< ଲୂକଃ 19 >
1 ଯଦା ଯୀଶୁ ର୍ୟିରୀହୋପୁରଂ ପ୍ରୱିଶ୍ୟ ତନ୍ମଧ୍ୟେନ ଗଚ୍ଛଂସ୍ତଦା
௧இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
2 ସକ୍କେଯନାମା କରସଞ୍ଚାଯିନାଂ ପ୍ରଧାନୋ ଧନୱାନେକୋ
௨வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
3 ଯୀଶୁଃ କୀଦୃଗିତି ଦ୍ରଷ୍ଟୁଂ ଚେଷ୍ଟିତୱାନ୍ କିନ୍ତୁ ଖର୍ୱ୍ୱତ୍ୱାଲ୍ଲୋକସଂଘମଧ୍ୟେ ତଦ୍ଦର୍ଶନମପ୍ରାପ୍ୟ
௩இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
4 ଯେନ ପଥା ସ ଯାସ୍ୟତି ତତ୍ପଥେଽଗ୍ରେ ଧାୱିତ୍ୱା ତଂ ଦ୍ରଷ୍ଟୁମ୍ ଉଡୁମ୍ବରତରୁମାରୁରୋହ|
௪அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5 ପଶ୍ଚାଦ୍ ଯୀଶୁସ୍ତତ୍ସ୍ଥାନମ୍ ଇତ୍ୱା ଊର୍ଦ୍ଧ୍ୱଂ ୱିଲୋକ୍ୟ ତଂ ଦୃଷ୍ଟ୍ୱାୱାଦୀତ୍, ହେ ସକ୍କେଯ ତ୍ୱଂ ଶୀଘ୍ରମୱରୋହ ମଯାଦ୍ୟ ତ୍ୱଦ୍ଗେହେ ୱସ୍ତୱ୍ୟଂ|
௫இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6 ତତଃ ସ ଶୀଘ୍ରମୱରୁହ୍ୟ ସାହ୍ଲାଦଂ ତଂ ଜଗ୍ରାହ|
௬அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7 ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ସର୍ୱ୍ୱେ ୱିୱଦମାନା ୱକ୍ତୁମାରେଭିରେ, ସୋତିଥିତ୍ୱେନ ଦୁଷ୍ଟଲୋକଗୃହଂ ଗଚ୍ଛତି|
௭அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8 କିନ୍ତୁ ସକ୍କେଯୋ ଦଣ୍ଡାଯମାନୋ ୱକ୍ତୁମାରେଭେ, ହେ ପ୍ରଭୋ ପଶ୍ୟ ମମ ଯା ସମ୍ପତ୍ତିରସ୍ତି ତଦର୍ଦ୍ଧଂ ଦରିଦ୍ରେଭ୍ୟୋ ଦଦେ, ଅପରମ୍ ଅନ୍ୟାଯଂ କୃତ୍ୱା କସ୍ମାଦପି ଯଦି କଦାପି କିଞ୍ଚିତ୍ ମଯା ଗୃହୀତଂ ତର୍ହି ତଚ୍ଚତୁର୍ଗୁଣଂ ଦଦାମି|
௮சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.
9 ତଦା ଯୀଶୁସ୍ତମୁକ୍ତୱାନ୍ ଅଯମପି ଇବ୍ରାହୀମଃ ସନ୍ତାନୋଽତଃ କାରଣାଦ୍ ଅଦ୍ୟାସ୍ୟ ଗୃହେ ତ୍ରାଣମୁପସ୍ଥିତଂ|
௯இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே.
10 ଯଦ୍ ହାରିତଂ ତତ୍ ମୃଗଯିତୁଂ ରକ୍ଷିତୁଞ୍ଚ ମନୁଷ୍ୟପୁତ୍ର ଆଗତୱାନ୍|
௧0இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11 ଅଥ ସ ଯିରୂଶାଲମଃ ସମୀପ ଉପାତିଷ୍ଠଦ୍ ଈଶ୍ୱରରାଜତ୍ୱସ୍ୟାନୁଷ୍ଠାନଂ ତଦୈୱ ଭୱିଷ୍ୟତୀତି ଲୋକୈରନ୍ୱଭୂଯତ, ତସ୍ମାତ୍ ସ ଶ୍ରୋତୃଭ୍ୟଃ ପୁନର୍ଦୃଷ୍ଟାନ୍ତକଥାମ୍ ଉତ୍ଥାପ୍ୟ କଥଯାମାସ|
௧௧அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12 କୋପି ମହାଲ୍ଲୋକୋ ନିଜାର୍ଥଂ ରାଜତ୍ୱପଦଂ ଗୃହୀତ୍ୱା ପୁନରାଗନ୍ତୁଂ ଦୂରଦେଶଂ ଜଗାମ|
௧௨பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
13 ଯାତ୍ରାକାଲେ ନିଜାନ୍ ଦଶଦାସାନ୍ ଆହୂଯ ଦଶସ୍ୱର୍ଣମୁଦ୍ରା ଦତ୍ତ୍ୱା ମମାଗମନପର୍ୟ୍ୟନ୍ତଂ ୱାଣିଜ୍ୟଂ କୁରୁତେତ୍ୟାଦିଦେଶ|
௧௩புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
14 କିନ୍ତୁ ତସ୍ୟ ପ୍ରଜାସ୍ତମୱଜ୍ଞାଯ ମନୁଷ୍ୟମେନମ୍ ଅସ୍ମାକମୁପରି ରାଜତ୍ୱଂ ନ କାରଯିୱ୍ୟାମ ଇମାଂ ୱାର୍ତ୍ତାଂ ତନ୍ନିକଟେ ପ୍ରେରଯାମାସୁଃ|
௧௪அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
15 ଅଥ ସ ରାଜତ୍ୱପଦଂ ପ୍ରାପ୍ୟାଗତୱାନ୍ ଏକୈକୋ ଜନୋ ବାଣିଜ୍ୟେନ କିଂ ଲବ୍ଧୱାନ୍ ଇତି ଜ୍ଞାତୁଂ ଯେଷୁ ଦାସେଷୁ ମୁଦ୍ରା ଅର୍ପଯତ୍ ତାନ୍ ଆହୂଯାନେତୁମ୍ ଆଦିଦେଶ|
௧௫அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16 ତଦା ପ୍ରଥମ ଆଗତ୍ୟ କଥିତୱାନ୍, ହେ ପ୍ରଭୋ ତୱ ତଯୈକଯା ମୁଦ୍ରଯା ଦଶମୁଦ୍ରା ଲବ୍ଧାଃ|
௧௬அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
17 ତତଃ ସ ଉୱାଚ ତ୍ୱମୁତ୍ତମୋ ଦାସଃ ସ୍ୱଲ୍ପେନ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଜାତ ଇତଃ କାରଣାତ୍ ତ୍ୱଂ ଦଶନଗରାଣାମ୍ ଅଧିପୋ ଭୱ|
௧௭எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
18 ଦ୍ୱିତୀଯ ଆଗତ୍ୟ କଥିତୱାନ୍, ହେ ପ୍ରଭୋ ତୱୈକଯା ମୁଦ୍ରଯା ପଞ୍ଚମୁଦ୍ରା ଲବ୍ଧାଃ|
௧௮அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
19 ତତଃ ସ ଉୱାଚ, ତ୍ୱଂ ପଞ୍ଚାନାଂ ନଗରାଣାମଧିପତି ର୍ଭୱ|
௧௯அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
20 ତତୋନ୍ୟ ଆଗତ୍ୟ କଥଯାମାସ, ହେ ପ୍ରଭୋ ପଶ୍ୟ ତୱ ଯା ମୁଦ୍ରା ଅହଂ ୱସ୍ତ୍ରେ ବଦ୍ଧ୍ୱାସ୍ଥାପଯଂ ସେଯଂ|
௨0பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
21 ତ୍ୱଂ କୃପଣୋ ଯନ୍ନାସ୍ଥାପଯସ୍ତଦପି ଗୃହ୍ଲାସି, ଯନ୍ନାୱପସ୍ତଦେୱ ଚ ଛିନତ୍ସି ତତୋହଂ ତ୍ୱତ୍ତୋ ଭୀତଃ|
௨௧நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22 ତଦା ସ ଜଗାଦ, ରେ ଦୁଷ୍ଟଦାସ ତୱ ୱାକ୍ୟେନ ତ୍ୱାଂ ଦୋଷିଣଂ କରିଷ୍ୟାମି, ଯଦହଂ ନାସ୍ଥାପଯଂ ତଦେୱ ଗୃହ୍ଲାମି, ଯଦହଂ ନାୱପଞ୍ଚ ତଦେୱ ଛିନଦ୍ମି, ଏତାଦୃଶଃ କୃପଣୋହମିତି ଯଦି ତ୍ୱଂ ଜାନାସି,
௨௨அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
23 ତର୍ହି ମମ ମୁଦ୍ରା ବଣିଜାଂ ନିକଟେ କୁତୋ ନାସ୍ଥାପଯଃ? ତଯା କୃତେଽହମ୍ ଆଗତ୍ୟ କୁସୀଦେନ ସାର୍ଦ୍ଧଂ ନିଜମୁଦ୍ରା ଅପ୍ରାପ୍ସ୍ୟମ୍|
௨௩பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
24 ପଶ୍ଚାତ୍ ସ ସମୀପସ୍ଥାନ୍ ଜନାନ୍ ଆଜ୍ଞାପଯତ୍ ଅସ୍ମାତ୍ ମୁଦ୍ରା ଆନୀଯ ଯସ୍ୟ ଦଶମୁଦ୍ରାଃ ସନ୍ତି ତସ୍ମୈ ଦତ୍ତ|
௨௪அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25 ତେ ପ୍ରୋଚୁଃ ପ୍ରଭୋଽସ୍ୟ ଦଶମୁଦ୍ରାଃ ସନ୍ତି|
௨௫அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
26 ଯୁଷ୍ମାନହଂ ୱଦାମି ଯସ୍ୟାଶ୍ରଯେ ୱଦ୍ଧତେ ଽଧିକଂ ତସ୍ମୈ ଦାଯିଷ୍ୟତେ, କିନ୍ତୁ ଯସ୍ୟାଶ୍ରଯେ ନ ୱର୍ଦ୍ଧତେ ତସ୍ୟ ଯଦ୍ୟଦସ୍ତି ତଦପି ତସ୍ମାନ୍ ନାଯିଷ୍ୟତେ|
௨௬அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 କିନ୍ତୁ ମମାଧିପତିତ୍ୱସ୍ୟ ୱଶତ୍ୱେ ସ୍ଥାତୁମ୍ ଅସମ୍ମନ୍ୟମାନା ଯେ ମମ ରିପୱସ୍ତାନାନୀଯ ମମ ସମକ୍ଷଂ ସଂହରତ|
௨௭அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28 ଇତ୍ୟୁପଦେଶକଥାଂ କଥଯିତ୍ୱା ସୋଗ୍ରଗଃ ସନ୍ ଯିରୂଶାଲମପୁରଂ ଯଯୌ|
௨௮இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
29 ତତୋ ବୈତ୍ଫଗୀବୈଥନୀଯାଗ୍ରାମଯୋଃ ସମୀପେ ଜୈତୁନାଦ୍ରେରନ୍ତିକମ୍ ଇତ୍ୱା ଶିଷ୍ୟଦ୍ୱଯମ୍ ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ପ୍ରେଷଯାମାସ,
௨௯அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
30 ଯୁୱାମମୁଂ ସମ୍ମୁଖସ୍ଥଗ୍ରାମଂ ପ୍ରୱିଶ୍ୟୈୱ ଯଂ କୋପି ମାନୁଷଃ କଦାପି ନାରୋହତ୍ ତଂ ଗର୍ଦ୍ଦଭଶାୱକଂ ବଦ୍ଧଂ ଦ୍ରକ୍ଷ୍ୟଥସ୍ତଂ ମୋଚଯିତ୍ୱାନଯତଂ|
௩0உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
31 ତତ୍ର କୁତୋ ମୋଚଯଥଃ? ଇତି ଚେତ୍ କୋପି ୱକ୍ଷ୍ୟତି ତର୍ହି ୱକ୍ଷ୍ୟଥଃ ପ୍ରଭେରତ୍ର ପ୍ରଯୋଜନମ୍ ଆସ୍ତେ|
௩௧அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32 ତଦା ତୌ ପ୍ରରିତୌ ଗତ୍ୱା ତତ୍କଥାନୁସାରେଣ ସର୍ୱ୍ୱଂ ପ୍ରାପ୍ତୌ|
௩௨அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
33 ଗର୍ଦଭଶାୱକମୋଚନକାଲେ ତତ୍ୱାମିନ ଊଚୁଃ, ଗର୍ଦଭଶାୱକଂ କୁତୋ ମୋଚଯଥଃ?
௩௩கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34 ତାୱୂଚତୁଃ ପ୍ରଭୋରତ୍ର ପ୍ରଯୋଜନମ୍ ଆସ୍ତେ|
௩௪அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35 ପଶ୍ଚାତ୍ ତୌ ତଂ ଗର୍ଦଭଶାୱକଂ ଯୀଶୋରନ୍ତିକମାନୀଯ ତତ୍ପୃଷ୍ଠେ ନିଜୱସନାନି ପାତଯିତ୍ୱା ତଦୁପରି ଯୀଶୁମାରୋହଯାମାସତୁଃ|
௩௫அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36 ଅଥ ଯାତ୍ରାକାଲେ ଲୋକାଃ ପଥି ସ୍ୱୱସ୍ତ୍ରାଣି ପାତଯିତୁମ୍ ଆରେଭିରେ|
௩௬அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
37 ଅପରଂ ଜୈତୁନାଦ୍ରେରୁପତ୍ୟକାମ୍ ଇତ୍ୱା ଶିଷ୍ୟସଂଘଃ ପୂର୍ୱ୍ୱଦୃଷ୍ଟାନି ମହାକର୍ମ୍ମାଣି ସ୍ମୃତ୍ୱା,
௩௭அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
38 ଯୋ ରାଜା ପ୍ରଭୋ ର୍ନାମ୍ନାଯାତି ସ ଧନ୍ୟଃ ସ୍ୱର୍ଗେ କୁଶଲଂ ସର୍ୱ୍ୱୋଚ୍ଚେ ଜଯଧ୍ୱନି ର୍ଭୱତୁ, କଥାମେତାଂ କଥଯିତ୍ୱା ସାନନ୍ଦମ୍ ଉଚୈରୀଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ୱକ୍ତୁମାରେଭେ|
௩௮கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
39 ତଦା ଲୋକାରଣ୍ୟମଧ୍ୟସ୍ଥାଃ କିଯନ୍ତଃ ଫିରୂଶିନସ୍ତତ୍ ଶ୍ରୁତ୍ୱା ଯୀଶୁଂ ପ୍ରୋଚୁଃ, ହେ ଉପଦେଶକ ସ୍ୱଶିଷ୍ୟାନ୍ ତର୍ଜଯ|
௩௯அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
40 ସ ଉୱାଚ, ଯୁଷ୍ମାନହଂ ୱଦାମି ଯଦ୍ୟମୀ ନୀରୱାସ୍ତିଷ୍ଠନ୍ତି ତର୍ହି ପାଷାଣା ଉଚୈଃ କଥାଃ କଥଯିଷ୍ୟନ୍ତି|
௪0அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
41 ପଶ୍ଚାତ୍ ତତ୍ପୁରାନ୍ତିକମେତ୍ୟ ତଦୱଲୋକ୍ୟ ସାଶ୍ରୁପାତଂ ଜଗାଦ,
௪௧அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,
42 ହା ହା ଚେତ୍ ତ୍ୱମଗ୍ରେଽଜ୍ଞାସ୍ୟଥାଃ, ତୱାସ୍ମିନ୍ନେୱ ଦିନେ ୱା ଯଦି ସ୍ୱମଙ୍ଗଲମ୍ ଉପାଲପ୍ସ୍ୟଥାଃ, ତର୍ହ୍ୟୁତ୍ତମମ୍ ଅଭୱିଷ୍ୟତ୍, କିନ୍ତୁ କ୍ଷଣେସ୍ମିନ୍ ତତ୍ତୱ ଦୃଷ୍ଟେରଗୋଚରମ୍ ଭୱତି|
௪௨“உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.
43 ତ୍ୱଂ ସ୍ୱତ୍ରାଣକାଲେ ନ ମନୋ ନ୍ୟଧତ୍ଥା ଇତି ହେତୋ ର୍ୟତ୍କାଲେ ତୱ ରିପୱସ୍ତ୍ୱାଂ ଚତୁର୍ଦିକ୍ଷୁ ପ୍ରାଚୀରେଣ ୱେଷ୍ଟଯିତ୍ୱା ରୋତ୍ସ୍ୟନ୍ତି
௪௩உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44 ବାଲକୈଃ ସାର୍ଦ୍ଧଂ ଭୂମିସାତ୍ କରିଷ୍ୟନ୍ତି ଚ ତ୍ୱନ୍ମଧ୍ୟେ ପାଷାଣୈକୋପି ପାଷାଣୋପରି ନ ସ୍ଥାସ୍ୟତି ଚ, କାଲ ଈଦୃଶ ଉପସ୍ଥାସ୍ୟତି|
௪௪உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.
45 ଅଥ ମଧ୍ୟେମନ୍ଦିରଂ ପ୍ରୱିଶ୍ୟ ତତ୍ରତ୍ୟାନ୍ କ୍ରଯିୱିକ୍ରଯିଣୋ ବହିଷ୍କୁର୍ୱ୍ୱନ୍
௪௫பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
46 ଅୱଦତ୍ ମଦ୍ଗୃହଂ ପ୍ରାର୍ଥନାଗୃହମିତି ଲିପିରାସ୍ତେ କିନ୍ତୁ ଯୂଯଂ ତଦେୱ ଚୈରାଣାଂ ଗହ୍ୱରଂ କୁରୁଥ|
௪௬“என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
47 ପଶ୍ଚାତ୍ ସ ପ୍ରତ୍ୟହଂ ମଧ୍ୟେମନ୍ଦିରମ୍ ଉପଦିଦେଶ; ତତଃ ପ୍ରଧାନଯାଜକା ଅଧ୍ୟାପକାଃ ପ୍ରାଚୀନାଶ୍ଚ ତଂ ନାଶଯିତୁଂ ଚିଚେଷ୍ଟିରେ;
௪௭அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48 କିନ୍ତୁ ତଦୁପଦେଶେ ସର୍ୱ୍ୱେ ଲୋକା ନିୱିଷ୍ଟଚିତ୍ତାଃ ସ୍ଥିତାସ୍ତସ୍ମାତ୍ ତେ ତତ୍କର୍ତ୍ତୁଂ ନାୱକାଶଂ ପ୍ରାପୁଃ|
௪௮மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.