< ਲੂਕਃ 1 >

1 ਪ੍ਰਥਮਤੋ ਯੇ ਸਾਕ੍ਸ਼਼ਿਣੋ ਵਾਕ੍ਯਪ੍ਰਚਾਰਕਾਸ਼੍ਚਾਸਨ੍ ਤੇ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਯਦ੍ਯਤ੍ ਸਪ੍ਰਮਾਣੰ ਵਾਕ੍ਯਮਰ੍ਪਯਨ੍ਤਿ ਸ੍ਮ
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
2 ਤਦਨੁਸਾਰਤੋ(ਅ)ਨ੍ਯੇਪਿ ਬਹਵਸ੍ਤਦ੍ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਰਚਯਿਤੁੰ ਪ੍ਰਵ੍ਰੁʼੱਤਾਃ|
ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
3 ਅਤਏਵ ਹੇ ਮਹਾਮਹਿਮਥਿਯਫਿਲ੍ ਤ੍ਵੰ ਯਾ ਯਾਃ ਕਥਾ ਅਸ਼ਿਕ੍ਸ਼਼੍ਯਥਾਸ੍ਤਾਸਾਂ ਦ੍ਰੁʼਢਪ੍ਰਮਾਣਾਨਿ ਯਥਾ ਪ੍ਰਾਪ੍ਨੋਸ਼਼ਿ
ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
4 ਤਦਰ੍ਥੰ ਪ੍ਰਥਮਮਾਰਭ੍ਯ ਤਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਜ੍ਞਾਤ੍ਵਾਹਮਪਿ ਅਨੁਕ੍ਰਮਾਤ੍ ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤਾਨ੍ ਤੁਭ੍ਯੰ ਲੇਖਿਤੁੰ ਮਤਿਮਕਾਰ੍ਸ਼਼ਮ੍|
அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
5 ਯਿਹੂਦਾਦੇਸ਼ੀਯਹੇਰੋਦ੍ਨਾਮਕੇ ਰਾਜਤ੍ਵੰ ਕੁਰ੍ੱਵਤਿ ਅਬੀਯਯਾਜਕਸ੍ਯ ਪਰ੍ੱਯਾਯਾਧਿਕਾਰੀ ਸਿਖਰਿਯਨਾਮਕ ਏਕੋ ਯਾਜਕੋ ਹਾਰੋਣਵੰਸ਼ੋਦ੍ਭਵਾ ਇਲੀਸ਼ੇਵਾਖ੍ਯਾ
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
6 ਤਸ੍ਯ ਜਾਯਾ ਦ੍ਵਾਵਿਮੌ ਨਿਰ੍ਦੋਸ਼਼ੌ ਪ੍ਰਭੋਃ ਸਰ੍ੱਵਾਜ੍ਞਾ ਵ੍ਯਵਸ੍ਥਾਸ਼੍ਚ ਸੰਮਨ੍ਯ ਈਸ਼੍ਵਰਦ੍ਰੁʼਸ਼਼੍ਟੌ ਧਾਰ੍ੰਮਿਕਾਵਾਸ੍ਤਾਮ੍|
அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
7 ਤਯੋਃ ਸਨ੍ਤਾਨ ਏਕੋਪਿ ਨਾਸੀਤ੍, ਯਤ ਇਲੀਸ਼ੇਵਾ ਬਨ੍ਧ੍ਯਾ ਤੌ ਦ੍ਵਾਵੇਵ ਵ੍ਰੁʼੱਧਾਵਭਵਤਾਮ੍|
எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
8 ਯਦਾ ਸ੍ਵਪਰ੍ੱਯਾਨੁਕ੍ਰਮੇਣ ਸਿਖਰਿਯ ਈਸ਼੍ਵਾਸ੍ਯ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਯਾਜਕੀਯੰ ਕਰ੍ੰਮ ਕਰੋਤਿ
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9 ਤਦਾ ਯਜ੍ਞਸ੍ਯ ਦਿਨਪਰਿਪਾੱਯਾ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਨ੍ਦਿਰੇ ਪ੍ਰਵੇਸ਼ਕਾਲੇ ਧੂਪਜ੍ਵਾਲਨੰ ਕਰ੍ੰਮ ਤਸ੍ਯ ਕਰਣੀਯਮਾਸੀਤ੍|
ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
10 ਤੱਧੂਪਜ੍ਵਾਲਨਕਾਲੇ ਲੋਕਨਿਵਹੇ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕਰ੍ਤੁੰ ਬਹਿਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ
௧0தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11 ਸਤਿ ਸਿਖਰਿਯੋ ਯਸ੍ਯਾਂ ਵੇਦ੍ਯਾਂ ਧੂਪੰ ਜ੍ਵਾਲਯਤਿ ਤੱਦਕ੍ਸ਼਼ਿਣਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਦੂਤ ਏਕ ਉਪਸ੍ਥਿਤੋ ਦਰ੍ਸ਼ਨੰ ਦਦੌ|
௧௧அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਸਿਖਰਿਯ ਉਦ੍ਵਿਵਿਜੇ ਸ਼ਸ਼ਙ੍ਕੇ ਚ|
௧௨சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
13 ਤਦਾ ਸ ਦੂਤਸ੍ਤੰ ਬਭਾਸ਼਼ੇ ਹੇ ਸਿਖਰਿਯ ਮਾ ਭੈਸ੍ਤਵ ਪ੍ਰਾਰ੍ਥਨਾ ਗ੍ਰਾਹ੍ਯਾ ਜਾਤਾ ਤਵ ਭਾਰ੍ੱਯਾ ਇਲੀਸ਼ੇਵਾ ਪੁਤ੍ਰੰ ਪ੍ਰਸੋਸ਼਼੍ਯਤੇ ਤਸ੍ਯ ਨਾਮ ਯੋਹਨ੍ ਇਤਿ ਕਰਿਸ਼਼੍ਯਸਿ|
௧௩கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
14 ਕਿਞ੍ਚ ਤ੍ਵੰ ਸਾਨਨ੍ਦਃ ਸਹਰ੍ਸ਼਼ਸ਼੍ਚ ਭਵਿਸ਼਼੍ਯਸਿ ਤਸ੍ਯ ਜਨ੍ਮਨਿ ਬਹਵ ਆਨਨ੍ਦਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਚ|
௧௪உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15 ਯਤੋ ਹੇਤੋਃ ਸ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੋਚਰੇ ਮਹਾਨ੍ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ ਤਥਾ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸੰ ਸੁਰਾਂ ਵਾ ਕਿਮਪਿ ਨ ਪਾਸ੍ਯਤਿ, ਅਪਰੰ ਜਨ੍ਮਾਰਭ੍ਯ ਪਵਿਤ੍ਰੇਣਾਤ੍ਮਨਾ ਪਰਿਪੂਰ੍ਣਃ
௧௫அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16 ਸਨ੍ ਇਸ੍ਰਾਯੇਲ੍ਵੰਸ਼ੀਯਾਨ੍ ਅਨੇਕਾਨ੍ ਪ੍ਰਭੋਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਾਰ੍ਗਮਾਨੇਸ਼਼੍ਯਤਿ|
௧௬அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 ਸਨ੍ਤਾਨਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪਿਤ੍ਰੁʼਣਾਂ ਮਨਾਂਸਿ ਧਰ੍ੰਮਜ੍ਞਾਨੰ ਪ੍ਰਤ੍ਯਨਾਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਣਸ਼੍ਚ ਪਰਾਵਰ੍ੱਤਯਿਤੁੰ, ਪ੍ਰਭੋਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਸੇਵਾਰ੍ਥਮ੍ ਏਕਾਂ ਸੱਜਿਤਜਾਤਿੰ ਵਿਧਾਤੁਞ੍ਚ ਸ ਏਲਿਯਰੂਪਾਤ੍ਮਸ਼ਕ੍ਤਿਪ੍ਰਾਪ੍ਤਸ੍ਤਸ੍ਯਾਗ੍ਰੇ ਗਮਿਸ਼਼੍ਯਤਿ|
௧௭பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18 ਤਦਾ ਸਿਖਰਿਯੋ ਦੂਤਮਵਾਦੀਤ੍ ਕਥਮੇਤਦ੍ ਵੇਤ੍ਸ੍ਯਾਮਿ? ਯਤੋਹੰ ਵ੍ਰੁʼੱਧੋ ਮਮ ਭਾਰ੍ੱਯਾ ਚ ਵ੍ਰੁʼੱਧਾ|
௧௮அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
19 ਤਤੋ ਦੂਤਃ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ ਪਸ਼੍ਯੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ਵਰ੍ੱਤੀ ਜਿਬ੍ਰਾਯੇਲ੍ਨਾਮਾ ਦੂਤੋਹੰ ਤ੍ਵਯਾ ਸਹ ਕਥਾਂ ਗਦਿਤੁੰ ਤੁਭ੍ਯਮਿਮਾਂ ਸ਼ੁਭਵਾਰ੍ੱਤਾਂ ਦਾਤੁਞ੍ਚ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਃ|
௧௯தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 ਕਿਨ੍ਤੁ ਮਦੀਯੰ ਵਾਕ੍ਯੰ ਕਾਲੇ ਫਲਿਸ਼਼੍ਯਤਿ ਤਤ੍ ਤ੍ਵਯਾ ਨ ਪ੍ਰਤੀਤਮ੍ ਅਤਃ ਕਾਰਣਾਦ੍ ਯਾਵਦੇਵ ਤਾਨਿ ਨ ਸੇਤ੍ਸ੍ਯਨ੍ਤਿ ਤਾਵਤ੍ ਤ੍ਵੰ ਵਕ੍ਤੁੰਮਸ਼ਕ੍ਤੋ ਮੂਕੋ ਭਵ|
௨0இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
21 ਤਦਾਨੀਂ ਯੇ ਯੇ ਲੋਕਾਃ ਸਿਖਰਿਯਮਪੈਕ੍ਸ਼਼ਨ੍ਤ ਤੇ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰੰ ਤਸ੍ਯ ਬਹੁਵਿਲਮ੍ਬਾਦ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮੇਨਿਰੇ|
௨௧மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 ਸ ਬਹਿਰਾਗਤੋ ਯਦਾ ਕਿਮਪਿ ਵਾਕ੍ਯੰ ਵਕ੍ਤੁਮਸ਼ਕ੍ਤਃ ਸਙ੍ਕੇਤੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਨਿਃਸ਼ਬ੍ਦਸ੍ਤਸ੍ਯੌ ਤਦਾ ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰੰ ਕਸ੍ਯਚਿਦ੍ ਦਰ੍ਸ਼ਨੰ ਤੇਨ ਪ੍ਰਾਪ੍ਤਮ੍ ਇਤਿ ਸਰ੍ੱਵੇ ਬੁਬੁਧਿਰੇ|
௨௨அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
23 ਅਨਨ੍ਤਰੰ ਤਸ੍ਯ ਸੇਵਨਪਰ੍ੱਯਾਯੇ ਸਮ੍ਪੂਰ੍ਣੇ ਸਤਿ ਸ ਨਿਜਗੇਹੰ ਜਗਾਮ|
௨௩அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
24 ਕਤਿਪਯਦਿਨੇਸ਼਼ੁ ਗਤੇਸ਼਼ੁ ਤਸ੍ਯ ਭਾਰ੍ੱਯਾ ਇਲੀਸ਼ੇਵਾ ਗਰ੍ੱਭਵਤੀ ਬਭੂਵ
௨௪அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25 ਪਸ਼੍ਚਾਤ੍ ਸਾ ਪਞ੍ਚਮਾਸਾਨ੍ ਸੰਗੋਪ੍ਯਾਕਥਯਤ੍ ਲੋਕਾਨਾਂ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਮਮਾਪਮਾਨੰ ਖਣ੍ਡਯਿਤੁੰ ਪਰਮੇਸ਼੍ਵਰੋ ਮਯਿ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪਾਤਯਿਤ੍ਵਾ ਕਰ੍ੰਮੇਦ੍ਰੁʼਸ਼ੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
௨௫எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26 ਅਪਰਞ੍ਚ ਤਸ੍ਯਾ ਗਰ੍ੱਭਸ੍ਯ ਸ਼਼ਸ਼਼੍ਠੇ ਮਾਸੇ ਜਾਤੇ ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ੀਯਨਾਸਰਤ੍ਪੁਰੇ
௨௬எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27 ਦਾਯੂਦੋ ਵੰਸ਼ੀਯਾਯ ਯੂਸ਼਼ਫ੍ਨਾਮ੍ਨੇ ਪੁਰੁਸ਼਼ਾਯ ਯਾ ਮਰਿਯਮ੍ਨਾਮਕੁਮਾਰੀ ਵਾਗ੍ਦੱਤਾਸੀਤ੍ ਤਸ੍ਯਾਃ ਸਮੀਪੰ ਜਿਬ੍ਰਾਯੇਲ੍ ਦੂਤ ਈਸ਼੍ਵਰੇਣ ਪ੍ਰਹਿਤਃ|
௨௭தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28 ਸ ਗਤ੍ਵਾ ਜਗਾਦ ਹੇ ਈਸ਼੍ਵਰਾਨੁਗ੍ਰੁʼਹੀਤਕਨ੍ਯੇ ਤਵ ਸ਼ੁਭੰ ਭੂਯਾਤ੍ ਪ੍ਰਭੁਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਤਵ ਸਹਾਯੋਸ੍ਤਿ ਨਾਰੀਣਾਂ ਮਧ੍ਯੇ ਤ੍ਵਮੇਵ ਧਨ੍ਯਾ|
௨௮அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29 ਤਦਾਨੀਂ ਸਾ ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਤਸ੍ਯ ਵਾਕ੍ਯਤ ਉਦ੍ਵਿਜ੍ਯ ਕੀਦ੍ਰੁʼਸ਼ੰ ਭਾਸ਼਼ਣਮਿਦਮ੍ ਇਤਿ ਮਨਸਾ ਚਿਨ੍ਤਯਾਮਾਸ|
௨௯அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30 ਤਤੋ ਦੂਤੋ(ਅ)ਵਦਤ੍ ਹੇ ਮਰਿਯਮ੍ ਭਯੰ ਮਾਕਾਰ੍ਸ਼਼ੀਃ, ਤ੍ਵਯਿ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯਾਨੁਗ੍ਰਹੋਸ੍ਤਿ|
௩0தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31 ਪਸ਼੍ਯ ਤ੍ਵੰ ਗਰ੍ੱਭੰ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਪੁਤ੍ਰੰ ਪ੍ਰਸੋਸ਼਼੍ਯਸੇ ਤਸ੍ਯ ਨਾਮ ਯੀਸ਼ੁਰਿਤਿ ਕਰਿਸ਼਼੍ਯਸਿ|
௩௧இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32 ਸ ਮਹਾਨ੍ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ ਤਥਾ ਸਰ੍ੱਵੇਭ੍ਯਃ ਸ਼੍ਰੇਸ਼਼੍ਠਸ੍ਯ ਪੁਤ੍ਰ ਇਤਿ ਖ੍ਯਾਸ੍ਯਤਿ; ਅਪਰੰ ਪ੍ਰਭੁਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਯ ਪਿਤੁਰ੍ਦਾਯੂਦਃ ਸਿੰਹਾਸਨੰ ਤਸ੍ਮੈ ਦਾਸ੍ਯਤਿ;
௩௨அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 ਤਥਾ ਸ ਯਾਕੂਬੋ ਵੰਸ਼ੋਪਰਿ ਸਰ੍ੱਵਦਾ ਰਾਜਤ੍ਵੰ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ, ਤਸ੍ਯ ਰਾਜਤ੍ਵਸ੍ਯਾਨ੍ਤੋ ਨ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ| (aiōn g165)
௩௩அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
34 ਤਦਾ ਮਰਿਯਮ੍ ਤੰ ਦੂਤੰ ਬਭਾਸ਼਼ੇ ਨਾਹੰ ਪੁਰੁਸ਼਼ਸਙ੍ਗੰ ਕਰੋਮਿ ਤਰ੍ਹਿ ਕਥਮੇਤਤ੍ ਸਮ੍ਭਵਿਸ਼਼੍ਯਤਿ?
௩௪அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35 ਤਤੋ ਦੂਤੋ(ਅ)ਕਥਯਤ੍ ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਾ ਤ੍ਵਾਮਾਸ਼੍ਰਾਯਿਸ਼਼੍ਯਤਿ ਤਥਾ ਸਰ੍ੱਵਸ਼੍ਰੇਸ਼਼੍ਠਸ੍ਯ ਸ਼ਕ੍ਤਿਸ੍ਤਵੋਪਰਿ ਛਾਯਾਂ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ ਤਤੋ ਹੇਤੋਸ੍ਤਵ ਗਰ੍ੱਭਾਦ੍ ਯਃ ਪਵਿਤ੍ਰਬਾਲਕੋ ਜਨਿਸ਼਼੍ਯਤੇ ਸ ਈਸ਼੍ਵਰਪੁਤ੍ਰ ਇਤਿ ਖ੍ਯਾਤਿੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤਿ|
௩௫தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36 ਅਪਰਞ੍ਚ ਪਸ਼੍ਯ ਤਵ ਜ੍ਞਾਤਿਰਿਲੀਸ਼ੇਵਾ ਯਾਂ ਸਰ੍ੱਵੇ ਬਨ੍ਧ੍ਯਾਮਵਦਨ੍ ਇਦਾਨੀਂ ਸਾ ਵਾਰ੍ੱਧਕ੍ਯੇ ਸਨ੍ਤਾਨਮੇਕੰ ਗਰ੍ੱਭੇ(ਅ)ਧਾਰਯਤ੍ ਤਸ੍ਯ ਸ਼਼ਸ਼਼੍ਠਮਾਸੋਭੂਤ੍|
௩௬இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37 ਕਿਮਪਿ ਕਰ੍ੰਮ ਨਾਸਾਧ੍ਯਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ|
௩௭தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38 ਤਦਾ ਮਰਿਯਮ੍ ਜਗਾਦ, ਪਸ਼੍ਯ ਪ੍ਰਭੇਰਹੰ ਦਾਸੀ ਮਹ੍ਯੰ ਤਵ ਵਾਕ੍ਯਾਨੁਸਾਰੇਣ ਸਰ੍ੱਵਮੇਤਦ੍ ਘਟਤਾਮ੍; ਅਨਨਤਰੰ ਦੂਤਸ੍ਤਸ੍ਯਾਃ ਸਮੀਪਾਤ੍ ਪ੍ਰਤਸ੍ਥੇ|
௩௮அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39 ਅਥ ਕਤਿਪਯਦਿਨਾਤ੍ ਪਰੰ ਮਰਿਯਮ੍ ਤਸ੍ਮਾਤ੍ ਪਰ੍ੱਵਤਮਯਪ੍ਰਦੇਸ਼ੀਯਯਿਹੂਦਾਯਾ ਨਗਰਮੇਕੰ ਸ਼ੀਘ੍ਰੰ ਗਤ੍ਵਾ
௩௯அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40 ਸਿਖਰਿਯਯਾਜਕਸ੍ਯ ਗ੍ਰੁʼਹੰ ਪ੍ਰਵਿਸ਼੍ਯ ਤਸ੍ਯ ਜਾਯਾਮ੍ ਇਲੀਸ਼ੇਵਾਂ ਸਮ੍ਬੋਧ੍ਯਾਵਦਤ੍|
௪0சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ਤਤੋ ਮਰਿਯਮਃ ਸਮ੍ਬੋਧਨਵਾਕ੍ਯੇ ਇਲੀਸ਼ੇਵਾਯਾਃ ਕਰ੍ਣਯੋਃ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟਮਾਤ੍ਰੇ ਸਤਿ ਤਸ੍ਯਾ ਗਰ੍ੱਭਸ੍ਥਬਾਲਕੋ ਨਨਰ੍ੱਤ| ਤਤ ਇਲੀਸ਼ੇਵਾ ਪਵਿਤ੍ਰੇਣਾਤ੍ਮਨਾ ਪਰਿਪੂਰ੍ਣਾ ਸਤੀ
௪௧எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ਪ੍ਰੋੱਚੈਰ੍ਗਦਿਤੁਮਾਰੇਭੇ, ਯੋਸ਼਼ਿਤਾਂ ਮਧ੍ਯੇ ਤ੍ਵਮੇਵ ਧਨ੍ਯਾ, ਤਵ ਗਰ੍ੱਭਸ੍ਥਃ ਸ਼ਿਸ਼ੁਸ਼੍ਚ ਧਨ੍ਯਃ|
௪௨அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 ਤ੍ਵੰ ਪ੍ਰਭੋਰ੍ਮਾਤਾ, ਮਮ ਨਿਵੇਸ਼ਨੇ ਤ੍ਵਯਾ ਚਰਣਾਵਰ੍ਪਿਤੌ, ਮਮਾਦ੍ਯ ਸੌਭਾਗ੍ਯਮੇਤਤ੍|
௪௩என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44 ਪਸ਼੍ਯ ਤਵ ਵਾਕ੍ਯੇ ਮਮ ਕਰ੍ਣਯੋਃ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟਮਾਤ੍ਰੇ ਸਤਿ ਮਮੋਦਰਸ੍ਥਃ ਸ਼ਿਸ਼ੁਰਾਨਨ੍ਦਾਨ੍ ਨਨਰ੍ੱਤ|
௪௪இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45 ਯਾ ਸ੍ਤ੍ਰੀ ਵ੍ਯਸ਼੍ਵਸੀਤ੍ ਸਾ ਧਨ੍ਯਾ, ਯਤੋ ਹੇਤੋਸ੍ਤਾਂ ਪ੍ਰਤਿ ਪਰਮੇਸ਼੍ਵਰੋਕ੍ਤੰ ਵਾਕ੍ਯੰ ਸਰ੍ੱਵੰ ਸਿੱਧੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
௪௫விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46 ਤਦਾਨੀਂ ਮਰਿਯਮ੍ ਜਗਾਦ| ਧਨ੍ਯਵਾਦੰ ਪਰੇਸ਼ਸ੍ਯ ਕਰੋਤਿ ਮਾਮਕੰ ਮਨਃ|
௪௬அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 ਮਮਾਤ੍ਮਾ ਤਾਰਕੇਸ਼ੇ ਚ ਸਮੁੱਲਾਸੰ ਪ੍ਰਗੱਛਤਿ|
௪௭என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48 ਅਕਰੋਤ੍ ਸ ਪ੍ਰਭੁ ਰ੍ਦੁਸ਼਼੍ਟਿੰ ਸ੍ਵਦਾਸ੍ਯਾ ਦੁਰ੍ਗਤਿੰ ਪ੍ਰਤਿ| ਪਸ਼੍ਯਾਦ੍ਯਾਰਭ੍ਯ ਮਾਂ ਧਨ੍ਯਾਂ ਵਕ੍ਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਪੁਰੁਸ਼਼ਾਃ ਸਦਾ|
௪௮தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49 ਯਃ ਸਰ੍ੱਵਸ਼ਕ੍ਤਿਮਾਨ੍ ਯਸ੍ਯ ਨਾਮਾਪਿ ਚ ਪਵਿਤ੍ਰਕੰ| ਸ ਏਵ ਸੁਮਹਤ੍ਕਰ੍ੰਮ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਮੰਨਿਮਿੱਤਕੰ|
௪௯வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50 ਯੇ ਬਿਭ੍ਯਤਿ ਜਨਾਸ੍ਤਸ੍ਮਾਤ੍ ਤੇਸ਼਼ਾਂ ਸਨ੍ਤਾਨਪੰਕ੍ਤਿਸ਼਼ੁ| ਅਨੁਕਮ੍ਪਾ ਤਦੀਯਾ ਚ ਸਰ੍ੱਵਦੈਵ ਸੁਤਿਸ਼਼੍ਠਤਿ|
௫0அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51 ਸ੍ਵਬਾਹੁਬਲਤਸ੍ਤੇਨ ਪ੍ਰਾਕਾਸ਼੍ਯਤ ਪਰਾਕ੍ਰਮਃ| ਮਨਃਕੁਮਨ੍ਤ੍ਰਣਾਸਾਰ੍ੱਧੰ ਵਿਕੀਰ੍ੱਯਨ੍ਤੇ(ਅ)ਭਿਮਾਨਿਨਃ|
௫௧அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52 ਸਿੰਹਾਸਨਗਤਾੱਲੋਕਾਨ੍ ਬਲਿਨਸ਼੍ਚਾਵਰੋਹ੍ਯ ਸਃ| ਪਦੇਸ਼਼ੂੱਚੇਸ਼਼ੁ ਲੋਕਾਂਸ੍ਤੁ ਕ੍ਸ਼਼ੁਦ੍ਰਾਨ੍ ਸੰਸ੍ਥਾਪਯਤ੍ਯਪਿ|
௫௨ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53 ਕ੍ਸ਼਼ੁਧਿਤਾਨ੍ ਮਾਨਵਾਨ੍ ਦ੍ਰਵ੍ਯੈਰੁੱਤਮੈਃ ਪਰਿਤਰ੍ਪ੍ਯ ਸਃ| ਸਕਲਾਨ੍ ਧਨਿਨੋ ਲੋਕਾਨ੍ ਵਿਸ੍ਰੁʼਜੇਦ੍ ਰਿਕ੍ਤਹਸ੍ਤਕਾਨ੍|
௫௩பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54 ਇਬ੍ਰਾਹੀਮਿ ਚ ਤਦ੍ਵੰਸ਼ੇ ਯਾ ਦਯਾਸ੍ਤਿ ਸਦੈਵ ਤਾਂ| ਸ੍ਮ੍ਰੁʼਤ੍ਵਾ ਪੁਰਾ ਪਿਤ੍ਰੁʼਣਾਂ ਨੋ ਯਥਾ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਪ੍ਰਤਿਸ਼੍ਰੁਤੰ| (aiōn g165)
௫௪நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
55 ਇਸ੍ਰਾਯੇਲ੍ਸੇਵਕਸ੍ਤੇਨ ਤਥੋਪਕ੍ਰਿਯਤੇ ਸ੍ਵਯੰ||
௫௫அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56 ਅਨਨ੍ਤਰੰ ਮਰਿਯਮ੍ ਪ੍ਰਾਯੇਣ ਮਾਸਤ੍ਰਯਮ੍ ਇਲੀਸ਼ੇਵਯਾ ਸਹੋਸ਼਼ਿਤ੍ਵਾ ਵ੍ਯਾਘੁੱਯ ਨਿਜਨਿਵੇਸ਼ਨੰ ਯਯੌ|
௫௬மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57 ਤਦਨਨ੍ਤਰਮ੍ ਇਲੀਸ਼ੇਵਾਯਾਃ ਪ੍ਰਸਵਕਾਲ ਉਪਸ੍ਥਿਤੇ ਸਤਿ ਸਾ ਪੁਤ੍ਰੰ ਪ੍ਰਾਸੋਸ਼਼੍ਟ|
௫௭எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58 ਤਤਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਯਾਂ ਮਹਾਨੁਗ੍ਰਹੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਏਤਤ੍ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸਮੀਪਵਾਸਿਨਃ ਕੁਟੁਮ੍ਬਾਸ਼੍ਚਾਗਤ੍ਯ ਤਯਾ ਸਹ ਮੁਮੁਦਿਰੇ|
௫௮கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59 ਤਥਾਸ਼਼੍ਟਮੇ ਦਿਨੇ ਤੇ ਬਾਲਕਸ੍ਯ ਤ੍ਵਚੰ ਛੇੱਤੁਮ੍ ਏਤ੍ਯ ਤਸ੍ਯ ਪਿਤ੍ਰੁʼਨਾਮਾਨੁਰੂਪੰ ਤੰਨਾਮ ਸਿਖਰਿਯ ਇਤਿ ਕਰ੍ੱਤੁਮੀਸ਼਼ੁਃ|
௫௯எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60 ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਮਾਤਾਕਥਯਤ੍ ਤੰਨ, ਨਾਮਾਸ੍ਯ ਯੋਹਨ੍ ਇਤਿ ਕਰ੍ੱਤਵ੍ਯਮ੍|
௬0அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61 ਤਦਾ ਤੇ ਵ੍ਯਾਹਰਨ੍ ਤਵ ਵੰਸ਼ਮਧ੍ਯੇ ਨਾਮੇਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਸ੍ਯਾਪਿ ਨਾਸ੍ਤਿ|
௬௧அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62 ਤਤਃ ਪਰੰ ਤਸ੍ਯ ਪਿਤਰੰ ਸਿਖਰਿਯੰ ਪ੍ਰਤਿ ਸਙ੍ਕੇਤ੍ਯ ਪਪ੍ਰੱਛੁਃ ਸ਼ਿਸ਼ੋਃ ਕਿੰ ਨਾਮ ਕਾਰਿਸ਼਼੍ਯਤੇ?
௬௨சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 ਤਤਃ ਸ ਫਲਕਮੇਕੰ ਯਾਚਿਤ੍ਵਾ ਲਿਲੇਖ ਤਸ੍ਯ ਨਾਮ ਯੋਹਨ੍ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ| ਤਸ੍ਮਾਤ੍ ਸਰ੍ੱਵੇ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮੇਨਿਰੇ|
௬௩அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64 ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣੰ ਸਿਖਰਿਯਸ੍ਯ ਜਿਹ੍ਵਾਜਾਡ੍ਯੇ(ਅ)ਪਗਤੇ ਸ ਮੁਖੰ ਵ੍ਯਾਦਾਯ ਸ੍ਪਸ਼਼੍ਟਵਰ੍ਣਮੁੱਚਾਰ੍ੱਯ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੁਣਾਨੁਵਾਦੰ ਚਕਾਰ|
௬௪உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
65 ਤਸ੍ਮਾੱਚਤੁਰ੍ਦਿਕ੍ਸ੍ਥਾਃ ਸਮੀਪਵਾਸਿਲੋਕਾ ਭੀਤਾ ਏਵਮੇਤਾਃ ਸਰ੍ੱਵਾਃ ਕਥਾ ਯਿਹੂਦਾਯਾਃ ਪਰ੍ੱਵਤਮਯਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਪ੍ਰਚਾਰਿਤਾਃ|
௬௫அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
66 ਤਸ੍ਮਾਤ੍ ਸ਼੍ਰੋਤਾਰੋ ਮਨਃਸੁ ਸ੍ਥਾਪਯਿਤ੍ਵਾ ਕਥਯਾਮ੍ਬਭੂਵੁਃ ਕੀਦ੍ਰੁʼਸ਼ੋਯੰ ਬਾਲੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ? ਅਥ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਯ ਸਹਾਯੋਭੂਤ੍|
௬௬இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
67 ਤਦਾ ਯੋਹਨਃ ਪਿਤਾ ਸਿਖਰਿਯਃ ਪਵਿਤ੍ਰੇਣਾਤ੍ਮਨਾ ਪਰਿਪੂਰ੍ਣਃ ਸਨ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਕ੍ਯੰ ਕਥਯਾਮਾਸ|
௬௭அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68 ਇਸ੍ਰਾਯੇਲਃ ਪ੍ਰਭੁ ਰ੍ਯਸ੍ਤੁ ਸ ਧਨ੍ਯਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਃ| ਅਨੁਗ੍ਰੁʼਹ੍ਯ ਨਿਜਾੱਲੋਕਾਨ੍ ਸ ਏਵ ਪਰਿਮੋਚਯੇਤ੍|
௬௮“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69 ਵਿਪਕ੍ਸ਼਼ਜਨਹਸ੍ਤੇਭ੍ਯੋ ਯਥਾ ਮੋਚ੍ਯਾਮਹੇ ਵਯੰ| ਯਾਵੱਜੀਵਞ੍ਚ ਧਰ੍ੰਮੇਣ ਸਾਰਲ੍ਯੇਨ ਚ ਨਿਰ੍ਭਯਾਃ|
௬௯அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70 ਸੇਵਾਮਹੈ ਤਮੇਵੈਕਮ੍ ਏਤਤ੍ਕਾਰਣਮੇਵ ਚ| ਸ੍ਵਕੀਯੰ ਸੁਪਵਿਤ੍ਰਞ੍ਚ ਸੰਸ੍ਮ੍ਰੁʼਤ੍ਯ ਨਿਯਮੰ ਸਦਾ|
௭0தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
71 ਕ੍ਰੁʼਪਯਾ ਪੁਰੁਸ਼਼ਾਨ੍ ਪੂਰ੍ੱਵਾਨ੍ ਨਿਕਸ਼਼ਾਰ੍ਥਾੱਤੁ ਨਃ ਪਿਤੁਃ| ਇਬ੍ਰਾਹੀਮਃ ਸਮੀਪੇ ਯੰ ਸ਼ਪਥੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਪੁਰਾ|
௭௧உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 ਤਮੇਵ ਸਫਲੰ ਕਰ੍ੱਤੰ ਤਥਾ ਸ਼ਤ੍ਰੁਗਣਸ੍ਯ ਚ| ਰੁʼਤੀਯਾਕਾਰਿਣਸ਼੍ਚੈਵ ਕਰੇਭ੍ਯੋ ਰਕ੍ਸ਼਼ਣਾਯ ਨਃ|
௭௨அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73 ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟੇਃ ਪ੍ਰਥਮਤਃ ਸ੍ਵੀਯੈਃ ਪਵਿਤ੍ਰੈ ਰ੍ਭਾਵਿਵਾਦਿਭਿਃ| (aiōn g165)
௭௩ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
74 ਯਥੋਕ੍ਤਵਾਨ੍ ਤਥਾ ਸ੍ਵਸ੍ਯ ਦਾਯੂਦਃ ਸੇਵਕਸ੍ਯ ਤੁ|
௭௪தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
75 ਵੰਸ਼ੇ ਤ੍ਰਾਤਾਰਮੇਕੰ ਸ ਸਮੁਤ੍ਪਾਦਿਤਵਾਨ੍ ਸ੍ਵਯਮ੍|
௭௫தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
76 ਅਤੋ ਹੇ ਬਾਲਕ ਤ੍ਵਨ੍ਤੁ ਸਰ੍ੱਵੇਭ੍ਯਃ ਸ਼੍ਰੇਸ਼਼੍ਠ ਏਵ ਯਃ| ਤਸ੍ਯੈਵ ਭਾਵਿਵਾਦੀਤਿ ਪ੍ਰਵਿਖ੍ਯਾਤੋ ਭਵਿਸ਼਼੍ਯਸਿ| ਅਸ੍ਮਾਕੰ ਚਰਣਾਨ੍ ਕ੍ਸ਼਼ੇਮੇ ਮਾਰ੍ਗੇ ਚਾਲਯਿਤੁੰ ਸਦਾ| ਏਵੰ ਧ੍ਵਾਨ੍ਤੇ(ਅ)ਰ੍ਥਤੋ ਮ੍ਰੁʼਤ੍ਯੋਸ਼੍ਛਾਯਾਯਾਂ ਯੇ ਤੁ ਮਾਨਵਾਃ|
௭௬என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77 ਉਪਵਿਸ਼਼੍ਟਾਸ੍ਤੁ ਤਾਨੇਵ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਤੁਮੇਵ ਹਿ| ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਮਹਾਨੁਕਮ੍ਪਾਂ ਹਿ ਯਾਮੇਵ ਪਰਮੇਸ਼੍ਵਰਃ|
௭௭நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
78 ਊਰ੍ਦ੍ੱਵਾਤ੍ ਸੂਰ੍ੱਯਮੁਦਾੱਯੈਵਾਸ੍ਮਭ੍ਯੰ ਪ੍ਰਾਦਾੱਤੁ ਦਰ੍ਸ਼ਨੰ| ਤਯਾਨੁਕਮ੍ਪਯਾ ਸ੍ਵਸ੍ਯ ਲੋਕਾਨਾਂ ਪਾਪਮੋਚਨੇ|
௭௮இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
79 ਪਰਿਤ੍ਰਾਣਸ੍ਯ ਤੇਭ੍ਯੋ ਹਿ ਜ੍ਞਾਨਵਿਸ਼੍ਰਾਣਨਾਯ ਚ| ਪ੍ਰਭੋ ਰ੍ਮਾਰ੍ਗੰ ਪਰਿਸ਼਼੍ਕਰ੍ੱਤੁੰ ਤਸ੍ਯਾਗ੍ਰਾਯੀ ਭਵਿਸ਼਼੍ਯਸਿ||
௭௯நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
80 ਅਥ ਬਾਲਕਃ ਸ਼ਰੀਰੇਣ ਬੁੱਧ੍ਯਾ ਚ ਵਰ੍ੱਧਿਤੁਮਾਰੇਭੇ; ਅਪਰਞ੍ਚ ਸ ਇਸ੍ਰਾਯੇਲੋ ਵੰਸ਼ੀਯਲੋਕਾਨਾਂ ਸਮੀਪੇ ਯਾਵੰਨ ਪ੍ਰਕਟੀਭੂਤਸ੍ਤਾਸ੍ਤਾਵਤ੍ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਨ੍ਯਵਸਤ੍|
௮0அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.

< ਲੂਕਃ 1 >