< ལཱུཀཿ 15 >

1 ཏདཱ ཀརསཉྩཱཡིནཿ པཱཔིནཤྩ ལོཀཱ ཨུཔདེཤྐཐཱཾ ཤྲོཏུཾ ཡཱིཤོཿ སམཱིཔམ྄ ཨཱགཙྪན྄།
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 ཏཏཿ ཕིརཱུཤིན ཨུཔཱདྷྱཱཡཱཤྩ ཝིཝདམཱནཱཿ ཀཐཡཱམཱསུཿ ཨེཥ མཱནུཥཿ པཱཔིབྷིཿ སཧ པྲཎཡཾ ཀྲྀཏྭཱ ཏཻཿ སཱརྡྡྷཾ བྷུཾཀྟེ།
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 ཏདཱ ས ཏེབྷྱ ཨིམཱཾ དྲྀཥྚཱནྟཀཐཱཾ ཀཐིཏཝཱན྄,
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 ཀསྱཙིཏ྄ ཤཏམེཥེཥུ ཏིཥྛཏྨུ ཏེཥཱམེཀཾ ས ཡདི ཧཱརཡཏི ཏརྷི མདྷྱེཔྲཱནྟརམ྄ ཨེཀོནཤཏམེཥཱན྄ ཝིཧཱཡ ཧཱརིཏམེཥསྱ ཨུདྡེཤཔྲཱཔྟིཔཪྻྱནཏཾ ན གཝེཥཡཏི, ཨེཏཱདྲྀཤོ ལོཀོ ཡུཥྨཱཀཾ མདྷྱེ ཀ ཨཱསྟེ?
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 ཏསྱོདྡེཤཾ པྲཱཔྱ ཧྲྀཥྚམནཱསྟཾ སྐནྡྷེ ནིདྷཱཡ སྭསྠཱནམ྄ ཨཱནཱིཡ བནྡྷུབཱནྡྷཝསམཱིཔཝཱསིན ཨཱཧཱུཡ ཝཀྟི,
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 ཧཱརིཏཾ མེཥཾ པྲཱཔྟོཧམ྄ ཨཏོ ཧེཏོ རྨཡཱ སཱརྡྡྷམ྄ ཨཱནནྡཏ།
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 ཏདྭདཧཾ ཡུཥྨཱན྄ ཝདཱམི, ཡེཥཱཾ མནཿཔརཱཝརྟྟནསྱ པྲཡོཛནཾ ནཱསྟི, ཏཱདྲྀཤཻཀོནཤཏདྷཱརྨྨིཀཀཱརཎཱད྄ ཡ ཨཱནནྡསྟསྨཱད྄ ཨེཀསྱ མནཿཔརིཝརྟྟིནཿ པཱཔིནཿ ཀཱརཎཱཏ྄ སྭརྒེ ྅དྷིཀཱནནྡོ ཛཱཡཏེ།
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 ཨཔརཉྩ དཤཱནཱཾ རཱུཔྱཁཎྜཱནཱམ྄ ཨེཀཁཎྜེ ཧཱརིཏེ པྲདཱིཔཾ པྲཛྭཱལྱ གྲྀཧཾ སམྨཱརྫྱ ཏསྱ པྲཱཔྟིཾ ཡཱཝད྄ ཡཏྣེན ན གཝེཥཡཏི, ཨེཏཱདྲྀཤཱི ཡོཥིཏ྄ ཀཱསྟེ?
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 པྲཱཔྟེ སཏི བནྡྷུབཱནྡྷཝསམཱིཔཝཱསིནཱིརཱཧཱུཡ ཀཐཡཏི, ཧཱརིཏཾ རཱུཔྱཁཎྜཾ པྲཱཔྟཱཧཾ ཏསྨཱདེཝ མཡཱ སཱརྡྡྷམ྄ ཨཱནནྡཏ།
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 ཏདྭདཧཾ ཡུཥྨཱན྄ ཝྱཱཧརཱམི, ཨེཀེན པཱཔིནཱ མནསི པརིཝརྟྟིཏེ, ཨཱིཤྭརསྱ དཱུཏཱནཱཾ མདྷྱེཔྱཱནནྡོ ཛཱཡཏེ།
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 ཨཔརཉྩ ས ཀཐཡཱམཱས, ཀསྱཙིད྄ དྭཽ པུཏྲཱཝཱསྟཱཾ,
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 ཏཡོཿ ཀནིཥྛཿ པུཏྲཿ པིཏྲེ ཀཐཡཱམཱས, ཧེ པིཏསྟཝ སམྤཏྟྱཱ ཡམཾཤཾ པྲཱཔྶྱཱམྱཧཾ ཝིབྷཛྱ ཏཾ དེཧི, ཏཏཿ པིཏཱ ནིཛཱཾ སམྤཏྟིཾ ཝིབྷཛྱ ཏཱབྷྱཱཾ དདཽ།
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 ཀཏིཔཡཱཏ྄ ཀཱལཱཏ྄ པརཾ ས ཀནིཥྛཔུཏྲཿ སམསྟཾ དྷནཾ སཾགྲྀཧྱ དཱུརདེཤཾ གཏྭཱ དུཥྚཱཙརཎེན སཪྻྭཱཾ སམྤཏྟིཾ ནཱཤཡཱམཱས།
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 ཏསྱ སཪྻྭདྷནེ ཝྱཡཾ གཏེ ཏདྡེཤེ མཧཱདུརྦྷིཀྵཾ བབྷཱུཝ, ཏཏསྟསྱ དཻནྱདཤཱ བྷཝིཏུམ྄ ཨཱརེབྷེ།
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 ཏཏཿ པརཾ ས གཏྭཱ ཏདྡེཤཱིཡཾ གྲྀཧསྠམེཀམ྄ ཨཱཤྲཡཏ; ཏཏཿ སཏཾ ཤཱུཀརཝྲཛཾ ཙཱརཡིཏུཾ པྲཱནྟརཾ པྲེཥཡཱམཱས།
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 ཀེནཱཔི ཏསྨཻ བྷཀྵྱཱདཱནཱཏ྄ ས ཤཱུཀརཕལཝལྐལེན པིཙིཎྜཔཱུརཎཱཾ ཝཝཱཉྪ།
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 ཤེཥེ ས མནསི ཙེཏནཱཾ པྲཱཔྱ ཀཐཡཱམཱས, ཧཱ མམ པིཏུཿ སམཱིཔེ ཀཏི ཀཏི ཝེཏནབྷུཛོ དཱསཱ ཡཐེཥྚཾ ཏཏོདྷིཀཉྩ བྷཀྵྱཾ པྲཱཔྣུཝནྟི ཀིནྟྭཧཾ ཀྵུདྷཱ མུམཱུརྵུཿ།
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 ཨཧམུཏྠཱཡ པིཏུཿ སམཱིཔཾ གཏྭཱ ཀཐཱམེཏཱཾ ཝདིཥྱཱམི, ཧེ པིཏར྄ ཨཱིཤྭརསྱ ཏཝ ཙ ཝིརུདྡྷཾ པཱཔམཀརཝམ྄
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 ཏཝ པུཏྲཨིཏི ཝིཁྱཱཏོ བྷཝིཏུཾ ན ཡོགྱོསྨི ཙ, མཱཾ ཏཝ ཝཻཏནིཀཾ དཱསཾ ཀྲྀཏྭཱ སྠཱཔཡ།
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 པཤྩཱཏ྄ ས ཨུཏྠཱཡ པིཏུཿ སམཱིཔཾ ཛགཱམ; ཏཏསྟསྱ པིཏཱཏིདཱུརེ ཏཾ ནིརཱིཀྵྱ དཡཱཉྩཀྲེ, དྷཱཝིཏྭཱ ཏསྱ ཀཎྛཾ གྲྀཧཱིཏྭཱ ཏཾ ཙུཙུམྦ ཙ།
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 ཏདཱ པུཏྲ ཨུཝཱཙ, ཧེ པིཏར྄ ཨཱིཤྭརསྱ ཏཝ ཙ ཝིརུདྡྷཾ པཱཔམཀརཝཾ, ཏཝ པུཏྲཨིཏི ཝིཁྱཱཏོ བྷཝིཏུཾ ན ཡོགྱོསྨི ཙ།
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 ཀིནྟུ ཏསྱ པིཏཱ ནིཛདཱསཱན྄ ཨཱདིདེཤ, སཪྻྭོཏྟམཝསྟྲཱཎྱཱནཱིཡ པརིདྷཱཔཡཏཻནཾ ཧསྟེ ཙཱངྒུརཱིཡཀམ྄ ཨརྤཡཏ པཱདཡོཤྩོཔཱནཧཽ སམརྤཡཏ;
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 པུཥྚཾ གོཝཏྶམ྄ ཨཱནཱིཡ མཱརཡཏ ཙ ཏཾ བྷུཀྟྭཱ ཝཡམ྄ ཨཱནནྡཱམ།
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 ཡཏོ མམ པུཏྲོཡམ྄ ཨམྲིཡཏ པུནརཛཱིཝཱིད྄ ཧཱརིཏཤྩ ལབྡྷོབྷཱུཏ྄ ཏཏསྟ ཨཱནནྡིཏུམ྄ ཨཱརེབྷིརེ།
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 ཏཏྐཱལེ ཏསྱ ཛྱེཥྛཿ པུཏྲཿ ཀྵེཏྲ ཨཱསཱིཏ྄། ཨཐ ས ནིཝེཤནསྱ ནིཀཊཾ ཨཱགཙྪན྄ ནྲྀཏྱཱནཱཾ ཝཱདྱཱནཱཉྩ ཤབྡཾ ཤྲུཏྭཱ
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 དཱསཱནཱམ྄ ཨེཀམ྄ ཨཱཧཱུཡ པཔྲཙྪ, ཀིཾ ཀཱརཎམསྱ?
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 ཏཏཿ སོཝཱདཱིཏ྄, ཏཝ བྷྲཱཏཱགམཏ྄, ཏཝ ཏཱཏཤྩ ཏཾ སུཤརཱིརཾ པྲཱཔྱ པུཥྚཾ གོཝཏྶཾ མཱརིཏཝཱན྄།
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 ཏཏཿ ས པྲཀུཔྱ ནིཝེཤནཱནྟཿ པྲཝེཥྚུཾ ན སམྨེནེ; ཏཏསྟསྱ པིཏཱ བཧིརཱགཏྱ ཏཾ སཱདྷཡཱམཱས།
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 ཏཏཿ ས པིཏརཾ པྲཏྱུཝཱཙ, པཤྱ ཏཝ ཀཱཉྩིདཔྱཱཛྙཱཾ ན ཝིལཾགྷྱ བཧཱུན྄ ཝཏྶརཱན྄ ཨཧཾ ཏྭཱཾ སེཝེ ཏཐཱཔི མིཏྲཻཿ སཱརྡྡྷམ྄ ཨུཏྶཝཾ ཀརྟྟུཾ ཀདཱཔི ཚཱགམེཀམཔི མཧྱཾ ནཱདདཱཿ;
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 ཀིནྟུ ཏཝ ཡཿ པུཏྲོ ཝེཤྱཱགམནཱདིབྷིསྟཝ སམྤཏྟིམ྄ ཨཔཝྱཡིཏཝཱན྄ ཏསྨིནྣཱགཏམཱཏྲེ ཏསྱཻཝ ནིམིཏྟཾ པུཥྚཾ གོཝཏྶཾ མཱརིཏཝཱན྄།
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 ཏདཱ ཏསྱ པིཏཱཝོཙཏ྄, ཧེ པུཏྲ ཏྭཾ སཪྻྭདཱ མཡཱ སཧཱསི ཏསྨཱན྄ མམ ཡདྱདཱསྟེ ཏཏྶཪྻྭཾ ཏཝ།
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 ཀིནྟུ ཏཝཱཡཾ བྷྲཱཏཱ མྲྀཏཿ པུནརཛཱིཝཱིད྄ ཧཱརིཏཤྩ བྷཱུཏྭཱ པྲཱཔྟོབྷཱུཏ྄, ཨེཏསྨཱཏ྄ ཀཱརཎཱད྄ ཨུཏྶཝཱནནྡཽ ཀརྟྟུམ྄ ཨུཙིཏམསྨཱཀམ྄།
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< ལཱུཀཿ 15 >