< 2 தீமோத்தேயு 4 >

1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
I KAKALIKI on uk melel mon Kot o Krijtuj Iejuj, me pan kadeikada me maur o me melar akan ni a pan kotido ni a wei,
2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
Padaki majan nantion eta ni anjau mau o ni anjau me jued kajaleda dip, o kapunada, o panaui ni kanonama, o kaukawewe.
3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு.
Pwe eu anjau kokodo re jota pan mauki padak en kamaur, a duen pein arail inon kajapwilada jaunpadak kai, me pan wiada padak duen me re mauki.
4 சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.
O re pan kawuki jan melel jalon arail, ap kawuki on kajoi mal akan.
5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
A koe en majamajan ni meakaroj. Peren ki kamekam, kapwaiada wiawia en wanporon amen. Kapwaiada mau om koa.
6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது.
Metet nai kamekamela o anjau en ai mela leler.
7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
I wiadar pei mau eu, i kanikielar ai weir en tan, i dadaurata pojon.
8 இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார்.
Ari, nin en me pun nekinek on ia, me Kaun o pan kotiki on ia ni ran o, iei jaunkapun pun, a kaidin on nai ta, pwe on Karoj, me anane a pwarado.
9 நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.
Kaporijokki uk, pwen madan kodo re i.
10 ௧0 ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
Pwe Demaj me kaje ia lar pwe a pok on jappa et, ap jamalaner Tejalonik, Krejenj Kalejia, Tituj Dalmatien, (aiōn g165)
11 ௧௧ லூக்காமட்டும் என்னோடு இருக்கிறான். மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
Lukaj eta mi re i, ukada Markuj, pwen ian kodo met, pwe a katepa on ia ni ai dodok.
12 ௧௨ தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன்.
A Tikikuj i kadaralan Epij uj.
13 ௧௩ துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
Likau pup, me i pwilikidier Trouj ren Karpuj, wado ni om pan pwarado, o puk kan o kijin likau kan.
14 ௧௪ கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
Alekjander jaunmata wia on ia me jued toto, Kaun o en kotin depuk on i duen a wiawia kan!
15 ௧௫ நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
Koe pil kalaka i, pwe a kin nantion palian at padak.
16 ௧௬ நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக.
Ni tapin ai pan pakadeikada, jota amen me jauaja, pwe karoj tan jan ia, mepukat ender pwaipwai on irail.
17 ௧௭ கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.
A Kaun o kotin ieian ia o kamana ia da, pwe i en kak kanikiela ai padapadak o men liki kan karoj en ron. I dorelar jan au en laien.
18 ௧௮ கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
A Kaun o pan kotin kapit ia la jan ni wiawia jued karoj, o kotin kalua won ia wein nanlan, I en linan kokolata! Amen. (aiōn g165)
19 ௧௯ பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
Ranamau, won Prijka o Akwila o toun im en Onejiporuj.
20 ௨0 எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
Erajtuj mondi Korint, a Tropimuj jomaudar, i ap pwilikidi Miletuj.
21 ௨௧ மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Kaporijokki uk, pwen kodo mon anjaun kapau. En Eupuluj a ranamau won uk, o pil en Pudenj, o Linuj, o Klaudia, o ri atail karoj.
22 ௨௨ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
Kaun o en kotikot ni nen om! Mak en mi re omail!

< 2 தீமோத்தேயு 4 >