< 1 இராஜாக்கள் 4 >

1 ராஜாவாகிய சாலொமோன் அனைத்து இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக இருந்தான்.
И бе царь Соломон царствуяй над Израилем.
2 அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான்.
И сии старейшины иже беша с ним:
3 சீசாவின் மகனாகிய ஏலிகோரேப்பும் அகியாவும் எழுத்தர்களாக இருந்தார்கள்; அகிலூதின் மகன் யோசபாத் மந்திரியாக இருந்தான்.
Азариа сын Садоков, жрец: Елиаф и Ахиа сынове Сивины, книгочии: и Иосафат сын Ахилудов, напоминатель:
4 யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள்.
и Ванеа сын Иодаев над силою: и Садок и Авиафар, иерее:
5 நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான்.
и Азариа сын Нафань над настоятелми: и Завуф сын Нафань друг царев:
6 அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான்.
и Ахисар бе строитель, и Елиав сын Сафатов над отечеством: и Адонирам сын Авдонов над даньми.
7 ராஜாவிற்கும் அவனுடைய அரண்மனையில் உள்ளவர்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு அதிகாரிகள் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்திற்கு ஒவ்வொருவராக வருடம் முழுவதும் பராமரித்துவந்தார்கள்.
И у Соломона бяху дванадесять приставник над всем Израилем, еже подаяти царю и дому его: по месяцу в лете бываше един, еже подаяти,
8 அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான்.
и сия имена их: Вен сын Оров на горе Ефремли, един:
9 தேக்கேரின் மகன், இவன் மாகாத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
сын Дакарь во Махемате и во Висаламине и Вефсамисе и Елоне, даже до Вефанана, един:
10 ௧0 ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோக்கோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது.
сын Седов во Аравофе, сего Сохо и вся земля Оферова:
11 ௧௧ அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள்.
сына Аминадавля вся Неффадор: Тефаф дщи Соломоня бе ему в жену, един:
12 ௧௨ அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
Вана сын Ахилуфов во Ифаанахе и Магеддо и весь Дом Саныи, иже при Сесафане под Езраелем, и от Вифсана даже до Савелмаула, даже до Маевер Лукам, един:
13 ௧௩ கேபேரின் மகன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் பட்டணமும் இவன் விசாரிப்பில் இருந்தது.
сын Наверов в Равофе Галаадстем: сему область Ергав в Васане, шестьдесят градов великих огражденных стенами, и вереи медяны, един:
14 ௧௪ இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான்.
Ахинадав сын Саддов во Маанаиме:
15 ௧௫ அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்.
Ахимаас в Неффалиме: и сей поят Васемафу дщерь Соломоню в жену, един:
16 ௧௬ ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
Ваана сын Хусиин во Асире и во Ваалофе, един:
17 ௧௭ பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Иосафат сын Фаруев во Иссахаре,
18 ௧௮ ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Семей сын Илы во Вениамине,
19 ௧௯ ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.
Гавер сын Адаев в земли Галааде, в земли Сиона царя Есевонска и Ога царя Васанска, и Насиф един в земли Иудове.
20 ௨0 யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
Иуда и Израиль мнози аки песок иже при мори во множестве, ядуще и пиюще и веселящеся.
21 ௨௧ நதிதுவங்கி, பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாக எகிப்தின் எல்லைவரை இருக்கிற சகல ராஜ்ஜியங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுக்கு பணிவிடை செய்தார்கள்.
И Соломон бе началствуяй во всех царствах, от реки земли Филистимския и даже до предел Египетских, (и бяху) приносяще дары и работающе Соломону во вся дни живота его.
22 ௨௨ ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
И сия потребная Соломону в день един: тридесять мер муки семидалныя и шестьдесят мер муки смешаныя,
23 ௨௩ கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.
десять телцев избранных и двадесять волов тучных и сто овец, кроме еленей и серн и птиц, избранна от избранных тучна.
24 ௨௪ நதிக்கு இந்த பக்கத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு காசாவரை உள்ளவைகள் எல்லாவற்றையும், நதிக்கு இந்தப்பக்கத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாக இருந்தது.
Понеже бе началствуяй во всех об он пол реки от Фапсы и даже до Газы, над всеми царми об он пол реки, и мир бе ему от всех стран окрест.
25 ௨௫ சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
И живяху Иуда и Израиль безпечально, кийждо под виноградом своим и под смоковницею своею, ядуще и пиюще, от Дана и даже до Вирсавии, во вся дни Соломона.
26 ௨௬ சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள்.
И бяше у Соломона четыредесять тысящ кобылиц в колесницы и двадесять тысящ конник.
27 ௨௭ மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
И тако подаяху приставники царю Соломону, и вся повеленная на трапезу цареву, кийждо в месяц свой, не пременяюще словесе:
28 ௨௮ குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.
и ячмень и плевы конем, и колесницами привозяху на место, идеже бе царь, кийждо по чину своему.
29 ௨௯ தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.
И даде Господь смысл и мудрость Соломону многу зело, и широту сердца, яко песок иже при мори:
30 ௩0 சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது.
и умножися мудрость Соломонова зело, паче смысла всех древних человек и паче всех смысленных Египетских:
31 ௩௧ அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது.
и умудрися паче всех человек, и умудрися паче Гефана Езраилитнна и Емана, и Халкада и Дарды, сына Самадова, и прославися имя его во всех странах окрест.
32 ௩௨ அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
И изглагола Соломон три тысящы притчей, и быша песни его пять тысящ:
33 ௩௩ லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.
и глагола о древех, от кедра иже в Ливане и даже до иссопа исходящаго из стены: и глагола о скотех и о птицах и о гадех и о рыбах.
34 ௩௪ சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.
И прихождаху вси людие слышати премудрость Соломоню: и приимаше дары от всех царей земных, елицы слышаху премудрость его.

< 1 இராஜாக்கள் 4 >