< லூக்கா 20 >

1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,
Ăn una zuvă kănd Isusu ănvăca ăn dvorištja alu Hramuluj š rubja alu lumjej Bună vorbă d Dimizov avinjit upruapje la jel glavni popurlje š učitelji d zakonu alu Mojsije š vođilje.
2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
Š jej la antribat: “Zi nuavă, dundjec pravo s fač aštja stvarurj? Činje ca dat vlast d asta?”
3 அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
A Isusu lja zăs alor: “Š jo osă ăntrijeb p voj. Zăčec mije
4 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
činje adat vlast alu Ivan karje bătjază s rubjaskă š s fakă aja ča fukut, Dimizov ili lumja?”
5 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
Jej raspravlja ăntră jej če s zăkă alu Isusuluj. Jej azăs: “Akă zăčem: ‘Dimizov’, osă nji ăntrjabă: ‘Dăče atunča nu ja krizut?’
6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
A akă zăčem: ‘Lumja’, tuată lumja osă arunče buluvanji š osă nji muară daja če je uvjeric k je Ivan proroku.”
7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
Atunča jej zăče alu Isusuluj k jej nu štije činje adat vlast alu Ivan.
8 அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
A Isusu lja zăs: “Kum voj mije nu zăčec činje alu Ivan adat vlast, š jo nu zăk vuavă činje mije adat vlast!”
9 இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
Atunča Isusu lji spunje asta vorbă alu lumjej: “Njeki om asadit vinograd š adat ăn zajam alu omuluj karje lukrjază ku vinogradu. Atunča omula apljikat š na vinjit mult lunj.
10 அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
Kănd avinjit vrijamja d strugurj s lja dună, atrimjes gazda alu vinograduluj p argatu aluj s ja talu aluj d berbă. Ali lumja karje lukrjază ăn vinograd je la butut p argatu š la trimjes ăndrăt ku mănilje gualje.
11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
Atrimjes omu p altu argat, ali š p jel la butut š la dat d rušunje š la trimjes ăndrăt ku mănilje gualje.
12 அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
Gazda alu vinograduluj atrimjes aldă trje argat, ali jej p jel la ranit š la putirit.
13 “அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
Atunča gazda alu vinograduluj zăče: ‘Če s fakă? Osă trimjet p bijatu mjov karje jo vrjauv. Vjerovatno p jel osă l poštujaskă.’
14 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
Ali kănd lumja dăn vinograd avizut p bijatu, sa dogovorit š azăs: ‘Ăsta osă nasljedjaskă imanja. L umurăm š atunča imanja osă fije nostru!’
15 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?
La putirit dăn vinograd š la umurăt. Če găndic k osă fakă gazda alu vinograduluj kănd osă audă ča fost?
16 அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
Osă vije š osă umuară p lumja dăn vinograd, a vinogradu osă dja ăn najam alu alcilor.” Lumja karje punje urjajke la Isusu, ja zăs: “Nikad nu fičem nješto aša rov!”
17 அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன? “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’
Atunča Isusu binje s ujtă p jej š zăče: “A če značaštje atunča aja čije skrisă ăn Svăntă pismă: ‘Buluvan karje graditelji arunkat postanit glavni buluvan alu zgradej’?
18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
Toc karje kadje p buluvanula osă sparđje kašă găvanu d glină, š akă kadje ăla buluvanu p njeko osă fije măčinat.”
19 மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
Učitelji d zakonu alu Mojsije š glavni popurlje avrut odma s la puče p Isusu d aja k jej binje aštijut k Isusu rubjaštje aja vorbă d jej. Ali na fukut aja k lji irja frikă k lumja osă okrunjaskă păntruv jej.
20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள்.
Učitelji d zakon alu Mojsije š glavni popurlje la sljedit p Isusu š atrimjes dăpă jel špijunurj karje sa fukut k je iskreni. Avrut s apuče p Isusu k azăs nješto rov kum s l predajaskă alu upravitelj alu rimuluj ăn asta regija kum aputja s kaznjaskă p Isusu.
21 எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம்.
Špijunurlje azăs alu Isusuluj, “Učiteljulje, štijem k rubješt š ănvăc istină š k nu ješt naklon alu unu om maj mult d altu, već ispravno ănvăc p lumja s trijaskă aša kum Dimizov vrja s jej trijaskă.
22 ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
Spunje nuavă dali je dopustit s platim porezu alu caru alu Rimuluj ili nuje.”
23 இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,
Ali Isusu avizut k pokuša s l puče ăn zamkă š lja zăs:
24 “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
“Rătăcăm kovanica d arđint ku karje s platjaštje porezu. Alu činje je slikaja š alu činje lumje p ja?” Jej aodgovorit: “Alu caruluj.”
25 இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
Isusu lji zăča: “Atunča dăc alu caru čije alu caruluj, ali alu Dimizov dăc čije alu Dimizovuluj.”
26 மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
Daja na putut p Isusu pănglă toc s l optužaskă k azăs nješto če nuje binje, već atikut š sa mirat la vorbaja.
27 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
Atunča avinjit la Isusu njeki saduceji. Saduceji nu kridja k lumja s skuală dăla morc, daja jej azăs alu Isusu:
28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
“Učiteljulje, Mojsije askris ăn zakonu alu nostru k akă njeki om amurit š alăsat dăpă jel mujarja ali na vut kupi, fratilje aluj mora s ănsuarje p mujarja alu fratusov kum ja aputja s fakă bijat. Ăla bijat osă fije nasljedniku alu pămăntuluj alu omula karje amurit š s adukă lumje aluj.
29 ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
Udată afost šaptje frac. Prvi fratje sa ănsurat š amurit frzdă kupi.
30 இரண்டாவது சகோதரனும்,
Atunča altu fratje sa ănsurat ku mujarja alu fratusov karje amurit, ali š jel amurit.
31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள்.
Isto aša aldă trje fratje sa ănsurat š amurit. Š toc fracă karje arămas sa ănsurat ku ja š toc d šaptje frac amurit frzdă kupi.
32 கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
Maj ănklo amurit š mujarja.
33 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
Akă una zuvă toc morcă osă skualje, alu činje ja osă fije mujarja ăn zuvaja kănd irja mărtată dăpă toc šaptje frac?”
34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn g165)
Isusu lja zăs: “Lumja p pămăntusta s suară š s mărită. (aiōn g165)
35 ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn g165)
Ali lumja karje s skuală dăla morc trijaštje p pămăntu alu nov. Š p ălja karje Dimizov smatraštje k je dostojni s trijaskă p pămăntula, nusă ănsuară nič s miritje. (aiōn g165)
36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.
Osă fije kašă anđeli daja če nikad nusă muară. Jej jaštje kupi alu Dimizov daja če Dimizov lja tors dăla morc.
37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.
Ali akuma, dal morcă osă skualje dăla muartje? Čak š Mojsije apokazăt k morcă osă skualje. Mojsije aja apokazăt ăn odlomaku d grmu karje ardje undje Mojsije azăs k Domnu jaštje ‘Dimizov alu Abraham š alu Izak š alu Jakov.’ A jej amurit mult aj majdată Mojsije azăs aja.
38 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
A Dimizov nuje Dimizov alu ălja karje rămănje morc, već Dimizov alu lumje karje vije! Dimizov p tuată lumja smatrjaštje k jej vij.”
39 மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.
Atunča azăs njeki učitelji d zakonu alu Mojsije: “Učiteljulje, binje ajzăs!”
40 அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
Dăpă aja nu sa osudit s ăntrijabă p Isusu aša pitanja.
41 இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
Atunča Isusu lja tribat p lumja: “Dăče učitelji zăče k je Kristu bijatu alu Caru David?
42 சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
K David săngur zăče ăn knjigă alu Psalam undje askris: ‘Domnu azăs alu Domnuluj alu mjov: Šăz p dirjaptă amja, s vladješt ku minje
43 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.”’
pănd nu puj p dušmanji alji tej kašă klupa dusu pičuarje alji tijalje.’
44 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
Jasno je k David p Mesija akimat ‘Domnu alu mjov’. Kum atunča Mesija puatje s fije samo potomaku alu David?”
45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம்,
Pănd narodu apus urjajke, Isusu azăs alu učenikurlje aluj:
46 “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
“Păzăcăvă d učitelji d zakonu alu Mojsije! Jej vrja s umblje okolo ku aljinilje alji marj š lumja s lji pozdravjaskă ku marje poštujală p ulic. Jej vrja s šagă p počasne lokurj ăn sinagogje š la nutje.
47 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
P prjevară ja imanja alu udovicilor, a s ruagă mult s puată lumja s lji vjadă. Jej osă fije kaznic maj rov d alcă lumje.”

< லூக்கா 20 >