸ்தலர் 1 >

1 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ܟܬܒܐ ܩܕܡܝܐ ܟܬܒܬ ܐܘ ܬܐܘܦܝܠܐ ܥܠ ܟܠܗܝܢ ܐܝܠܝܢ ܕܫܪܝ ܡܪܢ ܝܫܘܥ ܡܫܝܚܐ ܠܡܥܒܕ ܘܠܡܠܦܘ
2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ܥܕܡܐ ܠܝܘܡܐ ܗܘ ܕܒܗ ܐܤܬܠܩ ܡܢ ܒܬܪ ܕܦܩܕ ܗܘܐ ܐܢܘܢ ܠܫܠܝܚܐ ܐܝܠܝܢ ܕܓܒܐ ܒܪܘܚܐ ܕܩܘܕܫܐ
3 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ܗܢܘܢ ܕܐܦ ܚܘܝ ܠܗܘܢ ܢܦܫܗ ܟܕ ܚܝ ܡܢ ܒܬܪ ܕܚܫ ܒܐܬܘܬܐ ܤܓܝܐܬܐ ܒܝܘܡܝܢ ܐܪܒܥܝܢ ܟܕ ܡܬܚܙܐ ܗܘܐ ܠܗܘܢ ܘܐܡܪ ܥܠ ܡܠܟܘܬܐ ܕܐܠܗܐ
4 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ܘܟܕ ܐܟܠ ܥܡܗܘܢ ܠܚܡܐ ܦܩܕ ܐܢܘܢ ܕܡܢ ܐܘܪܫܠܡ ܠܐ ܢܦܪܩܘܢ ܐܠܐ ܕܢܩܘܘܢ ܠܫܘܘܕܝܗ ܕܐܒܐ ܗܘ ܕܫܡܥܬܘܢ ܡܢܝ
5 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ܕܝܘܚܢܢ ܐܥܡܕ ܒܡܝܐ ܘܐܢܬܘܢ ܬܥܡܕܘܢ ܒܪܘܚܐ ܕܩܘܕܫܐ ܠܐ ܒܬܪ ܝܘܡܬܐ ܤܓܝܐܐ
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ܗܢܘܢ ܕܝܢ ܟܕ ܟܢܝܫܝܢ ܫܐܠܘܗܝ ܘܐܡܪܝܢ ܠܗ ܡܪܢ ܐܢ ܒܗܢܐ ܙܒܢܐ ܡܦܢܐ ܐܢܬ ܡܠܟܘܬܐ ܠܐܝܤܪܝܠ
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ܐܡܪ ܠܗܘܢ ܗܘ ܠܐ ܗܘܬ ܕܝܠܟܘܢ ܗܕܐ ܠܡܕܥ ܙܒܢܐ ܐܘ ܙܒܢܐ ܐܝܠܝܢ ܕܐܒܐ ܤܡ ܐܢܘܢ ܒܫܘܠܛܢܐ ܕܢܦܫܗ
8 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ܐܠܐ ܟܕ ܬܐܬܐ ܪܘܚܐ ܕܩܘܕܫܐ ܥܠܝܟܘܢ ܬܩܒܠܘܢ ܚܝܠܐ ܘܬܗܘܘܢ ܠܝ ܤܗܕܐ ܒܐܘܪܫܠܡ ܘܒܟܠܗ ܝܗܘܕ ܘܐܦ ܒܝܬ ܫܡܪܝܐ ܘܥܕܡܐ ܠܤܘܦܝܗ ܕܐܪܥܐ
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ܘܟܕ ܗܠܝܢ ܐܡܪ ܟܕ ܚܙܝܢ ܠܗ ܐܤܬܠܩ ܘܥܢܢܐ ܩܒܠܬܗ ܘܐܬܟܤܝ ܡܢ ܥܝܢܝܗܘܢ
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ܘܟܕ ܚܝܪܝܢ ܗܘܘ ܒܫܡܝܐ ܟܕ ܗܘ ܐܙܠ ܗܘܐ ܐܫܬܟܚܘ ܬܪܝܢ ܓܒܪܝܢ ܩܝܡܝܢ ܠܘܬܗܘܢ ܒܠܒܘܫܐ ܚܘܪܐ
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ܘܐܡܪܝܢ ܠܗܘܢ ܓܒܪܐ ܓܠܝܠܝܐ ܡܢܐ ܩܝܡܝܢ ܐܢܬܘܢ ܘܚܝܪܝܢ ܒܫܡܝܐ ܗܢܐ ܝܫܘܥ ܕܐܤܬܠܩ ܡܢܟܘܢ ܠܫܡܝܐ ܗܟܢܐ ܢܐܬܐ ܐܝܟ ܡܐ ܕܚܙܝܬܘܢܝܗܝ ܕܤܠܩ ܠܫܡܝܐ
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ܘܡܢ ܒܬܪܟܢ ܗܦܟܘ ܠܗܘܢ ܠܐܘܪܫܠܡ ܡܢ ܛܘܪܐ ܕܡܬܩܪܐ ܕܒܝܬ ܙܝܬܐ ܕܐܝܬܘܗܝ ܥܠ ܓܢܒ ܐܘܪܫܠܡ ܘܦܪܝܩ ܡܢܗ ܐܝܟ ܫܒܥܐ ܐܤܛܕܘܢ
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ܘܡܢ ܒܬܪ ܕܥܠܘ ܤܠܩܘ ܠܗܘܢ ܠܥܠܝܬܐ ܗܝ ܕܗܘܝܢ ܗܘܘ ܒܗ ܦܛܪܘܤ ܘܝܘܚܢܢ ܘܝܥܩܘܒ ܘܐܢܕܪܐܘܤ ܘܦܝܠܝܦܘܤ ܘܬܐܘܡܐ ܘܡܬܝ ܘܒܪ ܬܘܠܡܝ ܘܝܥܩܘܒ ܒܪ ܚܠܦܝ ܘܫܡܥܘܢ ܛܢܢܐ ܘܝܗܘܕܐ ܒܪ ܝܥܩܘܒ
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ܗܠܝܢ ܟܠܗܘܢ ܐܟܚܕܐ ܐܡܝܢܝܢ ܗܘܘ ܒܨܠܘܬܐ ܒܚܕܐ ܢܦܫ ܥܡ ܢܫܐ ܘܥܡ ܡܪܝܡ ܐܡܗ ܕܝܫܘܥ ܘܥܡ ܐܚܘܗܝ
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ܘܒܗܘܢ ܒܝܘܡܬܐ ܗܢܘܢ ܩܡ ܫܡܥܘܢ ܟܐܦܐ ܡܨܥܬ ܬܠܡܝܕܐ ܐܝܬ ܗܘܐ ܕܝܢ ܬܡܢ ܟܢܫܐ ܕܐܢܫܐ ܐܝܟ ܡܐܐ ܘܥܤܪܝܢ ܘܐܡܪ
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
ܓܒܪܐ ܐܚܝܢ ܙܕܩ ܗܘܐ ܕܢܬܡܠܐ ܟܬܒܐ ܐܝܢܐ ܕܩܕܡ ܐܡܪ ܪܘܚܐ ܕܩܘܕܫܐ ܒܦܘܡܗ ܕܕܘܝܕ ܥܠ ܝܗܘܕܐ ܗܘ ܕܗܘܐ ܡܕܒܪܢܐ ܠܗܢܘܢ ܕܐܚܕܘ ܠܝܫܘܥ
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ܡܛܠ ܕܡܢܐ ܗܘܐ ܥܡܢ ܘܐܝܬ ܗܘܐ ܠܗ ܦܤܐ ܒܬܫܡܫܬܐ ܗܕܐ
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ܗܢܘ ܕܩܢܐ ܠܗ ܩܪܝܬܐ ܡܢ ܐܓܪܐ ܕܚܛܝܬܐ ܘܢܦܠ ܥܠ ܐܦܘܗܝ ܥܠ ܐܪܥܐ ܘܐܬܦܪܬ ܡܢ ܡܨܥܬܗ ܘܐܬܐܫܕ ܟܠܗ ܓܘܝܗ
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ܘܗܝ ܗܕܐ ܐܬܝܕܥܬ ܠܟܠܗܘܢ ܕܥܡܪܝܢ ܒܐܘܪܫܠܡ ܘܗܟܢܐ ܐܬܩܪܝܬ ܩܪܝܬܐ ܗܝ ܒܠܫܢܗ ܕܐܬܪܐ ܚܩܠ ܕܡܐ ܕܐܝܬܘܗܝ ܬܘܪܓܡܗ ܩܘܪܝܬ ܕܡ
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
ܟܬܝܒ ܓܝܪ ܒܤܦܪܐ ܕܡܙܡܘܪܐ ܕܕܝܪܗ ܬܗܘܐ ܚܪܒܐ ܘܥܡܘܪ ܠܐ ܢܗܘܐ ܒܗ ܘܬܫܡܫܬܗ ܢܤܒ ܐܚܪܝܢ
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
ܘܠܝܐ ܗܝ ܗܟܝܠ ܠܚܕ ܡܢ ܗܠܝܢ ܓܒܪܐ ܕܗܘܘ ܥܡܢ ܒܗܢܐ ܙܒܢܐ ܟܠܗ ܕܒܗ ܥܠ ܘܢܦܩ ܥܠܝܢ ܡܪܢ ܝܫܘܥ
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ܕܐܩܦ ܡܢ ܡܥܡܘܕܝܬܗ ܕܝܘܚܢܢ ܥܕܡܐ ܠܝܘܡܐ ܕܐܤܬܠܩ ܡܢ ܠܘܬܢ ܕܗܘ ܢܗܘܐ ܥܡܢ ܤܗܕܐ ܕܩܝܡܬܗ
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ܘܐܩܝܡܘ ܬܪܝܢ ܠܝܘܤܦ ܕܡܬܩܪܐ ܒܪܫܒܐ ܕܐܫܬܡܝ ܝܘܤܛܘܤ ܘܠܡܬܝܐ
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
ܘܟܕ ܨܠܝܘ ܐܡܪܘ ܐܢܬ ܡܪܝܐ ܝܕܥ ܕܒܠܒܘܬܐ ܕܟܠ ܚܘܐ ܚܕ ܐܝܢܐ ܕܓܒܐ ܐܢܬ ܡܢ ܗܠܝܢ ܬܪܝܗܘܢ
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ܕܗܘ ܢܩܒܠ ܦܤܐ ܕܬܫܡܫܬܐ ܘܫܠܝܚܘܬܐ ܕܡܢܗ ܦܪܩ ܝܗܘܕܐ ܕܢܐܙܠ ܠܗ ܠܐܬܪܗ
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ܘܐܪܡܝܘ ܦܨܐ ܘܤܠܩܬ ܠܡܬܝܐ ܘܐܬܡܢܝ ܥܡ ܚܕܥܤܪ ܫܠܝܚܐ

< அப்போஸ்தலர் 1 >