< லூக​: 24 >

1 அத² ஸப்தாஹப்ரத²மதி³நே(அ)திப்ரத்யூஷே தா யோஷித​: ஸம்பாதி³தம்’ ஸுக³ந்தி⁴த்³ரவ்யம்’ க்³ரு’ஹீத்வா தத³ந்யாபி⁴​: கியதீபி⁴​: ஸ்த்ரீபி⁴​: ஸஹ ஸ்²மஸா²நம்’ யயு​: |
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 கிந்து ஸ்²மஸா²நத்³வாராத் பாஷாணமபஸாரிதம்’ த்³ரு’ஷ்ட்வா
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 தா​: ப்ரவிஸ்²ய ப்ரபோ⁴ ர்தே³ஹமப்ராப்ய
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 வ்யாகுலா ப⁴வந்தி ஏதர்ஹி தேஜோமயவஸ்த்ராந்விதௌ த்³வௌ புருஷௌ தாஸாம்’ ஸமீபே ஸமுபஸ்தி²தௌ
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 தஸ்மாத்தா​: ஸ²ங்காயுக்தா பூ⁴மாவதோ⁴முக்²யஸ்யஸ்து²​: | ததா³ தௌ தா ஊசது ர்ம்ரு’தாநாம்’ மத்⁴யே ஜீவந்தம்’ குதோ ம்ரு’க³யத²?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 ஸோத்ர நாஸ்தி ஸ உத³ஸ்தா²த்|
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 பாபிநாம்’ கரேஷு ஸமர்பிதேந க்ருஸே² ஹதேந ச மநுஷ்யபுத்ரேண த்ரு’தீயதி³வஸே ஸ்²மஸா²நாது³த்தா²தவ்யம் இதி கதா²ம்’ ஸ க³லீலி திஷ்ட²ந் யுஷ்மப்⁴யம்’ கதி²தவாந் தாம்’ ஸ்மரத|
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 ததா³ தஸ்ய ஸா கதா² தாஸாம்’ மந​: ஸு ஜாதா|
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 அநந்தரம்’ ஸ்²மஸா²நாத்³ க³த்வா தா ஏகாத³ஸ²ஸி²ஷ்யாதி³ப்⁴ய​: ஸர்வ்வேப்⁴யஸ்தாம்’ வார்த்தாம்’ கத²யாமாஸு​: |
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 மக்³த³லீநீமரியம், யோஹநா, யாகூபோ³ மாதா மரியம் தத³ந்யா​: ஸங்கி³ந்யோ யோஷிதஸ்²ச ப்ரேரிதேப்⁴ய ஏதா​: ஸர்வ்வா வார்த்தா​: கத²யாமாஸு​:
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 கிந்து தாஸாம்’ கதா²ம் அநர்த²காக்²யாநமாத்ரம்’ பு³த்³த்⁴வா கோபி ந ப்ரத்யைத்|
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 ததா³ பிதர உத்தா²ய ஸ்²மஸா²நாந்திகம்’ த³தா⁴வ, தத்ர ச ப்ரஹ்வோ பூ⁴த்வா பார்ஸ்²வைகஸ்தா²பிதம்’ கேவலம்’ வஸ்த்ரம்’ த³த³ர்ஸ²; தஸ்மாதா³ஸ்²சர்ய்யம்’ மந்யமாநோ யத³க⁴டத தந்மநஸி விசாரயந் ப்ரதஸ்தே²|
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 தஸ்மிந்நேவ தி³நே த்³வௌ ஸி²ய்யௌ யிரூஸா²லமஸ்²சதுஷ்க்ரோஸா²ந்தரிதம் இம்மாயுக்³ராமம்’ க³ச்ச²ந்தௌ
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 தாஸாம்’ க⁴டநாநாம்’ கதா²மகத²யதாம்’
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 தயோராலாபவிசாரயோ​: காலே யீஸு²ராக³த்ய தாப்⁴யாம்’ ஸஹ ஜகா³ம
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 கிந்து யதா² தௌ தம்’ ந பரிசிநுதஸ்தத³ர்த²ம்’ தயோ ர்த்³ரு’ஷ்டி​: ஸம்’ருத்³தா⁴|
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 ஸ தௌ ப்ரு’ஷ்டவாந் யுவாம்’ விஷண்ணௌ கிம்’ விசாரயந்தௌ க³ச்ச²த²​: ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 ததஸ்தயோ​: க்லியபாநாமா ப்ரத்யுவாச யிரூஸா²லமபுரே(அ)து⁴நா யாந்யக⁴டந்த த்வம்’ கேவலவிதே³ஸீ² கிம்’ தத்³வ்ரு’த்தாந்தம்’ ந ஜாநாஸி?
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 ஸ பப்ரச்ச² கா க⁴டநா​: ? ததா³ தௌ வக்துமாரேபா⁴தே யீஸு²நாமா யோ நாஸரதீயோ ப⁴விஷ்யத்³வாதீ³ ஈஸ்²வரஸ்ய மாநுஷாணாஞ்ச ஸாக்ஷாத் வாக்யே கர்ம்மணி ச ஸ²க்திமாநாஸீத்
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 தம் அஸ்மாகம்’ ப்ரதா⁴நயாஜகா விசாரகாஸ்²ச கேநாபி ப்ரகாரேண க்ருஸே² வித்³த்⁴வா தஸ்ய ப்ராணாநநாஸ²யந் ததீ³யா க⁴டநா​: ;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 கிந்து ய இஸ்ராயேலீயலோகாந் உத்³தா⁴ரயிஷ்யதி ஸ ஏவாயம் இத்யாஸா²ஸ்மாபி⁴​: க்ரு’தா| தத்³யதா² ததா²ஸ்து தஸ்யா க⁴டநாயா அத்³ய தி³நத்ரயம்’ க³தம்’|
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 அதி⁴கந்த்வஸ்மாகம்’ ஸங்கி³நீநாம்’ கியத்ஸ்த்ரீணாம்’ முகே²ப்⁴யோ(அ)ஸம்ப⁴வவாக்யமித³ம்’ ஸ்²ருதம்’;
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 தா​: ப்ரத்யூஷே ஸ்²மஸா²நம்’ க³த்வா தத்ர தஸ்ய தே³ஹம் அப்ராப்ய வ்யாகு⁴ட்யேத்வா ப்ரோக்தவத்ய​: ஸ்வர்கீ³ஸதூ³தௌ த்³ரு’ஷ்டாவஸ்மாபி⁴ஸ்தௌ சாவாதி³ஷ்டாம்’ ஸ ஜீவிதவாந்|
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 ததோஸ்மாகம்’ கைஸ்²சித் ஸ்²மஸா²நமக³ம்யத தே(அ)பி ஸ்த்ரீணாம்’ வாக்யாநுரூபம்’ த்³ரு’ஷ்டவந்த​: கிந்து தம்’ நாபஸ்²யந்|
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 ததா³ ஸ தாவுவாச, ஹே அபோ³தௌ⁴ ஹே ப⁴விஷ்யத்³வாதி³பி⁴ருக்தவாக்யம்’ ப்ரத்யேதும்’ விலம்ப³மாநௌ;
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 ஏதத்ஸர்வ்வது³​: க²ம்’ பு⁴க்த்வா ஸ்வபூ⁴திப்ராப்தி​: கிம்’ க்²ரீஷ்டஸ்ய ந ந்யாய்யா?
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 தத​: ஸ மூஸாக்³ரந்த²மாரப்⁴ய ஸர்வ்வப⁴விஷ்யத்³வாதி³நாம்’ ஸர்வ்வஸா²ஸ்த்ரே ஸ்வஸ்மிந் லிகி²தாக்²யாநாபி⁴ப்ராயம்’ போ³த⁴யாமாஸ|
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 அத² க³ம்யக்³ராமாப்⁴யர்ணம்’ ப்ராப்ய தேநாக்³ரே க³மநலக்ஷணே த³ர்ஸி²தே
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 தௌ ஸாத⁴யித்வாவத³தாம்’ ஸஹாவாப்⁴யாம்’ திஷ்ட² தி³நே க³தே ஸதி ராத்ரிரபூ⁴த்; தத​: ஸ தாப்⁴யாம்’ ஸார்த்³த⁴ம்’ ஸ்தா²தும்’ க்³ரு’ஹம்’ யயௌ|
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 பஸ்²சாத்³போ⁴ஜநோபவேஸ²காலே ஸ பூபம்’ க்³ரு’ஹீத்வா ஈஸ்²வரகு³ணாந் ஜகா³த³ தஞ்ச ப⁴ம்’க்த்வா தாப்⁴யாம்’ த³தௌ³|
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 ததா³ தயோ ர்த்³ரு’ஷ்டௌ ப்ரஸந்நாயாம்’ தம்’ ப்ரத்யபி⁴ஜ்ஞது​: கிந்து ஸ தயோ​: ஸாக்ஷாத³ந்தர்த³தே⁴|
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 ததஸ்தௌ மிதோ²பி⁴தா⁴தும் ஆரப்³த⁴வந்தௌ க³மநகாலே யதா³ கதா²மகத²யத் ஸா²ஸ்த்ரார்த²ஞ்சபோ³த⁴யத் ததா³வயோ ர்பு³த்³தி⁴​: கிம்’ ந ப்ராஜ்வலத்?
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 தௌ தத்க்ஷணாது³த்தா²ய யிரூஸா²லமபுரம்’ ப்ரத்யாயயது​: , தத்ஸ்தா²நே ஸி²ஷ்யாணாம் ஏகாத³ஸா²நாம்’ ஸங்கி³நாஞ்ச த³ர்ஸ²நம்’ ஜாதம்’|
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 தே ப்ரோசு​: ப்ரபு⁴ருத³திஷ்ட²த்³ இதி ஸத்யம்’ ஸி²மோநே த³ர்ஸ²நமதா³ச்ச|
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 தத​: பத²​: ஸர்வ்வக⁴டநாயா​: பூபப⁴ஞ்ஜநேந தத்பரிசயஸ்ய ச ஸர்வ்வவ்ரு’த்தாந்தம்’ தௌ வக்துமாரேபா⁴தே|
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 இத்த²ம்’ தே பரஸ்பரம்’ வத³ந்தி தத்காலே யீஸு²​: ஸ்வயம்’ தேஷாம்’ மத்⁴ய ப்ரோத்த²ய யுஷ்மாகம்’ கல்யாணம்’ பூ⁴யாத்³ இத்யுவாச,
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 கிந்து பூ⁴தம்’ பஸ்²யாம இத்யநுமாய தே ஸமுத்³விவிஜிரே த்ரேஷுஸ்²ச|
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 ஸ உவாச, குதோ து³​: கி²தா ப⁴வத²? யுஷ்மாகம்’ மந​: ஸு ஸந்தே³ஹ உதே³தி ச குத​: ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 ஏஷோஹம்’, மம கரௌ பஸ்²யத வரம்’ ஸ்ப்ரு’ஷ்ட்வா பஸ்²யத, மம யாத்³ரு’ஸா²நி பஸ்²யத² தாத்³ரு’ஸா²நி பூ⁴தஸ்ய மாம்’ஸாஸ்தீ²நி ந ஸந்தி|
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 இத்யுக்த்வா ஸ ஹஸ்தபாதா³ந் த³ர்ஸ²யாமாஸ|
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 தே(அ)ஸம்ப⁴வம்’ ஜ்ஞாத்வா ஸாநந்தா³ ந ப்ரத்யயந்| தத​: ஸ தாந் பப்ரச்ச², அத்ர யுஷ்மாகம்’ ஸமீபே கா²த்³யம்’ கிஞ்சித³ஸ்தி?
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 ததஸ்தே கியத்³த³க்³த⁴மத்ஸ்யம்’ மது⁴ ச த³து³​:
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 ஸ ததா³தா³ய தேஷாம்’ ஸாக்ஷாத்³ பு³பு⁴ஜே
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 கத²யாமாஸ ச மூஸாவ்யவஸ்தா²யாம்’ ப⁴விஷ்யத்³வாதி³நாம்’ க்³ரந்தே²ஷு கீ³தபுஸ்தகே ச மயி யாநி ஸர்வ்வாணி வசநாநி லிகி²தாநி தத³நுரூபாணி க⁴டிஷ்யந்தே யுஷ்மாபி⁴​: ஸார்த்³த⁴ம்’ ஸ்தி²த்வாஹம்’ யதே³தத்³வாக்யம் அவத³ம்’ ததி³தா³நீம்’ ப்ரத்யக்ஷமபூ⁴த்|
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 அத² தேப்⁴ய​: ஸா²ஸ்த்ரபோ³தா⁴தி⁴காரம்’ த³த்வாவத³த்,
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 க்²ரீஷ்டேநேத்த²ம்’ ம்ரு’தியாதநா போ⁴க்தவ்யா த்ரு’தீயதி³நே ச ஸ்²மஸா²நாது³த்தா²தவ்யஞ்சேதி லிபிரஸ்தி;
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 தந்நாம்நா யிரூஸா²லமமாரப்⁴ய ஸர்வ்வதே³ஸே² மந​: பராவர்த்தநஸ்ய பாபமோசநஸ்ய ச ஸுஸம்’வாத³​: ப்ரசாரயிதவ்ய​: ,
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 ஏஷு ஸர்வ்வேஷு யூயம்’ ஸாக்ஷிண​: |
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 அபரஞ்ச பஸ்²யத பித்ரா யத் ப்ரதிஜ்ஞாதம்’ தத் ப்ரேஷயிஷ்யாமி, அதஏவ யாவத்காலம்’ யூயம்’ ஸ்வர்கீ³யாம்’ ஸ²க்திம்’ ந ப்ராப்ஸ்யத² தாவத்காலம்’ யிரூஸா²லம்நக³ரே திஷ்ட²த|
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 அத² ஸ தாந் பை³த²நீயாபர்ய்யந்தம்’ நீத்வா ஹஸ்தாவுத்தோல்ய ஆஸி²ஷ வக்துமாரேபே⁴
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 ஆஸி²ஷம்’ வத³ந்நேவ ச தேப்⁴ய​: ப்ரு’த²க்³ பூ⁴த்வா ஸ்வர்கா³ய நீதோ(அ)ப⁴வத்|
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 ததா³ தே தம்’ ப⁴ஜமாநா மஹாநந்தே³ந யிரூஸா²லமம்’ ப்ரத்யாஜக்³மு​: |
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 ததோ நிரந்தரம்’ மந்தி³ரே திஷ்ட²ந்த ஈஸ்²வரஸ்ய ப்ரஸ²ம்’ஸாம்’ த⁴ந்யவாத³ஞ்ச கர்த்தம் ஆரேபி⁴ரே| இதி||
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< லூக​: 24 >