< லூக்கா 12 >

1 அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
Ya yogu ke ku niwulgu den taani ki pundi a tuda, ke bi niba ji ŋmaadi bi lieba, ke o cili ki dá maadi leni o ŋɔdkaaba, “Fangi mani i yuli leni farisienba nɔbli, bani yaaba n pia mi muyima.
2 மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
Ama bonlibá ki ye ki duagi, ki kan dɔgdi, bonli ki ye ki wuo, ke bi kan bandi.
3 நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
Lanwani i, yin maadi yaali li biigli nni, bi ba gbadi li mi yenyenma nni, ke yin sɔbi ki maadi yaali li dieli nni, ke a gana luo, bi ba kpaandi la li dieli binbinli po.
4 “என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது.
N dɔnlinba, n yedi yi, da jie mani yaaba n ba kpa ti gbannandi, ki ji kan fidi ki tieni libá kuli ki pugni.
5 ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
Ama, n ba tuodi ki waani yi yin ba ya jie yua. Yin jie yua kpa, ki go pia ya paalu n ba lu ŋa ku mubuogu nni. Nn, n maadi yi, jie mani o. (Geenna g1067)
6 ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.
bi ki kuadi nuanmu mu mu ka kuumu lie e? Leni lani kuli, U Tienu nunga nni, bi kan sundi mu siiga nni bá yenga po.
7 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
Ama yinba wani, bá i yudi, bi cɔdi ki bani ti dugli. Da jie mani pu, i pia muyuli ki cie ya nuankuli n yabi.
8 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன்.
N yedi yi, ya nilo kuli n tuo ke o bani nni, bi niba siiga, o 'Ja Bijua' mo ba tuo ke n bani o U Tienu malekinba kani.
9 ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
Ama yua nia bi niba siiga ke waa tie n yua, bi ba sundi o po U Tienu malekinba kani.
10 யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
Yua n maadi mabiadma o 'Ja Bijua' po, ba baa sugli, ama yua n maadi ki sugi U Tienu Foŋanma, o kan baa sugli.
11 “நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.
Bi ya dia yi, ki caa leni yi ti jaandiedi nni, ti buudi danba kani leni yikodanba kani ti buudi po, yin da yagi i yama leni yin ba maadi yaala ki fie i yuli, bii yin ba yedi yaala.
12 ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
Kelima lanyognu liga, U Tienu Foŋanma ba tundi yin ba yedi yaala.
13 கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
Ke niyendo yedi o ku niwulgu siiga “Canbaa, maadi n kpelo wan bɔgdi ti báa ń sieni ti ya faali, ki teni nni.
14 அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.
Jesu ń yedi o, “O ja, ŋma n kaani nni ke min ya tie i buudidaano bii i ke min tua i kɔnpaadilo li faali bɔgdima po?
15 பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
Ki yedi ba, “Fangi mani yibá lini mi ŋalmanbuacianma, kelima nilo miali ki ŋua o ŋalmani yabmu ka.
16 மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.
Lani ke Jesu pua ba ya kpanjama ne, “Piado bá den koni ki baa boncianla,
17 அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
ke o kali, ki jagi, ki yedi o pali nni, “N ji ba tieni ledi i, kelima mii ji pia kaanu ki ba bili n kpaandi ne kuli?
18 “பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து.
ki yedi, “Min ba tieni maama n ne. N ba mumudi n bunbuana, ki guani ki ma yia n tiani, ki bili lien nni n bondikaali leni n bonpiakaali kuli.
19 பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
Lani, n ji ba pagi n yuli “Mini, min bili ya piama kandi, ki ba tuoni nni ya bina n yabi. Ya kaa, ki fuo, ki di, ki ñu, ki mangdi a pali.
20 “அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
Ama, ke U Tienu yedi o “O yanluodaano ne, dinne ñiagu liga i, ke n ba ñani a naano, ki ŋa a. ŋan bili yaali kuli ba tua ŋma ya yaali i?
21 “தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
Li tie nani yua n taagi mi piama o yuli po, ki nan ki pia pu U Tienu kani.”
22 பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
Jesu yedi o ŋɔdkaaba, “lanwani i, yin da buali i miali po, yin ba di yaali bii, i gbanu po, li bonlakaali po
23 ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
Kelima, li miali gie ti jiedi, ke u gbanu mo cie ti tialakaadi.
24 காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
Diidi mani a bonyugda, baa buu, baa yendi, baa pia bilkaanu, baa pia bɔnbuana, ama U Tienu nan dingi a. yinba, i pia mayuli ki cie ti bonyugditi!
25 கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
I siiga, ŋma ba fidi ki fagni o miali bá a dana waamu?
26 இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
I ya ya bani ke i kan fidi ki tieni yaali n waa ki cie ne, be ya po i ke i maali yaali n sieni kuli po o?
27 “காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
Diidi mani ti puudi ń tie maama, tii tuuni, tii pia gaalu mo, ama bá o badciamo Salomɔn leni o kpiagdi, waa pundi bi siiga bá yengu ń bobi maama.
28 விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
U Tienu ya bobindi u kuanu nni muadi yeni, tini yaadi ye dinne ke bi ba faa ki taa ti, ki kuuni u fanu nni, ki cuoni umu, li ki pia tama ke o ba bobni yi mo, oo yinba yaaba ya dudugdi n ki pia fuoma!
29 விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
Da buali mani yin ba di yaali leni yin ba ñu yaali po, ki go da yagni i yama.
30 ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
Kelima ŋanduna dogi kuli lingi lanya bona i, ke i Báa moko bani ke i bua li bona.
31 எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
Ama yin lingi mani o diema, i ba baa lanya bona ki pugni
32 “சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
Da jie mani ba waamu, kelima i Báa pali mani ke wan puni yi o diema.
33 உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
Kuadi mani i piama, ki puni a luoda li ligi. ŋali mani i po ya ligbɔgli n kan cadi, ŋaljanli nni ya ŋalmani yaali n ki pia gbenma.
34 ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
Kelima a ŋalmani ń ye naani, a pali mo ye lankani i.
35 “பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
N̄agni mani i liadfagda u gbanñagdu, i fidsanmu ń ya tundi ki co;
36 திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
Yin ya tie nani ya niba n guu bi canbáa ń ba ña mi pocaajaama po, ki kpeni yeni, o ya pua li ganli ya yognu, ban kagni ki luodi o po.
37 எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
Ya tuonsɔnba, ke bi canbáa ba pundi ki sua ke bi dá nua, bani baa mi yedŋanma n yeni. I mɔmɔni, n maadi yi, o ba ñagni o gaaligu u gbanñagdu, ki cedi ban kali u jedikaanu, wan tieni ba mi jiema ban je.
38 அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
Canbàa ya pundi yɔgsiigu bii siŋaafaani, ki sua ke bi cegni ki guu o, lan ya tuonsɔnba baa mi yedŋanma n yeni.
39 இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
Ama, min ba pugni yaali n ne, yin ya bani ke o diedaano ya bi bani ya yognu ke o suuro ba kua o deni ki suu o, o bi kan ŋa ban kua o deni ki su o,
40 நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
Yin egni iba, ki ya guu kelimaa i ki baniO Ja bijua n ́ ba guaniya yognu.
41 அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
Pieri ń buali: «O Diedo, a pua lan ya kpanjama tinba baba ya po bii, li tie yuakuli ya po i?»
42 கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.
O Diedo ń yedi: «O laa tuonsɔnlo i, ke o canbáa ba guuni ke wan ya diidi o tuonsɔnlieba tuona, ki puuni ba bi daali jiema lan buali ya yognu,
43 தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
o canbáa ya kpeni ki sua ke o tuuni lan buali maama, lanya tuonsɔnlo baa mi yedŋanma n yeni.
44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.
I mɔmɔni n maadi yi, canbáa ba taa o piama kuli ki piani lanya tonsɔnlo.
45 ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
Ama li tuonsɔnlo ya maadi o pali nni: «N canbáa kpenma dá ba fagdi», ki ji cili ki pua o tuonsɔnlieba, bi jaba yeni bi puoba kuli, ki go cili ki di ki go ñu wan bua maama, ke mi daama ga o.
46 அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
O ya tie yeni, o canbáa ba ti ludi ki kpeni wan ki guu o ya yognu, ki cedi ban pua ki duoli o kaani kuli, ki beli ki ñani o, ki kuani o bi tuonsɔbiadba danba siiga nni.
47 “வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
Nani li tuosɔnlo ń den bani o canbáa ń bili o ya tuonli yeni i, ki nan ki sɔni lan buali maama yeni i, o canbáa ba cedi ban pua o ya lanbana n yabi.
48 ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
Ama, ya tuonsɔnlo n ki tuodi ki bani, ki sɔni ya tuonli n buali ke lan dadi o tubli ii, bi ba pua o lanbana waaamu. Ban teni yua ke li yabi, bi ba buali o yaali n yabi. Ban piani yua yaali n cie, bi ba buali o yaali n cie.
49 “பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
«N cua ki tinga po ke min sia mu i. N sugni ke li mu ji co i.
50 ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
N pia mi ñinwulma, ke bi ba wuli nni. I ki bani min bua tonma maama, ke li kuli ń tieni ki tii.
51 பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.
I tama ke n cua ki tinga po yeni mi yanduanma yo oo? N n! I mɔmɔni, n maadi yi, n cua yeni mi paadma i.
52 இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
Kelimaa, lan cili mɔlane, dieyengu nni, niba mu ba paadi, niba lie ń kɔni yeni niba taa; niba taa mo ń kɔni yeni niba lie.
53 தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
Bi ba paadi bibáa ń kɔni yeni o bijaba, a bila mo ń kɔni yeni bibáa. Binaá ba kɔni yeni o bisiaba, a bisala mo ń kɔni yeni binaá. Calnaá ba kɔni yeni o biyuaga, ki biyuaga ń kɔni yeni calnaá.»
54 மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.
Jesu go den maadi ku niwulgu yaali ne: «I ya la taayinbɔnu puoli, i yi maadi: “Ki taaga ba nii!” Lan go tieni yeni.
55 தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
Mi faawaama ya fii nintuali, i yi maadi: “Ku wulgu ba tieni!” Lan go tua yeni.
56 வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
Yinba i muyiidmu ne! I fidi ki diidi ki tinga maalma yeni tanpoli maalma, ki bandi a bona. Li nan tieni ledi i, ke yi ki fidi ki bandi U tienu n ́ bobindi yaali mɔlane?
57 “சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
Li tieni ledi i, ke yi kan fidi ki tuodi ki cegni yaali n tiegi i po mɔlane?
58 நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும்.
A ya caa ti buudi yeni a yibali, ŋan mɔndi ki mangi yeni o u sanu nni, wan da ti cedi ti buudi yudanba ń buu ki cuo a, ban mubni a bi paatieba nui nni, ban luoni a li kpaadidieli nni.
59 உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
N maadi a, a kan ña li kpaadidieli nni, kaa pani a pana kuli ki gbeni.»

< லூக்கா 12 >