< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ମାତର୍‌ ସାତ୍‌ ଦିନ୍‌ନି ରଇବାର୍‌ ଉଟ୍‌ଲା ହାକାଡ଼େ ହେୱେକ୍‌ ଜାଲ୍‌ଦି କିତି ହାର୍‌ଦି ବାସ୍‌ନା ସାମାନ୍ ଅଜ଼ି ଦୁଗେର୍‌ ତାକେ ହାଚିକ୍‌ ।
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ଦୁଗେର୍‌ତାଂ କାଲ୍‌ ଗ୍ରୁତ୍‍ତାକା ହୁଡ଼୍‍ତିକ୍‍,
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ମାତର୍‌ ବିତ୍ରେ ହାଲ୍‌ଜି ମାପ୍ରୁ ଜିସୁତି ଗାଗାଡ଼୍‌ ଗାଟାୱିତିକ୍‍ ।
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
ଆରେ, ହେୱେକ୍‌ ହେଦାଂ କାଜିଂ ବୁଦିବାଣା ଆନିକା, ଏଲେଙ୍ଗ୍‌ ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ହୁଡ଼ାଟ୍‌, ଅଜଡ଼୍‌ ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପିସ୍‌ ରିକାର୍‌ ଲକୁ ହେୱେକ୍‌ ତାକେ ଏକାତାର୍‌;
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
ହେବେ ହେୱେକ୍‌ ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ମେଦ୍‌ନିତ ମୁମ୍‌ ଆତିଲେ, ହେୱାର୍‌ ହେୱେକାଂ ଇଚାର୍‌, “ହାତିଲକାର୍‍ ବିତ୍ରେ ଏପେଙ୍ଗ୍‌ ଇନେକିଦେଂ ଜିତାକାନିଂ ଡେକ୍‌ନାଦେରା?
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
ହେୱାନ୍‌ ଇବେ ହିଲୁନ୍, ମାତର୍‌ ନିଂତାନ୍ନା । ହେୱାନ୍‌ ଗାଲିଲିତ ମାନି ୱେଡ଼ାଲିଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‌ଚି ମାନ୍‍ଞ୍ଚାନ୍‍, ହେଦାଂ ଏତୁ କିୟାଟ୍‌ ।”
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
ମାନାୟ୍‌ ମାଜ଼ି ପାପିୟାର୍‌ କେଇଦ କ୍ରୁସ୍‌ତ ହାଦେଂ ଆରି ତିନି ଦିନ୍ତ ଆରି ନିଙ୍ଗ୍‍ଦେଙ୍ଗ୍ ଆନାତ୍‌ ।
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ହେୱାନ୍‌ କାତା ଏତୁ କିତାର୍‌,
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
ଆରେ ଦୁଗେର୍‌ତାଂ ମାସ୍‌ଦିହାଲ୍‌ଜି ଏଗାର୍‌ ଜାଣ୍‌ ଚେଲାର୍‌ ଆରି ବିନ୍‌ ଲଗାଂ ଇ ସବୁ କାବୁର୍‌ ୱେଚ୍‍ଚାର୍‍ ।
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
ଇୱେକ୍‌ ମଗ୍‌ଦଲିନି ମରିୟମ୍‌ ଜହନା ଜାକୁବ୍‌ ତେହି ମରିୟମ୍‌ ଆରି ଇୱେକ୍‌ ହାଙ୍ଗ୍‍ଦାଂ ମାନି ବିନ୍‌ କଗ୍‌ଲେକ୍‌, ଇୱେକ୍‌ ପକ୍ୟାତାକାର୍‌ରିଂ ଇ ବିତ୍ରେ କାତା ୱେଚ୍‍ଚିକ୍‍ ।
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
ମାତର୍‌ ଇ ସବୁ କାତା ହେୱାର୍‌ ତାକେ କ୍ଡେଞ୍ଚ୍‍କଣ୍‌ ଲାକେ ଲାଗାତାତ୍‌, ଆରେ ହେୱାର୍‌ ହେୱେକାଂ ପାର୍ତି କିୱାତାର୍‌ ।
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
ମାତର୍‌ ପିତର୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ଦୁଗେର୍‌ ତାକେ ହନ୍‍ଚି ହାଚାନ୍‌, ଆରେ ଟଡ଼୍‌ଜି ହୁଡ଼୍‌ତାନ୍‌ ମତର୍‌ ହାରୁ ହେନ୍ଦ୍ରା ସବୁ ହୁଡ଼୍‌ତାନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ହେ ଗଟ୍‌ଣା ବିସ୍ରେ କାବା ଆଜ଼ି ତା ଇଞ୍ଜ ହାଚାନ୍‌ ।
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ହେ ଦିନ୍‌ ହେୱାର୍‌ ବିତ୍ରେ ରିକାର୍‌ ଜିରୁସାଲମ୍‌ତାଂ ବେସିଆୱିତିସ୍‍ ଏଗାର୍‌ କିଲମିଟର୍‌ ଦେହାତାଂ ଇମାୟୁ ନାସ୍‌ତ ହାଲ୍‌ଜି ମାଚାର୍‌
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
ଆରି ଇ ୱିଜ଼ୁ ଗଟ୍‌ଣା ବିସ୍ରେ ହେୱାର୍‌ ହାୱେର୍‍ କାତାବାର୍ତା କିଜ଼ି ମାଚାର୍‌ ।
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ହେୱାର୍‌ କାତାବାର୍ତା ଆରି ବେରଣ୍‌ୱେଚ୍‌ପା ଆନି ୱେଡ଼ାଲିଂ ଜିସୁ ଆପେ ହେୱାର୍‌ ତାକେ ୱାଜ଼ି ହେୱାର୍‌ ହୁକେ ତାଙ୍ଗ୍‌ଦେଂ ଲାଗାତାନ୍‌;
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
ମାତର୍‌ ହେୱାର୍‌ କାଣ୍‌କୁ ଏଲେଙ୍ଗ୍‌ ଗେହ୍‍ୟା ଆଜ଼ି ମାଚାତ୍‌ ଜେ, ହେୱାର୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ଚିନ୍‌କିଦେଂ ଆଡ୍‌ୱାତାର୍‌ ।
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
ଜିସୁ ହେୱାରିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗୁ ତାଙ୍ଗୁ ଇମ୍‌ଣି ୱିଜ଼ୁ ବିସ୍ରେ କାତାବାର୍ତା କିନାଦେରା, ହେ ୱିଜ଼ୁ ଇନାକା?” ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ବାଡ଼ିୟା ଆଜ଼ି ନିଲ୍‌ଚି ମାଚାର୍‌ ।
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ଆରେ ହେୱାର୍‌ ବିତ୍ରେ କେଲୟପା ଇନି ରକାନ୍‌ ହେୱାନିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଜିରୁସାଲମ୍‌ତ ବାହାକିନି ମାନାୟ୍‌ ବିତ୍ରେ ଏନ୍‌ ଇନାକା ରକାୟ୍‌ ହେ ବାହାନି ଏଚେକ୍‌ ଦିନ୍‌ନି ଗଟ୍‌ଣା ପୁନୁୟ୍‌?”
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
ଜିସୁ ହେୱାରିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଇନେସ୍‌ ଇନେସ୍‌ ବାନି ଗଟ୍‌ଣା?” ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାର୍‌, “ନାଜରିତିୟାନି ଜିସୁତି ବିସ୍ରେ; ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ ଆରି ୱିଜ଼ୁ ଲକାର୍‍ କାଣ୍‌କୁତ କାମାୟ୍‌ତ ଆରି ବଚନ୍‌ତ ସାକ୍ତିକାଟାକାନ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ ମାଚାନ୍‌,
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
ଆରେ ମୁଡ଼୍‌ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍‌ ଆରି ମୁଡ଼୍‍ଦାକାର୍‍ ଇନେସ୍‌ ତାଙ୍ଗ୍‌ ହାକି ଡାଣ୍ଡ୍‌ ଆଦେଂ ହେଲାୟ୍‌ କିଜ଼ି ତାଙ୍ଗ୍‌ କ୍ରୁସ୍‌ତ ଅସ୍ତାର୍‌, ଇ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ।
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
ମାତର୍‌ ଇନେର୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ତିଂ ମୁକ୍ତି କିନାନ୍‌, ହେୱାନ୍‌ ଜେ ଇୱାନ୍‍, ହେଦାଂ ଆପେଂ ଆହା କିଜ଼ି ମାଚାପ୍‍; ମାତର୍‌ ଇଦାଂ ପିସ୍ତି ଇ ୱିଜ଼ୁ ଗଟ୍‍ଣାନି ନେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗ୍ ତିନି ଦିନ୍‌ ଆତାତ୍‌ ।
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ଆରେ ପା, ମା ବିତ୍ରେତାଂ କେତେକ୍‌ ଜାଣ୍‌ କଗ୍‌ଲେକ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ କାବା କିତ୍‍କ୍‍ନା; ହେୱେକ୍‌ ଉଟ୍‌ଲା ହାକାଡ଼େ ଦୁଗେର୍‌ ତାକେ ହାଲ୍‍ଜି ମାଚିକ୍‌,
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ଆରେ ହେୱାନ୍ତି ଗାଗାଡ଼୍‌ ଗାଟାୱାଦାଙ୍ଗ୍ ୱାଜ଼ି ଇଚିକ୍‌ ଜେ, ହେୱେକ୍‌ ଦୁତରିଂ ପା ହୁଡ଼୍‍ତିକ୍‍ନ୍ନା ଆରି ହେ ଦୁତ୍‌କୁ ଇଚିକ୍‌ ଜେ, ହେୱାନ୍‌ ଜିତାକାନ୍‍ ମାନାନ୍‌ ।
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
ଆରେ, ମା ହାଙ୍ଗ୍‍ଦାକାର୍‍ ବିତ୍ରେ ଇନେର୍‌ ଇନେର୍‌ ଦୁଗେର୍‌ ଲାଗେ ହାଲ୍‌ଜି, କଗ୍‌ଲେହିମ୍‌ଣାଂ ଇନେସ୍‌ ଇଞ୍ଜି ମାଚିକ୍‍, ହେ ଲାକେ ହୁଡ଼୍‍ତିକ୍‍, ମାତର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ୱିତିକ୍‍ ।”
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
ହେବେଣ୍ଡାଂ ହେୱେକାଂ ଇଚାନ୍‌, “ଏ ନିର୍‍ବୁଦିୟା କାଦେର୍‌ ଆରି ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ହୁକେ ଇଚି ୱିଜ଼ୁ ବେରଣ୍‌ତ ପାର୍ତି କିଦେଙ୍ଗ୍‌ ହିତ୍‍ଡ଼ି ମାନ୍‌ କାଦେର୍,
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
ଇ ୱିଜ଼ୁ ଦୁକ୍‌ କିଜ଼ି ଜାର୍‌ ପାଣ୍‌ ହଣ୍ଡେଙ୍ଗ୍‌ ଇନାକା କ୍ରିସ୍ଟତି ଲଡ଼ା ହିଲ୍‌ୱାତାତ୍‌?”
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
ଆରେ, ମସା ଆରି ୱିଜ଼ାର୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ତାଂ ହାଙ୍ଗ୍‍ଜି ୱିଜ଼ୁ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଜାର୍‌ କାଜିଂ ବେରଣ୍‌ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ବୁଜାୟ୍‌ କିତାନ୍‌ ।
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
ଆରେ, ହେୱାର୍‌ ଇମ୍‌ଣି ନାସ୍‌ତ ହାଲ୍‌ଜି ମାଚାର୍‌, ହେବେଣ୍ଡାଂ ଲାଗେ ଏକିନିହିଙ୍ଗ୍, ହେୱାନ୍‌ ଆରେ ଆଗେ ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଟାଟାୟ୍‍ କିତାନ୍‌ ।
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
ମାତର୍‌ ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ଟେବାୟ୍‌ କିଜ଼ି ଇଚାର୍‌, “ମାହୁଦାଂ ମାନା, ଇନାକିଦେଂକି ମ୍ଡିସି ୱାନାତା” ଆରି ୱେଡ଼ା ହାଚାତେ । ହେବେଣ୍ଡାଂ ହେୱାନ୍‌ ହେୱେର୍‌ ହୁଦାଂ ମାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ ହାଚାନ୍‌ ।
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ଆରେ, ହେୱାର୍‌ ହୁକେ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍‌ କୁଚ୍‌ଚି ପାଚେ ହେୱାନ୍‌ ରୁଟି ଅଜ଼ି ଆସିର୍ବାଦ୍‌ କିତାନ୍‌, ଆରି ହେଦାଂ ଡ୍ରିକ୍‌ଚି ହେୱାରିଂ ହିଦେଂ ଲାଗାତାନ୍‌ ।
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
ହେବେ ହେୱାର୍‌ କାଣ୍‌କୁ ଜେୟାଆତିକ୍‍ ଆରି ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ଚିନ୍‌ କିତାର୍; ଆରେ, ହେୱାନ୍‌ ହେୱାର୍‌ ନଞ୍ଜର୍‌ତାଂ ମାୟାଁ ଆତାନ୍‌ ।
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ହେୱେର୍‌ ଇଚାର୍‌, “ଏଚେକାଡ଼୍‌ଦ ହାସ୍‍ଦ ହେୱାନ୍‌ ମା ହୁକେ କାତାବାର୍ତା କିଜ଼ି ମାଚାନ୍‌ ଆରି ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ ବୁଜାୟ୍‌ କିଜ଼ି ମାଞ୍ଚାନ୍, ହେୱେଡ଼ାଂ ଇନାକା ମା ମାନ୍‌ କେଦ୍‍ୱାଦାଂ ମାଚାତ୍‌?”
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ହେପାଦ୍‌ନା ନିଙ୍ଗ୍‌ଜି ଜିରୁସାଲମ୍‌ତ ଲେଉଟା ଆଜ଼ି ରବେ ରୁଣ୍ଡା ଆଜ଼ି ମାନି ଏଗାର୍‌ଜାଣ୍‌ତିଂ ଆରି ହେୱାର୍‌ ହଲ୍ୟାରିଂ ହୁଡ଼୍‌ତାନ୍‌;
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ହେୱେର୍‌ ଇଞ୍ଜି ମାଚାର୍‌, “ମାପ୍ରୁ ହାତ୍‌ପା ନିଂତାନ୍ନା ଆରି ସିମନ୍‌ତିଂ ଚଞ୍ଜ୍‌ୟା ଆତାନ୍‌ ।”
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
ଆରେ, ହେୱାର୍‍ପା ହାଜ଼ିନି ସବୁ ଗଟ୍‌ଣା ଆରି ରୁଟି ଡ୍ରିକ୍‌ନି ସମୁତ ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ହେୱାର୍‌ ହୁକେ ଚିନା ଆତାନ୍‌, ହେ ସବୁ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌ ।
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
ମାତର୍‌ ହେୱାର୍‌ ଇ ସବୁ ବେରଣ୍‌ ଇନିୱାଡ଼ାଲିଂ ମାପ୍ରୁ ଜିସୁ ନିଜେ ହେୱାର୍‌ ତାକେ ଏକାତାନ୍‌ ଆରେ ଇଚାନ୍‌, “ମି କାଜିଂ ସୁସ୍ତା ଆୟେତ୍‌ ।”
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
ମତର୍‌ ମାନାୟ୍‌ୟାର୍‌ କାବା ଆଜ଼ି ବେସି ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ର ପୁଦା ହୁଡ଼୍‍ନାରା ଇଞ୍ଜି ବାବି କିତାର୍‌ ।
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
ହେବେଣ୍ଡାଂ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଇନେକିଦେଂ ପାଣ୍ଡ୍ରା ଆନାଦେରା, ଆରେ, ମି ମାନ୍ତ ଇନେକିଦେଂ ଗାଣ୍‌ଜୁ ନିଙ୍ଗ୍‌ନାତା?
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
ଇୱାଙ୍ଗ୍‌ ଜେ ଆନ୍‌, ନା କେଇ ଆରି ପାନା ହୁଡ଼ାଟ୍‌, ନାଙ୍ଗ୍‌ ଡୁଜ଼ି ହୁଡ଼୍‍ଦାଟ୍‌, ଇନାକିଦେଂକି ନାଦାଂ ଇନେସ୍‌ ଜେଇ ଆରି ପ୍ଡେନ୍ ମାନାକା ଏପେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ନାଦେରା, ପୁଦାତିଙ୍ଗ୍‌ ହେ ଲାକେ ଆକାୟ୍‌ ।”
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ଆରେ ହେୱାନ୍‌ ଇଦାଂ ଇଞ୍ଜି ହେୱେରିଂ ଜାର୍‌ କେଇ ଆରି ପାନା ଚଚ୍‌ଚାନ୍‌ ।
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ଲାଗିଂ ପା ହେୱାର୍‌ ୱାରି କାଜିଂ ପାର୍ତି କିୱାଦାଂ କାବା ଆତିଲେ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଇବେ ମିବେ ଇନାକାତ ଇଚୁକ୍‌ କାଦି ମାନାତ୍‌?”
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ରଞ୍ଜାଙ୍ଗ୍‌ ୱାସ୍ତି ମିନ୍‌ ହିତାର୍‌ ।
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
ଆରେ, ଜିସୁ ଅଜ଼ି ହେୱାର୍‌ ମୁମ୍‌ଦ ଚିଚାନ୍‍ ।
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
ଆରି, ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌ ମସାତି ବିଦି ଆରି ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ଆରି ନାନ୍ଦ୍‌କେର୍‍ନି ସାସ୍ତର୍‌ତାକେ ନା ବିସ୍ରେ ଇନା ଇନାକା ଇନାକା ଲେକା ଆତାତ୍‌ନ୍ନା, ହେ ସବୁ ପୁରା ଆନାକା ଲଡ଼ା, “ଆନ୍‌ ମି ହୁଦାଂ ରଚେ ମାନିହିଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇ ସବୁ ବେରଣ୍‌ ଇଞ୍ଜିମାନ୍‌ଚାଙ୍ଗ୍‌ ।”
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
ହେ ପାଦ୍‌ନା ହେୱାର୍‌ ଇନେସ୍‌ ଦର୍ମ ସାସ୍ତର୍‌ ବୁଜା ଆନାର୍‌, ହେଦାଂ କାଜିଂ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ବୁଦିନି ହାଜ଼ି ଜେତାନ୍‍;
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ଆରେ, ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, ଇ ଲାକେ ଲେକା ମାନାତ୍‌, “କ୍ରିସ୍ଟ ଦୁକ୍‍ବଗି କିନାନ୍‌ ଆରି ତିନି ଦିନ୍‌ତାଂ ହାକିତାକେତାଂ ନିଙ୍ଗ୍‌ନାନ୍‌,
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ଆରେ ଜିରୁସାଲମ୍‌ତାଂ ହାଙ୍ଗ୍‍ଜି ୱିଜ଼ୁ ଜାତି ତାକେ ହେୱାନ୍‌ ତର୍‌ଦ ପାପ୍‌ କେମା କାଜିଂ ମାନ୍‌ବାଦ୍‌ଲାୟ୍‌ ବେରଣ୍‌ ସୁଣାୟ୍‌ କିତାର୍‌ ।
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
ଏପେଙ୍ଗ୍‌ ଇ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ସାକି ଆନାଦେର୍‌ ।
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ନା ଆବା ଇନାକା ରାଣ୍‌ ହିତ୍‌ତାନ୍ନା, ହେଦାଂ ଆନ୍‌ ମି ତାକେ ପକ୍ତାନାଙ୍ଗା, ମାତର୍‌ ଜପିତାଂ ସାକ୍ତି ପାୟାୱି ପାତେକ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଇ ଗାଡ଼୍‌ଦ ମାନାଟ୍‌ ।”
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
ତା ପାଚେ ଜିସୁ ହେୱାରିଂ ବେତ୍‌ନିୟା ହାନି ହାଜ଼ି ପାତେକ୍‌ ଅଜ଼ି ହାଚାର୍‌ ଆରି ଜାର୍‌ କେଇ ପେସ୍‌ଜି ହେୱେରିଂ ଆସିର୍ବାଦ୍‌ କିତାନ୍‌ ।
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ଆରେ, ହେୱାରିଂ ଆସିର୍ବାଦ୍‌ କିଉ କିଉ ଜିସୁ ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ଏଡ଼ା ଆଜ଼ି ସାର୍ଗେଜପି ହାଚାନ୍‌ ।
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜୱାର୍‌ କିଜ଼ି ବେସି ୱାରିତାଂ ଜିରୁସାଲମ୍‌ତ ଲେଉଟା ଆତାର୍‌,
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ଆରେ ହେୱାର୍‌ ନିତ୍ରେ ମନ୍ଦିର୍‌ତ ମାନ୍‌ଞ୍ଜି ଇସ୍ୱର୍ତି ଦନ୍ୟବାଦ୍‌ କିଜ଼ି ମାଚାର୍‌ ।

< லூக்கா 24 >