< 1 பேதுரு 1 >

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
ⲁ̅ⲡⲉⲧⲣⲟⲥ ⲡⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲉϥⲥϩⲁⲓ ⲛ̅ⲛ̅ⲥⲱⲧⲡ̅ ⲉⲧⲟⲩⲏϩ ϩⲛ̅ⲧⲇⲓⲁⲥⲡⲟⲣⲁ ⲙⲛ̅ⲧⲡⲟⲛⲧⲟⲥ ⲙⲛ̅ⲧⲅⲁⲗⲁⲧⲉⲓⲁ ⲙⲛ̅ⲧⲕⲁⲡⲡⲁⲇⲟⲕⲓⲁ ⲙⲛ̅ⲧⲁⲥⲓⲁ ⲙⲛ̅ⲧⲃⲏⲑⲁⲛⲓⲁ.
2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும்.
ⲃ̅ⲕⲁⲧⲁⲡϣⲣ̅ⲡⲥⲟⲟⲩⲛ̅ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ϩⲙ̅ⲡⲧⲃ̅ⲃⲟ ⲙ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ⲉⲡⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ̅ⲡϭⲟϣϭϣ̅ ⲙ̅ⲡⲉⲥⲛⲟϥ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅. ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲏⲧⲛ̅ ⲙⲛ̅ϯⲣⲏⲛⲏ ⲉⲙⲁϣⲟ.
3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
ⲅ̅ϥⲥⲙⲁⲙⲁⲁⲧ ⲛ̅ϭⲓⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲓⲱⲧ ⲙ̅ⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅. ⲡⲁⲓ ⲛ̅ⲧⲁϥϫⲡⲟⲛ ⲕⲁⲧⲁⲡⲉϥⲛⲁ ⲉⲧⲛⲁϣⲱϥ ⲉϩⲟⲩⲛ ⲉⲩϩⲉⲗⲡⲓⲥ ⲉⲥⲟⲛϩ̅. ϩⲓⲧⲙ̅ⲡⲧⲱⲟⲩⲛ̅ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ
4 தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார்.
ⲇ̅ⲉⲩⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⲛ̅ⲁⲧⲧⲁⲕⲟ. ⲁⲩⲱ ⲛ̅ⲁⲧⲧⲱⲗⲙ̅. ⲉⲙⲉⲥϩⲱϭⲃ̅. ⲉⲩϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϩⲙ̅ⲙ̅ⲡⲏⲩⲉ.
5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ⲉ̅ⲛⲁⲓ ⲉⲧⲟⲩϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲟⲩ ϩⲛ̅ⲧϭⲟⲙ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϩⲓⲧⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙ̅ⲡⲟⲩϫⲁⲓ ⲉⲧⲥⲃ̅ⲧⲱⲧ. ⲉⲡϭⲱⲗⲡ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲛ̅ϩⲁⲉ.
6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
ⲋ̅ⲡⲁⲓ ⲉⲧⲉⲧⲛ̅ⲧⲉⲗⲏⲗ ⲛ̅ϩⲏⲧϥ̅. ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲗⲩⲡⲉⲓ ⲧⲉⲛⲟⲩ ⲛ̅ⲟⲩⲕⲟⲩⲓ. ⲉϣϫⲉϩⲁⲡⲥ̅ ⲡⲉ ϩⲣⲁⲓ ϩⲛ̅ϩⲉⲛⲡⲓⲣⲁⲥⲙⲟ[ⲥ] ⲉⲩϣⲟⲃⲉ.
7 அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.
ⲍ̅ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϩⲉ ⲉⲧⲙⲛ̅ⲧⲥⲱⲧⲡ̅ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧⲧⲁⲓⲏⲩ ⲉϩⲟⲩⲉⲡⲛⲟⲩⲃ ⲉⲧⲛⲁⲧⲁⲕⲟ. ⲡⲁⲓ ⲉϣⲁⲩⲇⲟⲕⲓⲙⲁⲍⲉ ⲙ̅ⲙⲟϥ ϩⲓⲧⲙ̅ⲡⲕⲱϩⲧ̅ ⲉⲩⲧⲙⲁⲓⲟ ⲛⲏⲧⲛ̅ ⲙⲛ̅ⲟⲩⲉⲟⲟⲩ ⲙⲛ̅ⲟⲩⲧⲁⲓⲟ ϩⲙ̅ⲡϭⲱⲗⲡ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅.
8 நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து,
ⲏ̅ⲡⲁⲓ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲧⲉⲧⲛ̅ⲙⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲩⲱ ⲡⲁⲓ ϫⲛ̅ⲧⲉⲛⲟⲩ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲁⲛ. ⲧⲉⲧⲛ̅ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲇⲉ ⲉⲣⲟϥ ⲉⲧⲉⲧⲛ̅ⲧⲉⲗⲏⲗ ϩⲛ̅ⲟⲩⲣⲁϣⲉ ⲉϥϩⲏⲡ ⲁⲩⲱ ⲉϥⲧⲁⲓⲏⲩ.
9 உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.
ⲑ̅ⲉⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲙ̅ⲡϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲡⲟⲩϫⲁⲓ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲯⲩⲭⲏ.
10 ௧0 உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;
ⲓ̅ⲉⲁⲩϣⲓⲛⲉ ⲁⲩⲱ ⲁⲩϩⲟⲧϩⲉⲧ ⲉⲧⲃⲉⲡⲉⲓⲟⲩϫⲁⲓ ⲛ̅ϭⲓⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ. ⲛⲁⲓ ⲉⲛⲧⲁⲩⲡⲣⲟⲫⲏⲧⲉⲩⲉ ⲉⲧⲃⲉⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲉⲧϫⲓ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲱⲧⲛ̅.
11 ௧௧ தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள்.
ⲓ̅ⲁ̅ⲉⲩϣⲓⲛⲉ ϫⲉ ⲉⲣⲉⲡⲉⲡⲛ̅ⲁ ⲙ̅ⲡⲉⲭⲥ̅ ⲉⲧⲛ̅ϩⲏⲧⲟⲩ ϣⲁϫⲉ ⲉⲁϣ ⲛ̅ⲟⲩⲟⲉⲓϣ. ⲉϥⲉⲣⲙⲛ̅ⲧⲣⲉ ϫⲓⲛⲛ̅ϣⲟⲣⲡ̅ ⲛ̅ⲙ̅ⲙⲟⲕϩⲥ̅ ⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲙ̅ⲡⲉⲭⲥ̅. ⲙⲛ̅ⲛ̅ⲉⲟⲟⲩ ⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲟⲩ.
12 ௧௨ தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.
ⲓ̅ⲃ̅ⲛⲁⲓ ⲛ̅ⲧⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ. ϫⲉ ⲛⲉⲩⲇⲓⲁⲕⲟⲛⲉⲓ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛⲁⲩ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲛⲏⲧⲛ̅. ⲛⲁⲓ ⲛ̅ⲧⲁⲩⲧⲁⲙⲱⲧⲛ̅ ⲉⲣⲟⲟⲩ ⲧⲉⲛⲟⲩ ϩⲓⲧⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲛⲏⲧⲛ̅ ⲙ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ⲉⲧⲟⲩⲁⲁⲃ. ⲛ̅ⲧⲁⲩⲧⲛ̅ⲛⲟⲟⲩϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉ
13 ௧௩ ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲙⲟⲩⲣ ⲛ̅ⲛ̅ϯⲡⲉ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ϩⲏⲧ ⲁⲩⲱ ⲉⲧⲉⲧⲛ̅ⲛⲏⲫⲉ. ϩⲉⲗⲡⲓⲍⲉ ϩⲛ̅ⲟⲩϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲉⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲉⲧⲟⲩⲛⲁⲛ̅ⲧⲥ̅ ⲛⲏⲧⲛ̅ ϩⲙ̅ⲡϭⲱⲗⲡ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲓⲥ̅ ⲡⲉⲭⲥ̅.
14 ௧௪ நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து,
ⲓ̅ⲇ̅ϩⲱⲥ ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϫⲓ ⲁⲛ ⲙ̅ⲡϩⲣ̅ⲃ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⲛ̅ϣⲟⲣⲡ̅. ⲉⲧⲉⲧⲛ̅ϩⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲙⲛ̅ⲧⲁⲧⲥⲟⲟⲩⲛ̅.
15 ௧௫ உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.
ⲓ̅ⲉ̅ⲁⲗⲗⲁ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧϥ̅ⲟⲩⲁⲁⲃ ⲛ̅ϭⲓⲡⲉⲛⲧⲁϥⲧⲉϩⲙ̅ⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲧⲉⲧⲛ̅ϣⲱⲡⲉ ϩⲱⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲧⲉⲧⲛ̅ⲟⲩⲁⲁⲃ ⲉϩⲣⲁⲓ ϩⲛ̅ⲁⲛⲁⲥⲧⲣⲟⲫⲏ ⲛⲓⲙ.
16 ௧௬ நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
ⲓ̅ⲋ̅ϫⲉ ϥⲥⲏϩ. ϫⲉ ϣⲱⲡⲉ ⲉⲧⲉⲧⲛ̅ⲟⲩⲁⲁⲃ. ϫⲉ ⲁⲛⲟⲕ ϯⲟⲩⲁⲁⲃ.
17 ௧௭ அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள்.
ⲓ̅ⲍ̅ⲁⲩⲱ ⲉϣϫⲉⲡⲉⲧⲕⲣⲓⲛⲉ ⲙ̅ⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲕⲁⲧⲁⲛⲉⲩϩⲃⲏⲩⲉ ⲁϫⲛ̅ϫⲓϩⲟ. ⲧⲉⲧⲛ̅ⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ. ⲉⲓⲉ ⲙⲟⲟϣⲉ ϩⲛ̅ⲟⲩϩⲟⲧⲉ ⲙ̅ⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲉⲧⲉⲧⲛ̅ϣⲟⲟⲡ ⲙ̅ⲡⲉⲓⲙⲁ.
18 ௧௮ உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,
ⲓ̅ⲏ̅ⲉⲧⲉⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ̅ ϫⲉ ⲛ̅ⲧⲁⲩⲥⲉⲧⲧⲏⲩⲧⲛ̅ ⲁⲛ ϩⲛ̅ⲟⲩⲛⲟⲩⲃ ⲏ ⲟⲩϩⲁⲧ ⲉϣⲁϥⲧⲁⲕⲟ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲛ̅ϩⲃⲏⲩⲉ ⲉⲧϣⲟⲩⲉⲓⲧ. ⲉⲛⲧⲁⲛⲉⲧⲛ̅ⲉⲓⲟⲧⲉ ⲧⲁⲁⲩ ⲉⲧⲉⲧⲏⲩⲧⲛ̅.
19 ௧௯ குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
ⲓ̅ⲑ̅ⲁⲗⲗⲁ ϩⲙ̅ⲡⲉⲥⲛⲟϥ ⲉⲧⲧⲁⲓⲏⲩ ⲛ̅ⲧⲉⲡⲉϩⲓⲉⲓⲃ ⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲁⲩⲱ ⲛ̅ⲁⲧⲧⲱⲗⲙ̅ ⲡⲉⲭⲥ̅.
20 ௨0 அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
ⲕ̅ⲉⲁⲩϣⲣ̅ⲡⲥⲟⲩⲱⲛϥ̅ ⲙⲉⲛ ϩⲁⲑⲏ ⲛ̅ⲧⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ. ⲉⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲉⲧⲃⲉⲧⲏⲩⲧⲛ̅ ϩⲛ̅ⲑⲁⲏ ⲛ̅ⲛⲉⲟⲩⲟⲉⲓϣ.
21 ௨௧ உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ⲕ̅ⲁ̅ⲛⲁⲓ ⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ̅ ⲙ̅ⲡⲉϥϣⲏⲣⲉ. ⲡⲁⲓ ⲛ̅ⲧⲁϥⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ. ⲁⲩⲱ ⲁϥϯ ⲛⲁϥ ⲛ̅ⲟⲩⲉⲟⲟⲩ. ϩⲱⲥⲧⲉ ⲧⲉⲧⲛ̅ⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ̅ⲧⲉⲧⲛ̅ϩⲉⲗⲡⲓⲥ ⲛⲥ̅ϣⲱⲡⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲛⲟⲩⲧⲉ.
22 ௨௨ ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;
ⲕ̅ⲃ̅ⲉⲁⲧⲉⲧⲛ̅ⲧⲃ̅ⲃⲟ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲯⲩⲭⲏ ϩⲣⲁⲓ ϩⲙ̅ⲡⲥⲱⲧⲙ̅ ⲛ̅ⲧⲙⲉ ⲉⲩⲙⲛ̅ⲧⲙⲁⲓⲥⲟⲛ. ⲉⲙⲛ̅ϩⲩⲡⲟⲕⲣⲓⲛⲉ ⲛ̅ϩⲏⲧⲥ̅. ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲙⲉⲣⲉⲛⲉⲧⲛ̅ⲉⲣⲏⲩ ⲁϫⲛ̅ⲱϫⲛ̅ ϩⲛ̅ⲟⲩϩⲏⲧ ⲉϥⲟⲩⲁⲁⲃ.
23 ௨௩ அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
ⲕ̅ⲅ̅ϫⲉ ⲁⲩϫⲡⲉⲧⲏⲩⲧⲛ̅ ⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩϫⲡⲟ ⲉϣⲁϥⲧⲁⲕⲟ. ⲁⲗⲗⲁ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲁⲧⲧⲁⲕⲟ ϩⲓⲧⲛ̅ⲡϣⲁϫⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲛϩ̅ ⲁⲩⲱ ⲉⲧϣⲟⲟⲡ. (aiōn g165)
24 ௨௪ மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
ⲕ̅ⲇ̅ϫⲉ ⲥⲁⲣⲝ̅ ⲛⲓⲙ ⲉⲩⲟ ⲛ̅ⲑⲉ ⲛ̅ⲟⲩⲭⲟⲣⲧⲟⲥ. ⲁⲩⲱ ⲉⲟⲟⲩ ⲛⲓⲙ ⲛ̅ⲧⲁⲩ ⲛ̅ⲑⲉ ⲙ̅ⲡⲉϩⲣⲏⲣⲉ ⲙ̅ⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ. ⲁϥϣⲟⲟⲩⲉ ⲛ̅ϭⲓⲡⲉⲭⲟⲣⲧⲟⲥ. ⲁⲩⲱ ⲡⲉϥϩⲣⲏⲣⲉ ⲁϥⲥⲣⲟϥⲣϥ̅.
25 ௨௫ கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
ⲕ̅ⲉ̅ⲡϣⲁϫⲉ ⲇⲉ ⲛ̅ⲧⲟϥ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ϣⲟⲟⲡ ϣⲁⲉⲛⲉϩ. ⲡⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⲡϣⲁϫⲉ ⲛ̅ⲧⲁⲩⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲙⲟϥ ⲛⲏⲧⲛ̅. (aiōn g165)

< 1 பேதுரு 1 >