< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
हफतेरी पेइले दिहैड़ी झ़ेझां किछ कुआन्शां खुशबूदार चीज़ां नेइतां जेई, ज़ैना तैनेईं तियार कियोरी थी ते एन्तां कब्री कां पुज़ी।
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
पन तैनेईं तै घोड़ कब्री करां बिछ़ड़ोरो लाव।
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ज़ैखन तैना अन्तर जेई त तैन यीशुएरी लाश न मैल्ली।
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
तैखन तैना एन हेरतां परेशान भोइ त दूई मैन्हु ज़ैन छ़ित्तां लिगड़ां लेग्गोरां थियां, तैन कुआन्शन कां एइतां खेड़ोए।
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
तैना कुआन्शां डेरि जेई ते तैना ज़मीनरे पासे तकने लग्गी। तैन मैनेईं तैन जो ज़ोवं, “तुस ज़ींते, मुड़दन मां किजो लोरिथ तोपने।
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
तै इड़ी नईं बल्के ज़ींतो भोरोए तुसन याद नईं कि ज़ेइस तै गलीले मां थियो, त तैनी तुसन ज़ोरू थियूं कि,
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
मैनेरू मट्ठू यानी अवं पापी लोकां केरे हथ्थे देनोए ते क्रूसे पुड़ च़ाढ़नोईं ते फिरी ट्लेइ दिहाड़ां बाद फिरी ज़ींतो भोनोईं।”
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
तैखन तैना यीशुएरी गल्लां याद एई।
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
तैखन तैना कब्री करां च़ेलि जेई, त तैनेईं यीशुएरे 11 चेलन ते बाकी होरि चेलन भी एस गल्लरो पतो दित्तो।
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
ज़ैनेईं प्रेरितन सेइं गल्लां की, मरियम मगदलीनी योअन्ना ते याकूबेरी अम्मा मरियम ते तैस सेइं साथी होरि भी काई कुआन्शां थी।
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
पन तैन, तैन केरि गल्लां कहानी लग्गी, ते तैनेईं तैन केरू याकीन न कियूं।
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
पन पतरस उठो ते तै कब्रेरे पासे दौवड़तो तैस ठैरी कां जेव, ते तैड़ी तैनी लिकतां अन्तर तक्कू ते सिर्फ कफन तैड़ी लाव, ते एस गल्ली पुड़ हैरान भोइतां तैट्ठां च़लो जेव।
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
फिरी एरू भोवं कि तैन मरां दूई चेले तैस दिहैड़ी एक्की ड्लोंव्वेरे पासे च़लोरे थिये, तैस ड्लोंव्वेरू नवं इम्माऊस थियूं। तैन यरूशलेम नगरेरां 11 किलोमीटर दूर थियूं।
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
तैना एप्पू मांमेइं एस्से बारे मां गल्लां केरते च़लोरे थिये ज़ै बितना बीतोरी थी।
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ज़ैखन तैना गल्लन मां मसत थिये, ते एप्पू मांमेइं गलबात लोरे थिये केरने त यीशु एप्पू तैन कां नेड़े एइतां तैन सेइं साथी-साथी च़लने लगो।
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
पन तैनेईं यीशु न पिशानो किजोकि परमेशरे तैना पिशान्ने करां रोकोरे थिये।
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
यीशुए तैन जो ज़ोवं, “तुस लोक एप्पू मांमेइं कुन गल्लां केरने लोरेथ?” तैना रुकी जे, ते तैन केरू तुतर उदास लेइहोने लग्गू।
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
तैखन तै ज़ेसेरू नवं क्लियुपास थियूं, तैस सेइं ज़ोने लगो, “यरूशलेम नगरे मां सिर्फ तू अक मैन्हु आस ज़ैस पतो नईं कि, आखरी दिहाड़न मां कुन-कुन भोने लोरूए।”
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
यीशुए ज़ोवं, “कुन लोरूए भोने?” तैनेईं तैस सेइं ज़ोवं, “नासरत नगरेरो यीशु, ज़ै नबी थियो, तै परमेशरेरे ते मैन्हु केरे सामने कम्मन मां ते शिक्षा देने मां बेड़ि शेक्ति बालो थियो।
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
तै प्रधान याजकेईं ते हाकिमेईं केन्च़रे सेइं रोमी गवर्नरे हवाले कियो ते तैस जो कतलेरे हुक्म देइतां तै क्रूस पुड़ च़ाढ़ो।
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
पन असन त उमीद थी कि ए मैनूए, ज़ै इस्राएली लोकन रोमेरे राज़्ज़े करां आज़ाद केरेलो, एन गल्लन अज़ ट्लेइयोवं दिहाड़ीए।
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
हुन्ना असन मरां किछ कुआन्शां अज़ झ़ेझां कब्री कां जोरी थी, तैन केरे ज़ोने सेइं असां हैरान भोए।
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ज़ैखन तैन लाश न मैल्ली त तैना एन ज़ोंती एई, असेईं स्वर्गदूत लाए ते तैनेईं ज़ोवं, कि यीशु ज़ींतो भोरोए।
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
तैखन किछ इश्शे साथी भी कब्री कां जे, ते ज़ेन्च़रे कुआन्शेईं ज़ोरू थियूं, तेरहु लाव पन यीशु न लाव।”
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
यीशु तैन दूई चेलन सेइं ज़ोवं, “हे बेअक्ल लोकव! तुश्शे लेइ पवित्रशास्त्र मां नेबी केरि ज़ोरी गल्लन पुड़ भी विश्वास केरनो केत्रो मुशकले।
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
कुन मसीहेरे लेइ ज़रूरी न थियूं, कि दुःख झ़ल्ल्ले ते फिरी अपनि महिमा मां दाखल भोए?”
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
यीशु अपने बारे मां तैना सैरी गल्लां समझ़ेइ, ज़ैना पवित्रशास्त्रे मां मूसा करां देंते सारे नेबेईं ज़ोरिन।
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
एत्रे मां तैना तैस ड्लव्वें नेड़े पुज़े ज़ैड़ी तैनेईं गानू थियूं, तैनेईं बुझ़ू कि यीशु अग्रोवं गानूए।
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
पन तैनेईं एन ज़ोइतां मजबूर कियो, “कि असन कां बिश किजोकि दिहाड़ी डुबोरीए आंधरू भोने बालूए।” बस्सा तै बिशनेरे लेइ तैन सेइं साथी अन्तर च़लो जेव।
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ज़ैखन तै तैन सेइं साथी रोट्टी खांने बिश्शो त तैनी रोट्टी ट्लाती ते बरकत देइतां ट्लोड़ी ते तैन देने लगो।
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
तैखन तैन केरि एछ़्छ़ी खुल्ली ते तैनेईं तै पिशानो, पन तै तैन करां आलोप भोइ जेव।
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
तैना एप्पू मांमेइं ज़ोने लगे, “ज़ैखन तै बत्तां असन सेइं साथी गल्लां लोरो थियो केरने, ते असन पवित्रशास्त्रेरो मतलब मसमझ़ातो थियो, त असन केरी उमीद भोरी थी।”
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
तैना तैखने तैट्ठां उठे ते यरूशलेम नगरे मां आए ज़ैड़ी तैना यारहे चेले ते होरे तैन केरे साथी एक्की ठैरी मैल्ले।
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
तैना ज़ोने लोरे थिये, “कि प्रभु सच़्च़े ज़ींतो भोरोए ते शमौन पतरसे लाहोरोए।”
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
तैनेईं बत्तरी सैरी गल्लां शुनेई ते फिरी केन्च़रे असेईं यीशु रोट्टी ट्लोड़ते बार पिशानो।
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
तैना गल्लां केरने लोरे थिये त यीशु तैन केरे मझ़ाटे खड़ो भोइतां ज़ोने लगो, “तुसन शान्ति मैल्ले।”
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
पन तैना एत्रे डेरि जे, कि तैना समझ़ने लगे कि असां आत्मा लहने लोरेम।
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
यीशुए तैन सेइं ज़ोवं, “तुस किजो डर्रेथ ते तुश्शे मने मां शक किजो भोतीए।
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
मेरे हथ पाव हेरा अवं तैए आईं, मीं हथ लेइतां हेरा, किजोकि आत्माई हड्डी त कने मास न भोए ज़ेरू तुस मीं मां लातथ।”
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
एन ज़ोंनेरे पत्ती तैनी अपने हथ पाव हिराए।
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
पन खुशी सेइं तैन याकीन न भोवं, कि यीशु ज़ींतोए, ते तैना हैरान भोए, यीशुए तैन सेइं ज़ोवं, “तुसन कां खाने जो किछ आए?”
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
तैनेईं तैस ट्लाड़ोरी मेछ़लरो अक टुकड़ो दित्तो।
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
तैनी ट्लाती ते तैन केरे सामने खाइ।
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
तैनी तैन सेइं ज़ोवं, “ज़ैखन अवं तुसन सेइं साथी थियो, त मीं तुसन एना गल्लां ज़ोरी थी, कि मूसेरे कानूने मां ते नेबी केरि किताबन मां ते भजना केरि किताबी मां मेरे बारे मां ज़ैन किछ लिखोरूए तैन पूरू भोनू ज़रूरीए।”
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
तैखन तैनी तैन केरि मद्दत की, ताके पवित्रशास्त्रे सेमझ़ी सखन।
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ते तैन सेइं ज़ोवं, “एन पवित्रशास्त्र मां लिखोरूए कि मसीह दुःख झ़ैल्लेलो ते ट्लेइयोवं दिहाड़े मुड़दन मरां ज़ींतो भोलो।
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ते तैसेरे नंव्वे सेइं यरूशलेम नगरेरां शुरू केरतां सैरी कौमन मां पापन करां मनफिरानेरे मैफारो प्रचार कियो गालो।
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
किजोकि तुस एना सैरी गल्लां केरे गवाहथ।
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
हेरा, अवं एप्पू तुसन पवित्र आत्मा देइलो, ज़ेसेरो वादो बाजी परमेशरे कियोरोए। पन ज़ां तगर स्वर्गेरां शक्ति न मैल्ले तांतगर इस नगर मां राथ।”
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
फिरी यीशुए तैना नगरेरे बेइर बैतनिय्याह ड्लोंव्वेरे नेड़े ने। ते अपनो हथ खड़ो केरतां तैन बरकत दित्ती।
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ज़ैखन तै तैन बरकत देने लोरो थियो, त तैन करां अलग भोइ जेव ते परमेशरे तै स्वर्गे जो नीयो।
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
चेलेईं तैसेरी आराधना की ते फिरी खुशी सेइं यरूशलेम नगरे जो वापस च़ले जे।
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ते तैना हर वक्त मन्दरे मां एइतां परमेशरेरी तारीफ़ केरते थिये।

< லூக்கா 24 >