< 2 பேதுரு 3 >

1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
愛する者たちよ,わたしは今やこの二通目の手紙をあなた方に書いています。その両方の手紙の中で,わたしは思い出させることによってあなた方の純真な思いを奮い立たせているのです。
2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன்.
それは,聖なる預言者たちによって前もって語られていた言葉と,主また救い主の使徒たちであるわたしたちのおきてとを,あなた方が思い出すためです。
3 முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,
まずこのことを知っておきなさい。終わりの日々にはあざける者たちがやって来て,自分たちの欲望のままに歩みながら,
4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
こう言うでしょう。「彼の来臨の約束はどこにあるのか。父祖たちが眠りについた日から,すべてのものは創造のはじめ以来と同じようにして存続しているのだ」。
5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,
それは,彼らが次のことを故意に忘れているからです。すなわち,神の言葉によって,天は昔からあり,地は水の中から,また水に囲まれて生じましたが,
6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
それによって,当時の世は水に覆われて滅びたのです。
7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.
一方,今の天と地は,その同じ言葉によって火のために蓄えられています。不信心な者たちの裁きと滅びの日のために留め置かれているのです。
8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.
しかし,愛する者たちよ,次の一点を忘れてはいけません。すなわち,主のもとでは,一日は千年のようであり,千年は一日のようであるということです。
9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.
主は,ある人たちが遅れとみなしているように,ご自分の約束に関して遅れておられるのではありません。むしろ,だれも滅びることなく,すべての人が悔い改めに至ることを望んでいるので,わたしたちに対して辛抱しておられるのです。
10 ௧0 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.
しかし,主の日は夜の盗人のようにしてやって来ます。その日,もろもろの天は大きな音と共に過ぎ去り,もろもろの元素は猛烈に熱せられて溶け,地とそこでの業とは焼き尽くされるでしょう。
11 ௧௧ இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்!
こうして,これらのすべてのものが滅ぼされるのですから,あなた方はどれほど聖なる生き方と信心深さのうちにいる者とならなければならないことでしょう。
12 ௧௨ தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
そのようにして,神の日の来臨を待ち望み,切望しなければなりません。その日に,もろもろの天は燃えて溶け,もろもろの元素は猛烈に熱せられて溶解するのです。
13 ௧௩ அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.
しかし,その方の約束によって,わたしたちは義の宿る新しいもろもろの天と新しい地を待ち望んでいます。
14 ௧௪ ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.
それで,愛する者たちよ,あなた方はこれらのことを待ち望んでいるのですから,その方のみ前にあって,汚点も非の打ちどころもない者として,平安のうちに見いだされるように励みなさい。
15 ௧௫ மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
わたしたちの主の忍耐を救いと考えなさい。わたしたちの愛する兄弟パウロも,自分に与えられた知恵に基づいて,あなた方に書き送ったとおりです。
16 ௧௬ எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.
また,以上の事柄を述べている彼のすべての手紙の中にあるとおりです。その手紙の中には幾つか理解しにくいところもあって,無知で不安定な者たちは,ほかの聖句に対してもしているように,それを曲解して,自らの滅びを招いています。
17 ௧௭ ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,
そのようなわけで,愛する者たちよ,これらのことをあらかじめ知っているのですから,悪い者たちの迷いに共に連れ去られて,自分の堅実さから離れ落ちることのないように用心していなさい。
18 ௧௮ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
むしろ,わたしたちの主また救い主であるイエス・キリストの恵みと知識において成長しなさい。その方に栄光が,今も,そして永久にありますように。アーメン。 (aiōn g165)

< 2 பேதுரு 3 >

The Great Flood
The Great Flood