< அப்போஸ்தலர் 7 >

1 அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான்.
ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲁⲣⲭⲏⲉⲣⲉⲩⲥ ϫⲉ ⲁⲛ ⲛⲁⲓ ϣⲟⲡ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
2 அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார்.
ⲃ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲓⲣⲱⲙⲓ ⲛⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲟⲩⲟϩ ⲛⲉⲛⲓⲟϯ ⲥⲱⲧⲉⲙ Ⲫϯ ⳿ⲛⲧⲉ ⳿ⲡ⳿ⲱⲟⲩ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲡⲉⲛⲓⲱⲧ Ⲁⲃⲣⲁⲁⲙ ⲉϥⲭⲏ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ϯⲙⲉⲥⲟⲡⲟⲧⲁⲙⲓ⳿ⲁ ⳿ⲙⲡⲁⲧⲉϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲭⲁⲣⲣⲁⲛ.
3 இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார்.
ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲁⲙⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲉⲕⲕⲁϩⲓ ⲛⲉⲙ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲧⲉⲕⲥⲩⲅⲅⲉⲛⲓ⳿ⲁ ⳿ⲁⲙⲟⲩ ⳿ⲉⲡⲓⲕⲁϩⲓ ⳿ⲉϯⲛⲁⲧⲁⲙⲟⲕ ⳿ⲉⲣⲟϥ.
4 “அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார்.
ⲇ̅ⲧⲟⲧⲉ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲭⲁⲗⲇⲉⲟⲥ ⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲭⲁⲣⲣⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ ⲇⲉ ⳿ⲙⲙⲁⲩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⳿ⲑⲣⲉϥⲙⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲉϥⲓⲱⲧ ⲁϥⲟⲩⲟⲑⲃⲉϥ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲣⲉϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲡⲁⲓⲕⲁϩⲓ ⲫⲁⲓ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ⲉⲧⲉⲧⲉⲛϣⲟⲡ ϩⲓⲱⲧϥ ϯⲛⲟⲩ.
5 இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார்.
ⲉ̅⳿ⲙⲡⲉϥϯ ⲛⲁϥ ⳿ⲛⲟⲩ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓ⳿ⲁ ⳿ⲛϧⲏⲧϥ ⲟⲩⲇⲉ ⲟⲩϣⲉⲛⲧⲁⲧⲥⲓ ⳿ⲛⲧⲉ ⲟⲩϭⲁⲗⲟϫ ⲁϥⲱϣ ⳿ⲉⲧⲏⲓϥ ⲛⲁϥ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲁⲙⲁϩⲓ ⲛⲉⲙ ⲡⲉϥ⳿ϫⲣⲟϫ ⲙ⳿ⲉⲛⲉⲛⲥⲱϥ ⳿ⲙⲙⲟⲛⲧⲉϥ ϣⲏⲣⲓ ⲇⲉ ⳿ⲙⲙⲁⲩ.
6 இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள்.
ⲋ̅ⲁ Ⲫϯ ⲇⲉ ⲥⲁϫⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ϫⲉ ⳿ⲉⲣⲉ ⲡⲉⲕ⳿ϫⲣⲟϫ ⲉⲣⲣⲉⲙ⳿ⲛϫⲱⲓⲗⲓ ϧⲉⲛ ⲟⲩⲕⲁϩⲓ ⳿ⲛϣⲉⲙⲙⲟ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉⲁⲓⲧⲟⲩ ⳿ⲙⲃⲱⲕ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉ⳿ⲧϩⲉⲙⲕⲱⲟⲩ ⳿ⲛⲩ̅ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ.
7 ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றார்.
ⲍ̅ⲟⲩⲟϩ ⲡⲓ⳿ϣⲗⲱⲗ ⲉⲧⲟⲩⲛⲁⲉⲣⲃⲱⲕ ⲛⲁϥ ⲉⲓ⳿ⲉϯϩⲁⲡ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉϫⲉ Ⲫϯ ⲟⲩⲟϩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲉⲩ⳿ⲉ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩ⳿ⲉϣⲉⲙϣⲓ ⳿ⲙⲙⲟⲓ ϧⲉⲛ ⲡⲁⲓⲙⲁ ⲫⲁⲓ.
8 பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான்.
ⲏ̅ⲟⲩⲟϩ ⲁϥϯ ⲛⲁϥ ⳿ⲛⲟⲩⲇⲓ⳿ⲁⲑⲏⲕⲏ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲥⲉⲃⲓ ⲟⲩⲟϩ ⲡⲁⲓⲣⲏϯ ⲁϥ⳿ϫⲫⲉ ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⲟⲩⲟϩ ⲁϥⲥⲟⲩⲃⲏⲧϥ ϧⲉⲛ ⲡⲓⲙⲁϩⲏ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⲁϥ⳿ϫⲫⲉ Ⲓⲁⲕⲱⲃ Ⲓⲁⲕⲱⲃ ⲁϥ⳿ϫⲫⲟ ⳿ⲙⲡⲓⲓ̅ⲃ̅ ⳿ⲙⲡⲁⲧⲣⲓⲁⲣⲭⲏⲥ.
9 “கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார்.
ⲑ̅ⲟⲩⲟϩ ⲛⲓⲡⲁⲧⲣⲓⲁⲣⲭⲏⲥ ⲁⲩⲭⲟϩ ⳿ⲉⲒⲱⲥⲏⲫ ⲁⲩⲧⲏⲓϥ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲬⲏⲙⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲣⲉ Ⲫϯ ⲭⲏ ⲛⲉⲙⲁϥ ⲡⲉ.
10 அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
ⲓ̅ⲁϥⲛⲁϩⲙⲉϥ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲉϥ⳿ⲑⲗⲩⲯⲓⲥ ⲧⲏⲣⲟⲩ ⲁϥϯ ⲛⲁϥ ⳿ⲛⲟⲩ⳿ϩⲙⲟⲧ ⲛⲉⲙ ⲟⲩⲥⲟⲫⲓ⳿ⲁ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫⲁⲣⲁⲱ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲬⲏⲙⲓ ⲁϥⲭⲁϥ ⳿ⲛϩⲩⲅⲟⲩⲙⲉⲛⲟⲥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲭⲏ ⲙⲓ ⲛⲉⲙ ⳿ⲉϫⲉⲛ ⲡⲉϥⲏⲓ ⲧⲏⲣϥ.
11 “பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை.
ⲓ̅ⲁ̅ⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲟⲩ⳿ϩⲃⲱⲛ ⳿ⲉϫⲉⲛ ⲭⲏ ⲙⲓ ⲧⲏⲣϥ ⲛⲉⲙ ⲭⲁⲛⲁⲁⲛ ⲛⲉⲙ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲑⲗⲩ ⲯⲓⲥ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲉⲙ ⲥⲟⲩ⳿ⲟ ⲁⲛ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲉⲛⲓⲟϯ.
12 எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான்.
ⲓ̅ⲃ̅ⲁϥⲥⲱⲧⲉⲙ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲁⲕⲱⲃ ϫⲉ ⲥⲉϯ ⲥⲟⲩ⳿ⲟ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲭⲏ ⲙⲓ ⲁϥⲧⲁⲟⲩ⳿ⲟ ⳿ⲛⲛⲉⲛⲓⲟϯ ⳿ⲛϣⲟⲣⲡ.
13 அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான்.
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ϧⲉⲛ ⲡⲓⲙⲁϩⲥⲟⲡ ⲃ̅ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲛϫⲉ Ⲓⲱⲥⲏⲫ ⳿⳿ⲉⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲁ ⳿ⲡⲅⲉⲛⲟⲥ ⳿ⲛⲒⲱⲥⲏⲫ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲫⲁⲣⲁⲱ.
14 இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.
ⲓ̅ⲇ̅ⲁϥⲟⲩⲱⲣⲡ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲱⲥⲏⲫ ⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉⲒⲁⲕⲱⲃ ⲡⲉϥⲓⲱⲧ ⲛⲉⲙ ⲧⲉϥⲥⲩⲅⲅⲉⲛⲓⲁ ⲧⲏⲣⲥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲟ̅ⲉ̅ ⳿ⲙⲯⲩⲭⲏ.
15 அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள்.
ⲓ̅ⲉ̅ⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲁⲕⲱⲃ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲬⲏⲙⲓ ⲟⲩⲟϩ ⲁϥⲙⲟⲩ ⳿ⲛⲑⲟϥ ⲛⲉⲙ ⲛⲉⲛⲓⲟϯ.
16 அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான்.
ⲓ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲟⲩⲟⲑⲃⲉϥ ⳿ⲉⲥⲩⲭⲉⲙ ⲁⲩⲭⲁϥ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⳿ⲉⲧⲁϥϣⲟⲡϥ ⳿ⲛϫⲉ Ⲁⲃⲣⲁⲁⲙ ϧⲁ ⲟⲩⲧⲓⲙⲏ⳿ⲛϩⲁⲧ ⳿ⲛⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲛⲉⲙⲱⲣ ϧⲉⲛ ⲥⲩⲭⲉⲙ.
17 “இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது.
ⲓ̅ⲍ̅ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥϧⲱⲛⲧ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲥⲏⲟⲩ ⳿ⲛⲧⲉ ϯⲉⲡⲁⲅⲅⲉⲗⲓ⳿ⲁ ⲑⲏ⳿ⲉⲧⲁ Ⲫϯ ⲱⲣⲕ ⲉⲑⲃⲏⲧⲥ ⳿ⲛⲀⲃⲣⲁⲁⲙ ⲁϥⲁⲓⲁⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲁⲙⲁϩⲓ ⲁϥ⳿ⲁϣⲁⲓ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲭⲏ ⲙⲓ.
18 பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான்.
ⲓ̅ⲏ̅ϣⲁⲛⲧⲉϥⲧⲱⲛϥ ⳿ⲛϫⲉ ⲕⲉⲟⲩⲣⲟ ⳿ⲉϫⲉⲛ ⲭⲏ ⲙⲓ ⳿ⲛ⳿ϥⲥⲱⲟⲩⲛ ⲁⲛ ⳿ⲛⲒⲱⲥⲏⲫ.
19 அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான்.
ⲓ̅ⲑ̅ⲫⲁⲓ ⲁϥϫⲉⲙ ⲟⲩ⳿ⲥⲃⲱ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲉⲛⲅⲉⲛⲟⲥ ⲁϥ⳿ⲧϩⲉⲙⲕⲟ ⳿ⲛⲛⲉⲛⲓⲟϯ ⲉⲑⲣⲟⲩϩⲓⲟⲩ⳿Ⲓ ⳿ⲛⲛⲟⲩⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙⲧⲁⲛϧⲱⲟⲩ.
20 “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான்.
ⲕ̅⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓⲥⲏⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩⲙⲓⲥⲓ ⳿ⲙⲘⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉ ⲟⲩⲁⲥⲧⲓⲟⲥ ⲡⲉ ⳿ⲙⲪϯ ⲫⲁⲓ ⲁⲩϣⲁⲛⲟⲩϣϥ ⳿ⲛⲅ̅ ⳿ⲛ⳿ⲁⲃⲟⲧ ϧⲉⲛ ⳿ⲡⲏⲓ ⳿ⲙⲡⲉϥⲓⲱⲧ.
21 பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள்.
ⲕ̅ⲁ̅⳿ⲉⲧⲁⲩϩⲓⲧϥ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲥⲟⲗϥ ⳿ⲛϫⲉ ⳿ⲧϣⲉⲣⲓ ⳿ⲙⲫⲁⲣⲁⲱ.
22 எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான்.
ⲕ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲧⲥⲁⲃⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲉ⳿ⲥⲃⲱ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲣⲉⲙ⳿ⲛⲬⲏⲙⲓ ⲛⲁϥϫⲟⲣ ⲡⲉ ϧⲉⲛ ⲛⲉϥⲥⲁϫⲓ ⲛⲉⲙ ⲛⲉϥ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ.
23 “மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான்.
ⲕ̅ⲅ̅⳿ⲉⲧⲁⲩϫⲱⲕ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲙ̅ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲁⲥ⳿ⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲉϥϩⲏⲧ ⳿ⲉϫⲉⲙ⳿ⲡϣⲓⲛⲓ ⳿ⲛⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲙⲠⲓ̅ⲥ̅ⲗ̅.
24 அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான்.
ⲕ̅ⲇ̅⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⲇⲉ ⲟⲩⲁⲓ ⲉⲩϭⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲟⲛⲥ ⲁϥϣⲉⲛϩⲏⲧ ⲁϥ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩϭⲓ ⳿ⲙ⳿ⲡϣⲓϣ ⳿ⲙⲫⲏ⳿ⲉⲛⲁⲩ⳿ⲧϩⲉⲙⲕⲟ ⳿ⲙⲙⲟϥ ⲁϥϧⲱⲧⲉⲃ ⳿ⲙⲡⲓⲣⲉⲙ⳿ⲛⲭⲏⲙⲓ.
25 தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை.
ⲕ̅ⲉ̅⳿ⲉⲛⲁϥⲙⲉⲩⲓ ⲇⲉ ⲡⲉ ϫⲉ ⲥⲉⲛⲁⲕⲁϯ ⳿ⲛϫⲉ ⲛⲉϥ⳿ⲥⲛⲏⲟⲩ ϫⲉ Ⲫϯ ⲛⲁϯ ⳿ⲛⲟⲩⲟⲩϫⲁⲓ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧϥ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⳿ⲙⲡⲟⲩⲕⲁϯ.
26 மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான்.
ⲕ̅ⲋ̅ⲡⲉϥⲣⲁⲥϯ ⲇⲉ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉϩⲁⲛⲕⲉ ⲭⲱⲟⲩⲛⲓ ⲉⲩ⳿ⲙⲗⲁϧ ⲟⲩⲟϩ ⲛⲁϥϩⲱⲧⲡ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲡⲉ ⳿ⲉⲟⲩϩⲓⲣⲏⲛⲏ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲁⲛⲣⲱⲙⲓ ⳿ⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⲧⲉⲧⲉⲛ ϭⲓ ⳿ⲛⲛⲉⲧⲉⲛ⳿ⲉⲣⲏⲟⲩ ⳿ⲛϫⲟⲛⲥ.
27 “ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?
ⲕ̅ⲍ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲧϭⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛϫⲟⲛⲥ ⲁϥϫⲟⲗϥ ⳿ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⳿ⲉⲧⲁϥⲭⲁⲕ ⳿ⲛⲁⲣⲭⲱⲛ ⲓⲉ ⲣⲉϥϯϩⲁⲡ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲛ.
28 நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ என்று கேட்டான்.
ⲕ̅ⲏ̅ⲙⲏⲉⲕⲟⲩⲱϣ ⳿ⲉϧⲟⲑⲃⲉⲧ ⳿ⲛⲑⲟⲕ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲁⲕϧⲱⲧⲉⲃ ⳿ⲙⲡⲓⲣⲉⲙ⳿ⲛⲬⲏⲙⲓ ⳿ⲛⲥⲁϥ.
29 இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
ⲕ̅ⲑ̅ⲁϥⲫⲱⲧ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ϧⲉⲛ ⲡⲁⲓⲥⲁϫⲓ ⲁϥⲉⲣⲣⲉⲙ⳿ⲛϫⲱⲓⲗⲓ ϧⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⳿ⲙⲙⲁⲇⲓⲁⲙ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲁϥ⳿ϫⲫⲉ ϣⲏⲣⲓ ⲃ̅ ⳿ⲙⲙⲁⲩ.
30 “நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது.
ⲗ̅⳿ⲉⲧⲁⲩϫⲱⲕ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲙ̅ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ ⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ⳿ⲡϣⲁϥⲉ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲧⲱⲟⲩ ⳿ⲛⲥⲓⲛⲁ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ϧⲉⲛ ⲟⲩϣⲁϩ ⳿ⲛ⳿ⲭⲣⲱⲙ ϩⲓϫⲉⲛ ⲟⲩⲃⲁⲧⲟⲥ.
31 அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்:
ⲗ̅ⲁ̅Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲡⲓϩⲟⲣⲁⲙⲁ ⲁϥⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲉϥⲛⲁ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉϯⲛⲓⲁⲧϥ ⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲟⲩ⳿ⲥⲙⲏ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
32 ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை.
ⲗ̅ⲃ̅ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ Ⲫϯ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲕⲓⲟϯ Ⲫϯ ⳿ⲛ⳿Ⲁⲃⲣⲁⲁⲙ ⲛⲉⲙ Ⲫϯ ⳿ⲛ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⲛⲉⲙ Ⲫϯ ⳿ⲛⲒⲁⲕⲱⲃ ⲁϥ⳿ⲥⲑⲉⲣⲧⲉⲣ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲙⲡⲉϥⲉⲣⲧⲟⲗⲙⲁⲛ ⳿ⲉϯ⳿ⲛⲓⲁⲧϥ.
33 “அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது.
ⲗ̅ⲅ̅ⲡⲉϫⲉ Ⲡ⳪ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲃⲱⲗ ⳿ⲙⲡⲓⲑⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗϩⲓ ⲛⲉⲕϭⲁⲗⲁⲩϫ ⲡⲓⲙⲁ ⲅⲁⲣ ⳿ⲉⲧⲉⲕ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲕ ϩⲓϫⲱϥ ⲟⲩⲕⲁϩⲓ ⲉϥⲟⲩⲁⲃ ⲡⲉ.
34 எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ என்றார்.
ⲗ̅ⲇ̅ϧⲉⲛ ⲟⲩⲛⲁⲩ ⲁⲓⲛⲁⲩ ⳿ⲉ⳿ⲡ⳿ⲧϩⲉⲙⲕⲟ ⳿ⲙⲡⲁⲗⲁⲟⲥ ⲉⲧϧⲉⲛ ⲭⲏ ⲙⲓ ⲟⲩⲟϩ ⲁⲓⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲟⲩϥⲓ⳿ⲁϩⲟⲙ ⲁⲓ⳿ⲓ ⳿ⲉⲡⲉⲥⲏⲧ ⳿ⲉⲛⲁϩⲙⲟⲩ ϯⲛⲟⲩ ⲇⲉ ⳿ⲁⲙⲟⲩ ⳿ⲛⲧⲁⲟⲩ⳿ⲟⲣⲡⲕ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲬⲏⲙⲓ.
35 “இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார்.
ⲗ̅ⲉ̅ⲫⲁⲓ ⲡⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲉⲧⲁⲩϫⲟⲗϥ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲁϥⲭⲁⲕ ⳿ⲛⲁⲣⲭⲱⲛ ⲓⲉ ⲣⲉϥϯϩⲁⲡ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲛ ⲫⲁⲓ ⲇⲉ ⳿ⲁ Ⲫϯ ⲧⲁⲟⲩⲟϥ ⳿ⲛⲁⲣⲭⲱⲛ ⲛⲉⲙ ⲣⲉϥⲥⲱϯ ϧⲉⲛ ⳿ⲧϫⲓϫ ⳿ⲙⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲫⲏ⳿ⲉⲧⲁϥⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ⲡⲓⲃⲁⲧⲟⲥ.
36 மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான்.
ⲗ̅ⲋ̅ⲫⲏ⳿ⲉⲧⲁϥ⳿ⲉⲛⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉⲁϥ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛϩⲁⲛⲙⲏⲓⲛⲓ ⲛⲉⲙ ϩⲁⲛ⳿ϣⲫⲏⲣⲓ ϧⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⳿ⲛⲬⲏⲙⲓ ⲛⲉⲙ ⳿ⲫⲓⲟⲙ ⳿ⲛϣⲁⲣⲓ ⲛⲉⲙ ϧⲉⲛ ⲡϣⲁϥⲉ ⳿ⲛⲙ̅ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ.
37 “இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’ என்று சொன்னவன்.
ⲗ̅ⲍ̅ⲫⲁⲓ ⲡⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲉⲧⲁϥϫⲟⲥ ⳿ⲛⲛⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲙⲠⲓ̅ⲥ̅ⲗ̅ ϫⲉ ⳿ⲉⲣⲉ Ⲫϯ ⲧⲟⲩⲛⲟⲥ ⲟⲩ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲉⲧⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲁ ⲡⲁⲣⲏϯ ⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱϥ.
38 பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே.
ⲗ̅ⲏ̅ⲫⲁⲓ ⲡⲉⲧⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ϯⲉⲕ⳿ⲕⲗⲏⲥⲓ⳿ⲁ ϩⲓ ⳿ⲡϣⲁϥⲉ ⲛⲉⲙ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲧⲥⲁϫⲓ ⲛⲉⲙⲁϥ ϩⲓϫⲉⲛ ⳿ⲡⲧⲱⲟⲩ ⳿ⲛⲥⲓⲛⲁ ⲛⲉⲙ ⲛⲉⲛⲓⲟϯ ⲫⲁⲓ ⳿ⲉⲧⲁϥϭⲓ ⳿ⲛϩⲁⲛⲥⲁϫⲓ ⳿ⲛⲱⲛϧ ⳿ⲉⲧⲏⲓⲧⲟⲩ ⲛⲱⲧⲉⲛ.
39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.
ⲗ̅ⲑ̅ⲫⲁⲓ ⳿ⲉⲧⲉ ⳿ⲙⲡⲟⲩⲟⲩⲱϣ ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱϥ ⳿ⲛϫⲉ ⲛⲉⲛⲓⲟϯ ⲁⲗⲗⲁ ⲁⲩⲭⲁϥ ⲟⲩⲟϩ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ϧⲉⲛ ⲡⲟⲩϩⲏⲧ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲬⲏⲙⲓ.
40 அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ என்றார்கள்.
ⲙ̅ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛ⳿ⲁ⳿ⲁⲣⲱⲛ ϫⲉ ⲙⲁⲑⲁⲙⲓ⳿ⲟ ⲛⲁⲛ ⳿ⲛϩⲁⲛⲛⲟⲩϯ ⲛⲁⲓ ⲉⲑⲛⲁⲥⲱⲕ ϧⲁϫⲱⲛ ⲫⲁⲓ ⲅⲁⲣ ⲡⲉ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲉⲧⲁϥ⳿ⲉⲛⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⳿ⲛⲬⲏⲙⲓ ⳿ⲛⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⳿ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲟϥ.
41 அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள்.
ⲙ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲑⲁⲙⲓ⳿ⲟ ⲛⲱⲟⲩ ⳿ⲛⲟⲩⲙⲁⲥⲓ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓⲛⲓ ⳿ⲛⲟⲩϣⲟⲩϣⲱⲟⲩϣⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲙⲡⲓ⳿ⲓⲇⲱⲗⲟⲛ ⲟⲩⲟϩ ⲁⲩⲟⲩⲛⲟϥ ϧⲉⲛ ⲛⲓ⳿ϩⲃⲏⲟⲩⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲟⲩϫⲓϫ.
42 அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது: “இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது, எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
ⲙ̅ⲃ̅ⲁϥⲕⲟⲧⲟⲩ ⳿ⲛϫⲉ Ⲫϯ ⳿ⲉϣⲉⲙϣⲓ ⳿ⲛϯ ⳿ⲥⲧⲣⲁⲧⲓ⳿ⲁ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲫⲉ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϩⲓ ⳿ⲡϫⲱⲙ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲉ ⲙⲏ ϩⲁⲛϧⲟⲗϧⲉⲗ ⲛⲉⲙ ϩⲁⲛϣⲟⲩϣⲱⲟⲩϣⲓ ⳿ⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲉⲛⲟⲩ ⲛⲏⲓ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϩⲓ ⳿ⲡϣⲁϥⲉ ⳿ⲛⲙ̅ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ ⳿ⲡⲏⲓ ⳿ⲙⲡⲓⲥ̅ⲗ̅.
43 நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும், உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே. இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே. எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி அனுப்புவேன்.
ⲙ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲁⲧⲉⲧⲉⲛϭⲓ ⳿ⲛϯ⳿ⲥⲕⲩⲛⲏ⳿ⲛⲧⲉ ⲙⲟⲗⲟⲭ ⲛⲉⲙ ⲡⲓⲥⲓⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲟⲩϯ ⲣⲏⲫⲁⲛ ⲛⲓⲧⲩⲡⲟⲥ ⲉⲧ⳿ⲁⲣⲉⲧⲉⲛⲑⲁⲙⲓⲱⲟⲩ ⳿ⲉⲟⲩⲱϣⲧ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲉⲓ⳿ⲉⲟⲩ⳿ⲉⲧⲉⲃ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉⲛⲓⲥⲁ ⳿ⲛⲧⲉ ⲃⲁⲃⲩⲗⲱⲛ.
44 “நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது.
ⲙ̅ⲇ̅ϯ⳿ⲥⲕⲩⲛⲏ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲧⲙⲉⲑⲣⲉ ⲑⲏ⳿ⲉⲛⲁⲥ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲛⲓⲟϯ ϩⲓ ⳿ⲡϣⲁϥⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲁϥⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧⲥⲁϫⲓ ⲛⲉⲙ Ⲙⲱ⳿ⲩⲥⲏⲥ ⳿ⲉⲑⲁⲙⲓⲟⲥ ⲕⲁⲧⲁ ⲡⲓⲧⲩⲡⲟⲥ ⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ.
45 நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது.
ⲙ̅ⲉ̅ⲑⲁⲓ ⳿ⲉⲧⲁⲩⲟⲗⲥ ⳿ⲉϧⲟⲩⲛ ⲛⲉⲙⲱⲟⲩ ⳿ⲉⲁⲩϣⲟⲡⲥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲉⲛⲓⲟϯ ⲛⲉⲙ ⲓⲏⲥⲟⲩ ϧⲉⲛ ⲡⲓⲁⲙⲁϩⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲉⲑⲛⲟⲥ ⲛⲏ⳿ⲉⲧⲁ Ⲫϯ ϩⲓⲧⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙ⳿ⲡϩⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲛⲓⲟϯ ϣⲁ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ Ⲇⲁⲩⲓⲇ.
46 தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான்.
ⲙ̅ⲋ̅ⲫⲏ⳿ⲉⲧⲁϥϫⲓⲙⲓ ⳿ⲛⲟⲩ⳿ϩⲙⲟⲧ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲪϯ ⲁϥⲉⲣ⳿ⲉⲧⲓⲛ ⳿ⲉⲑⲁⲙⲓⲟ ⳿ⲛⲟⲩⲙⲁ ⳿ⲛϣⲱⲡⲓ ⳿ⲙⲪϯ ⳿ⲛⲒⲁⲕⲱⲃ.
47 ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
ⲙ̅ⲍ̅Ⲥⲟⲗⲟⲙⲱⲛ ⲇⲉ ⲁϥⲕⲉⲧ ⲟⲩⲏⲓ ⲛⲁϥ.
48 “எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
ⲙ̅ⲏ̅ⲁⲗⲗⲁ ⲛⲁⲣⲉ ⲡⲉⲧϭⲟⲥⲓ ϣⲟⲡ ⲁⲛ ϧⲉⲛ ϩⲁⲛⲙⲟⲩⲛⲕ ⳿ⲛϫⲓϫ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲉ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
49 “‘வானம் எனது அரியணை, பூமி எனது பாதபீடம். நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்? நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
ⲙ̅ⲑ̅ϫⲉ ⳿ⲧⲫⲉ ⲡⲉ ⲡⲁⲑⲣⲟⲛⲟⲥ ⳿ⲡⲕⲁϩⲓ ⲇⲉ ⲡⲉ ⳿ⲫⲙⲁ ⳿ⲛⲥⲉⲙⲛⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲁϭⲁⲗⲁⲩϫ ⲁϣ ⳿ⲛⲏⲓ ⲫⲏ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲕⲟⲧϥ ⲛⲏⲓ ⲡⲉϫⲉ Ⲡ⳪ ⲓⲉ ⲁϣ ⲡⲉ ⳿ⲫⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲁⲙⲁ ⳿ⲛⲉⲙⲧⲟⲛ.
50 இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’ என்று கர்த்தர் கேட்கிறார்.
ⲛ̅ⲙⲏⲧⲁϫⲓϫ ⲁⲛ ⲁⲥⲑⲁⲙⲓ⳿ⲉ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ.
51 “அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்!
ⲛ̅ⲁ̅ⲛⲓⲛⲁϣϯ ⲛⲁϩⲃⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲁⲧⲥⲉⲃⲓ ϧⲉⲛ ⲡⲟⲩⲕⲉϩⲏⲧ ⲛⲉⲙ ⲛⲟⲩⲕⲉⲙⲁϣϫ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲧⲉⲧⲉⲛϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲉⲛ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲕⲉⲓⲟϯ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ.
52 உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள்.
ⲛ̅ⲃ̅ⲛⲓⲙ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⳿ⲉⲧⲉ ⳿ⲙⲡⲉ ⲛⲉⲧⲉⲛⲓⲟϯ ϭⲟϫⲓ ⳿ⲛⲥⲱϥ ⲟⲩⲟϩ ⲁⲩϧⲱⲧⲉⲃ ⳿ⲛⲛⲏ⳿ⲉⲧⲁⲩⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲛϩⲓⲱⲓϣ ⳿ⲙ⳿ⲡϫⲓⲛ⳿Ⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲓ⳿ⲑⲙⲏⲓ ⲫⲁⲓ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲉⲧ⳿ⲁⲣⲉⲧⲉⲛⲧⲏⲓϥ ⲟⲩⲟϩ ⳿ⲁⲣⲉⲧⲉⲛϧⲟⲑⲃⲉϥ.
53 இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான்.
ⲛ̅ⲅ̅⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⳿ⲁⲣⲉⲧⲉⲛϭⲓ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ ⳿ⲉϩⲁⲛⲑⲱϣ ⳿ⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲙⲡⲉⲧⲉⲛ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲟϥ.
54 அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள்.
ⲛ̅ⲇ̅ⲛⲁⲓ ⲇⲉ ⳿ⲉⲧⲁⲩⲥⲟⲑⲙⲟⲩ ⲛⲁⲩϣⲟⲡϣⲉⲡ ⳿ⲙⲡⲟⲩϩⲏⲧ ⲟⲩⲟϩ ⲛⲁⲩ⳿ϧⲣⲁϫⲣⲉϫ ⳿ⲛⲛⲟⲩⲛⲁϫϩⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ.
55 ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான்.
ⲛ̅ⲉ̅⳿ⲥⲧⲉⲫⲁⲛⲟⲥ ⲇⲉ ⲉϥⲙⲉϩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⲛⲉⲙ ⳿ⲫⲛⲁϩϯ ⲁϥⲥⲟⲙⲥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲁϥⲛⲁⲩ ⳿ⲉ⳿ⲡ⳿ⲱⲟⲩ ⳿ⲙⲪϯ ⲟⲩⲟϩ Ⲓⲏ̅ⲥ̅ ⲉϥ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⲥⲁⲟⲩ⳿ⲓⲛⲁⲙ ⳿ⲙⲪϯ.
56 “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான்.
ⲛ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ϯⲛⲁⲩ ⳿ⲉⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲉⲩⲟⲩⲏⲛ ⲟⲩⲟϩ Ⲡ̇ϣⲏⲣⲓ ⳿ⲙⲪ̇ⲣⲱⲙⲓ ⲉϥ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⲥⲁⲟⲩ⳿ⲓⲛⲁⲙ ⳿ⲙⲪϯ.
57 இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள்.
ⲛ̅ⲍ̅ⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲧⲏⲣⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ⲁⲩ⳿ⲁⲙⲁϩⲓ ⳿ⲛⲛⲟⲩⲙⲁϣϫ ⲟⲩⲟϩ ⲁⲩϭⲟϫⲓ ⲉⲩⲥⲟⲡ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ.
58 பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள்.
ⲛ̅ⲏ̅ⲁⲩϩⲓⲧϥ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲛϯⲃⲁⲕⲓ ⲁⲩϩⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉϫⲱϥ ⲟⲩⲟϩ ⲛⲓⲙⲉⲑⲣⲉⲩ ⲁⲩⲭⲱ ⳿ⲛⲛⲟⲩ⳿ϩⲃⲱⲥ ϧⲁⲣⲁⲧϥ ⳿ⲛⲟⲩϧⲉⲗϣ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲥⲁⲩⲗⲟⲥ.
59 அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான்.
ⲛ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲁⲩϩⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉϫⲉⲛ ⳿ⲥⲧⲉⲫⲁⲛⲟⲥ ⲉϥϯϩⲟ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡ⳪ Ⲓⲏ̅ⲥ̅ ϣⲉⲡ ⲡⲁⲡ͞ⲛⲁ̅ ⳿ⲉⲣⲟⲕ.
60 பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.
ⲝ̅ⲁϥϩⲓⲧϥ ⳿ⲉϫⲉⲛ ⲛⲉϥⲕⲉⲗⲓ ⲁϥⲱϣ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ϫⲉ Ⲡ⳪ ⳿ⲛⲛⲉⲕⲉⲡ ⲡⲁⲓⲛⲟⲃⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲫⲁⲓ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥϫⲟϥ ⲁϥⲉⲛⲕⲟⲧ.

< அப்போஸ்தலர் 7 >