< 1 தீமோத்தேயு 5 >

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
త్వం ప్రాచీనం న భర్త్సయ కిన్తు తం పితరమివ యూనశ్చ భ్రాతృనివ
2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
వృద్ధాః స్త్రియశ్చ మాతృనివ యువతీశ్చ పూర్ణశుచిత్వేన భగినీరివ వినయస్వ|
3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
అపరం సత్యవిధవాః సమ్మన్యస్వ|
4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
కస్యాశ్చిద్ విధవాయా యది పుత్రాః పౌత్రా వా విద్యన్తే తర్హి తే ప్రథమతః స్వీయపరిజనాన్ సేవితుం పిత్రోః ప్రత్యుపకర్త్తుఞ్చ శిక్షన్తాం యతస్తదేవేశ్వరస్య సాక్షాద్ ఉత్తమం గ్రాహ్యఞ్చ కర్మ్మ|
5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
అపరం యా నారీ సత్యవిధవా నాథహీనా చాస్తి సా ఈశ్వరస్యాశ్రయే తిష్ఠన్తీ దివానిశం నివేదనప్రార్థనాభ్యాం కాలం యాపయతి|
6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
కిన్తు యా విధవా సుఖభోగాసక్తా సా జీవత్యపి మృతా భవతి|
7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
అతఏవ తా యద్ అనిన్దితా భవేయూస్తదర్థమ్ ఏతాని త్వయా నిదిశ్యన్తాం|
8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
యది కశ్చిత్ స్వజాతీయాన్ లోకాన్ విశేషతః స్వీయపరిజనాన్ న పాలయతి తర్హి స విశ్వాసాద్ భ్రష్టో ఽప్యధమశ్చ భవతి|
9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
విధవావర్గే యస్యా గణనా భవతి తయా షష్టివత్సరేభ్యో న్యూనవయస్కయా న భవితవ్యం; అపరం పూర్వ్వమ్ ఏకస్వామికా భూత్వా
10 ௧0 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
సా యత్ శిశుపోషణేనాతిథిసేవనేన పవిత్రలోకానాం చరణప్రక్షాలనేన క్లిష్టానామ్ ఉపకారేణ సర్వ్వవిధసత్కర్మ్మాచరణేన చ సత్కర్మ్మకరణాత్ సుఖ్యాతిప్రాప్తా భవేత్ తదప్యావశ్యకం|
11 ௧௧ இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
కిన్తు యువతీ ర్విధవా న గృహాణ యతః ఖ్రీష్టస్య వైపరీత్యేన తాసాం దర్పే జాతే తా వివాహమ్ ఇచ్ఛన్తి|
12 ௧௨ முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
తస్మాచ్చ పూర్వ్వధర్మ్మం పరిత్యజ్య దణ్డనీయా భవన్తి|
13 ௧௩ அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
అనన్తరం తా గృహాద్ గృహం పర్య్యటన్త్య ఆలస్యం శిక్షన్తే కేవలమాలస్యం నహి కిన్త్వనర్థకాలాపం పరాధికారచర్చ్చాఞ్చాపి శిక్షమాణా అనుచితాని వాక్యాని భాషన్తే|
14 ௧௪ எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
అతో మమేచ్ఛేయం యువత్యో విధవా వివాహం కుర్వ్వతామ్ అపత్యవత్యో భవన్తు గృహకర్మ్మ కుర్వ్వతాఞ్చేత్థం విపక్షాయ కిమపి నిన్దాద్వారం న దదతు|
15 ௧௫ ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
యత ఇతః పూర్వ్వమ్ అపి కాశ్చిత్ శయతానస్య పశ్చాద్గామిన్యో జాతాః|
16 ௧௬ விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
అపరం విశ్వాసిన్యా విశ్వాసినో వా కస్యాపి పరివారాణాం మధ్యే యది విధవా విద్యన్తే తర్హి స తాః ప్రతిపాలయతు తస్మాత్ సమితౌ భారే ఽనారోపితే సత్యవిధవానాం ప్రతిపాలనం కర్త్తుం తయా శక్యతే|
17 ௧௭ நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
యే ప్రాఞ్చః సమితిం సమ్యగ్ అధితిష్ఠన్తి విశేషత ఈశ్వరవాక్యేనోపదేశేన చ యే యత్నం విదధతే తే ద్విగుణస్యాదరస్య యోగ్యా మాన్యన్తాం|
18 ௧௮ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
యస్మాత్ శాస్త్రే లిఖితమిదమాస్తే, త్వం శస్యమర్ద్దకవృషస్యాస్యం మా బధానేతి, అపరమపి కార్య్యకృద్ వేతనస్య యోగ్యో భవతీతి|
19 ௧௯ மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ద్వౌ త్రీన్ వా సాక్షిణో వినా కస్యాచిత్ ప్రాచీనస్య విరుద్ధమ్ అభియోగస్త్వయా న గృహ్యతాం|
20 ௨0 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
అపరం యే పాపమాచరన్తి తాన్ సర్వ్వేషాం సమక్షం భర్త్సయస్వ తేనాపరేషామపి భీతి ర్జనిష్యతే|
21 ௨௧ நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
అహమ్ ఈశ్వరస్య ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య మనోనీతదివ్యదూతానాఞ్చ గోచరే త్వామ్ ఇదమ్ ఆజ్ఞాపయామి త్వం కస్యాప్యనురోధేన కిమపి న కుర్వ్వన వినాపక్షపాతమ్ ఏతాన విధీన్ పాలయ|
22 ௨௨ யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
కస్యాపి మూర్ద్ధి హస్తాపర్ణం త్వరయా మాకార్షీః| పరపాపానాఞ్చాంశీ మా భవ| స్వం శుచిం రక్ష|
23 ௨௩ நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
అపరం తవోదరపీడాయాః పునః పున దుర్బ్బలతాయాశ్చ నిమిత్తం కేవలం తోయం న పివన్ కిఞ్చిన్ మద్యం పివ|
24 ௨௪ சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
కేషాఞ్చిత్ మానవానాం పాపాని విచారాత్ పూర్వ్వం కేషాఞ్చిత్ పశ్చాత్ ప్రకాశన్తే|
25 ௨௫ அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
తథైవ సత్కర్మ్మాణ్యపి ప్రకాశన్తే తదన్యథా సతి ప్రచ్ఛన్నాని స్థాతుం న శక్నువన్తి|

< 1 தீமோத்தேயு 5 >