< லூக்கா 17 >

1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
फिरी तैनी अपने चेलन सेइं ज़ोवं, “एन न भोइसखे कि लोकन ठोकर न लग्गे, पन अफ़सोस तैस मैन्हु पुड़ ज़ै होरि केरे लेइ ठोकर बनते।
2 இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும்.
तैसेरेलेइ त एन्ने रोड़ू थियूं, कि ढ्लाटेरो ढ्लेइटोल तैसेरे गल्ले उन्ढो छ़ेडतां ते समुन्द्रे मां शैरतां छ़ड्डो गाथो, ताके तै होरि जो ज़ैना विश्वासे मां कमज़ोरन ठोकर न बने।
3 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு.
बस्सा हुशार राथ तुस कुन केरतथ, अगर तुश्शो विश्वासी ढ्ला पाप केरते त तैस समझ़ाथ ते अगर तै पापन करां मन फिराए त तैस माफ़ केरा।
4 அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
अगर तै एक्की दिहैड़ी मां तेरो सत्ते बार तेरो पाप केरे त अगर तै सत्ते फेरेईं तीं कां एइतां माफ़ी मग्गे त तू सत्ते फेरेईं तैस माफ़ केरां।”
5 அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
प्रेरितेईं प्रभु सेइं ज़ोवं, “हे प्रभु, इश्शी मद्दत केर कि अस होरे भी मज़बूती सेइं विश्वास केरम।”
6 அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
प्रभु यीशुए ज़ोवं, “अगर तुश्शो विश्वास सिवलारे गलेवे बराबर भी भोलो त तुस इस तूतेरे बुटे जो ज़ोई सकतथ इट्ठां उखड़ ते समुन्द्रे मां लग त तै तुश्शो हुक्म मनेलो।
7 “உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா?
“तुसन मां एरो कौन आए, ज़ेसेरो नौकर ऊडारां बेंतो भोए या गोरू च़ारतो भोए ते ज़ैखन तै ऊडारे मरां घरे एज्जे त तैसेरो मालिक तैस ज़ोए कि, ‘लूशी बिश्श ते रोट्टी खा।’
8 மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா?
या एन न ज़ोए कि मेरी रोट्टी तियार केरथ ते ज़ां तगर अवं खेइ पीं नन्ना ते ज़ां तगर अवं रेज़्ज़ी नन्ना तू मेरी सेवा केरतो राए, तैल्ला पत्ती तू भी खा?
9 கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா?
कुन तै एल्हेरेलेइ नौकरेरू अहसान केरेलो कि, तीं तैन कियूं ज़ैन तीं केरनेरे लेइ ज़ोवरू थियूं?
10 எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
एन्च़रे ज़ैखन तुस एन सब केरेले ज़ैस केरनेरो तुसन हुक्म दित्तोरो थियो, त ज़ोथ कि, ‘असां निकम्मे नौकर आम? असेईं तैन्ने कियूं ज़ैन केरनू चाते थिये।’”
11 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார்.
एक्की फेरे यीशु त कने तैसेरे चेले यरूशलेम नगरेरे पासे च़लोरे थिये। तैना सामरिया ते गलीले इलाके मांमेइं च़लोरे थिये।
12 அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே,
ज़ैखन तैना एक्की ड्लव्वें मां पुज़ने बाले थिये त तैड़ी दश कोढ़ी मैल्ले ज़ैना दूर खेड़ोरे थिये।
13 “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
तैनेईं बड़े ज़ोरे सेइं ज़ोवं, “हे यीशु, हे प्रभु, असन पुड़ दया केर।”
14 இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
यीशुए तैन लेइतां ज़ोवं, “यरूशलेम नगरेरे मन्दरे मां गाथ ते अपनो आप याजकन हिराथ, ते सच़्च़े एरू भोवं कि गाते बार बत्तां तैन केरू कोढ़ साफ भोइ जेवं।”
15 அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான்.
पन तैन मरां अक कोढ़ी अपनू कोढ़ हेरतां कि, तैसेरू कोढ़ साफ भोरोए खुशी भोइतां बड़े ज़ोरे सेइं परमेशरेरी तारीफ़ केरतो वापस यीशु कां अव
16 அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
ते यीशुएरे पावन पुड़ दोग्ग रेखतां शुक्र लगो केरने। ए मैन्हु सामरी थियो।
17 அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
यीशुए तैस पुच़्छ़ू, “कुन तैन दश कोढ़ी केरू कोढ़ साफ नईं भोवरू? फिरी तैना कोरां जे?
18 இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார்.
कुन एस गैर यहूदी मैनेरे अलावा तैन होरन एत्री हिम्मत न अई, कि गेइतां परमेशरेरी महिमा केरम?”
19 பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
तैखन यीशुए तैस ज़ोवं, “खड़ो उठ ते च़लो गा तीं मीं पुड़ विश्वास कियो तांए तू बेज़्झ़ोरोस।”
20 ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை.
फरीसी लोक यीशु पुच्छ़ने लगे, “कि परमेशरेरू राज़ केइस एजनूए? यीशुए तैन जुवाब दित्तो कि परमेशरेरू राज़ एरू नईं कि कोई तैस लेई बटे।
21 ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” என்றார்.
ते ज़ोन कि हेरा इड़ी या उड़ीए एन्च़रे नईं बल्के परमेशरेरू राज़ तुश्शे मझ़ाटे।”
22 பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள்.
यीशुए अपने चेलन सेइं ज़ोवं, “तै दिहाड़ी भी एजनीए कि, ज़ेइस तुस परमेशरेरी दिहैड़न मरां अक दिहाड़ी हेरनेरी इच्छा रखेले, ज़ेइस मैनेरू मट्ठे यानी अवं वापस एजनोईं, पन तुस न लेई बटेले।
23 ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.
लोक तुसन सेइं ज़ोले कि, ‘हेरा, मसीह इड़ीए,’ या ‘उड़ीए या हेरा तै इड़ीए!’ पन तुस तैरां न गेइयथ ते न तैन पत्ती न च़ेलथ।
24 வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன்.
किजोकि ज़ेन्च़रे बिजली अम्बरे मरां चेमकतां एक्की पासेरां होरि पासे च़ली गाचे, तेन्च़रे मैनेरू मट्ठू यानी अवं तैस दिहैड़ी बांदो भोलो।
25 ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
पन ज़रूरीए कि तै पेइले दुःख झ़ैल्ले ते इस ज़मानेरे लोक तैस घटिया समझ़न।
26 “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.
ते ज़ेरू इश्शे पूर्वज नूहेरे ज़माने मां भोरू थियूं, तेरहु मैनेरे मट्ठेरे ज़माने मां भी भोलू।
27 நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
तेइस भी लोक खाते पीते थिये ते ड्ला भोंते रहते थिये। ते ज़ां तगर नूह किश्ती मां न थियो जोरो तांतगर सब किछ भोतू राव। ते फिरी तूफान अव ते सब किछ खतम भोइ जेवं।
28 “லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
ते ज़ेरू इश्शे पूर्वज लूतेरे ज़माने मां भोरू थियूं, कि लोक खाते पीते थिये बुपार केरते, बागां लाते ते घरां बनाने मां मघन थिये।
29 ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
पन ज़ैस दिहैड़ी लूत सदोम नगरे मरां बेइर निस्सो त पत्रोवं अम्बरेरां गंधकेरी अग बैखतां सब किछ खतम केरि छ़डू।
30 “மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும்.
ते मैनेरे मट्ठू यानी मेरू वापस एजनू भी अचानक भोलू।
31 அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது.
“तैस दिहैड़ी ज़ै लाए पुड़ भोलो त तैसेरो माल सबाब अगर घरे मां भोलो त तैस नेने तै अन्तर न एज्जे, ते ज़ै ऊडारे मां भोलो तै भी वापस न गाए।
32 லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
लूतेरी कुआन्शी सेइं कुन भोवं याद रख्खा।
33 தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
ज़ै अपनि जान बच़ांनेरी कोशिश केरेलो तै तैस गुवालो, ते ज़ै तैस गुवालो तै तैस बच़ालो।
34 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
अवं तुसन सेइं ज़ोताईं कि तैस राती दूई मैन्हु एक्की खट्टी पुड़ झ़ुल्लोरे भोले, ते अक नीयो गालो, ते दुइयोवं तैड़ी रालो।
35 இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள்.
दूई कुआन्शां हिट्लाट पइती भोली त अक नेनीए ते अक तैड़ी छ़डनियें।
36 இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” என்றார்.
दूई मैन्हु ऊडारे मां भोले त अक नेनोए ते अक तैड़ी छ़डनोए।”
37 அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.
एन शुन्तां तैनेईं यीशुए पुच़्छ़ू, “हे प्रभु असन सेइं ज़ो, एन कोड़ि भोलू?” यीशुए तैन ज़ोवं, “ज़ैड़ी ज़िग्ग भोते तैड़ी इल्लां जम्हां भोइचन।”

< லூக்கா 17 >