< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ଆରି, ପାଲ୍ଲିନ୍‌ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ତି ଆଇମରଞ୍ଜି ଅଣ୍ଡ୍ରଙନ୍‌ ଡୋତାନ୍‌ ଡୋଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଆତ୍ରୁବେଞ୍ଜି ଆ ମିଞଲ୍‌ ଡ ଲଙିଡ୍‌ମେନ୍‌ ଞମ୍‌ଲେ ମସାନ୍ନିନ୍‌ ଇୟେଞ୍ଜି ।
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ମସାନ୍ନିଲୋଙନ୍‌ ଆରେଙ୍‌ ଆଡେଡ୍‌ଡେଡ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେଜି,
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ବନ୍‌ଡ ଅମ୍ମନ୍‌ ଗନ୍‌ଲେ ଇୟ୍‌ଲେ ଗିଜେଞ୍ଜି, ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆ ଡଅଙ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଞାଙ୍‌ଲଜି ।
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି କାଲାୟ୍‌ ବିଲାୟ୍‌ ଡେଏଞ୍ଜି, ତି ଆ ବନେଡ଼ା ଗିୟ୍‌ବା, ସାଆର୍‌ଡମ୍‌ ଆ ଅଙ୍ଗି ଆରନେଜି ବାଗୁ ମନ୍‌ରା ଆମଙଞ୍ଜି ଇୟ୍‌ଲାୟ୍‌ ତନଙେଜି ।
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
ସିଲତ୍ତେ ଆଇମରଞ୍ଜି ମାଡ୍ଡ ବତଙେଞ୍ଜି କି ଜାୟ୍‌ତାନ୍‌ ବରୁମେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ତି ଆଇମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆମେଙ୍‌ମରନ୍‌ଆଡଙ୍‌ ଇନିବା ଏସାୟ୍‌ତେ?
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
ଆନିନ୍‌ ତେନ୍ନେ ତଡ୍‌, ଆନିନ୍‌ ଡୋଲନେ । ଆନିନ୍‌ ଗାଲିଲିନ୍‌ ଆଡ୍ରକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ରବେନ୍‌, ତିଆତେ ମନ୍ନେବା ।
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
‘ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ବନେରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଡାଲେ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ରବ୍ବୁତଜି ଆରି ଏର୍ତାଲୋଙ୍‌ ଆନିନ୍‌ ୟର୍ମେଙ୍‌ତେ ।’”
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଆ ବର୍ନେନ୍‌ ମନ୍ନେଏଞ୍ଜି,
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ମସାନ୍ନିନ୍‌ ସିଲଡ୍‌ ୟର୍ରନ୍‌ ଏଗାରଜଣଞ୍ଜି ଆରି ଆନ୍ନାମରଞ୍ଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆମଙ୍‌ କେନ୍‌ ଆ କବର ଇୟ୍‌ଲାୟ୍‌ ଅବ୍‌ଜନାଏଜି ।
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
କେନ୍‌ଆନିଞ୍ଜି ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌, ଜୋଆନାନ୍‌, ଜାକୁବନ୍‌ ଆ ନନ ମରିଅମନ୍‌ ଆରି କେନ୍‌ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆନ୍ନା ଆଇମର୍‌ଜି; କେନ୍‌ଆନିଞ୍ଜି ଅନାପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଇୟ୍‌ଲେ ଅବ୍‌ଜନାଏଜି ।
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
ବନ୍‌ଡ ଅନାପ୍ପାୟଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆମଙଞ୍ଜି କନଣ୍ଡାୟ୍‌ବର୍‌ଗୋ ଅବ୍‌ଡିସୟେଞ୍ଜି, ଆରି ଅନାପ୍ପାୟଞ୍ଜି ଆ ବର୍ନେଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ।
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
ବନ୍‌ଡ ପିତ୍ରନ୍‌ ଡୋଲନ୍‌ ମସାନ୍ନିନ୍‌ ଇରେନ୍‌, ଆରି ଡୁଙ୍ଗୁଡାଲେ ଅମ୍ମନ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେନ୍‌, ତେତ୍ତେ ସତ୍ତର୍‌ ଲମନ୍‌କାବନ୍‌ ତୁମ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଇନି ଡେଏନ୍‌ ଗାମ୍‌ଲେ ସାନ୍ନିଡାଲେ ଆରି ଆସିଙନ୍‌ ୟର୍ରନାୟ୍‌ ।
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
ଆରି ଗିୟ୍‌ବା, ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ବାଗୁନେ ଜିରୁସାଲମନ୍‌ ସିଲଡ୍‌ ଉଞ୍ଜି କୋସ ଆ ସଙାୟ୍‌ ଇମ୍ମାୟୁ ସାଇନ୍‌ ଇୟେଞ୍ଜି ।
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
ଆରି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍‌ କଡାଡ଼ିଗଡ୍‌ଲଞ୍ଜି ।
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ଆନିଞ୍ଜି କଡାଡ଼ିନ୍‌ ଡ ଅଲ୍‌ଡୁଲ୍‌ବାଞନ୍‌ ଆଡ୍ରେଏଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙଞ୍ଜି ଜିର୍ରେ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ତଙିୟ୍‌ଲନେ ।
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
ବନ୍‌ଡ ତିଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ପୁସ୍ପାଲ୍‌ମଡେଞ୍ଜି ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍ମଡ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେନ୍‌ ତଙିୟ୍‌ନେରୟ୍‌ ଅଙ୍ଗା ବର୍ନେଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଏକଡାଡ଼ିତନ୍‌, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇନି?” ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଅବ୍‌ସର୍‌ମୁକ୍କାଲନ୍‌ ତନଙେଞ୍ଜି ।
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ଆରି, ଆନିଞ୍ଜି ଲୋଙ୍‌ସିଲଡ୍‌ କ୍ଲେୟପା ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ନେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଜିରୁସାଲମନ୍‌ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଲୋଙ୍‌ସିଲଡ୍‌ ଆମନ୍‌ ତୁମ୍‌ ପଙ୍‌ ଅବୟ୍‌ନେ, କେନ୍‌ ଆଡିନ୍ନାରେଙ୍‌ ତେନ୍ନେ ଇନିଜି ଡେଏନ୍‌ ତିଆତେ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଜନାଅମ୍‌?”
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏଙ୍ଗାଗୋ ଆ ଗନଡେଲ୍‌?” ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ନାଜରିତ ଜିସୁନ୍‌ ଆ କଡାଡ଼ି; ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଡ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍‌ ଡ ବର୍ନେଲୋଙନ୍‌ ଅବୟ୍‌ ବୋର୍ସାଡମ୍‌ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ ଡକୋଏନ୍‌ ।
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
ଆରି ସୋଡ଼ା ରାଓଡ଼ାଲେଞ୍ଜି ଡ ସୋଡ଼ାମର୍‌ଲେଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରନବୁ ପନବ୍‌ରଡନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଡାଲେ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅମ୍‌ଡାଜେଞ୍ଜି, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ।
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
ବନ୍‌ଡ ଅଙ୍ଗାମର୍‌ ଇସ୍ରାଏଲନ୍‌ଆଡଙ୍‌ ଅନୁରନ୍‌ ତିୟ୍‌ତେ, ତି ଆ ମନ୍‌ରା କେନ୍‌ଆନିନ୍‌ ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଏଆସାଲନାୟ୍‌; ବନ୍‌ଡ କେନ୍‌ଆତେଜି ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଲଙେ ମାୟ୍‌ଲେ ୟାଗି ଡିନ୍ନା ଡେଏନ୍‌ ।
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ଆରି ନିୟ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଲୋଙ୍‌ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଆଇମରଞ୍ଜି ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ସାନ୍ନିଲଲେଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ଅଣ୍ଡ୍ରଙନ୍‌ ଡୋତାନ୍‌ ମସାନ୍ନିନ୍‌ ଇୟେଞ୍ଜି,
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ଆରି ଆ ଡଅଙନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଞାଙ୍‌ଲଞ୍ଜି ଆନିଞ୍ଜି ୟର୍ରନ୍‌ ଏନ୍ନେଲେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବର୍ନେଜି, ଆନିଞ୍ଜି ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ନିୟ୍‌ ଅବ୍‌ତନାଲ୍‌ମଡେଞ୍ଜି ଆରି ତି ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, ଆନିନ୍‌ ଆମେଙ୍‌ ଡକୋ ।
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
ଆରି, ଗଡ଼ିଲେଞ୍ଜି ଲୋଙ୍‌ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ମସାନ୍ନିନ୍‌ ଆ ତୁୟାୟ୍‌ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲେ ଗିଜେଞ୍ଜି, ଆଇମରଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ବର୍ରଞ୍ଜି, ଏତ୍ତେଲେମା ଇୟ୍‌ଲେ ଗିଜେଜି, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅଃନ୍ନେଗିୟ୍‌ଲଜି ।”
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏ ଉଲ୍ଲୁଜି, ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆରପ୍ପୁଙ୍‌ବର୍‌ଲବେଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଡର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ଉଗର୍‌ବେନ୍‌ ଡିୟ୍‌ନେ ପଙ୍‌ ଆଲବିଡ୍ଡାଜି!
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଞାଙେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ବାତ୍ତେ ଗଙ୍ଗନନ୍‌ ଆସନ୍‌ ଇନି ସନାୟ୍‌ସାୟ୍‌ ତଡ୍‌ ପଙ୍‌?”
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
ଆରି ଆନିନ୍‌, ମୋସାନ୍‌ ଡ ଅଡ଼୍‌କୋ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ସିଲଡ୍‌ ଉଲନ୍‌ ଅଡ଼୍‌କୋ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆ ବର୍ନେନ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙେଞ୍ଜି ।
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
ଆରି, ଆନିଞ୍ଜି ଅଙ୍ଗା ସାଇ ଇୟେଞ୍ଜି ତି ଆ ସାଇ ଆତ୍ରୁୟାୟ୍‌ବେଡେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ଜିସୁନ୍‌ ତି ଆ ସାଇ ପଡ୍‌ଲେ ଅଡି ଆଜିର୍ତେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଏମ୍ମେଲନ୍‌ ।
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
ବନ୍‌ଡ ତି ଆ ମନ୍‌ରାଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ରଙେଞ୍ଜି, “ଇନ୍‌ଲେଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋନା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସାଲ୍ଲୁମେନ୍‌ ଆରି ଲୋଙଡ୍‌ରୟ୍‌ତେ ।” ସିଲତ୍ତେ ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋଲନେ ।
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ଆରି, ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଗାଗାନେନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଡାଲେ ଆନିନ୍‌ ରୁଟିନ୍‌ ଞମ୍‌ଲେ ଆସିର୍ବାଦଏନ୍‌, ଆରି ତିଆତେ ରେବ୍‌ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ତିୟେଞ୍ଜି ।
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
ସିଲତ୍ତେ ଆ ପୁସ୍ପାଲ୍‌ମଡଞ୍ଜି ଆତ୍ରଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍ମଡେଞ୍ଜି; ଆରି ଆନିନ୍‌ ଆତେମଡଞ୍ଜି ସିଲଡ୍‌ ମାୟାଏନ୍‌ ।
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍‌ କଡାଡ଼ିଲଞ୍ଜି, “ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ଆନିନ୍‌ ତଙର୍‌ଲୋଙନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ସରିନ୍‌ କଡାଡ଼ିଲନ୍‌ ଆରି ଇନ୍‌ଲେନ୍‌ଆଡଙ୍‌ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରନ୍‌ ଆ ବର୍ନେ ଞଙ୍‌ଞଙ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ତିଆଡିଡ୍‌ ଇନି ଉଗର୍‌ଲେନ୍‌ ଅଃତ୍ତଗୋଲୋ ପଙ୍‌?”
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
ଆରି, ଆନିଞ୍ଜି ସିଲତ୍ତେମା ଡୋଲନ୍‌ ଜିରୁସାଲମନ୍‌ ୟର୍ରଞ୍ଜି, ତେତ୍ତେ ରୁକ୍କୁଲନ୍‌ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଏଗାରଜଣଞ୍ଜି ଡ ଆ ଗଡ଼ିଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେଜି ।
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ଆନିଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ପ୍ରବୁନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଡୋଲନେ, ଆରି ସିମନନ୍‌ ଆମଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲନେ ।”
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
ଆରି, ଆନିଞ୍ଜି ନିୟ୍‌ ତଙର୍‌ଲୋଙନ୍‌ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଗନଡେଲ୍‌ ଆରି ଆନିନ୍‌ ରୁଟିନ୍‌ ଆର୍ରେବେନ୍‌ ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍ମଡେଞ୍ଜି, ତିଆତେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ବର୍ରଞ୍ଜି ।
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
ଆନିଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆବର୍ରଞ୍ଜି ଆଡିଡ୍‌, ଆନିନ୍‌ଡମ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙଞ୍ଜି ଇୟ୍‌ଲାୟ୍‌ ତନଙେ, ଆରି ଆନିନ୍‌ ବର୍ରନେ “ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍‌ ସୟୁନ୍‌ ଡକୋନେତୋ ।”
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଓଙ୍‌ଲେତିଏଞ୍ଜି ଆରି ବତଙ୍‌ଡାଲେ ଆନିଞ୍ଜି ଅବୟ୍‌ ବୁତନ୍‌ ଏଗିୟ୍‌ତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଅବ୍‌ଡିସୟେଞ୍ଜି ।
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଇନିବା ଏବାଉଲ୍ଲିତନେ, ଆରି ମନ୍ନଲୋଙ୍‌ବେନ୍‌ ଇନିବା ଏଡାଲ୍‌ଗଡ୍‌ତେ?
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
ଅସିଞେନ୍‌ ଡ ତାଲ୍‌ଜଙ୍‌ଞେନ୍‌ ଗିଜିଁୟ୍‌ବା, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସୁଙେଲେ ଗିଜିଁୟ୍‌ବା, କେନ୍‌ଆତେ ଞେନ୍‌ଡମ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜେଲୁଞେନ୍‌ ଡ ଅଜାଙ୍‌ଞେନ୍‌ ଡକୋନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଗିୟ୍‌ତିଁୟ୍‌, ବୁତନ୍‌ଆତେ ଏତ୍ତେଗୋ ତଡ୍‌ ।”
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ଆରି, ଜିସୁନ୍‌ ଏନ୍ନେଲେ ବର୍ରନ୍‌ କି, ଆମଙଞ୍ଜି ଆସିନ୍‌ ଡ ଆ ତାଲ୍‌ଜଙନ୍‌ ଅବ୍‌ତୁଜେଞ୍ଜି ।
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ଆନିଞ୍ଜି ସର୍ଡାଏଞ୍ଜି, ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ଆରି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି, ତିଆସନ୍‌ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ତେନ୍ନେ ଅମଙ୍‌ବେନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଜନୋମ୍‌ଜୋମନ୍‌ ଡକୋ ପଙ୍‌?”
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ବଗଡ୍‌ଗଡ୍‌ ଆଗାୟ୍‌ଗାୟ୍‌ ଅୟନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତିୟେଞ୍ଜି ।
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
ଆରି, ଆନିନ୍‌ ତିଆତେ ଜାଲେ, ଆତେମଡଞ୍ଜି ଜୋମେନ୍‌ ।
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
ଆରି, ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆରି କନନ୍‌ବଇଲୋଙନ୍‌ ବର୍ନେଞେନ୍‌ ଅଙ୍ଗା ଅଙ୍ଗାତେ ଆଇଡିଡନ୍‌ ଡକୋ, ତିଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଡେଡମେତୋ, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଡରକୋଲନାଞନ୍‌ ଆଡିଡ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ରବେନ୍‌ ।”
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
ତିଆଡିଡ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରନ୍‌ ଗନ୍‌ଲୁଡ୍‌ଲେ ରପ୍ତିଏଜି ତିଆସନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ବୁଡ୍ଡି ସନଙଞ୍ଜି ରୋଏନ୍‌ ।
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ଆରି, ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “କେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅନିଡଲନ୍‌ ଡକୋ, କ୍ରିସ୍ଟନ୍‌ ପରାନ୍‌ଡଣ୍ଡନ୍‌ ଡେତେ ଆରି ୟାଗି ଡିନ୍ନାଲୋଙ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ୟର୍ମେଙ୍‌ତେ,
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ଆରି ଜିରୁସାଲମନ୍‌ ସିଲଡ୍‌ ଉଲନ୍‌ ଅଡ଼୍‌କୋ ଜାତିଞ୍ଜି ଆମଙ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙନ୍‌ ଇର୍ସେନ୍‌ କେମାନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିନାବା ଗାମ୍‌ଲେ ବର୍ନେନ୍‌ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଡେତେ ।
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆସନ୍‌ ସାକିମର୍‌ଜି ।
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
ଆରି ଗିୟ୍‌ବା, ଆପେୟ୍‌ଞେନ୍‌ ଅଙ୍ଗାତେ ବାସାଲନ୍‌, ତିଆତେ ଞେନ୍‌ ଅମଙ୍‌ବାବେନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ତାୟ୍‌, ବନ୍‌ଡ ତୋଣ୍ଡୋନ୍‌ ସିଲଡ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏଞାଙେନ୍‌ ଜାୟ୍‌ କେନ୍‌ ଆ ଗଡ଼ାଲୋଙ୍‌ ଡକୋନାୟ୍‌ବା ।”
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
ତିକ୍କି ଜିସୁନ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବେତନିଆନ୍‌ ଆଜିର୍ତବନ୍‌ ଆ ତଙର୍‌ ଜାୟ୍‌ ଓରୋଙେଞ୍ଜି ଆରି ଆସିନ୍‌ ତେକ୍କେଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦଏଞ୍ଜି ।
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ଆରି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦନ୍‌ ତିୟା ତିୟା ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ଆନ୍ନାଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରୁଆଙନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଡେଏନ୍‌ ।
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଲୋମ୍‌ଲେ ଆକ୍ରାନ୍‌ ସର୍ଡାନ୍‌ ବାତ୍ତେ ଜିରୁସାଲମନ୍‌ ୟର୍ରଞ୍ଜି ।
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ଆଏଡ଼ର୍‌ ସରେବାସିଂଲୋଙନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଗଙ୍କେଲେଞ୍ଜି ।

< லூக்கா 24 >