< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
पर हब्ते दे पेहले रोजे सै बड़ी ब्यागा ही उना सुगंधित चिजां जो जड़ियां उना तैयार कितियां थियां, लेईकरी कबरां पर आईयां।
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
कने उना दिखया की कबरा दे दरबाजे ला पथर पेहले ला ही हटया होया है,
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
कने सै अंदर गियां कने दिखया पर यीशुऐ दी लाश ओथु नी थी।
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
जालू सै इसा गल्ला ने हेरान थियां तां दिखा, दो माणु चिट्टे चमकीले कपड़े पायो उना बखे खड़ोतयो थे।
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
जालू सै डरी गियां, कने उना मु धरतिया पासे हेठ करी दिते; तां उना स्वर्गदूतां जनानिया ने बोलया, “तुसां जिन्दया जो मरयां चे कजो तोपदे न?”
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
“सै ऐथू नी है, पर जिन्दा होई गिया है। याद कर उनी गलील प्रदेशे च रेंदे बेले तुसां ने बोलया था,
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
की जरूरी हे, की मैं, माणुऐ दा पुत्र पापियां दे हथे पकड़या जा, कने सूली पर चड़ाया जाऐ, कने तिजे दिने मरयां चे जिन्दा होई जाऐ।”
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
तालू यीशुऐ दियां गल्लां उना जो याद आईयां।
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
कने कबरा ला बापस आई करी उना गयारां चेलयां जो, कने बाकियां सबना जो, ऐ सारियां गल्लां सुणाई दीतियां।
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
जिना प्रेरितां ऐ गल्लां बोलियां, सै मरियम मगदलीनी कने योअन्ना कने याकूबे दी मां मरियम कने उना सोगी दियां सारियां जनानिया भी थियां।
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
पर उना दियां गल्लां उना जो कहाणियां सांई लगियां, कने चेलयां उना दा भरोसा नी किता।
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
तालू पतरस उठी करी दोड़ी करी यीशुऐ दिया कबरा पर गिया, कने निठे होईकरी अंदर दिखया ओथु उनी सिर्फ बस कपड़े पियो दिखे, कने जड़ा होया उसला हेरान होईकरी बापस घरे चली गिया।
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
उसी रोजे यीशु दे दो चेले इम्माऊस नाऐ दे इक ग्रांऐ जो चलयो थे, जड़ा यरूशलेम शेहरे ला कोई गयारा किलो मीटर दूर था।
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
कने सै इना सारियां गल्लां पर अपु चे गल्ल बात करा दे थे, जड़ियां होईयां थियां।
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
कने सै जालू अपु चे गल्ल बात कने पूछताछ करा दे थे, तां यीशु अपु आई करी उना सोगी चलणा लग्गा।
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
पर परमेश्वरे उना जो यीशुऐ जो पछेणने ला रोकी रखया था, ताकि सै उसयो पछेणी नी सकन।
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
तालू यीशुऐ उना ने पुछया, “ऐ क्या गल्लां न, जड़ियां तुसां चलदे-चलदे अपु चे करा दे न?” सै रुकी गे कने उना दे मु बड़े उदास लग्गा दे थे।
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ऐ सुणीकरी, उना चे क्लियुपास नाऐ दे इकी माणुऐ बोलया, “शायद तू यरूशलेम च किल्ला ही परदेसी है; की जिसयो पता नी है की, पिछले इना रोजां च ऐथू क्या-क्या होया है?”
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
यीशु उना ला पुछया, “क्या-क्या होया है?” उना उसला बोलया, नासरत ग्रां दे यीशु दे बारे च जड़ा असल च परमेश्वरे कने सारे लोंका दे बखे कम्म कने बचन च सामर्थी परमेश्वरे दा संदेश देणेबाला था।
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
बड्डे याजकां कने साड़े सरदारां उसयो पकड़ाई दिता, की उसयो मारणे दा हुकम दिता; कने उसयो सूली पर चढ़ाई दिता।
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
पर सांझो आस थी, की इनी ही इस्राएले देश दे लोकां जो रोम देश ला छुटकारा देणा, कने इना सारियां गल्लां दे सिवा इसा गल्लां जो अज तिजा दिन होई गिया।
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
कने हुण केई जनानिया सांझो हेरानिया च पाई दिता है, जड़ियां अज ब्यागा कबरा पर गियां थियां।
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
कने जालू उना जो उदी लाश नी मिल्ली, तां ऐ बोलदियां आईयां, की असां जो स्वर्गदूतां दे दर्शण होऐ, उना बोलया की यीशु जिन्दा है।
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
“तालू साड़े साथियां चे केई कबरा पर गे कने जियां उना जनानिया बोलया था, तियां ही ओथु था; पर यीशुऐ जो उना नी दिखया।”
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
तालू यीशुऐ उना दोनो चेलयां ने बोलया, “हे मूर्खों, जड़ा कुछ परमेश्वरे दा संदेश देणेबालयां दिया कताबां च लिखया है तुसां लोकां जो इना सारियां गल्लां पर भरोसा करणा बड़ा कठिन लगदा है।”
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
“ऐ जरूरी था, की मसीह ऐ सारे दुख झेले कने फिरी करी अपणिया महिमा च प्रवेश करे।”
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
तालू यीशुऐ उना जो पुरे पबित्र शास्त्रां चे, उनी मूसा ला शुरू करिके सारे परमेश्वरे दा संदेश देणेबालयां जितणियां गल्लां उदे बारे च बोलियां दियां, सै उना जो समजाइयां।
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
इतणे चे सै उस ग्रांऐ बखे पुज्जे, जिथू सै चलयो थे, कने यीशुऐ दे व्यवहारे जो दिखीकरी ऐसा लग्गा था, की सै चेलयां ला अग्गे बदणा चांदा है।
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
पर उना ऐ बोली करी उसयो रोकया, “साड़े सोगी रे; क्योंकि संज होई चलियो है, कने दिन बड़ा डली गिया है।” तालू सै उना सोगी रेहणे तांई अंदर गिया।
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
जालू यीशु उना सोगी रोटी खाणां बैठा, तां उनी रोटी लेईकरी धन्यबाद किता, उसा जो तोड़ी करी उना जो देणा लग्गा।
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
तालू उना दियां हखी खुली गियां; कने उना उसयो पछेणी लिया, कने सै उना दी हखी अग्गे ला गायब होई गिया।
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
उना अपु चे बोलया, “जालू सै रस्ते च सांझो ने गल्लां करा दा था, कने सांझो पबित्र शास्त्रां दा मतलब समझा दा था, तां क्या साड़े मना च उतेजना नी जागी?”
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
सै उसी बेले उठी करी यरूशलेम शेहरे जो बापस चली गे, कने उना गयारां चेलयां कने उदे साथियां जो गिठे दिखया।
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
जड़े गिठे होयो थे सै ऐ बोला दे थे, “प्रभु सची जिन्दा होई गिया है, कने शमौने जो मिलया है।”
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
तालू उना रस्ते दियां गल्लां उना जो दसियां कने ऐ भी बोलया की जालू सै रोटी तोड़ा दा था तां उना उसयो पछेणी लिया की सै यीशु है।
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
सै ऐ गल्लां करा दे ही थे, की यीशु अपु ही उना बिच प्रकट हुआ; कने उना ने बोलया, “तुहांजो शांति मिल्ले।”
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
पर सै घबराई गे, कने डरी गे, कने सोचणा लग्गे की असां भूते जो दिखा दे न।
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
यीशुऐ उना ने बोलया, कजो घबरा दे न? कने तुहाड़े मने च कजो शक होंदा है?
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
“मेरे हथ कने पैरां जो दिखा, की मैं सै ही है, मिंजो छुई करी दिखा; क्योंकि भुत दी हड्डी कने मास नी होंदा है जियां मिंजो च दिखदे न।”
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ऐ बोली करी उनी उना जो अपणे हथ पैर दस्से।
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
जालू खुशिया दे मारे उना जो भरोसा नी होया की यीशु जिन्दा है, कने हेरान होआ दे थे, तां यीशुऐ उना ला पुछया, “क्या ऐथू तुहाड़े बाल कुछ खाणे जो है?”
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
उना उसयो भुनियो मछिया दा टुकड़ा दिता।
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
यीशुऐ सै मछिया दा टुकड़ा लेईकरी उना दे सामणे खादा।
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
फिरी यीशुऐ उना ने बोलया, “ऐ मेरियां सै गल्लां न, जड़ियां मैं तुहाड़े सोगी रेईकरी तुहांजो ने बोलियां थियां, की जरूरी हे, की जितणियां गल्लां मूसा दिया व्यवस्था कने परमेश्वरे दा संदेश देणेबालयां कने भजना दियां कताबां च मेरे बारे च लिखिंयां न, सै सारियां सच्च साबित होन।”
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
तालू यीशुऐ उना जो पबित्र शास्त्र समझणे तांई मदद किती।
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
कने उना ने बोलया, की पबित्र शास्त्रां च ऐसा लिखया है की मसीह जो दुख झेलणे न, कने तिजे दिने मरयां चे जिन्दा होई जाणा है,
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
कने यरूशलेम शेहरे ला लेईकरी सारियां जातियां दे पापां दी माफी तांई शुभसमाचार दा प्रचार उदे नाऐ ने होणा है।
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
“तुसां इना सारियां गल्लां दे गबाह न।
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
कने मैं अपु तुहांजो पर पबित्र आत्मा जो भेजणा है, जिसदा बायदा मेरे पिता कितया है। तालू दीकर शेहरे च इतंजार करणा होणा जालू दीकर तुहांजो स्वर्गे ला सामर्थ्य नी मिलदी।”
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
तालू सै उना जो बैतनिय्याह ग्रांऐ दीकर शेहर ला बाहर लेई गिया, कने उना जो हथ चुकी करी आशीष दिती;
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
कने उना आशीष दिन्दे ही उना ला लग होई गिया कने स्वर्गे जो चली गिया।
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
कने सै उसयो दण्डवत करिके बड़िया खुशिया ने यरूशलेम शेहरे जो बापस चली गे।
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
कने सै लगातार मंदरे च जाई करी परमेश्वरे दी स्तुति करदे थे।

< லூக்கா 24 >