< لُوکَح 15 >

تَدا کَرَسَنْچایِنَح پاپِنَشْچَ لوکا اُپَدیشْکَتھاں شْروتُں یِیشوح سَمِیپَمْ آگَچّھَنْ۔ 1
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
تَتَح پھِرُوشِنَ اُپادھْیایاشْچَ وِوَدَماناح کَتھَیاماسُح ایشَ مانُشَح پاپِبھِح سَہَ پْرَنَیَں کرِتْوا تَیح سارْدّھَں بھُںکْتے۔ 2
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
تَدا سَ تیبھْیَ اِماں درِشْٹانْتَکَتھاں کَتھِتَوانْ، 3
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
کَسْیَچِتْ شَتَمیشیشُ تِشْٹھَتْمُ تیشامیکَں سَ یَدِ ہارَیَتِ تَرْہِ مَدھْییپْرانْتَرَمْ ایکونَشَتَمیشانْ وِہایَ ہارِتَمیشَسْیَ اُدّیشَپْراپْتِپَرْیَّنَتَں نَ گَویشَیَتِ، ایتادرِشو لوکو یُشْماکَں مَدھْیے کَ آسْتے؟ 4
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
تَسْیودّیشَں پْراپْیَ ہرِشْٹَمَناسْتَں سْکَنْدھے نِدھایَ سْوَسْتھانَمْ آنِییَ بَنْدھُبانْدھَوَسَمِیپَواسِنَ آہُویَ وَکْتِ، 5
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
ہارِتَں میشَں پْراپْتوہَمْ اَتو ہیتو رْمَیا سارْدّھَمْ آنَنْدَتَ۔ 6
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
تَدْوَدَہَں یُشْمانْ وَدامِ، ییشاں مَنَحپَراوَرْتَّنَسْیَ پْرَیوجَنَں ناسْتِ، تادرِشَیکونَشَتَدھارْمِّکَکارَنادْ یَ آنَنْدَسْتَسْمادْ ایکَسْیَ مَنَحپَرِوَرْتِّنَح پاپِنَح کارَناتْ سْوَرْگے دھِکانَنْدو جایَتے۔ 7
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
اَپَرَنْچَ دَشاناں رُوپْیَکھَنْڈانامْ ایکَکھَنْڈے ہارِتے پْرَدِیپَں پْرَجْوالْیَ گرِہَں سَمّارْجْیَ تَسْیَ پْراپْتِں یاوَدْ یَتْنینَ نَ گَویشَیَتِ، ایتادرِشِی یوشِتْ کاسْتے؟ 8
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
پْراپْتے سَتِ بَنْدھُبانْدھَوَسَمِیپَواسِنِیراہُویَ کَتھَیَتِ، ہارِتَں رُوپْیَکھَنْڈَں پْراپْتاہَں تَسْمادیوَ مَیا سارْدّھَمْ آنَنْدَتَ۔ 9
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
تَدْوَدَہَں یُشْمانْ وْیاہَرامِ، ایکینَ پاپِنا مَنَسِ پَرِوَرْتِّتے، اِیشْوَرَسْیَ دُوتاناں مَدھْییپْیانَنْدو جایَتے۔ 10
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
اَپَرَنْچَ سَ کَتھَیاماسَ، کَسْیَچِدْ دْوَو پُتْراواسْتاں، 11
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
تَیوح کَنِشْٹھَح پُتْرَح پِتْرے کَتھَیاماسَ، ہے پِتَسْتَوَ سَمْپَتّیا یَمَںشَں پْراپْسْیامْیَہَں وِبھَجْیَ تَں دیہِ، تَتَح پِتا نِجاں سَمْپَتِّں وِبھَجْیَ تابھْیاں دَدَو۔ 12
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
کَتِپَیاتْ کالاتْ پَرَں سَ کَنِشْٹھَپُتْرَح سَمَسْتَں دھَنَں سَںگرِہْیَ دُورَدیشَں گَتْوا دُشْٹاچَرَنینَ سَرْوّاں سَمْپَتِّں ناشَیاماسَ۔ 13
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
تَسْیَ سَرْوَّدھَنے وْیَیَں گَتے تَدّیشے مَہادُرْبھِکْشَں بَبھُووَ، تَتَسْتَسْیَ دَینْیَدَشا بھَوِتُمْ آریبھے۔ 14
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
تَتَح پَرَں سَ گَتْوا تَدّیشِییَں گرِہَسْتھَمیکَمْ آشْرَیَتَ؛ تَتَح سَتَں شُوکَرَوْرَجَں چارَیِتُں پْرانْتَرَں پْریشَیاماسَ۔ 15
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
کیناپِ تَسْمَے بھَکْشْیاداناتْ سَ شُوکَرَپھَلَوَلْکَلینَ پِچِنْڈَپُورَناں وَوانْچھَ۔ 16
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
شیشے سَ مَنَسِ چیتَناں پْراپْیَ کَتھَیاماسَ، ہا مَمَ پِتُح سَمِیپے کَتِ کَتِ ویتَنَبھُجو داسا یَتھیشْٹَں تَتودھِکَنْچَ بھَکْشْیَں پْراپْنُوَنْتِ کِنْتْوَہَں کْشُدھا مُمُورْشُح۔ 17
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
اَہَمُتّھایَ پِتُح سَمِیپَں گَتْوا کَتھامیتاں وَدِشْیامِ، ہے پِتَرْ اِیشْوَرَسْیَ تَوَ چَ وِرُدّھَں پاپَمَکَرَوَمْ 18
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
تَوَ پُتْرَاِتِ وِکھْیاتو بھَوِتُں نَ یوگْیوسْمِ چَ، ماں تَوَ وَیتَنِکَں داسَں کرِتْوا سْتھاپَیَ۔ 19
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
پَشْچاتْ سَ اُتّھایَ پِتُح سَمِیپَں جَگامَ؛ تَتَسْتَسْیَ پِتاتِدُورے تَں نِرِیکْشْیَ دَیانْچَکْرے، دھاوِتْوا تَسْیَ کَنْٹھَں گرِہِیتْوا تَں چُچُمْبَ چَ۔ 20
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
تَدا پُتْرَ اُواچَ، ہے پِتَرْ اِیشْوَرَسْیَ تَوَ چَ وِرُدّھَں پاپَمَکَرَوَں، تَوَ پُتْرَاِتِ وِکھْیاتو بھَوِتُں نَ یوگْیوسْمِ چَ۔ 21
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
کِنْتُ تَسْیَ پِتا نِجَداسانْ آدِدیشَ، سَرْوّوتَّمَوَسْتْرانْیانِییَ پَرِدھاپَیَتَینَں ہَسْتے چانْگُرِییَکَمْ اَرْپَیَتَ پادَیوشْچوپانَہَو سَمَرْپَیَتَ؛ 22
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
پُشْٹَں گووَتْسَمْ آنِییَ مارَیَتَ چَ تَں بھُکْتْوا وَیَمْ آنَنْدامَ۔ 23
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
یَتو مَمَ پُتْرویَمْ اَمْرِیَتَ پُنَرَجِیوِیدْ ہارِتَشْچَ لَبْدھوبھُوتْ تَتَسْتَ آنَنْدِتُمْ آریبھِرے۔ 24
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
تَتْکالے تَسْیَ جْییشْٹھَح پُتْرَح کْشیتْرَ آسِیتْ۔ اَتھَ سَ نِویشَنَسْیَ نِکَٹَں آگَچّھَنْ نرِتْیاناں وادْیانانْچَ شَبْدَں شْرُتْوا 25
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
داسانامْ ایکَمْ آہُویَ پَپْرَچّھَ، کِں کارَنَمَسْیَ؟ 26
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
تَتَح سووادِیتْ، تَوَ بھْراتاگَمَتْ، تَوَ تاتَشْچَ تَں سُشَرِیرَں پْراپْیَ پُشْٹَں گووَتْسَں مارِتَوانْ۔ 27
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
تَتَح سَ پْرَکُپْیَ نِویشَنانْتَح پْرَویشْٹُں نَ سَمّینے؛ تَتَسْتَسْیَ پِتا بَہِراگَتْیَ تَں سادھَیاماسَ۔ 28
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
تَتَح سَ پِتَرَں پْرَتْیُواچَ، پَشْیَ تَوَ کانْچِدَپْیاجْناں نَ وِلَںگھْیَ بَہُونْ وَتْسَرانْ اَہَں تْواں سیوے تَتھاپِ مِتْرَیح سارْدّھَمْ اُتْسَوَں کَرْتُّں کَداپِ چھاگَمیکَمَپِ مَہْیَں نادَداح؛ 29
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
کِنْتُ تَوَ یَح پُتْرو ویشْیاگَمَنادِبھِسْتَوَ سَمْپَتِّمْ اَپَوْیَیِتَوانْ تَسْمِنّاگَتَماتْرے تَسْیَیوَ نِمِتَّں پُشْٹَں گووَتْسَں مارِتَوانْ۔ 30
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
تَدا تَسْیَ پِتاووچَتْ، ہے پُتْرَ تْوَں سَرْوَّدا مَیا سَہاسِ تَسْمانْ مَمَ یَدْیَداسْتے تَتْسَرْوَّں تَوَ۔ 31
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
کِنْتُ تَوایَں بھْراتا مرِتَح پُنَرَجِیوِیدْ ہارِتَشْچَ بھُوتْوا پْراپْتوبھُوتْ، ایتَسْماتْ کارَنادْ اُتْسَوانَنْدَو کَرْتُّمْ اُچِتَمَسْماکَمْ۔ 32
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< لُوکَح 15 >