< 2 கொரிந்தியர் 10 >

1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாகவும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்புடனும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்வைத்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ਯੁਸ਼਼੍ਮਤ੍ਪ੍ਰਤ੍ਯਕ੍ਸ਼਼ੇ ਨਮ੍ਰਃ ਕਿਨ੍ਤੁ ਪਰੋਕ੍ਸ਼਼ੇ ਪ੍ਰਗਲ੍ਭਃ ਪੌਲੋ(ਅ)ਹੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਕ੍ਸ਼਼ਾਨ੍ਤ੍ਯਾ ਵਿਨੀਤ੍ਯਾ ਚ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ|
2 எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਮਮ ਪ੍ਰਾਰ੍ਥਨੀਯਮਿਦੰ ਵਯੰ ਯੈਃ ਸ਼ਾਰੀਰਿਕਾਚਾਰਿਣੋ ਮਨ੍ਯਾਮਹੇ ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਯਾਂ ਪ੍ਰਗਲ੍ਭਤਾਂ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਤੁੰ ਨਿਸ਼੍ਚਿਨੋਮਿ ਸਾ ਪ੍ਰਗਲ੍ਭਤਾ ਸਮਾਗਤੇਨ ਮਯਾਚਰਿਤਵ੍ਯਾ ਨ ਭਵਤੁ|
3 நாங்கள் சரீரத்தில் நடக்கிறவர்களாக இருந்தும் சரீரத்தின்படி போர் செய்கிறவர்கள் இல்லை.
ਯਤਃ ਸ਼ਰੀਰੇ ਚਰਨ੍ਤੋ(ਅ)ਪਿ ਵਯੰ ਸ਼ਾਰੀਰਿਕੰ ਯੁੱਧੰ ਨ ਕੁਰ੍ੰਮਃ|
4 எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது.
ਅਸ੍ਮਾਕੰ ਯੁੱਧਾਸ੍ਤ੍ਰਾਣਿ ਚ ਨ ਸ਼ਾਰੀਰਿਕਾਨਿ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰੇਣ ਦੁਰ੍ਗਭਞ੍ਜਨਾਯ ਪ੍ਰਬਲਾਨਿ ਭਵਨ੍ਤਿ,
5 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.
ਤੈਸ਼੍ਚ ਵਯੰ ਵਿਤਰ੍ਕਾਨ੍ ਈਸ਼੍ਵਰੀਯਤੱਤ੍ਵਜ੍ਞਾਨਸ੍ਯ ਪ੍ਰਤਿਬਨ੍ਧਿਕਾਂ ਸਰ੍ੱਵਾਂ ਚਿੱਤਸਮੁੰਨਤਿਞ੍ਚ ਨਿਪਾਤਯਾਮਃ ਸਰ੍ੱਵਸਙ੍ਕਲ੍ਪਞ੍ਚ ਬਨ੍ਦਿਨੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਣੰ ਕੁਰ੍ੰਮਃ,
6 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.
ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਆਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਤ੍ਵੇ ਸਿੱਧੇ ਸਤਿ ਸਰ੍ੱਵਸ੍ਯਾਜ੍ਞਾਲਙ੍ਘਨਸ੍ਯ ਪ੍ਰਤੀਕਾਰੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਉਦ੍ਯਤਾ ਆਸ੍ਮਹੇ ਚ|
7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும்.
ਯਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਗੋਚਰੰ ਤਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਦ੍ਰੁʼਸ਼੍ਯਤਾਂ| ਅਹੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਲੋਕ ਇਤਿ ਸ੍ਵਮਨਸਿ ਯੇਨ ਵਿਜ੍ਞਾਯਤੇ ਸ ਯਥਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਭਵਤਿ ਵਯਮ੍ ਅਪਿ ਤਥਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਭਵਾਮ ਇਤਿ ਪੁਨਰ੍ਵਿਵਿਚ੍ਯ ਤੇਨ ਬੁਧ੍ਯਤਾਂ|
8 மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਨਿਪਾਤਾਯ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਨਿਸ਼਼੍ਠਾਯੈ ਪ੍ਰਭੁਨਾ ਦੱਤੰ ਯਦਸ੍ਮਾਕੰ ਸਾਮਰ੍ਥ੍ਯੰ ਤੇਨ ਯਦ੍ਯਪਿ ਕਿਞ੍ਚਿਦ੍ ਅਧਿਕੰ ਸ਼੍ਲਾਘੇ ਤਥਾਪਿ ਤਸ੍ਮਾੰਨ ਤ੍ਰਪਿਸ਼਼੍ਯੇ|
9 நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
ਅਹੰ ਪਤ੍ਰੈ ਰ੍ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਤ੍ਰਾਸਯਾਮਿ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰੇਤੰਨ ਮਨ੍ਯਤਾਂ|
10 ௧0 அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே.
ਤਸ੍ਯ ਪਤ੍ਰਾਣਿ ਗੁਰੁਤਰਾਣਿ ਪ੍ਰਬਲਾਨਿ ਚ ਭਵਨ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਸ਼ਾਰੀਰਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਕਾਰੋ ਦੁਰ੍ੱਬਲ ਆਲਾਪਸ਼੍ਚ ਤੁੱਛਨੀਯ ਇਤਿ ਕੈਸ਼੍ਚਿਦ੍ ਉਚ੍ਯਤੇ|
11 ௧௧ அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.
ਕਿਨ੍ਤੁ ਪਰੋਕ੍ਸ਼਼ੇ ਪਤ੍ਰੈ ਰ੍ਭਾਸ਼਼ਮਾਣਾ ਵਯੰ ਯਾਦ੍ਰੁʼਸ਼ਾਃ ਪ੍ਰਕਾਸ਼ਾਮਹੇ ਪ੍ਰਤ੍ਯਕ੍ਸ਼਼ੇ ਕਰ੍ੰਮ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੋ(ਅ)ਪਿ ਤਾਦ੍ਰੁʼਸ਼ਾ ਏਵ ਪ੍ਰਕਾਸ਼ਿਸ਼਼੍ਯਾਮਹੇ ਤਤ੍ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੇਨ ਵਾਚਾਲੇਨ ਜ੍ਞਾਯਤਾਂ|
12 ௧௨ எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.
ਸ੍ਵਪ੍ਰਸ਼ੰਸਕਾਨਾਂ ਕੇਸ਼਼ਾਞ੍ਚਿਨ੍ਮਧ੍ਯੇ ਸ੍ਵਾਨ੍ ਗਣਯਿਤੁੰ ਤੈਃ ਸ੍ਵਾਨ੍ ਉਪਮਾਤੁੰ ਵਾ ਵਯੰ ਪ੍ਰਗਲ੍ਭਾ ਨ ਭਵਾਮਃ, ਯਤਸ੍ਤੇ ਸ੍ਵਪਰਿਮਾਣੇਨ ਸ੍ਵਾਨ੍ ਪਰਿਮਿਮਤੇ ਸ੍ਵੈਸ਼੍ਚ ਸ੍ਵਾਨ੍ ਉਪਮਿਭਤੇ ਤਸ੍ਮਾਤ੍ ਨਿਰ੍ੱਬੋਧਾ ਭਵਨ੍ਤਿ ਚ|
13 ௧௩ நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
ਵਯਮ੍ ਅਪਰਿਮਿਤੇਨ ਨ ਸ਼੍ਲਾਘਿਸ਼਼੍ਯਾਮਹੇ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰੇਣ ਸ੍ਵਰੱਜ੍ਵਾ ਯੁਸ਼਼੍ਮੱਦੇਸ਼ਗਾਮਿ ਯਤ੍ ਪਰਿਮਾਣਮ੍ ਅਸ੍ਮਦਰ੍ਥੰ ਨਿਰੂਪਿਤੰ ਤੇਨੈਵ ਸ਼੍ਲਾਘਿਸ਼਼੍ਯਾਮਹੇ|
14 ௧௪ உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਦੇਸ਼ੋ(ਅ)ਸ੍ਮਾਭਿਰਗਨ੍ਤਵ੍ਯਸ੍ਤਸ੍ਮਾਦ੍ ਵਯੰ ਸ੍ਵਸੀਮਾਮ੍ ਉੱਲਙ੍ਘਾਮਹੇ ਤੰਨਹਿ ਯਤਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਸੁਸੰਵਾਦੇਨਾਪਰੇਸ਼਼ਾਂ ਪ੍ਰਾਗ੍ ਵਯਮੇਵ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਾਪ੍ਤਵਨ੍ਤਃ|
15 ௧௫ எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்.
ਵਯੰ ਸ੍ਵਸੀਮਾਮ੍ ਉੱਲਙ੍ਘ੍ਯ ਪਰਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੇਣ ਸ਼੍ਲਾਘਾਮਹੇ ਤੰਨਹਿ, ਕਿਞ੍ਚ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸੇ ਵ੍ਰੁʼੱਧਿੰ ਗਤੇ ਯੁਸ਼਼੍ਮੱਦੇਸ਼ੇ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਸੀਮਾ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰ੍ਦੀਰ੍ਘੰ ਵਿਸ੍ਤਾਰਯਿਸ਼਼੍ਯਤੇ,
16 ௧௬ ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம்.
ਤੇਨ ਵਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪਸ਼੍ਚਿਮਦਿਕ੍ਸ੍ਥੇਸ਼਼ੁ ਸ੍ਥਾਨੇਸ਼਼ੁ ਸੁਸੰਵਾਦੰ ਘੋਸ਼਼ਯਿਸ਼਼੍ਯਾਮਃ, ਇੱਥੰ ਪਰਸੀਮਾਯਾਂ ਪਰੇਣ ਯਤ੍ ਪਰਿਸ਼਼੍ਕ੍ਰੁʼਤੰ ਤੇਨ ਨ ਸ਼੍ਲਾਘਿਸ਼਼੍ਯਾਮਹੇ|
17 ௧௭ மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும்.
ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ਼੍ਲਾਘਮਾਨਃ ਸ੍ਯਾਤ੍ ਸ਼੍ਲਾਘਤਾਂ ਪ੍ਰਭੁਨਾ ਸ ਹਿ|
18 ௧௮ தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
ਸ੍ਵੇਨ ਯਃ ਪ੍ਰਸ਼ੰਸ੍ਯਤੇ ਸ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੋ ਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਭੁਨਾ ਯਃ ਪ੍ਰਸ਼ੰਸ੍ਯਤੇ ਸ ਏਵ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤਃ|

< 2 கொரிந்தியர் 10 >