< 1 கொரிந்தியர் 13 >
1 ௧ நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
මර්ත්යස්වර්ගීයාණාං භාෂා භාෂමාණෝ(අ)හං යදි ප්රේමහීනෝ භවේයං තර්හි වාදකතාලස්වරූපෝ නිනාදකාරිභේරීස්වරූපශ්ච භවාමි|
2 ௨ நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.
අපරඤ්ච යද්යහම් ඊශ්වරීයාදේශාඪ්යඃ ස්යාං සර්ව්වාණි ගුප්තවාක්යානි සර්ව්වවිද්යාඤ්ච ජානීයාං පූර්ණවිශ්වාසඃ සන් ශෛලාන් ස්ථානාන්තරීකර්ත්තුං ශක්නුයාඤ්ච කින්තු යදි ප්රේමහීනෝ භවේයං තර්හ්යගණනීය ඒව භවාමි|
3 ௩ எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.
අපරං යද්යහම් අන්නදානේන සර්ව්වස්වං ත්යජේයං දාහනාය ස්වශරීරං සමර්පයේයඤ්ච කින්තු යදි ප්රේමහීනෝ භවේයං තර්හි තත්සර්ව්වං මදර්ථං නිෂ්ඵලං භවති|
4 ௪ அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,
ප්රේම චිරසහිෂ්ණු හිතෛෂි ච, ප්රේම නිර්ද්වේෂම් අශඨං නිර්ගර්ව්වඤ්ච|
5 ௫ அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது,
අපරං තත් කුත්සිතං නාචරති, ආත්මචේෂ්ටාං න කුරුතේ සහසා න ක්රුධ්යති පරානිෂ්ටං න චින්තයති,
6 ௬ அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
අධර්ම්මේ න තුෂ්යති සත්ය ඒව සන්තුෂ්යති|
7 ௭ எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.
තත් සර්ව්වං තිතික්ෂතේ සර්ව්වත්ර විශ්වසිති සර්ව්වත්ර භද්රං ප්රතීක්ෂතේ සර්ව්වං සහතේ ච|
8 ௮ அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.
ප්රේම්නෝ ලෝපඃ කදාපි න භවිෂ්යති, ඊශ්වරීයාදේශකථනං ලෝප්ස්යතේ පරභාෂාභාෂණං නිවර්ත්තිෂ්යතේ ඥානමපි ලෝපං යාස්යති|
9 ௯ நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.
යතෝ(අ)ස්මාකං ඥානං ඛණ්ඩමාත්රම් ඊශ්වරීයාදේශකථනමපි ඛණ්ඩමාත්රං|
10 ௧0 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.
කින්ත්වස්මාසු සිද්ධතාං ගතේෂු තානි ඛණ්ඩමාත්රාණි ලෝපං යාස්යන්තේ|
11 ௧௧ நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.
බාල්යකාලේ(අ)හං බාල ඉවාභාෂේ බාල ඉවාචින්තයඤ්ච කින්තු යෞවනේ ජාතේ තත්සර්ව්වං බාල්යාචරණං පරිත්යක්තවාන්|
12 ௧௨ இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
ඉදානීම් අභ්රමධ්යේනාස්පෂ්ටං දර්ශනම් අස්මාභි ර්ලභ්යතේ කින්තු තදා සාක්ෂාත් දර්ශනං ලප්ස්යතේ| අධුනා මම ඥානම් අල්පිෂ්ඨං කින්තු තදාහං යථාවගම්යස්තථෛවාවගතෝ භවිෂ්යාමි|
13 ௧௩ இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
ඉදානීං ප්රත්යයඃ ප්රත්යාශා ප්රේම ච ත්රීණ්යේතානි තිෂ්ඨන්ති තේෂාං මධ්යේ ච ප්රේම ශ්රේෂ්ඨං|