< நீதிமொழிகள் 1 >

1 இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்:
Izaga zikaSolomoni, indodana kaDavida, inkosi yakoIsrayeli;
2 இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
ukwazi inhlakanipho lokulaywa, ukuqedisisa amazwi okuqedisisa,
3 இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது.
ukwemukela ukulaya kwenhlakanipho, ukulunga, lesahlulelo, lokuqonda;
4 இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன.
ukunika abangelalwazi inhlakanipho, ijaha ulwazi lengqondo.
5 ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும்.
Ohlakaniphileyo uzakuzwa, andise ukufunda, loqedisisayo uzazuza izeluleko,
6 இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
ukuqedisisa isaga lomzekeliso, amazwi abahlakaniphileyo, lamalibho abo.
7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
Ukwesaba iNkosi kuyikuqala kolwazi; izithutha ziyadelela inhlakanipho lokulaywa.
8 என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே.
Ndodana yami, zwana ukulaya kukayihlo, ungawudeli umlayo kanyoko;
9 அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
ngoba kuzakuba ngumqhele womusa ekhanda lakho, lemigaxo entanyeni yakho.
10 என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், அவர்களுடன் இழுப்புண்டு போகாதே.
Ndodana yami, uba izoni zikuhuga, ungavumi.
11 அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்;
Uba zisithi: Hamba lathi, siyecathamela igazi, sicatshele ongelacala kungelasizatho;
12 பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol h7585)
sibaginye bephila njengengcwaba, yebo, ngokupheleleyo, njengabehlela egodini. (Sheol h7585)
13 பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்;
Sizathola yonke impahla eligugu, sigcwalise izindlu zethu ngempango.
14 எங்களுடன் பங்காளியாயிரு; நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால்,
Phosela inkatho yakho phakathi kwethu; sonke sibe lesikhwama semali sinye.
15 என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே.
Ndodana yami, ungahambi lazo endleleni; unqande unyawo lwakho emkhondweni wazo.
16 ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன.
Ngoba inyawo zazo zigijimela ebubini, ziphangisa ukuchitha igazi.
17 பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா.
Isibili, imbule lendlalelwa ize phambi kwamehlo aloba yiyiphi inyoni.
18 ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே,
Lalaba bacathamela igazi labo, bacatshele imiphefumulo yabo.
19 தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும்.
Zinjalo indlela zakhe wonke ozuza inzuzo ngokuphanga; ithatha impilo yabaniniyo.
20 ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது;
UkuHlakanipha kuyamemeza ngaphandle, kukhupha ilizwi lakho emidangeni.
21 அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது.
Kuyamemeza endaweni eqakathekileyo yokuxokozela, ekungeneni kwamasango; emzini kutsho amazwi akho,
22 “அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்?
kusithi: Koze kube nini, lina elingelalwazi, lithanda ukungabi lalwazi, labaklolodayo bezifisela ukukloloda, leziphukuphuku zizonda ulwazi?
23 நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
Phendukelani ekukhuzeni kwami; khangelani, ngizathululela umoya wami kini, ngilazise amazwi ami.
24 ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும்,
Ngoba ngibizile, kodwa lala; ngelulile isandla sami, kodwa kakho onanzayo;
25 நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும்
ladelela sonke iseluleko sami, kalivumanga ukukhuza kwami;
26 உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்;
mina-ke ngizahleka ukuchitheka kwenu, ngiklolode ekufikeni kokwesaba kwenu,
27 பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும், துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன்.
ekufikeni kokwesaba kwenu njengesiphepho, lokuchitheka kwenu kufika njengesivunguzane, lapho ubuhlungu losizi kulehlela.
28 “அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள்.
Khona bazangibiza, kodwa kangiyikusabela; bazangidingisisa, kodwa kabayikungithola.
29 ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள்.
Ngenxa yokuthi babezonda ulwazi, bengakhethanga ukwesaba iNkosi.
30 அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால்,
Kabavumanga iseluleko sami, bedelela konke ukukhuza kwami.
31 அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள்.
Ngakho bazakudla okwesithelo sendlela yabo, basuthiswe ngamacebo abo.
32 அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்;
Ngoba ukuhlehla kwabangelalwazi kuzababulala, lokonwaba kweziphukuphuku kuzababhubhisa.
33 ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”
Kodwa ongilalelayo uzahlala evikelekile, onwabe ekwesabeni okubi.

< நீதிமொழிகள் 1 >