< சங்கீதம் 136 >

1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், 2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், 3 கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், 4 அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்; 5 அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்; 6 அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்; 7 அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்; 8 அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்; 9 இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; 10 அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்; 11 அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்; 12 அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்; 13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்; 14 அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்; 15 ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்; 16 தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்; 17 அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்; 18 அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்; 19 அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்; 20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்; 21 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; 22 தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; 23 அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்; 24 நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்; 25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; 26 பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;

< சங்கீதம் 136 >