< லூக்கா 3 >

1 ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநனாக இருந்தான். அக்காலத்தில் ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அவனது சகோதரன் பிலிப்பு இத்துரேயா, திராகொனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான்.
অনন্তরং তিবিরিযকৈসরস্য রাজৎৱস্য পঞ্চদশে ৱৎসরে সতি যদা পন্তীযপীলাতো যিহূদাদেশাধিপতি র্হেরোদ্ তু গালীল্প্রদেশস্য রাজা ফিলিপনামা তস্য ভ্রাতা তু যিতূরিযাযাস্ত্রাখোনীতিযাপ্রদেশস্য চ রাজাসীৎ লুষানীযনামা অৱিলীনীদেশস্য রাজাসীৎ
2 அக்காலத்தில் அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராய் இருந்தார்கள். அப்பொழுது பாலைவனத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது.
হানন্ কিযফাশ্চেমৌ প্রধানযাজাকাৱাস্তাং তদানীং সিখরিযস্য পুত্রায যোহনে মধ্যেপ্রান্তরম্ ঈশ্ৱরস্য ৱাক্যে প্রকাশিতে সতি
3 அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
স যর্দ্দন উভযতটপ্রদেশান্ সমেত্য পাপমোচনার্থং মনঃপরাৱর্ত্তনস্য চিহ্নরূপং যন্মজ্জনং তদীযাঃ কথাঃ সর্ৱ্ৱত্র প্রচারযিতুমারেভে|
4 இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது: “பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்.
যিশযিযভৱিষ্যদ্ৱক্তৃগ্রন্থে যাদৃশী লিপিরাস্তে যথা, পরমেশস্য পন্থানং পরিষ্কুরুত সর্ৱ্ৱতঃ| তস্য রাজপথঞ্চৈৱ সমানং কুরুতাধুনা|
5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும். கோணலான வீதிகள் நேராகும், கரடுமுரடான வழிகள் சீராகும்.
কারিষ্যন্তে সমুচ্ছ্রাযাঃ সকলা নিম্নভূমযঃ| কারিষ্যন্তে নতাঃ সর্ৱ্ৱে পর্ৱ্ৱতাশ্চোপপর্ৱ্ৱতাঃ| কারিষ্যন্তে চ যা ৱক্রাস্তাঃ সর্ৱ্ৱাঃ সরলা ভুৱঃ| কারিষ্যন্তে সমানাস্তা যা উচ্চনীচভূমযঃ|
6 மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’”
ঈশ্ৱরেণ কৃতং ত্রাণং দ্রক্ষ্যন্তি সর্ৱ্ৱমানৱাঃ| ইত্যেতৎ প্রান্তরে ৱাক্যং ৱদতঃ কস্যচিদ্ রৱঃ||
7 யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெறும்படி வந்த மக்களுக்குச் சொன்னதாவது, “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்?
যে যে লোকা মজ্জনার্থং বহিরাযযুস্তান্ সোৱদৎ রে রে সর্পৱংশা আগামিনঃ কোপাৎ পলাযিতুং যুষ্মান্ কশ্চেতযামাস?
8 நீங்கள் மனந்திரும்பியிருந்தால் அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பனாக இருக்கிறார்,’ என்று உங்களுக்குள்ளே சொல்லவேண்டாம். ஏனெனில், இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
তস্মাদ্ ইব্রাহীম্ অস্মাকং পিতা কথামীদৃশীং মনোভি র্ন কথযিৎৱা যূযং মনঃপরিৱর্ত্তনযোগ্যং ফলং ফলত; যুষ্মানহং যথার্থং ৱদামি পাষাণেভ্য এতেভ্য ঈশ্ৱর ইব্রাহীমঃ সন্তানোৎপাদনে সমর্থঃ|
9 கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது; நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்” என்றான்.
অপরঞ্চ তরুমূলেঽধুনাপি পরশুঃ সংলগ্নোস্তি যস্তরুরুত্তমং ফলং ন ফলতি স ছিদ্যতেঽগ্নৌ নিক্ষিপ্যতে চ|
10 அப்பொழுது கூடியிருந்த மக்கள் அவனிடம், “அப்படியானால், நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
১০তদানীং লোকাস্তং পপ্রচ্ছুস্তর্হি কিং কর্ত্তৱ্যমস্মাভিঃ?
11 யோவான் அதற்குப் பதிலாக, “இரண்டு உடைகளை வைத்திருப்பவன் உடைகள் இல்லாதவனுடன் பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை வைத்திருக்கிறவனும் அவ்வாறே செய்யட்டும்” என்றான்.
১১ততঃ সোৱাদীৎ যস্য দ্ৱে ৱসনে ৱিদ্যেতে স ৱস্ত্রহীনাযৈকং ৱিতরতু কিংঞ্চ যস্য খাদ্যদ্রৱ্যং ৱিদ্যতে সোপি তথৈৱ করোতু|
12 வரி வசூலிக்கிறவர்களும் திருமுழுக்குப் பெறும்படி வந்து, அவனிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
১২ততঃ পরং করসঞ্চাযিনো মজ্জনার্থম্ আগত্য পপ্রচ্ছুঃ হে গুরো কিং কর্ত্তৱ্যমস্মাভিঃ?
13 யோவான் அவர்களிடம், “வசூலிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்குமேல், எதையும் வசூலிக்கவேண்டாம்” என்றான்.
১৩ততঃ সোকথযৎ নিরূপিতাদধিকং ন গৃহ্লিত|
14 அப்பொழுது சில படைவீரர்கள் அவனிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அவன் அவர்களிடம், “மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தவேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்துடன் திருப்தியாய் இருங்கள்” என்றான்.
১৪অনন্তরং সেনাগণ এত্য পপ্রচ্ছ কিমস্মাভি র্ৱা কর্ত্তৱ্যম্? ততঃ সোভিদধে কস্য কামপি হানিং মা কার্ষ্ট তথা মৃষাপৱাদং মা কুরুত নিজৱেতনেন চ সন্তুষ্য তিষ্ঠত|
15 மக்கள் கிறிஸ்துவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்ததால், “யோவான்தான் கிறிஸ்துவாயிருப்பாரோ?” என்று தங்கள் இருதயங்களில் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
১৫অপরঞ্চ লোকা অপেক্ষযা স্থিৎৱা সর্ৱ্ৱেপীতি মনোভি র্ৱিতর্কযাঞ্চক্রুঃ, যোহনযম্ অভিষিক্তস্ত্রাতা ন ৱেতি?
16 யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுள்ள ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார்.
১৬তদা যোহন্ সর্ৱ্ৱান্ ৱ্যাজহার, জলেঽহং যুষ্মান্ মজ্জযামি সত্যং কিন্তু যস্য পাদুকাবন্ধনং মোচযিতুমপি ন যোগ্যোস্মি তাদৃশ একো মত্তো গুরুতরঃ পুমান্ এতি, স যুষ্মান্ ৱহ্নিরূপে পৱিত্র আত্মনি মজ্জযিষ্যতি|
17 அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான்.
১৭অপরঞ্চ তস্য হস্তে শূর্প আস্তে স স্ৱশস্যানি শুদ্ধরূপং প্রস্ফোট্য গোধূমান্ সর্ৱ্ৱান্ ভাণ্ডাগারে সংগ্রহীষ্যতি কিন্তু বূষাণি সর্ৱ্ৱাণ্যনির্ৱ্ৱাণৱহ্নিনা দাহযিষ্যতি|
18 யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்தி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.
১৮যোহন্ উপদেশেনেত্থং নানাকথা লোকানাং সমক্ষং প্রচারযামাস|
19 ஆனால் சிற்றரசன் ஏரோது தனது சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை திருமணம் செய்திருந்ததினாலும், வேறு பல தீய காரியங்களைச் செய்ததினாலும் யோவான் அவனைக் கண்டித்தான்.
১৯অপরঞ্চ হেরোদ্ রাজা ফিলিপ্নাম্নঃ সহোদরস্য ভার্য্যাং হেরোদিযামধি তথান্যানি যানি যানি কুকর্ম্মাণি কৃতৱান্ তদধি চ
20 இதனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்து, தான் செய்த தீய செயல்களுடன் இதையும் கூட்டிக் கொண்டான்.
২০যোহনা তিরস্কৃতো ভূৎৱা কারাগারে তস্য বন্ধনাদ্ অপরমপি কুকর্ম্ম চকার|
21 இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவும் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு,
২১ইতঃ পূর্ৱ্ৱং যস্মিন্ সমযে সর্ৱ্ৱে যোহনা মজ্জিতাস্তদানীং যীশুরপ্যাগত্য মজ্জিতঃ|
22 பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் அவர்மேல் இறங்கினார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நீர் என்னுடைய அன்பு மகன், நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.
২২তদনন্তরং তেন প্রার্থিতে মেঘদ্ৱারং মুক্তং তস্মাচ্চ পৱিত্র আত্মা মূর্ত্তিমান্ ভূৎৱা কপোতৱৎ তদুপর্য্যৱরুরোহ; তদা ৎৱং মম প্রিযঃ পুত্রস্ত্ৱযি মম পরমঃ সন্তোষ ইত্যাকাশৱাণী বভূৱ|
23 இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்,
২৩তদানীং যীশুঃ প্রাযেণ ত্রিংশদ্ৱর্ষৱযস্ক আসীৎ| লৌকিকজ্ঞানে তু স যূষফঃ পুত্রঃ,
24 ஏலி மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன், லேவி மெல்கியின் மகன், மெல்கி யன்னாவின் மகன், யன்னா யோசேப்பின் மகன்,
২৪যূষফ্ এলেঃ পুত্রঃ, এলির্মত্ততঃ পুত্রঃ, মত্তৎ লেৱেঃ পুত্রঃ, লেৱি র্মল্কেঃ পুত্রঃ, মল্কির্যান্নস্য পুত্রঃ; যান্নো যূষফঃ পুত্রঃ|
25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா ஆமோசின் மகன், ஆமோஸ் நாகூமின் மகன், நாகூம் எஸ்லியின் மகன், எஸ்லி நங்காயின் மகன்,
২৫যূষফ্ মত্তথিযস্য পুত্রঃ, মত্তথিয আমোসঃ পুত্রঃ, আমোস্ নহূমঃ পুত্রঃ, নহূম্ ইষ্লেঃ পুত্রঃ ইষ্লির্নগেঃ পুত্রঃ|
26 நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன்,
২৬নগির্মাটঃ পুত্রঃ, মাট্ মত্তথিযস্য পুত্রঃ, মত্তথিযঃ শিমিযেঃ পুত্রঃ, শিমিযির্যূষফঃ পুত্রঃ, যূষফ্ যিহূদাঃ পুত্রঃ|
27 யோதா யோவன்னானின் மகன், யோவன்னான் ரேசாவின் மகன், ரேசா செருபாபேலின் மகன், செருபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,
২৭যিহূদা যোহানাঃ পুত্রঃ, যোহানা রীষাঃ পুত্রঃ, রীষাঃ সিরুব্বাবিলঃ পুত্রঃ, সিরুব্বাবিল্ শল্তীযেলঃ পুত্রঃ, শল্তীযেল্ নেরেঃ পুত্রঃ|
28 நேரி மெல்கியின் மகன், மெல்கி அத்தியின் மகன், அத்தி கோசாமின் மகன், கோசாம் எல்மோதாமின் மகன், எல்மோதாம் ஏரின் மகன்,
২৮নেরির্মল্কেঃ পুত্রঃ, মল্কিঃ অদ্যঃ পুত্রঃ, অদ্দী কোষমঃ পুত্রঃ, কোষম্ ইল্মোদদঃ পুত্রঃ, ইল্মোদদ্ এরঃ পুত্রঃ|
29 ஏர் யோசேயின் மகன், யோசே எலியேசரின் மகன், எலியேசர் யோரீமின் மகன், யோரீம் மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன்,
২৯এর্ যোশেঃ পুত্রঃ, যোশিঃ ইলীযেষরঃ পুত্রঃ, ইলীযেষর্ যোরীমঃ পুত্রঃ, যোরীম্ মত্ততঃ পুত্রঃ, মত্তত লেৱেঃ পুত্রঃ|
30 லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனாமின் மகன், யோனாம் எலியாக்கீமின் மகன்,
৩০লেৱিঃ শিমিযোনঃ পুত্রঃ, শিমিযোন্ যিহূদাঃ পুত্রঃ, যিহূদা যূষুফঃ পুত্রঃ, যূষুফ্ যোননঃ পুত্রঃ, যানন্ ইলীযাকীমঃ পুত্রঃ|
31 எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மென்னாவின் மகன், மென்னா மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன்,
৩১ইলিযাকীম্ঃ মিলেযাঃ পুত্রঃ, মিলেযা মৈননঃ পুত্রঃ, মৈনন্ মত্তত্তস্য পুত্রঃ, মত্তত্তো নাথনঃ পুত্রঃ, নাথন্ দাযূদঃ পুত্রঃ|
32 தாவீது ஈசாயின் மகன், ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாஸின் மகன், போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,
৩২দাযূদ্ যিশযঃ পুত্রঃ, যিশয ওবেদঃ পুত্র, ওবেদ্ বোযসঃ পুত্রঃ, বোযস্ সল্মোনঃ পুত্রঃ, সল্মোন্ নহশোনঃ পুত্রঃ|
33 நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன், ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன், பாரேஸ் யூதாவின் மகன்,
৩৩নহশোন্ অম্মীনাদবঃ পুত্রঃ, অম্মীনাদব্ অরামঃ পুত্রঃ, অরাম্ হিষ্রোণঃ পুত্রঃ, হিষ্রোণ্ পেরসঃ পুত্রঃ, পেরস্ যিহূদাঃ পুত্রঃ|
34 யூதா யாக்கோபின் மகன், யாக்கோபு ஈசாக்கின் மகன், ஈசாக்கு ஆபிரகாமின் மகன், ஆபிரகாம் தேராவின் மகன், தேரா நாகோரின் மகன்,
৩৪যিহূদা যাকূবঃ পুত্রঃ, যাকূব্ ইস্হাকঃ পুত্রঃ, ইস্হাক্ ইব্রাহীমঃ পুত্রঃ, ইব্রাহীম্ তেরহঃ পুত্রঃ, তেরহ্ নাহোরঃ পুত্রঃ|
35 நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன், ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன், ஏபேர் சாலாவின் மகன்,
৩৫নাহোর্ সিরুগঃ পুত্রঃ, সিরুগ্ রিয্ৱঃ পুত্রঃ, রিযূঃ পেলগঃ পুত্রঃ, পেলগ্ এৱরঃ পুত্রঃ, এৱর্ শেলহঃ পুত্রঃ|
36 சாலா காயினானின் மகன், காயினான் அர்ப்பகசாத்தின் மகன், அர்ப்பகசாத் சேமின் மகன், சேம் நோவாவின் மகன், நோவா லாமேக்கின் மகன்,
৩৬শেলহ্ কৈননঃ পুত্রঃ, কৈনন্ অর্ফক্ষদঃ পুত্রঃ, অর্ফক্ষদ্ শামঃ পুত্রঃ, শাম্ নোহঃ পুত্রঃ, নোহো লেমকঃ পুত্রঃ|
37 லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன், ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன், மகலாலெயேல் கேனானின் மகன்,
৩৭লেমক্ মিথূশেলহঃ পুত্রঃ, মিথূশেলহ্ হনোকঃ পুত্রঃ, হনোক্ যেরদঃ পুত্রঃ, যেরদ্ মহললেলঃ পুত্রঃ, মহললেল্ কৈননঃ পুত্রঃ|
38 கேனான் ஏனோஸின் மகன், ஏனோஸ் சேத்தின் மகன், சேத் ஆதாமின் மகன், ஆதாம் இறைவனின் மகன்.
৩৮কৈনন্ ইনোশঃ পুত্রঃ, ইনোশ্ শেতঃ পুত্রঃ, শেৎ আদমঃ পুত্র, আদম্ ঈশ্ৱরস্য পুত্রঃ|

< லூக்கா 3 >