< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ਅਥ ਸਪ੍ਤਾਹਪ੍ਰਥਮਦਿਨੇ(ਅ)ਤਿਪ੍ਰਤ੍ਯੂਸ਼਼ੇ ਤਾ ਯੋਸ਼਼ਿਤਃ ਸਮ੍ਪਾਦਿਤੰ ਸੁਗਨ੍ਧਿਦ੍ਰਵ੍ਯੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਤਦਨ੍ਯਾਭਿਃ ਕਿਯਤੀਭਿਃ ਸ੍ਤ੍ਰੀਭਿਃ ਸਹ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਯਯੁਃ|
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਸ਼੍ਮਸ਼ਾਨਦ੍ਵਾਰਾਤ੍ ਪਾਸ਼਼ਾਣਮਪਸਾਰਿਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ਤਾਃ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਪ੍ਰਭੋ ਰ੍ਦੇਹਮਪ੍ਰਾਪ੍ਯ
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
ਵ੍ਯਾਕੁਲਾ ਭਵਨ੍ਤਿ ਏਤਰ੍ਹਿ ਤੇਜੋਮਯਵਸ੍ਤ੍ਰਾਨ੍ਵਿਤੌ ਦ੍ਵੌ ਪੁਰੁਸ਼਼ੌ ਤਾਸਾਂ ਸਮੀਪੇ ਸਮੁਪਸ੍ਥਿਤੌ
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
ਤਸ੍ਮਾੱਤਾਃ ਸ਼ਙ੍ਕਾਯੁਕ੍ਤਾ ਭੂਮਾਵਧੋਮੁਖ੍ਯਸ੍ਯਸ੍ਥੁਃ| ਤਦਾ ਤੌ ਤਾ ਊਚਤੁ ਰ੍ਮ੍ਰੁʼਤਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਜੀਵਨ੍ਤੰ ਕੁਤੋ ਮ੍ਰੁʼਗਯਥ?
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
ਸੋਤ੍ਰ ਨਾਸ੍ਤਿ ਸ ਉਦਸ੍ਥਾਤ੍|
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
ਪਾਪਿਨਾਂ ਕਰੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਿਤੇਨ ਕ੍ਰੁਸ਼ੇ ਹਤੇਨ ਚ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰੇਣ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਵਸੇ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦੁੱਥਾਤਵ੍ਯਮ੍ ਇਤਿ ਕਥਾਂ ਸ ਗਲੀਲਿ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਕਥਿਤਵਾਨ੍ ਤਾਂ ਸ੍ਮਰਤ|
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
ਤਦਾ ਤਸ੍ਯ ਸਾ ਕਥਾ ਤਾਸਾਂ ਮਨਃਸੁ ਜਾਤਾ|
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦ੍ ਗਤ੍ਵਾ ਤਾ ਏਕਾਦਸ਼ਸ਼ਿਸ਼਼੍ਯਾਦਿਭ੍ਯਃ ਸਰ੍ੱਵੇਭ੍ਯਸ੍ਤਾਂ ਵਾਰ੍ੱਤਾਂ ਕਥਯਾਮਾਸੁਃ|
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
ਮਗ੍ਦਲੀਨੀਮਰਿਯਮ੍, ਯੋਹਨਾ, ਯਾਕੂਬੋ ਮਾਤਾ ਮਰਿਯਮ੍ ਤਦਨ੍ਯਾਃ ਸਙ੍ਗਿਨ੍ਯੋ ਯੋਸ਼਼ਿਤਸ਼੍ਚ ਪ੍ਰੇਰਿਤੇਭ੍ਯ ਏਤਾਃ ਸਰ੍ੱਵਾ ਵਾਰ੍ੱਤਾਃ ਕਥਯਾਮਾਸੁਃ
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
ਕਿਨ੍ਤੁ ਤਾਸਾਂ ਕਥਾਮ੍ ਅਨਰ੍ਥਕਾਖ੍ਯਾਨਮਾਤ੍ਰੰ ਬੁੱਧ੍ਵਾ ਕੋਪਿ ਨ ਪ੍ਰਤ੍ਯੈਤ੍|
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
ਤਦਾ ਪਿਤਰ ਉੱਥਾਯ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਨ੍ਤਿਕੰ ਦਧਾਵ, ਤਤ੍ਰ ਚ ਪ੍ਰਹ੍ਵੋ ਭੂਤ੍ਵਾ ਪਾਰ੍ਸ਼੍ਵੈਕਸ੍ਥਾਪਿਤੰ ਕੇਵਲੰ ਵਸ੍ਤ੍ਰੰ ਦਦਰ੍ਸ਼; ਤਸ੍ਮਾਦਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮਨ੍ਯਮਾਨੋ ਯਦਘਟਤ ਤਨ੍ਮਨਸਿ ਵਿਚਾਰਯਨ੍ ਪ੍ਰਤਸ੍ਥੇ|
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
ਤਸ੍ਮਿੰਨੇਵ ਦਿਨੇ ਦ੍ਵੌ ਸ਼ਿੱਯੌ ਯਿਰੂਸ਼ਾਲਮਸ਼੍ਚਤੁਸ਼਼੍ਕ੍ਰੋਸ਼ਾਨ੍ਤਰਿਤਮ੍ ਇੰਮਾਯੁਗ੍ਰਾਮੰ ਗੱਛਨ੍ਤੌ
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
ਤਾਸਾਂ ਘਟਨਾਨਾਂ ਕਥਾਮਕਥਯਤਾਂ
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ਤਯੋਰਾਲਾਪਵਿਚਾਰਯੋਃ ਕਾਲੇ ਯੀਸ਼ੁਰਾਗਤ੍ਯ ਤਾਭ੍ਯਾਂ ਸਹ ਜਗਾਮ
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
ਕਿਨ੍ਤੁ ਯਥਾ ਤੌ ਤੰ ਨ ਪਰਿਚਿਨੁਤਸ੍ਤਦਰ੍ਥੰ ਤਯੋ ਰ੍ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਃ ਸੰਰੁੱਧਾ|
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
ਸ ਤੌ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍ ਯੁਵਾਂ ਵਿਸ਼਼ੱਣੌ ਕਿੰ ਵਿਚਾਰਯਨ੍ਤੌ ਗੱਛਥਃ?
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ਤਤਸ੍ਤਯੋਃ ਕ੍ਲਿਯਪਾਨਾਮਾ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ ਯਿਰੂਸ਼ਾਲਮਪੁਰੇ(ਅ)ਧੁਨਾ ਯਾਨ੍ਯਘਟਨ੍ਤ ਤ੍ਵੰ ਕੇਵਲਵਿਦੇਸ਼ੀ ਕਿੰ ਤਦ੍ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਨ ਜਾਨਾਸਿ?
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
ਸ ਪਪ੍ਰੱਛ ਕਾ ਘਟਨਾਃ? ਤਦਾ ਤੌ ਵਕ੍ਤੁਮਾਰੇਭਾਤੇ ਯੀਸ਼ੁਨਾਮਾ ਯੋ ਨਾਸਰਤੀਯੋ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਾਨੁਸ਼਼ਾਣਾਞ੍ਚ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਵਾਕ੍ਯੇ ਕਰ੍ੰਮਣਿ ਚ ਸ਼ਕ੍ਤਿਮਾਨਾਸੀਤ੍
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
ਤਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾ ਵਿਚਾਰਕਾਸ਼੍ਚ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਕ੍ਰੁਸ਼ੇ ਵਿੱਧ੍ਵਾ ਤਸ੍ਯ ਪ੍ਰਾਣਾਨਨਾਸ਼ਯਨ੍ ਤਦੀਯਾ ਘਟਨਾਃ;
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
ਕਿਨ੍ਤੁ ਯ ਇਸ੍ਰਾਯੇਲੀਯਲੋਕਾਨ੍ ਉੱਧਾਰਯਿਸ਼਼੍ਯਤਿ ਸ ਏਵਾਯਮ੍ ਇਤ੍ਯਾਸ਼ਾਸ੍ਮਾਭਿਃ ਕ੍ਰੁʼਤਾ| ਤਦ੍ਯਥਾ ਤਥਾਸ੍ਤੁ ਤਸ੍ਯਾ ਘਟਨਾਯਾ ਅਦ੍ਯ ਦਿਨਤ੍ਰਯੰ ਗਤੰ|
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ਅਧਿਕਨ੍ਤ੍ਵਸ੍ਮਾਕੰ ਸਙ੍ਗਿਨੀਨਾਂ ਕਿਯਤ੍ਸ੍ਤ੍ਰੀਣਾਂ ਮੁਖੇਭ੍ਯੋ(ਅ)ਸਮ੍ਭਵਵਾਕ੍ਯਮਿਦੰ ਸ਼੍ਰੁਤੰ;
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ਤਾਃ ਪ੍ਰਤ੍ਯੂਸ਼਼ੇ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਰ ਤਸ੍ਯ ਦੇਹਮ੍ ਅਪ੍ਰਾਪ੍ਯ ਵ੍ਯਾਘੁਟ੍ਯੇਤ੍ਵਾ ਪ੍ਰੋਕ੍ਤਵਤ੍ਯਃ ਸ੍ਵਰ੍ਗੀਸਦੂਤੌ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਵਸ੍ਮਾਭਿਸ੍ਤੌ ਚਾਵਾਦਿਸ਼਼੍ਟਾਂ ਸ ਜੀਵਿਤਵਾਨ੍|
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
ਤਤੋਸ੍ਮਾਕੰ ਕੈਸ਼੍ਚਿਤ੍ ਸ਼੍ਮਸ਼ਾਨਮਗਮ੍ਯਤ ਤੇ(ਅ)ਪਿ ਸ੍ਤ੍ਰੀਣਾਂ ਵਾਕ੍ਯਾਨੁਰੂਪੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਨ੍ਤਃ ਕਿਨ੍ਤੁ ਤੰ ਨਾਪਸ਼੍ਯਨ੍|
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
ਤਦਾ ਸ ਤਾਵੁਵਾਚ, ਹੇ ਅਬੋਧੌ ਹੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਭਿਰੁਕ੍ਤਵਾਕ੍ਯੰ ਪ੍ਰਤ੍ਯੇਤੁੰ ਵਿਲਮ੍ਬਮਾਨੌ;
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
ਏਤਤ੍ਸਰ੍ੱਵਦੁਃਖੰ ਭੁਕ੍ਤ੍ਵਾ ਸ੍ਵਭੂਤਿਪ੍ਰਾਪ੍ਤਿਃ ਕਿੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਨ ਨ੍ਯਾੱਯਾ?
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
ਤਤਃ ਸ ਮੂਸਾਗ੍ਰਨ੍ਥਮਾਰਭ੍ਯ ਸਰ੍ੱਵਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਸਰ੍ੱਵਸ਼ਾਸ੍ਤ੍ਰੇ ਸ੍ਵਸ੍ਮਿਨ੍ ਲਿਖਿਤਾਖ੍ਯਾਨਾਭਿਪ੍ਰਾਯੰ ਬੋਧਯਾਮਾਸ|
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
ਅਥ ਗਮ੍ਯਗ੍ਰਾਮਾਭ੍ਯਰ੍ਣੰ ਪ੍ਰਾਪ੍ਯ ਤੇਨਾਗ੍ਰੇ ਗਮਨਲਕ੍ਸ਼਼ਣੇ ਦਰ੍ਸ਼ਿਤੇ
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
ਤੌ ਸਾਧਯਿਤ੍ਵਾਵਦਤਾਂ ਸਹਾਵਾਭ੍ਯਾਂ ਤਿਸ਼਼੍ਠ ਦਿਨੇ ਗਤੇ ਸਤਿ ਰਾਤ੍ਰਿਰਭੂਤ੍; ਤਤਃ ਸ ਤਾਭ੍ਯਾਂ ਸਾਰ੍ੱਧੰ ਸ੍ਥਾਤੁੰ ਗ੍ਰੁʼਹੰ ਯਯੌ|
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ਪਸ਼੍ਚਾਦ੍ਭੋਜਨੋਪਵੇਸ਼ਕਾਲੇ ਸ ਪੂਪੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਈਸ਼੍ਵਰਗੁਣਾਨ੍ ਜਗਾਦ ਤਞ੍ਚ ਭੰਕ੍ਤ੍ਵਾ ਤਾਭ੍ਯਾਂ ਦਦੌ|
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
ਤਦਾ ਤਯੋ ਰ੍ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟੌ ਪ੍ਰਸੰਨਾਯਾਂ ਤੰ ਪ੍ਰਤ੍ਯਭਿਜ੍ਞਤੁਃ ਕਿਨ੍ਤੁ ਸ ਤਯੋਃ ਸਾਕ੍ਸ਼਼ਾਦਨ੍ਤਰ੍ਦਧੇ|
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ਤਤਸ੍ਤੌ ਮਿਥੋਭਿਧਾਤੁਮ੍ ਆਰਬ੍ਧਵਨ੍ਤੌ ਗਮਨਕਾਲੇ ਯਦਾ ਕਥਾਮਕਥਯਤ੍ ਸ਼ਾਸ੍ਤ੍ਰਾਰ੍ਥਞ੍ਚਬੋਧਯਤ੍ ਤਦਾਵਯੋ ਰ੍ਬੁੱਧਿਃ ਕਿੰ ਨ ਪ੍ਰਾਜ੍ਵਲਤ੍?
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
ਤੌ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਦੁੱਥਾਯ ਯਿਰੂਸ਼ਾਲਮਪੁਰੰ ਪ੍ਰਤ੍ਯਾਯਯਤੁਃ, ਤਤ੍ਸ੍ਥਾਨੇ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਣਾਮ੍ ਏਕਾਦਸ਼ਾਨਾਂ ਸਙ੍ਗਿਨਾਞ੍ਚ ਦਰ੍ਸ਼ਨੰ ਜਾਤੰ|
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ਤੇ ਪ੍ਰੋਚੁਃ ਪ੍ਰਭੁਰੁਦਤਿਸ਼਼੍ਠਦ੍ ਇਤਿ ਸਤ੍ਯੰ ਸ਼ਿਮੋਨੇ ਦਰ੍ਸ਼ਨਮਦਾੱਚ|
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
ਤਤਃ ਪਥਃ ਸਰ੍ੱਵਘਟਨਾਯਾਃ ਪੂਪਭਞ੍ਜਨੇਨ ਤਤ੍ਪਰਿਚਯਸ੍ਯ ਚ ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਤੌ ਵਕ੍ਤੁਮਾਰੇਭਾਤੇ|
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
ਇੱਥੰ ਤੇ ਪਰਸ੍ਪਰੰ ਵਦਨ੍ਤਿ ਤਤ੍ਕਾਲੇ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਵਯੰ ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯ ਪ੍ਰੋੱਥਯ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਲ੍ਯਾਣੰ ਭੂਯਾਦ੍ ਇਤ੍ਯੁਵਾਚ,
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਭੂਤੰ ਪਸ਼੍ਯਾਮ ਇਤ੍ਯਨੁਮਾਯ ਤੇ ਸਮੁਦ੍ਵਿਵਿਜਿਰੇ ਤ੍ਰੇਸ਼਼ੁਸ਼੍ਚ|
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
ਸ ਉਵਾਚ, ਕੁਤੋ ਦੁਃਖਿਤਾ ਭਵਥ? ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਨਃਸੁ ਸਨ੍ਦੇਹ ਉਦੇਤਿ ਚ ਕੁਤਃ?
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
ਏਸ਼਼ੋਹੰ, ਮਮ ਕਰੌ ਪਸ਼੍ਯਤ ਵਰੰ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਪਸ਼੍ਯਤ, ਮਮ ਯਾਦ੍ਰੁʼਸ਼ਾਨਿ ਪਸ਼੍ਯਥ ਤਾਦ੍ਰੁʼਸ਼ਾਨਿ ਭੂਤਸ੍ਯ ਮਾਂਸਾਸ੍ਥੀਨਿ ਨ ਸਨ੍ਤਿ|
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ਇਤ੍ਯੁਕ੍ਤ੍ਵਾ ਸ ਹਸ੍ਤਪਾਦਾਨ੍ ਦਰ੍ਸ਼ਯਾਮਾਸ|
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ਤੇ(ਅ)ਸਮ੍ਭਵੰ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਸਾਨਨ੍ਦਾ ਨ ਪ੍ਰਤ੍ਯਯਨ੍| ਤਤਃ ਸ ਤਾਨ੍ ਪਪ੍ਰੱਛ, ਅਤ੍ਰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਮੀਪੇ ਖਾਦ੍ਯੰ ਕਿਞ੍ਚਿਦਸ੍ਤਿ?
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
ਤਤਸ੍ਤੇ ਕਿਯੱਦਗ੍ਧਮਤ੍ਸ੍ਯੰ ਮਧੁ ਚ ਦਦੁਃ
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
ਸ ਤਦਾਦਾਯ ਤੇਸ਼਼ਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਬੁਭੁਜੇ
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
ਕਥਯਾਮਾਸ ਚ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾਯਾਂ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਗ੍ਰਨ੍ਥੇਸ਼਼ੁ ਗੀਤਪੁਸ੍ਤਕੇ ਚ ਮਯਿ ਯਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਵਚਨਾਨਿ ਲਿਖਿਤਾਨਿ ਤਦਨੁਰੂਪਾਣਿ ਘਟਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਸ੍ਥਿਤ੍ਵਾਹੰ ਯਦੇਤਦ੍ਵਾਕ੍ਯਮ੍ ਅਵਦੰ ਤਦਿਦਾਨੀਂ ਪ੍ਰਤ੍ਯਕ੍ਸ਼਼ਮਭੂਤ੍|
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
ਅਥ ਤੇਭ੍ਯਃ ਸ਼ਾਸ੍ਤ੍ਰਬੋਧਾਧਿਕਾਰੰ ਦਤ੍ਵਾਵਦਤ੍,
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨੇੱਥੰ ਮ੍ਰੁʼਤਿਯਾਤਨਾ ਭੋਕ੍ਤਵ੍ਯਾ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਨੇ ਚ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦੁੱਥਾਤਵ੍ਯਞ੍ਚੇਤਿ ਲਿਪਿਰਸ੍ਤਿ;
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ਤੰਨਾਮ੍ਨਾ ਯਿਰੂਸ਼ਾਲਮਮਾਰਭ੍ਯ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੇ ਮਨਃਪਰਾਵਰ੍ੱਤਨਸ੍ਯ ਪਾਪਮੋਚਨਸ੍ਯ ਚ ਸੁਸੰਵਾਦਃ ਪ੍ਰਚਾਰਯਿਤਵ੍ਯਃ,
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
ਏਸ਼਼ੁ ਸਰ੍ੱਵੇਸ਼਼ੁ ਯੂਯੰ ਸਾਕ੍ਸ਼਼ਿਣਃ|
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
ਅਪਰਞ੍ਚ ਪਸ਼੍ਯਤ ਪਿਤ੍ਰਾ ਯਤ੍ ਪ੍ਰਤਿਜ੍ਞਾਤੰ ਤਤ੍ ਪ੍ਰੇਸ਼਼ਯਿਸ਼਼੍ਯਾਮਿ, ਅਤਏਵ ਯਾਵਤ੍ਕਾਲੰ ਯੂਯੰ ਸ੍ਵਰ੍ਗੀਯਾਂ ਸ਼ਕ੍ਤਿੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਥ ਤਾਵਤ੍ਕਾਲੰ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਨਗਰੇ ਤਿਸ਼਼੍ਠਤ|
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
ਅਥ ਸ ਤਾਨ੍ ਬੈਥਨੀਯਾਪਰ੍ੱਯਨ੍ਤੰ ਨੀਤ੍ਵਾ ਹਸ੍ਤਾਵੁੱਤੋਲ੍ਯ ਆਸ਼ਿਸ਼਼ ਵਕ੍ਤੁਮਾਰੇਭੇ
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ਆਸ਼ਿਸ਼਼ੰ ਵਦੰਨੇਵ ਚ ਤੇਭ੍ਯਃ ਪ੍ਰੁʼਥਗ੍ ਭੂਤ੍ਵਾ ਸ੍ਵਰ੍ਗਾਯ ਨੀਤੋ(ਅ)ਭਵਤ੍|
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ਤਦਾ ਤੇ ਤੰ ਭਜਮਾਨਾ ਮਹਾਨਨ੍ਦੇਨ ਯਿਰੂਸ਼ਾਲਮੰ ਪ੍ਰਤ੍ਯਾਜਗ੍ਮੁਃ|
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ਤਤੋ ਨਿਰਨ੍ਤਰੰ ਮਨ੍ਦਿਰੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪ੍ਰਸ਼ੰਸਾਂ ਧਨ੍ਯਵਾਦਞ੍ਚ ਕਰ੍ੱਤਮ੍ ਆਰੇਭਿਰੇ| ਇਤਿ||

< லூக்கா 24 >