< ලූකඃ 24 >

1 අථ සප්තාහප්‍රථමදිනේ(අ)තිප්‍රත්‍යූෂේ තා යෝෂිතඃ සම්පාදිතං සුගන්ධිද්‍රව්‍යං ගෘහීත්වා තදන්‍යාභිඃ කියතීභිඃ ස්ත්‍රීභිඃ සහ ශ්මශානං යයුඃ|
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 කින්තු ශ්මශානද්වාරාත් පාෂාණමපසාරිතං දෘෂ්ට්වා
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 තාඃ ප්‍රවිශ්‍ය ප්‍රභෝ ර්දේහමප්‍රාප්‍ය
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 ව්‍යාකුලා භවන්ති ඒතර්හි තේජෝමයවස්ත්‍රාන්විතෞ ද්වෞ පුරුෂෞ තාසාං සමීපේ සමුපස්ථිතෞ
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 තස්මාත්තාඃ ශඞ්කායුක්තා භූමාවධෝමුඛ්‍යස්‍යස්ථුඃ| තදා තෞ තා ඌචතු ර්මෘතානාං මධ්‍යේ ජීවන්තං කුතෝ මෘගයථ?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 සෝත්‍ර නාස්ති ස උදස්ථාත්|
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 පාපිනාං කරේෂු සමර්පිතේන ක්‍රුශේ හතේන ච මනුෂ්‍යපුත්‍රේණ තෘතීයදිවසේ ශ්මශානාදුත්ථාතව්‍යම් ඉති කථාං ස ගලීලි තිෂ්ඨන් යුෂ්මභ්‍යං කථිතවාන් තාං ස්මරත|
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 තදා තස්‍ය සා කථා තාසාං මනඃසු ජාතා|
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 අනන්තරං ශ්මශානාද් ගත්වා තා ඒකාදශශිෂ්‍යාදිභ්‍යඃ සර්ව්වේභ්‍යස්තාං වාර්ත්තාං කථයාමාසුඃ|
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 මග්දලීනීමරියම්, යෝහනා, යාකූබෝ මාතා මරියම් තදන්‍යාඃ සඞ්ගින්‍යෝ යෝෂිතශ්ච ප්‍රේරිතේභ්‍ය ඒතාඃ සර්ව්වා වාර්ත්තාඃ කථයාමාසුඃ
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 කින්තු තාසාං කථාම් අනර්ථකාඛ්‍යානමාත්‍රං බුද්ධ්වා කෝපි න ප්‍රත්‍යෛත්|
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 තදා පිතර උත්ථාය ශ්මශානාන්තිකං දධාව, තත්‍ර ච ප්‍රහ්වෝ භූත්වා පාර්ශ්වෛකස්ථාපිතං කේවලං වස්ත්‍රං දදර්ශ; තස්මාදාශ්චර‍්‍ය්‍යං මන්‍යමානෝ යදඝටත තන්මනසි විචාරයන් ප්‍රතස්ථේ|
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 තස්මින්නේව දිනේ ද්වෞ ශිය්‍යෞ යිරූශාලමශ්චතුෂ්ක්‍රෝශාන්තරිතම් ඉම්මායුග්‍රාමං ගච්ඡන්තෞ
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 තාසාං ඝටනානාං කථාමකථයතාං
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 තයෝරාලාපවිචාරයෝඃ කාලේ යීශුරාගත්‍ය තාභ්‍යාං සහ ජගාම
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 කින්තු යථා තෞ තං න පරිචිනුතස්තදර්ථං තයෝ ර්දෘෂ්ටිඃ සංරුද්ධා|
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 ස තෞ පෘෂ්ටවාන් යුවාං විෂණ්ණෞ කිං විචාරයන්තෞ ගච්ඡථඃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 තතස්තයෝඃ ක්ලියපානාමා ප්‍රත්‍යුවාච යිරූශාලමපුරේ(අ)ධුනා යාන්‍යඝටන්ත ත්වං කේවලවිදේශී කිං තද්වෘත්තාන්තං න ජානාසි?
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 ස පප්‍රච්ඡ කා ඝටනාඃ? තදා තෞ වක්තුමාරේභාතේ යීශුනාමා යෝ නාසරතීයෝ භවිෂ්‍යද්වාදී ඊශ්වරස්‍ය මානුෂාණාඤ්ච සාක්‍ෂාත් වාක්‍යේ කර්ම්මණි ච ශක්තිමානාසීත්
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 තම් අස්මාකං ප්‍රධානයාජකා විචාරකාශ්ච කේනාපි ප්‍රකාරේණ ක්‍රුශේ විද්ධ්වා තස්‍ය ප්‍රාණානනාශයන් තදීයා ඝටනාඃ;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 කින්තු ය ඉස්‍රායේලීයලෝකාන් උද්ධාරයිෂ්‍යති ස ඒවායම් ඉත්‍යාශාස්මාභිඃ කෘතා| තද්‍යථා තථාස්තු තස්‍යා ඝටනායා අද්‍ය දිනත්‍රයං ගතං|
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 අධිකන්ත්වස්මාකං සඞ්ගිනීනාං කියත්ස්ත්‍රීණාං මුඛේභ්‍යෝ(අ)සම්භවවාක්‍යමිදං ශ්‍රුතං;
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 තාඃ ප්‍රත්‍යූෂේ ශ්මශානං ගත්වා තත්‍ර තස්‍ය දේහම් අප්‍රාප්‍ය ව්‍යාඝුට්‍යේත්වා ප්‍රෝක්තවත්‍යඃ ස්වර්ගීසදූතෞ දෘෂ්ටාවස්මාභිස්තෞ චාවාදිෂ්ටාං ස ජීවිතවාන්|
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 තතෝස්මාකං කෛශ්චිත් ශ්මශානමගම්‍යත තේ(අ)පි ස්ත්‍රීණාං වාක්‍යානුරූපං දෘෂ්ටවන්තඃ කින්තු තං නාපශ්‍යන්|
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 තදා ස තාවුවාච, හේ අබෝධෞ හේ භවිෂ්‍යද්වාදිභිරුක්තවාක්‍යං ප්‍රත්‍යේතුං විලම්බමානෞ;
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 ඒතත්සර්ව්වදුඃඛං භුක්ත්වා ස්වභූතිප්‍රාප්තිඃ කිං ඛ්‍රීෂ්ටස්‍ය න න්‍යාය්‍යා?
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 තතඃ ස මූසාග්‍රන්ථමාරභ්‍ය සර්ව්වභවිෂ්‍යද්වාදිනාං සර්ව්වශාස්ත්‍රේ ස්වස්මින් ලිඛිතාඛ්‍යානාභිප්‍රායං බෝධයාමාස|
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 අථ ගම්‍යග්‍රාමාභ්‍යර්ණං ප්‍රාප්‍ය තේනාග්‍රේ ගමනලක්‍ෂණේ දර්ශිතේ
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 තෞ සාධයිත්වාවදතාං සහාවාභ්‍යාං තිෂ්ඨ දිනේ ගතේ සති රාත්‍රිරභූත්; තතඃ ස තාභ්‍යාං සාර්ද්ධං ස්ථාතුං ගෘහං යයෞ|
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 පශ්චාද්භෝජනෝපවේශකාලේ ස පූපං ගෘහීත්වා ඊශ්වරගුණාන් ජගාද තඤ්ච භංක්ත්වා තාභ්‍යාං දදෞ|
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 තදා තයෝ ර්දෘෂ්ටෞ ප්‍රසන්නායාං තං ප්‍රත්‍යභිඥතුඃ කින්තු ස තයෝඃ සාක්‍ෂාදන්තර්දධේ|
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 තතස්තෞ මිථෝභිධාතුම් ආරබ්ධවන්තෞ ගමනකාලේ යදා කථාමකථයත් ශාස්ත්‍රාර්ථඤ්චබෝධයත් තදාවයෝ ර්බුද්ධිඃ කිං න ප්‍රාජ්වලත්?
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 තෞ තත්ක්‍ෂණාදුත්ථාය යිරූශාලමපුරං ප්‍රත්‍යායයතුඃ, තත්ස්ථානේ ශිෂ්‍යාණාම් ඒකාදශානාං සඞ්ගිනාඤ්ච දර්ශනං ජාතං|
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 තේ ප්‍රෝචුඃ ප්‍රභුරුදතිෂ්ඨද් ඉති සත්‍යං ශිමෝනේ දර්ශනමදාච්ච|
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 තතඃ පථඃ සර්ව්වඝටනායාඃ පූපභඤ්ජනේන තත්පරිචයස්‍ය ච සර්ව්වවෘත්තාන්තං තෞ වක්තුමාරේභාතේ|
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 ඉත්ථං තේ පරස්පරං වදන්ති තත්කාලේ යීශුඃ ස්වයං තේෂාං මධ්‍ය ප්‍රෝත්ථය යුෂ්මාකං කල්‍යාණං භූයාද් ඉත්‍යුවාච,
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 කින්තු භූතං පශ්‍යාම ඉත්‍යනුමාය තේ සමුද්විවිජිරේ ත්‍රේෂුශ්ච|
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 ස උවාච, කුතෝ දුඃඛිතා භවථ? යුෂ්මාකං මනඃසු සන්දේහ උදේති ච කුතඃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 ඒෂෝහං, මම කරෞ පශ්‍යත වරං ස්පෘෂ්ට්වා පශ්‍යත, මම යාදෘශානි පශ්‍යථ තාදෘශානි භූතස්‍ය මාංසාස්ථීනි න සන්ති|
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 ඉත්‍යුක්ත්වා ස හස්තපාදාන් දර්ශයාමාස|
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 තේ(අ)සම්භවං ඥාත්වා සානන්දා න ප්‍රත්‍යයන්| තතඃ ස තාන් පප්‍රච්ඡ, අත්‍ර යුෂ්මාකං සමීපේ ඛාද්‍යං කිඤ්චිදස්ති?
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 තතස්තේ කියද්දග්ධමත්ස්‍යං මධු ච දදුඃ
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 ස තදාදාය තේෂාං සාක්‍ෂාද් බුභුජේ
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 කථයාමාස ච මූසාව්‍යවස්ථායාං භවිෂ්‍යද්වාදිනාං ග්‍රන්ථේෂු ගීතපුස්තකේ ච මයි යානි සර්ව්වාණි වචනානි ලිඛිතානි තදනුරූපාණි ඝටිෂ්‍යන්තේ යුෂ්මාභිඃ සාර්ද්ධං ස්ථිත්වාහං යදේතද්වාක්‍යම් අවදං තදිදානීං ප්‍රත්‍යක්‍ෂමභූත්|
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 අථ තේභ්‍යඃ ශාස්ත්‍රබෝධාධිකාරං දත්වාවදත්,
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 ඛ්‍රීෂ්ටේනේත්ථං මෘතියාතනා භෝක්තව්‍යා තෘතීයදිනේ ච ශ්මශානාදුත්ථාතව්‍යඤ්චේති ලිපිරස්ති;
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 තන්නාම්නා යිරූශාලමමාරභ්‍ය සර්ව්වදේශේ මනඃපරාවර්ත්තනස්‍ය පාපමෝචනස්‍ය ච සුසංවාදඃ ප්‍රචාරයිතව්‍යඃ,
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 ඒෂු සර්ව්වේෂු යූයං සාක්‍ෂිණඃ|
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 අපරඤ්ච පශ්‍යත පිත්‍රා යත් ප්‍රතිඥාතං තත් ප්‍රේෂයිෂ්‍යාමි, අතඒව යාවත්කාලං යූයං ස්වර්ගීයාං ශක්තිං න ප්‍රාප්ස්‍යථ තාවත්කාලං යිරූශාලම්නගරේ තිෂ්ඨත|
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 අථ ස තාන් බෛථනීයාපර‍්‍ය්‍යන්තං නීත්වා හස්තාවුත්තෝල්‍ය ආශිෂ වක්තුමාරේභේ
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 ආශිෂං වදන්නේව ච තේභ්‍යඃ පෘථග් භූත්වා ස්වර්ගාය නීතෝ(අ)භවත්|
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 තදා තේ තං භජමානා මහානන්දේන යිරූශාලමං ප්‍රත්‍යාජග්මුඃ|
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 තතෝ නිරන්තරං මන්දිරේ තිෂ්ඨන්ත ඊශ්වරස්‍ය ප්‍රශංසාං ධන්‍යවාදඤ්ච කර්ත්තම් ආරේභිරේ| ඉති||
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< ලූකඃ 24 >