< 1 நாளாகமம் 14 >

1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.
[建造王宮]提洛王希蘭派使臣來見達味,給他送來香柏木,派來石匠和木工,為他建宮室。
2 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
那時達味知道上主已確定他為以色列王,並為了自己的百姓以色列,提高了他的王位。[達味的子女]
3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
達味在耶路撒冷又娶了妻室,生了許多子女。
4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
達味在耶路撒冷所生兒子的名字如下:沙慕亞、芍巴布、納堂、撒羅滿、
5 இப்பார், எலிசூவா, எல்பெலேத்,
依貝哈爾、厄里叔亞、厄里培肋特、
6 நோகா, நெப்பேக், யப்பியா,
諾加、乃費格、雅非亞、
7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
厄里沙瑪、貝里雅達和厄里培肋特。[擊敗培肋舍特]
8 தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.
培肋舍特人聽說達味受傅,為全以色列王,遂都上來向達味尋釁。達味聽說,便出來迎擊。
9 பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
培肋舍特人上來侵入了勒法因平原。
10 ௧0 பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
那時,達味求問天主說:「我可以上去攻打培肋舍特人嗎﹖你將他們交在我手中嗎﹖」上主答應他說:「你上去,我必將他們交在你手中。」
11 ௧௧ அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.
達味於是上到巴耳培辣親,在那裏擊敗了他們。達味因此說:「天主假我的手使我的敵人崩潰,如水破堤。」因此後人稱這地方為巴耳培辣親。
12 ௧௨ அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
培肋舍特人把自己的神像都遺棄在那裏,達味命人用火燒毀。
13 ௧௩ பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
培肋舍特人又侵入平原。
14 ௧௪ அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
達味又求問天主,天主對他說:「不要一直上去追擊他們,要繞到他們後方,曾桑林那邊抄他們的後路。
15 ௧௫ முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
你一聽見桑樹梢上有腳步聲,要即刻出戰,因為天主在你面前出擊培肋舍特人的軍隊。」
16 ௧௬ தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
達味就照天主所命的行了,擊殺培肋舍特人的軍隊,由基貝紅直到革則爾。
17 ௧௭ அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.
因此,達味的聲名傳遍了各地,上主使各民族都害怕他。

< 1 நாளாகமம் 14 >