< லூக்கா 10 >

1 இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார்.
ತತಃ ಪರಂ ಪ್ರಭುರಪರಾನ್ ಸಪ್ತತಿಶಿಷ್ಯಾನ್ ನಿಯುಜ್ಯ ಸ್ವಯಂ ಯಾನಿ ನಗರಾಣಿ ಯಾನಿ ಸ್ಥಾನಾನಿ ಚ ಗಮಿಷ್ಯತಿ ತಾನಿ ನಗರಾಣಿ ತಾನಿ ಸ್ಥಾನಾನಿ ಚ ಪ್ರತಿ ದ್ವೌ ದ್ವೌ ಜನೌ ಪ್ರಹಿತವಾನ್|
2 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
ತೇಭ್ಯಃ ಕಥಯಾಮಾಸ ಚ ಶಸ್ಯಾನಿ ಬಹೂನೀತಿ ಸತ್ಯಂ ಕಿನ್ತು ಛೇದಕಾ ಅಲ್ಪೇ; ತಸ್ಮಾದ್ಧೇತೋಃ ಶಸ್ಯಕ್ಷೇತ್ರೇ ಛೇದಕಾನ್ ಅಪರಾನಪಿ ಪ್ರೇಷಯಿತುಂ ಕ್ಷೇತ್ರಸ್ವಾಮಿನಂ ಪ್ರಾರ್ಥಯಧ್ವಂ|
3 புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன்.
ಯೂಯಂ ಯಾತ, ಪಶ್ಯತ, ವೃಕಾಣಾಂ ಮಧ್ಯೇ ಮೇಷಶಾವಕಾನಿವ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರಹಿಣೋಮಿ|
4 நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம்.
ಯೂಯಂ ಕ್ಷುದ್ರಂ ಮಹದ್ ವಾ ವಸನಸಮ್ಪುಟಕಂ ಪಾದುಕಾಶ್ಚ ಮಾ ಗೃಹ್ಲೀತ, ಮಾರ್ಗಮಧ್ಯೇ ಕಮಪಿ ಮಾ ನಮತ ಚ|
5 “நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள்.
ಅಪರಞ್ಚ ಯೂಯಂ ಯದ್ ಯತ್ ನಿವೇಶನಂ ಪ್ರವಿಶಥ ತತ್ರ ನಿವೇಶನಸ್ಯಾಸ್ಯ ಮಙ್ಗಲಂ ಭೂಯಾದಿತಿ ವಾಕ್ಯಂ ಪ್ರಥಮಂ ವದತ|
6 சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும்.
ತಸ್ಮಾತ್ ತಸ್ಮಿನ್ ನಿವೇಶನೇ ಯದಿ ಮಙ್ಗಲಪಾತ್ರಂ ಸ್ಥಾಸ್ಯತಿ ತರ್ಹಿ ತನ್ಮಙ್ಗಲಂ ತಸ್ಯ ಭವಿಷ್ಯತಿ, ನೋಚೇತ್ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪರಾವರ್ತ್ತಿಷ್ಯತೇ|
7 நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம்.
ಅಪರಞ್ಚ ತೇ ಯತ್ಕಿಞ್ಚಿದ್ ದಾಸ್ಯನ್ತಿ ತದೇವ ಭುಕ್ತ್ವಾ ಪೀತ್ವಾ ತಸ್ಮಿನ್ನಿವೇಶನೇ ಸ್ಥಾಸ್ಯಥ; ಯತಃ ಕರ್ಮ್ಮಕಾರೀ ಜನೋ ಭೃತಿಮ್ ಅರ್ಹತಿ; ಗೃಹಾದ್ ಗೃಹಂ ಮಾ ಯಾಸ್ಯಥ|
8 “நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள்.
ಅನ್ಯಚ್ಚ ಯುಷ್ಮಾಸು ಕಿಮಪಿ ನಗರಂ ಪ್ರವಿಷ್ಟೇಷು ಲೋಕಾ ಯದಿ ಯುಷ್ಮಾಕಮ್ ಆತಿಥ್ಯಂ ಕರಿಷ್ಯನ್ತಿ, ತರ್ಹಿ ಯತ್ ಖಾದ್ಯಮ್ ಉಪಸ್ಥಾಸ್ಯನ್ತಿ ತದೇವ ಖಾದಿಷ್ಯಥ|
9 அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
ತನ್ನಗರಸ್ಥಾನ್ ರೋಗಿಣಃ ಸ್ವಸ್ಥಾನ್ ಕರಿಷ್ಯಥ, ಈಶ್ವರೀಯಂ ರಾಜ್ಯಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಅನ್ತಿಕಮ್ ಆಗಮತ್ ಕಥಾಮೇತಾಞ್ಚ ಪ್ರಚಾರಯಿಷ್ಯಥ|
10 ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம்,
ಕಿನ್ತು ಕಿಮಪಿ ಪುರಂ ಯುಷ್ಮಾಸು ಪ್ರವಿಷ್ಟೇಷು ಲೋಕಾ ಯದಿ ಯುಷ್ಮಾಕಮ್ ಆತಿಥ್ಯಂ ನ ಕರಿಷ್ಯನ್ತಿ, ತರ್ಹಿ ತಸ್ಯ ನಗರಸ್ಯ ಪನ್ಥಾನಂ ಗತ್ವಾ ಕಥಾಮೇತಾಂ ವದಿಷ್ಯಥ,
11 ‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ನಗರೀಯಾ ಯಾ ಧೂಲ್ಯೋಽಸ್ಮಾಸು ಸಮಲಗನ್ ತಾ ಅಪಿ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾತಿಕೂಲ್ಯೇನ ಸಾಕ್ಷ್ಯಾರ್ಥಂ ಸಮ್ಪಾತಯಾಮಃ; ತಥಾಪೀಶ್ವರರಾಜ್ಯಂ ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪಮ್ ಆಗತಮ್ ಇತಿ ನಿಶ್ಚಿತಂ ಜಾನೀತ|
12 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ಅಹಂ ಯುಷ್ಮಭ್ಯಂ ಯಥಾರ್ಥಂ ಕಥಯಾಮಿ, ವಿಚಾರದಿನೇ ತಸ್ಯ ನಗರಸ್ಯ ದಶಾತಃ ಸಿದೋಮೋ ದಶಾ ಸಹ್ಯಾ ಭವಿಷ್ಯತಿ|
13 “கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
ಹಾ ಹಾ ಕೋರಾಸೀನ್ ನಗರ, ಹಾ ಹಾ ಬೈತ್ಸೈದಾನಗರ ಯುವಯೋರ್ಮಧ್ಯೇ ಯಾದೃಶಾನಿ ಆಶ್ಚರ್ಯ್ಯಾಣಿ ಕರ್ಮ್ಮಾಣ್ಯಕ್ರಿಯನ್ತ, ತಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ಯದಿ ಸೋರಸೀದೋನೋ ರ್ನಗರಯೋರಕಾರಿಷ್ಯನ್ತ, ತದಾ ಇತೋ ಬಹುದಿನಪೂರ್ವ್ವಂ ತನ್ನಿವಾಸಿನಃ ಶಣವಸ್ತ್ರಾಣಿ ಪರಿಧಾಯ ಗಾತ್ರೇಷು ಭಸ್ಮ ವಿಲಿಪ್ಯ ಸಮುಪವಿಶ್ಯ ಸಮಖೇತ್ಸ್ಯನ್ತ|
14 ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும்.
ಅತೋ ವಿಚಾರದಿವಸೇ ಯುಷ್ಮಾಕಂ ದಶಾತಃ ಸೋರಸೀದೋನ್ನಿವಾಸಿನಾಂ ದಶಾ ಸಹ್ಯಾ ಭವಿಷ್ಯತಿ|
15 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs g86)
ಹೇ ಕಫರ್ನಾಹೂಮ್, ತ್ವಂ ಸ್ವರ್ಗಂ ಯಾವದ್ ಉನ್ನತಾ ಕಿನ್ತು ನರಕಂ ಯಾವತ್ ನ್ಯಗ್ಭವಿಷ್ಯಸಿ| (Hadēs g86)
16 “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார்.
ಯೋ ಜನೋ ಯುಷ್ಮಾಕಂ ವಾಕ್ಯಂ ಗೃಹ್ಲಾತಿ ಸ ಮಮೈವ ವಾಕ್ಯಂ ಗೃಹ್ಲಾತಿ; ಕಿಞ್ಚ ಯೋ ಜನೋ ಯುಷ್ಮಾಕಮ್ ಅವಜ್ಞಾಂ ಕರೋತಿ ಸ ಮಮೈವಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ; ಯೋ ಜನೋ ಮಮಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ ಚ ಸ ಮತ್ಪ್ರೇರಕಸ್ಯೈವಾವಜ್ಞಾಂ ಕರೋತಿ|
17 அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
ಅಥ ತೇ ಸಪ್ತತಿಶಿಷ್ಯಾ ಆನನ್ದೇನ ಪ್ರತ್ಯಾಗತ್ಯ ಕಥಯಾಮಾಸುಃ, ಹೇ ಪ್ರಭೋ ಭವತೋ ನಾಮ್ನಾ ಭೂತಾ ಅಪ್ಯಸ್ಮಾಕಂ ವಶೀಭವನ್ತಿ|
18 இயேசு அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப்போல் விழுகிறதை, நான் கண்டேன்.
ತದಾನೀಂ ಸ ತಾನ್ ಜಗಾದ, ವಿದ್ಯುತಮಿವ ಸ್ವರ್ಗಾತ್ ಪತನ್ತಂ ಶೈತಾನಮ್ ಅದರ್ಶಮ್|
19 பாம்புகளையும், தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும், நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது.
ಪಶ್ಯತ ಸರ್ಪಾನ್ ವೃಶ್ಚಿಕಾನ್ ರಿಪೋಃ ಸರ್ವ್ವಪರಾಕ್ರಮಾಂಶ್ಚ ಪದತಲೈ ರ್ದಲಯಿತುಂ ಯುಷ್ಮಭ್ಯಂ ಶಕ್ತಿಂ ದದಾಮಿ ತಸ್ಮಾದ್ ಯುಷ್ಮಾಕಂ ಕಾಪಿ ಹಾನಿ ರ್ನ ಭವಿಷ್ಯತಿ|
20 ஆனால், தீய ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.
ಭೂತಾ ಯುಷ್ಮಾಕಂ ವಶೀಭವನ್ತಿ, ಏತನ್ನಿಮಿತ್ತತ್ ಮಾ ಸಮುಲ್ಲಸತ, ಸ್ವರ್ಗೇ ಯುಷ್ಮಾಕಂ ನಾಮಾನಿ ಲಿಖಿತಾನಿ ಸನ್ತೀತಿ ನಿಮಿತ್ತಂ ಸಮುಲ್ಲಸತ|
21 அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
ತದ್ಘಟಿಕಾಯಾಂ ಯೀಶು ರ್ಮನಸಿ ಜಾತಾಹ್ಲಾದಃ ಕಥಯಾಮಾಸ ಹೇ ಸ್ವರ್ಗಪೃಥಿವ್ಯೋರೇಕಾಧಿಪತೇ ಪಿತಸ್ತ್ವಂ ಜ್ಞಾನವತಾಂ ವಿದುಷಾಞ್ಚ ಲೋಕಾನಾಂ ಪುರಸ್ತಾತ್ ಸರ್ವ್ವಮೇತದ್ ಅಪ್ರಕಾಶ್ಯ ಬಾಲಕಾನಾಂ ಪುರಸ್ತಾತ್ ಪ್ರಾಕಾಶಯ ಏತಸ್ಮಾದ್ಧೇತೋಸ್ತ್ವಾಂ ಧನ್ಯಂ ವದಾಮಿ, ಹೇ ಪಿತರಿತ್ಥಂ ಭವತು ಯದ್ ಏತದೇವ ತವ ಗೋಚರ ಉತ್ತಮಮ್|
22 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை இன்னாரென்று அறியான். மகனைத் தவிர வேறொருவனும் பிதா யாரென்றும் அறியான். யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்” என்றார்.
ಪಿತ್ರಾ ಸರ್ವ್ವಾಣಿ ಮಯಿ ಸಮರ್ಪಿತಾನಿ ಪಿತರಂ ವಿನಾ ಕೋಪಿ ಪುತ್ರಂ ನ ಜಾನಾತಿ ಕಿಞ್ಚ ಪುತ್ರಂ ವಿನಾ ಯಸ್ಮೈ ಜನಾಯ ಪುತ್ರಸ್ತಂ ಪ್ರಕಾಶಿತವಾನ್ ತಞ್ಚ ವಿನಾ ಕೋಪಿ ಪಿತರಂ ನ ಜಾನಾತಿ|
23 பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப்பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.
ತಪಃ ಪರಂ ಸ ಶಿಷ್ಯಾನ್ ಪ್ರತಿ ಪರಾವೃತ್ಯ ಗುಪ್ತಂ ಜಗಾದ, ಯೂಯಮೇತಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಪಶ್ಯಥ ತತೋ ಯುಷ್ಮಾಕಂ ಚಕ್ಷೂಂಷಿ ಧನ್ಯಾನಿ|
24 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”
ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ, ಯೂಯಂ ಯಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಪಶ್ಯಥ ತಾನಿ ಬಹವೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನೋ ಭೂಪತಯಶ್ಚ ದ್ರಷ್ಟುಮಿಚ್ಛನ್ತೋಪಿ ದ್ರಷ್ಟುಂ ನ ಪ್ರಾಪ್ನುವನ್, ಯುಷ್ಮಾಭಿ ರ್ಯಾ ಯಾಃ ಕಥಾಶ್ಚ ಶ್ರೂಯನ್ತೇ ತಾಃ ಶ್ರೋತುಮಿಚ್ಛನ್ತೋಪಿ ಶ್ರೋತುಂ ನಾಲಭನ್ತ|
25 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios g166)
ಅನನ್ತರಮ್ ಏಕೋ ವ್ಯವಸ್ಥಾಪಕ ಉತ್ಥಾಯ ತಂ ಪರೀಕ್ಷಿತುಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಉಪದೇಶಕ ಅನನ್ತಾಯುಷಃ ಪ್ರಾಪ್ತಯೇ ಮಯಾ ಕಿಂ ಕರಣೀಯಂ? (aiōnios g166)
26 அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.
ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ, ಅತ್ರಾರ್ಥೇ ವ್ಯವಸ್ಥಾಯಾಂ ಕಿಂ ಲಿಖಿತಮಸ್ತಿ? ತ್ವಂ ಕೀದೃಕ್ ಪಠಸಿ?
27 அதற்கு அவன், “‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’” எனப் பதிலளித்தான்.
ತತಃ ಸೋವದತ್, ತ್ವಂ ಸರ್ವ್ವಾನ್ತಃಕರಣೈಃ ಸರ್ವ್ವಪ್ರಾಣೈಃ ಸರ್ವ್ವಶಕ್ತಿಭಿಃ ಸರ್ವ್ವಚಿತ್ತೈಶ್ಚ ಪ್ರಭೌ ಪರಮೇಶ್ವರೇ ಪ್ರೇಮ ಕುರು, ಸಮೀಪವಾಸಿನಿ ಸ್ವವತ್ ಪ್ರೇಮ ಕುರು ಚ|
28 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார்.
ತದಾ ಸ ಕಥಯಾಮಾಸ, ತ್ವಂ ಯಥಾರ್ಥಂ ಪ್ರತ್ಯವೋಚಃ, ಇತ್ಥಮ್ ಆಚರ ತೇನೈವ ಜೀವಿಷ್ಯಸಿ|
29 ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான்.
ಕಿನ್ತು ಸ ಜನಃ ಸ್ವಂ ನಿರ್ದ್ದೋಷಂ ಜ್ಞಾಪಯಿತುಂ ಯೀಶುಂ ಪಪ್ರಚ್ಛ, ಮಮ ಸಮೀಪವಾಸೀ ಕಃ? ತತೋ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ,
30 அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
ಏಕೋ ಜನೋ ಯಿರೂಶಾಲಮ್ಪುರಾದ್ ಯಿರೀಹೋಪುರಂ ಯಾತಿ, ಏತರ್ಹಿ ದಸ್ಯೂನಾಂ ಕರೇಷು ಪತಿತೇ ತೇ ತಸ್ಯ ವಸ್ತ್ರಾದಿಕಂ ಹೃತವನ್ತಃ ತಮಾಹತ್ಯ ಮೃತಪ್ರಾಯಂ ಕೃತ್ವಾ ತ್ಯಕ್ತ್ವಾ ಯಯುಃ|
31 ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான்.
ಅಕಸ್ಮಾದ್ ಏಕೋ ಯಾಜಕಸ್ತೇನ ಮಾರ್ಗೇಣ ಗಚ್ಛನ್ ತಂ ದೃಷ್ಟ್ವಾ ಮಾರ್ಗಾನ್ಯಪಾರ್ಶ್ವೇನ ಜಗಾಮ|
32 அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான்.
ಇತ್ಥಮ್ ಏಕೋ ಲೇವೀಯಸ್ತತ್ಸ್ಥಾನಂ ಪ್ರಾಪ್ಯ ತಸ್ಯಾನ್ತಿಕಂ ಗತ್ವಾ ತಂ ವಿಲೋಕ್ಯಾನ್ಯೇನ ಪಾರ್ಶ್ವೇನ ಜಗಾಮ|
33 ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான்.
ಕಿನ್ತ್ವೇಕಃ ಶೋಮಿರೋಣೀಯೋ ಗಚ್ಛನ್ ತತ್ಸ್ಥಾನಂ ಪ್ರಾಪ್ಯ ತಂ ದೃಷ್ಟ್ವಾದಯತ|
34 அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான்.
ತಸ್ಯಾನ್ತಿಕಂ ಗತ್ವಾ ತಸ್ಯ ಕ್ಷತೇಷು ತೈಲಂ ದ್ರಾಕ್ಷಾರಸಞ್ಚ ಪ್ರಕ್ಷಿಪ್ಯ ಕ್ಷತಾನಿ ಬದ್ಧ್ವಾ ನಿಜವಾಹನೋಪರಿ ತಮುಪವೇಶ್ಯ ಪ್ರವಾಸೀಯಗೃಹಮ್ ಆನೀಯ ತಂ ಸಿಷೇವೇ|
35 மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.”
ಪರಸ್ಮಿನ್ ದಿವಸೇ ನಿಜಗಮನಕಾಲೇ ದ್ವೌ ಮುದ್ರಾಪಾದೌ ತದ್ಗೃಹಸ್ವಾಮಿನೇ ದತ್ತ್ವಾವದತ್ ಜನಮೇನಂ ಸೇವಸ್ವ ತತ್ರ ಯೋಽಧಿಕೋ ವ್ಯಯೋ ಭವಿಷ್ಯತಿ ತಮಹಂ ಪುನರಾಗಮನಕಾಲೇ ಪರಿಶೋತ್ಸ್ಯಾಮಿ|
36 இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
ಏಷಾಂ ತ್ರಯಾಣಾಂ ಮಧ್ಯೇ ತಸ್ಯ ದಸ್ಯುಹಸ್ತಪತಿತಸ್ಯ ಜನಸ್ಯ ಸಮೀಪವಾಸೀ ಕಃ? ತ್ವಯಾ ಕಿಂ ಬುಧ್ಯತೇ?
37 அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.
ತತಃ ಸ ವ್ಯವಸ್ಥಾಪಕಃ ಕಥಯಾಮಾಸ ಯಸ್ತಸ್ಮಿನ್ ದಯಾಂ ಚಕಾರ| ತದಾ ಯೀಶುಃ ಕಥಯಾಮಾಸ ತ್ವಮಪಿ ಗತ್ವಾ ತಥಾಚರ|
38 பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள்.
ತತಃ ಪರಂ ತೇ ಗಚ್ಛನ್ತ ಏಕಂ ಗ್ರಾಮಂ ಪ್ರವಿವಿಶುಃ; ತದಾ ಮರ್ಥಾನಾಮಾ ಸ್ತ್ರೀ ಸ್ವಗೃಹೇ ತಸ್ಯಾತಿಥ್ಯಂ ಚಕಾರ|
39 அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ತಸ್ಮಾತ್ ಮರಿಯಮ್ ನಾಮಧೇಯಾ ತಸ್ಯಾ ಭಗಿನೀ ಯೀಶೋಃ ಪದಸಮೀಪ ಉವವಿಶ್ಯ ತಸ್ಯೋಪದೇಶಕಥಾಂ ಶ್ರೋತುಮಾರೇಭೇ|
40 ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.
ಕಿನ್ತು ಮರ್ಥಾ ನಾನಾಪರಿಚರ್ಯ್ಯಾಯಾಂ ವ್ಯಗ್ರಾ ಬಭೂವ ತಸ್ಮಾದ್ಧೇತೋಸ್ತಸ್ಯ ಸಮೀಪಮಾಗತ್ಯ ಬಭಾಷೇ; ಹೇ ಪ್ರಭೋ ಮಮ ಭಗಿನೀ ಕೇವಲಂ ಮಮೋಪರಿ ಸರ್ವ್ವಕರ್ಮ್ಮಣಾಂ ಭಾರಮ್ ಅರ್ಪಿತವತೀ ತತ್ರ ಭವತಾ ಕಿಞ್ಚಿದಪಿ ನ ಮನೋ ನಿಧೀಯತೇ ಕಿಮ್? ಮಮ ಸಾಹಾಯ್ಯಂ ಕರ್ತ್ತುಂ ಭವಾನ್ ತಾಮಾದಿಶತು|
41 அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய்.
ತತೋ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ ಹೇ ಮರ್ಥೇ ಹೇ ಮರ್ಥೇ, ತ್ವಂ ನಾನಾಕಾರ್ಯ್ಯೇಷು ಚಿನ್ತಿತವತೀ ವ್ಯಗ್ರಾ ಚಾಸಿ,
42 ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
ಕಿನ್ತು ಪ್ರಯೋಜನೀಯಮ್ ಏಕಮಾತ್ರಮ್ ಆಸ್ತೇ| ಅಪರಞ್ಚ ಯಮುತ್ತಮಂ ಭಾಗಂ ಕೋಪಿ ಹರ್ತ್ತುಂ ನ ಶಕ್ನೋತಿ ಸಏವ ಮರಿಯಮಾ ವೃತಃ|

< லூக்கா 10 >