< லூக்கா 6 >

1 ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
အစရဉ္စ ပရွွဏော ဒွိတီယဒိနာတ် ပရံ ပြထမဝိၑြာမဝါရေ ၑသျက္ၐေတြေဏ ယီၑောရ္ဂမနကာလေ တသျ ၑိၐျား ကဏိၑံ ဆိတ္တွာ ကရေၐု မရ္ဒ္ဒယိတွာ ခါဒိတုမာရေဘိရေ၊
2 பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
တသ္မာတ် ကိယန္တး ဖိရူၑိနသ္တာနဝဒန် ဝိၑြာမဝါရေ ယတ် ကရ္မ္မ န ကရ္တ္တဝျံ တတ် ကုတး ကုရုထ?
3 அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
ယီၑုး ပြတျုဝါစ ဒါယူဒ် တသျ သင်္ဂိနၑ္စ က္ၐုဓာရ္တ္တား ကိံ စကြုး သ ကထမ် ဤၑွရသျ မန္ဒိရံ ပြဝိၑျ
4 அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
ယေ ဒရ္ၑနီယား ပူပါ ယာဇကာန် ဝိနာနျသျ ကသျာပျဘောဇနီယာသ္တာနာနီယ သွယံ ဗုဘဇေ သင်္ဂိဘျောပိ ဒဒေါ် တတ် ကိံ ယုၐ္မာဘိး ကဒါပိ နာပါဌိ?
5 மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
ပၑ္စာတ် သ တာနဝဒတ် မနုဇသုတော ဝိၑြာမဝါရသျာပိ ပြဘု ရ္ဘဝတိ၊
6 மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான்.
အနန္တရမ် အနျဝိၑြာမဝါရေ သ ဘဇနဂေဟံ ပြဝိၑျ သမုပဒိၑတိ၊ တဒါ တတ္သ္ထာနေ ၑုၐ္ကဒက္ၐိဏကရ ဧကး ပုမာန် ဥပတသ္ထိဝါန်၊
7 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
တသ္မာဒ် အဓျာပကား ဖိရူၑိနၑ္စ တသ္မိန် ဒေါၐမာရောပယိတုံ သ ဝိၑြာမဝါရေ တသျ သွာသ္ထျံ ကရောတိ နဝေတိ ပြတီက္ၐိတုမာရေဘိရေ၊
8 ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான்.
တဒါ ယီၑုသ္တေၐာံ စိန္တာံ ဝိဒိတွာ တံ ၑုၐ္ကကရံ ပုမာံသံ ပြောဝါစ, တွမုတ္ထာယ မဓျသ္ထာနေ တိၐ္ဌ၊
9 அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார்.
တသ္မာတ် တသ္မိန် ဥတ္ထိတဝတိ ယီၑုသ္တာန် ဝျာဇဟာရ, ယုၐ္မာန် ဣမာံ ကထာံ ပၖစ္ဆာမိ, ဝိၑြာမဝါရေ ဟိတမ် အဟိတံ ဝါ, ပြာဏရက္ၐဏံ ပြာဏနာၑနံ ဝါ, ဧတေၐာံ ကိံ ကရ္မ္မကရဏီယမ်?
10 இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது.
ပၑ္စာတ် စတုရ္ဒိက္ၐု သရွွာန် ဝိလောကျ တံ မာနဝံ ဗဘာၐေ, နိဇကရံ ပြသာရယ; တတသ္တေန တထာ ကၖတ ဣတရကရဝတ် တသျ ဟသ္တး သွသ္ထောဘဝတ်၊
11 ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
တသ္မာတ် တေ ပြစဏ္ဍကောပါနွိတာ ယီၑုံ ကိံ ကရိၐျန္တီတိ ပရသ္ပရံ ပြမန္တြိတား၊
12 அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார்.
တတး ပရံ သ ပရွွတမာရုဟျေၑွရမုဒ္ဒိၑျ ပြာရ္ထယမာနး ကၖတ္သ္နာံ ရာတြိံ ယာပိတဝါန်၊
13 காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார். அவர்கள் யாரெனில்:
အထ ဒိနေ သတိ သ သရွွာန် ၑိၐျာန် အာဟူတဝါန် တေၐာံ မဓျေ
14 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
ပိတရနာမ္နာ ချာတး ၑိမောန် တသျ ဘြာတာ အာန္ဒြိယၑ္စ ယာကူဗ် ယောဟန် စ ဖိလိပ် ဗရ္ထလမယၑ္စ
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, செலோத்தே என அழைக்கப்பட்ட சீமோன்,
မထိး ထောမာ အာလ္ဖီယသျ ပုတြော ယာကူဗ် ဇွလန္တနာမ္နာ ချာတး ၑိမောန္
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
စ ယာကူဗော ဘြာတာ ယိဟူဒါၑ္စ တံ ယး ပရကရေၐု သမရ္ပယိၐျတိ သ ဤၐ္ကရီယောတီယယိဟူဒါၑ္စဲတာန် ဒွါဒၑ ဇနာန် မနောနီတာန် ကၖတွာ သ ဇဂြာဟ တထာ ပြေရိတ ဣတိ တေၐာံ နာမ စကာရ၊
17 இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
တတး ပရံ သ တဲး သဟ ပရွွတာဒဝရုဟျ ဥပတျကာယာံ တသ္ထော် တတသ္တသျ ၑိၐျသင်္ဃော ယိဟူဒါဒေၑာဒ် ယိရူၑာလမၑ္စ သောရး သီဒေါနၑ္စ ဇလဓေ ရောဓသော ဇနနိဟာၑ္စ ဧတျ တသျ ကထာၑြဝဏာရ္ထံ ရောဂမုက္တျရ္ထဉ္စ တသျ သမီပေ တသ္ထုး၊
18 அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள்.
အမေဓျဘူတဂြသ္တာၑ္စ တန္နိကဋမာဂတျ သွာသ္ထျံ ပြာပုး၊
19 அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள்.
သရွွေၐာံ သွာသ္ထျကရဏပြဘာဝသျ ပြကာၑိတတွာတ် သရွွေ လောကာ ဧတျ တံ သ္ပြၐ္ဋုံ ယေတိရေ၊
20 மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.
ပၑ္စာတ် သ ၑိၐျာန် ပြတိ ဒၖၐ္ဋိံ ကုတွာ ဇဂါဒ, ဟေ ဒရိဒြာ ယူယံ ဓနျာ ယတ ဤၑွရီယေ ရာဇျေ ဝေါ'ဓိကာရောသ္တိ၊
21 இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள்.
ဟေ အဓုနာ က္ၐုဓိတလောကာ ယူယံ ဓနျာ ယတော ယူယံ တရ္ပ္သျထ; ဟေ ဣဟ ရောဒိနော ဇနာ ယူယံ ဓနျာ ယတော ယူယံ ဟသိၐျထ၊
22 மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும், அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும், உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ယဒါ လောကာ မနုၐျသူနော ရ္နာမဟေတော ရျုၐ္မာန် ၒတီယိၐျန္တေ ပၖထက် ကၖတွာ နိန္ဒိၐျန္တိ, အဓမာနိဝ ယုၐ္မာန် သွသမီပါဒ် ဒူရီကရိၐျန္တိ စ တဒါ ယူယံ ဓနျား၊
23 “அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள்.
သွရ္ဂေ ယုၐ္မာကံ ယထေၐ္ဋံ ဖလံ ဘဝိၐျတိ, ဧတဒရ္ထံ တသ္မိန် ဒိနေ ပြောလ္လသတ အာနန္ဒေန နၖတျတ စ, တေၐာံ ပူရွွပုရုၐာၑ္စ ဘဝိၐျဒွါဒိနး ပြတိ တထဲဝ ဝျဝါဟရန်၊
24 “ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ. ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
ကိန္တု ဟာ ဟာ ဓနဝန္တော ယူယံ သုခံ ပြာပ္နုတ၊ ဟန္တ ပရိတၖပ္တာ ယူယံ က္ၐုဓိတာ ဘဝိၐျထ;
25 நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ. நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள். இப்பொழுது சிரித்து மகிழ்கிறவர்களே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.
ဣဟ ဟသန္တော ယူယံ ဝတ ယုၐ္မာဘိး ၑောစိတဝျံ ရောဒိတဝျဉ္စ၊
26 எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்களுடைய முன்னோரும் பொய் தீர்க்கதரிசிகளை அப்படித்தான் புகழ்ந்தார்கள்.
သရွွဲလာကဲ ရျုၐ္မာကံ သုချာတော် ကၖတာယာံ ယုၐ္မာကံ ဒုရ္ဂတိ ရ္ဘဝိၐျတိ ယုၐ္မာကံ ပူရွွပုရုၐာ မၖၐာဘဝိၐျဒွါဒိနး ပြတိ တဒွတ် ကၖတဝန္တး၊
27 “எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,
ဟေ ၑြောတာရော ယုၐ္မဘျမဟံ ကထယာမိ, ယူယံ ၑတြုၐု ပြီယဓွံ ယေ စ ယုၐ္မာန် ဒွိၐန္တိ တေၐာမပိ ဟိတံ ကုရုတ၊
28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள்.
ယေ စ ယုၐ္မာန် ၑပန္တိ တေဘျ အာၑိၐံ ဒတ္တ ယေ စ ယုၐ္မာန် အဝမနျန္တေ တေၐာံ မင်္ဂလံ ပြာရ္ထယဓွံ၊
29 ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள்.
ယဒိ ကၑ္စိတ် တဝ ကပေါလေ စပေဋာဃာတံ ကရောတိ တရှိ တံ ပြတိ ကပေါလမ် အနျံ ပရာဝရ္တ္တျ သမ္မုခီကုရု ပုနၑ္စ ယဒိ ကၑ္စိတ် တဝ ဂါတြီယဝသ္တြံ ဟရတိ တရှိ တံ ပရိဓေယဝသ္တြမ် အပိ ဂြဟီတုံ မာ ဝါရယ၊
30 உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள்.
ယသ္တွာံ ယာစတေ တသ္မဲ ဒေဟိ, ယၑ္စ တဝ သမ္ပတ္တိံ ဟရတိ တံ မာ ယာစသွ၊
31 மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
ပရေဘျး သွာန် ပြတိ ယထာစရဏမ် အပေက္ၐဓွေ ပရာန် ပြတိ ယူယမပိ တထာစရတ၊
32 “உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள்.
ယေ ဇနာ ယုၐ္မာသု ပြီယန္တေ ကေဝလံ တေၐု ပြီယမာဏေၐု ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပါပိလောကာ အပိ သွေၐု ပြီယမာဏေၐု ပြီယန္တေ၊
33 உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
ယဒိ ဟိတကာရိဏ ဧဝ ဟိတံ ကုရုထ တရှိ ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပါပိလောကာ အပိ တထာ ကုရွွန္တိ၊
34 மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே.
ယေဘျ ၒဏပရိၑောဓသျ ပြာပ္တိပြတျာၑာသ္တေ ကေဝလံ တေၐု ၒဏေ သမရ္ပိတေ ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပုနး ပြာပ္တျာၑယာ ပါပီလောကာ အပိ ပါပိဇနေၐု ၒဏမ် အရ္ပယန္တိ၊
35 ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே.
အတော ယူယံ ရိပုၐွပိ ပြီယဓွံ, ပရဟိတံ ကုရုတ စ; ပုနး ပြာပ္တျာၑာံ တျက္တွာ ၒဏမရ္ပယတ, တထာ ကၖတေ ယုၐ္မာကံ မဟာဖလံ ဘဝိၐျတိ, ယူယဉ္စ သရွွပြဓာနသျ သန္တာနာ ဣတိ ချာတိံ ပြာပ္သျထ, ယတော ယုၐ္မာကံ ပိတာ ကၖတဃ္နာနာံ ဒုရွ္ဋတ္တာနာဉ္စ ဟိတမာစရတိ၊
36 உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
အတ ဧဝ သ ယထာ ဒယာလု ရျူယမပိ တာဒၖၑာ ဒယာလဝေါ ဘဝတ၊
37 “மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.
အပရဉ္စ ပရာန် ဒေါၐိဏော မာ ကုရုတ တသ္မာဒ် ယူယံ ဒေါၐီကၖတာ န ဘဝိၐျထ; အဒဏ္ဍျာန် မာ ဒဏ္ဍယတ တသ္မာဒ် ယူယမပိ ဒဏ္ဍံ န ပြာပ္သျထ; ပရေၐာံ ဒေါၐာန် က္ၐမဓွံ တသ္မာဒ် ယုၐ္မာကမပိ ဒေါၐား က္ၐမိၐျန္တေ၊
38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார்.
ဒါနာနိဒတ္တ တသ္မာဒ် ယူယံ ဒါနာနိ ပြာပ္သျထ, ဝရဉ္စ လောကား ပရိမာဏပါတြံ ပြဒလယျ သဉ္စာလျ ပြောဉ္စာလျ ပရိပူရျျ ယုၐ္မာကံ ကြောဍေၐု သမရ္ပယိၐျန္တိ; ယူယံ ယေန ပရိမာဏေန ပရိမာထ တေနဲဝ ပရိမာဏေန ယုၐ္မတ္ကၖတေ ပရိမာသျတေ၊
39 மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா?
အထ သ တေဘျော ဒၖၐ္ဋာန္တကထာမကထယတ်, အန္ဓော ဇနး ကိမန္ဓံ ပန္ထာနံ ဒရ္ၑယိတုံ ၑက္နောတိ? တသ္မာဒ် ဥဘာဝပိ ကိံ ဂရ္တ္တေ န ပတိၐျတး?
40 ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான்.
ဂုရေား ၑိၐျော န ၑြေၐ္ဌး ကိန္တု ၑိၐျေ သိဒ္ဓေ သတိ သ ဂုရုတုလျော ဘဝိတုံ ၑက္နောတိ၊
41 “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்?
အပရဉ္စ တွံ သွစက္ၐုၐိ နာသာမ် အဒၖၐ္ဋွာ တဝ ဘြာတုၑ္စက္ၐုၐိ ယတ္တၖဏမသ္တိ တဒေဝ ကုတး ပၑျမိ?
42 உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும்.
သွစက္ၐုၐိ ယာ နာသာ ဝိဒျတေ တာမ် အဇ္ဉာတွာ, ဘြာတသ္တဝ နေတြာတ် တၖဏံ ဗဟိး ကရောမီတိ ဝါကျံ ဘြာတရံ ကထံ ဝက္တုံ ၑက္နောၐိ? ဟေ ကပဋိန် ပူရွွံ သွနယနာတ် နာသာံ ဗဟိး ကုရု တတော ဘြာတုၑ္စက္ၐုၐသ္တၖဏံ ဗဟိး ကရ္တ္တုံ သုဒၖၐ္ဋိံ ပြာပ္သျသိ၊
43 “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை.
အနျဉ္စ ဥတ္တမသ္တရုး ကဒါပိ ဖလမနုတ္တမံ န ဖလတိ, အနုတ္တမတရုၑ္စ ဖလမုတ္တမံ န ဖလတိ ကာရဏာဒတး ဖလဲသ္တရဝေါ ဇ္ဉာယန္တေ၊
44 ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை.
ကဏ္ဋကိပါဒပါတ် ကောပိ ဥဍုမ္ဗရဖလာနိ န ပါတယတိ တထာ ၑၖဂါလကောလိဝၖက္ၐာဒပိ ကောပိ ဒြာက္ၐာဖလံ န ပါတယတိ၊
45 நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.
တဒွတ် သာဓုလောကော'န္တးကရဏရူပါတ် သုဘာဏ္ဍာဂါရာဒ် ဥတ္တမာနိ ဒြဝျာဏိ ဗဟိး ကရောတိ, ဒုၐ္ဋော လောကၑ္စာန္တးကရဏရူပါတ် ကုဘာဏ္ဍာဂါရာတ် ကုတ္သိတာနိ ဒြဝျာဏိ နိရ္ဂမယတိ ယတော'န္တးကရဏာနာံ ပူရ္ဏဘာဝါနုရူပါဏိ ဝစာံသိ မုခါန္နိရ္ဂစ္ဆန္တိ၊
46 “நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்?
အပရဉ္စ မမာဇ္ဉာနုရူပံ နာစရိတွာ ကုတော မာံ ပြဘော ပြဘော ဣတိ ဝဒထ?
47 என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
ယး ကၑ္စိန် မမ နိကဋမ် အာဂတျ မမ ကထာ နိၑမျ တဒနုရူပံ ကရ္မ္မ ကရောတိ သ ကသျ သဒၖၑော ဘဝတိ တဒဟံ ယုၐ္မာန် ဇ္ဉာပယာမိ၊
48 அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை.
ယော ဇနော ဂဘီရံ ခနိတွာ ပါၐာဏသ္ထလေ ဘိတ္တိံ နိရ္မ္မာယ သွဂၖဟံ ရစယတိ တေန သဟ တသျောပမာ ဘဝတိ; ယတ အာပ္လာဝိဇလမေတျ တသျ မူလေ ဝေဂေန ဝဟဒပိ တဒ္ဂေဟံ လာဍယိတုံ န ၑက္နောတိ ယတသ္တသျ ဘိတ္တိး ပါၐာဏောပရိ တိၐ္ဌတိ၊
49 ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.”
ကိန္တု ယး ကၑ္စိန် မမ ကထား ၑြုတွာ တဒနုရူပံ နာစရတိ သ ဘိတ္တိံ ဝိနာ မၖဒုပရိ ဂၖဟနိရ္မ္မာတြာ သမာနော ဘဝတိ; ယတ အာပ္လာဝိဇလမာဂတျ ဝေဂေန ယဒါ ဝဟတိ တဒါ တဒ္ဂၖဟံ ပတတိ တသျ မဟတ် ပတနံ ဇာယတေ၊

< லூக்கா 6 >