< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ⲁ̅ϧⲉⲛ ⳿ⲫⲟⲩⲁⲓ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⳿ⲛϣⲱⲣⲡ ⳿ⲉⲙⲁϣⲱ ⲁⲩ⳿ⲓ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⳿ⲉⲁⲩ⳿ⲓⲛⲓ ⳿ⲛⲛⲓ⳿ⲥⲑⲟⲓ ⳿ⲉⲧⲁⲩⲥⲉⲃⲧⲱⲧⲟⲩ.
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
ⲃ̅ⲁⲩϫⲓⲙⲓ ⲇⲉ ⳿ⲙⲡⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉⲁⲩ⳿ⲥⲕⲉⲣⲕⲱⲣϥ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲓ⳿ⲙϩⲁⲩ.
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ⲅ̅⳿ⲉⲧⲁⲩϣⲉ ⲇⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲙⲡⲟⲩϫⲉⲙ ⳿ⲡⲥⲱⲙⲁ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ Ⲓⲏ̅ⲥ̅.
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
ⲇ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⲉⲩⲉⲣⲁⲡⲟⲣⲓⲥⲑⲉ ⲉⲑⲃⲉ ⲫⲁⲓ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲣⲱⲙⲓ ⲃ̅ ⲁⲩⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⲥⲁ⳿ⲡϣⲱⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ϧⲉⲛ ϩⲁⲛϩⲉⲃⲥⲱ ⲉⲩϩⲓⲥⲉⲧⲉⲃⲣⲏϫ ⳿ⲉⲃⲟⲗ.
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
ⲉ̅ⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ ⲟⲩⲟϩ ⲉⲩⲣⲓⲕⲓ ⳿ⲙⲡⲟⲩϩⲟ ⳿ⲉ⳿ⲡⲕⲁϩⲓ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲡⲉⲧⲟⲛϧ ⲛⲉⲙ ⲓⲣⲉϥⲙⲱⲟⲩⲧ.
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
ⲋ̅⳿ⲛ⳿ϥⲭⲏ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲁϥⲧⲱⲛϥ ⲁⲣⲓ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⲉⲧⲓ ⲉϥϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ.
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
ⲍ̅ϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϩⲱϯ ⳿ⲛⲧⲟⲩϯ ⳿ⲙ⳿ⲡϣⲏ ⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲛⲉⲛϫⲓϫ ⳿ⲛϩⲁⲛⲣⲱⲙⲓ ⳿ⲛⲣⲉϥⲉⲣⲛⲟⲃⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲉⲁϣϥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲧⲱⲛϥ ϧⲉⲛ ⲡⲓⲙⲁϩⲅ̅ ⲛ⳿ⲉϩⲟⲟⲩ.
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
ⲏ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲉⲣ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲛⲛⲉϥⲥⲁϫⲓ.
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
ⲑ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲩⲧⲁⲥⲑⲟ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⲁⲩⲧⲁⲙⲉ ⲡⲓⲓ̅ⲁ̅ ⳿ⲉⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲛⲉⲙ ⲓⲥⲱϫⲡ ⲧⲏⲣⲟⲩ.
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
ⲓ̅ⲛⲉ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲇⲉ ⲧⲉ ϯⲙⲁⲅⲇⲁⲗⲓⲛⲏ ⲛⲉⲙ ⲓⲱⲁⲛⲛⲁ ⲛⲉⲙ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⳿ⲛⲧⲉ ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲛⲉⲙ ⳿ⲡⲥⲱϫⲡ ⲉⲑⲛⲉⲙⲱⲟⲩ ⲛⲏ ⳿ⲉⲛⲁⲩϫⲱ ⳿ⲛⲛⲁⲓ ⳿ⲛⲛⲓⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ.
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
ⲓ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲟⲩⲱⲛϩ ⳿ⲛϫⲉ ⲛⲁⲓⲥⲁϫⲓ ⳿ⲙⲡⲟⲩ⳿ⲙⲑⲟ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲉⲃϣⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲧⲉⲛϩⲟⲧⲟⲩ ⲁⲛ ⲡⲉ.
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
ⲓ̅ⲃ̅ⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲁϥⲧⲱⲛϥ ⲁϥϭⲟϫⲓ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲥⲟⲙⲥ ⳿ⲉϧⲟⲩⲛ ⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲛⲓ⳿ϩⲃⲱⲥ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲟⲩ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲡⲉϥⲏⲓ ⲉϥⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲙⲫⲏⲉⲧⲁϥϣⲱⲡⲓ.
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲃ̅ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲛⲁⲩⲙⲟϣⲓ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲉⲩⲛⲁ ⳿ⲉⲟⲩϯⲙⲓ ⲉⲥⲟⲩⲏⲟⲩ ⳿ⲛ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲁⲩ ⲝ̅ ⳿ⲛ⳿ⲥⲧⲁⲇⲓⲟⲛ ⳿ⲉⲡⲉⲥⲣⲁⲛ ⲉⲙⲙⲁⲟⲩⲥ.
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
ⲓ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲛⲁⲩⲥⲁϫⲓ ⲛⲉⲙ ⲛⲟⲩⲉⲣⲏ ⲟⲩ ⲉⲑⲃⲉ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲁϥϣⲱⲡⲓ.
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ⲓ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲥϣⲱⲡⲓ ⲉⲩⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⲉⲩⲕⲱϯ ⳿ⲛⲑⲟϥ ϩⲱϥ Ⲓⲏ̅ⲥ̅ ⲁϥϧⲱⲛⲧ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲁϥⲙⲟϣⲓ ⲛⲉⲙⲱⲟⲩ.
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
ⲓ̅ⲋ̅ⲛⲁⲩ⳿ⲁⲙⲟⲛⲓ ⲇⲉ ⳿ⲛⲛⲟⲩⲃⲁⲗ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲥⲟⲩⲱⲛϥ.
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
ⲓ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲛⲁⲓⲥⲁϫⲓ ⲟⲩ ⲛⲉ ⲉⲧⲉⲧⲉⲛϫⲱ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲛⲉⲙ ⲛⲉⲧⲉⲛⲉⲣⲏⲟⲩ ⲉⲣⲉⲧⲉⲛⲙⲟϣⲓ ⲟⲩⲟϩ ⲁⲩⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⲉⲩⲟⲕⲉⲙ.
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ⲓ̅ⲏ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲕⲗⲉⲟⲡⲁⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲕ ⲉⲧϣⲟⲡ ϧⲉⲛ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲕ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲛⲏ ⲧⲁⲩϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ϧⲉⲛ ⲛⲁⲓ⳿ⲉϩⲟⲟⲩ.
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩ ⲛⲉ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⲛⲏⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ⲓⲣⲉⲙⲛⲁⲍⲁⲣⲉⲑ ⲫⲏⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲛⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲙ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⳿ⲉⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ⳿ⲡϩⲱⲃ ⲛⲉⲙ ⳿ⲡⲥⲁϫⲓ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⲛⲉⲙ ⲡⲓⲗⲁⲟⲥ ⲧⲏⲣϥ.
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
ⲕ̅ϩⲱⲥⲇⲉ ⲁⲩⲧⲏⲓϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲁⲣⲭⲱⲛ ⲉⲩϩⲁⲡ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲙⲟⲩ ⲟⲩⲟϩ ⲁⲩⲁϣϥ.
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
ⲕ̅ⲁ̅⳿ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲁⲛⲉⲣϩⲉⲗⲡⲓⲥ ϫⲉ ⲁⲓ ⲡⲉⲑⲛⲁⲥⲱϯ ⳿ⲙⲡⲓⲥ̅ⲗ̅ ⲁⲗⲗⲁ ⲛⲉⲙ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲧⲉϥⲙⲁϩⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲡⲉ ⲫⲁⲓ ⲓⲥϫⲉⲛ ⲉⲧⲁ ⲛⲁⲓ ϣⲱⲡⲓ.
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁⲗⲗⲁ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲉϩⲓ⳿ⲟⲙⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲉⲛ ⲁⲩ⳿ⲑⲣⲉⲛⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⳿ⲉⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⳿ⲛϣⲱⲣⲡ.
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ⲕ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲉ⳿ⲙⲡⲟⲩϫⲉⲙ ⲡⲉϥⲥⲱⲙⲁ ⲁⲩ⳿ⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲛⲁⲩ ⲉⲟⲩⲟⲩⲱⲛϩ ⳿ⲛⲧⲉ ϩⲁⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛⲏⲉⲧϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⳿ϥⲟⲛϧ.
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲉⲛ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⲩϫⲓⲙⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁ ⲛⲓⲕⲉϩⲓ⳿ⲟⲙⲓ ϫⲟⲥ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⳿ⲙⲡⲟⲩⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ.
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
ⲕ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲱ ⲛⲓⲁⲛⲟⲏⲧⲟⲥ ⲟⲩⲟϩ ⲉⲧⲟⲥⲕ ⲉⲛ ⲟⲩϩⲏⲧ ⳿ⲉⲛⲁϩϯ ⳿ⲉϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧⲁⲩⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
ⲕ̅ⲋ̅ⲙⲏ ⲛⲁⲥⲭⲏ ⲁⲛ ⲉⲑⲣⲉ Ⲡⲭ̅ⲥ̅ ϭⲓ ⳿ⲛⲛⲁⲓ⳿ⲙⲕⲁⲩϩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϣⲉ ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲉϥⲱⲟⲩ.
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
ⲕ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲧⲏⲣⲟⲩ ⲛⲁϥⲉⲣⲙⲏ ⲛⲉⲩⲓⲛ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩ ⲛⲉ ⲛⲏ ⲧϧⲉⲛ ⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ⲧⲏⲣⲟⲩ ⲉⲑⲃⲏⲧϥ.
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲁⲩϧⲱⲛⲧ ⳿ⲉⲡⲓϯⲙⲓ ⲉⲛⲁⲩⲛⲁϣⲉ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥⲉⲣ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲉϥⲛⲁⲟⲩⲉⲓ ⲉϥⲙⲟϣⲓ.
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
ⲕ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲩ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲟⲛⲥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟϩⲓ ⲛⲉⲙⲁⲛ ϫⲉ ⲣⲟⲩϩⲓ ⲟⲩⲟϩ ϩⲏⲇⲏ ⲁϥⲣⲓⲕⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⲉ ⲛⲧⲉϥⲟϩⲓ ⲛⲉⲙⲱⲟⲩ.
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ⲗ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⲉⲧⲁϥⲣⲱⲧⲉⲃ ⲛⲉⲙⲱⲟⲩ ⲉⲧⲁϥϭⲓ ⳿ⲙⲡⲓⲱⲓⲕ ⲁϥ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲫⲁϣϥ ⲛⲁϥϯ ⲛⲱⲟⲩ ⲡⲉ.
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
ⲗ̅ⲁ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⳿ⲁ ⲛⲟⲩⲃⲁⲗ ⲟⲩⲱⲛ ⲟⲩⲟϩ ⲁⲩⲥⲟⲩⲱⲛϥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲁϥⲉⲣⲁⲑⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗϩⲁⲣⲱⲟⲩ.
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ⲗ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ⳿ⲛⲛⲟⲩ⳿ⲉⲣⲏⲟⲩ ϫⲉ ⲙⲏ ⲛⲁⲣⲉ ⲡⲉⲛϩⲏⲧ ⲣⲟⲕϩ ⲁⲛ ⲡⲉ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲉⲛ ϩⲱⲥ ⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲁⲛ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ ⲉϥⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ⲛⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ.
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
ⲗ̅ⲅ̅ⲩⲟϩ ⲁⲩⲧⲱⲟⲩⲛⲟⲩ ϧⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩⲧⲁⲥⲑⲟ ⳿ⲉⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲟⲩⲟϩ ⲁⲩϫⲓⲙⲓ ⳿ⲙⲡⲓⲓ̅ⲁ̅ ⲉⲩⲑⲟⲩⲏⲧ ⲛⲉⲙ ⲛⲏⲉⲑⲛⲉⲙⲱⲟⲩ.
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ⲗ̅ⲇ̅ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲛⲧⲱⲥ ⲁϥⲧⲱⲛϥ ⳿ⲛϫⲉ Ⲡ⳪ ⲟⲩⲟϩ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲥⲓⲙⲱⲛ.
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲛⲁⲩⲥⲁϫⲓ ⳿ⲛⲛⲏⲉⲧϧⲉⲛ ⲡⲓⲙⲱⲓⲧ ⲛⲉⲙ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲧⲁϥⲟⲩⲱⲛϩ ⳿ⲉ⳿ⲣⲱⲟⲩ ϧⲉⲛ ⲡⲓⲫⲱϣ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲱⲓⲕ.
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
ⲗ̅ⲋ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲉⲩⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲛⲑⲟϥ Ⲓⲏ̅ⲥ̅ ⲁϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ϧⲉⲛ ⲧⲟⲩⲙⲏϯ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϯϩⲓⲣⲏⲛⲏ ⲛⲱⲧⲉⲛ.
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
ⲗ̅ⲍ̅ⲉⲧⲁⲩ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⲇⲉ ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ ⲛⲁⲩⲙⲉⲩⲓ ϫⲉ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲡⲉ ⲉⲧⲟⲩⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ.
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
ⲗ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲉⲑⲃⲉⲟⲩ ⲧⲉⲧⲉⲛ⳿ϣⲧⲉⲣⲑⲱⲣ ⲟⲩⲟϩ ⲉⲑⲃⲉⲟⲩ ⲥⲉⲛⲏⲟⲩ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲙⲉⲩⲓ ⳿ⲉϫⲉⲛ ⲛⲉⲧⲉⲛϩⲏⲧ.
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
ⲗ̅ⲑ̅⳿ⲁⲛⲁⲩ ⲉⲛⲁϫⲓϫ ⲛⲉⲙ ⲛⲁϭⲁⲗⲁⲩϫ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ϫⲟⲙϫⲉⲙ ⳿ⲉⲣⲟⲓ ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲁⲩ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲡ͞ⲛⲁ̅ ⳿ⲉⲟⲩⲟⲛⲧⲉϥ ⲥⲁⲣⲝ ϩⲓ ⲕⲁⲥ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲩ ⲉⲣⲟⲓ ⳿ⲉⲟⲩⲟⲛ ⳿ⲙⲙⲟⲓ.
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ⲙ̅ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲉⲧⲁϥϫⲟϥ ⲁϥⲧⲁⲙⲱⲟⲩ ⳿ⲉⲛⲉϥϫⲓϫ ⲛⲉⲙ ⲛⲉϥϭⲁⲗⲁⲩϫ.
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ⲙ̅ⲁ̅ⲉⲧⲓ ⲇⲉ ⲉⲩⲟⲓ ⳿ⲛⲁⲑⲛⲁϩϯ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲣⲁϣⲓ ⲟⲩⲟϩ ⲉⲩⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩⲟⲛⲧⲉⲧⲉⲛ ⳿ⲛⲭⲁⲓ ⳿ⲛⲟⲩⲱⲙ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ.
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
ⲙ̅ⲃ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲁⲩϯ ⲛⲁϥ ⳿ⲛⲟⲩⲙⲉⲣⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲩⲧⲉⲃⲧ ⲉϥϫⲉϥϫⲱϥ ⲛⲉⲙ ⲟⲩⲙⲟⲩⲗϩ ⳿ⲛ⳿ⲉⲃⲓⲱ.
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
ⲙ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥϭⲓ ⳿ⲙⲡⲟⲩ⳿ⲙⲑⲟ ⲁϥⲟⲩⲱⲙ.
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
ⲙ̅ⲇ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲛⲁⲓ ⲛⲉ ⲁⲥⲁϫⲓ ⲉⲧⲁⲓϫⲟⲧⲟⲩ ⲛⲱⲧⲉⲛ ⲉⲧⲓ ⲉⲓⲭⲏ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ϫⲉ ϩⲱϯ ⳿ⲛⲧⲟⲩϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⳿ⲫⲛⲟⲙⲟⲥ ⳿ⲙⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉⲙ ⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲯⲁⲗⲙⲟⲥ ⲉⲑⲃⲏⲧ.
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
ⲙ̅ⲉ̅ⲧⲟⲧⲉ ⲁϥⲟⲩⲱⲛ ⳿ⲙⲡⲟⲩϩⲏⲧ ⲉⲑⲣⲟⲩⲕⲁϯ ⳿ⲉⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ.
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ⲙ̅ⲋ̅ϫⲉ ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲉⲑⲣⲉ Ⲡⲭ̅ⲥ̅ ϣⲉⲡ⳿ⲙⲕⲁϩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲧⲱⲛϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲏⲉⲑⲙⲱⲟⲩⲧ ϧⲉⲛ ⲡⲓⲙⲁϩⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ.
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ⲙ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲛⲧⲟⲩϩⲓⲱⲓϣ ⳿ⲛⲟⲩⲙⲉⲧⲁⲛⲟⲓ⳿ⲁ ϧⲉⲛ ⲡⲉϥⲣⲁⲛ ⳿ⲉ⳿ⲡⲭⲁ ⲛⲟⲃⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲉⲑⲛⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲉⲁⲧⲉⲧⲉⲛⲉⲣϩⲏⲧⲥ ⲓⲥϫⲉⲛ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅.
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
ⲙ̅ⲏ̅⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲧⲉⲣⲙⲉⲑⲣⲉ ϧⲁ ⲛⲁⲓ.
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
ⲙ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲟⲕ ϯⲛⲁⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲡⲓⲱϣ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲓⲱⲧ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ϩⲉⲙⲥⲓ ϧⲉⲛ ϯⲃⲁⲕⲓ ϣⲁⲧⲉⲧⲉⲛϭⲓ ⲛⲟⲩϫⲟⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡϭⲓⲥⲓ.
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
ⲛ̅ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲉⲛⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϣⲁ ⲃⲏⲑⲁⲛⲓ⳿ⲁ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥϥⲁⲓ ⳿ⲛⲛⲉϥϫⲓϫ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⲁϥ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ.
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ⲛ̅ⲁ̅ⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⳿ⲡϫⲓⲛⲧⲉϥ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲁϥⲟⲩⲱϯ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲱⲗⲓ ⳿ⲙⲙⲟϥ ⲡⲉ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ.
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ⲛ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲧⲁⲩⲟⲩⲱϣⲧ ⳿ⲙⲙⲟϥ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⳿ⲉ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲛⲉⲙ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲣⲁϣⲓ.
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ⲛ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲭⲏ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲉⲩ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲫϯ

< லூக்கா 24 >