< លូកះ 14 >

1 អនន្តរំ វិឝ្រាមវារេ យីឝៅ ប្រធានស្យ ផិរូឝិនោ គ្ឫហេ ភោក្តុំ គតវតិ តេ តំ វីក្ឞិតុម៑ អារេភិរេ។
ஒரு ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, சாப்பிடுவதற்கு இயேசு போயிருந்தார். எல்லோரும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
2 តទា ជលោទរី តស្យ សម្មុខេ ស្ថិតះ។
அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான்.
3 តតះ ស វ្យវស្ថាបកាន៑ ផិរូឝិនឝ្ច បប្រច្ឆ, វិឝ្រាមវារេ ស្វាស្ថ្យំ កត៌្តវ្យំ ន វា? តតស្តេ កិមបិ ន ប្រត្យូចុះ។
இயேசு பரிசேயரையும் மோசேயின் சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது மோசேயின் சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார்.
4 តទា ស តំ រោគិណំ ស្វស្ថំ ក្ឫត្វា វិសសជ៌;
அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே, இயேசு அவன் கையை பிடித்து குணமாக்கி அனுப்பிவிட்டார்.
5 តានុវាច ច យុឞ្មាកំ កស្យចិទ៑ គទ៌្ទភោ វ្ឫឞភោ វា ចេទ៑ គត៌្តេ បតតិ តហ៌ិ វិឝ្រាមវារេ តត្ក្ឞណំ ស កិំ តំ នោត្ថាបយិឞ្យតិ?
அப்பொழுது இயேசு அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், உடனே நீங்கள் அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிடமாட்டீர்களா?” என்று கேட்டார்.
6 តតស្តេ កថាយា ឯតស្យាះ កិមបិ ប្រតិវក្តុំ ន ឝេកុះ។
அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
7 អបរញ្ច ប្រធានស្ថានមនោនីតត្វករណំ វិលោក្យ ស និមន្ត្រិតាន៑ ឯតទុបទេឝកថាំ ជគាទ,
சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்:
8 ត្វំ វិវាហាទិភោជ្យេឞុ និមន្ត្រិតះ សន៑ ប្រធានស្ថានេ មោបាវេក្ឞីះ។ ត្វត្តោ គៅរវាន្វិតនិមន្ត្រិតជន អាយាតេ
“யாராவது உங்களை திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
9 និមន្ត្រយិតាគត្យ មនុឞ្យាយៃតស្មៃ ស្ថានំ ទេហីតិ វាក្យំ ចេទ៑ វក្ឞ្យតិ តហ៌ិ ត្វំ សង្កុចិតោ ភូត្វា ស្ថាន ឥតរស្មិន៑ ឧបវេឞ្ដុម៑ ឧទ្យំស្យសិ។
எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை, இவருக்குக் கொடு’ என்று உனக்குச் சொல்லக்கூடும். அப்பொழுது நீ வெட்கமடைந்தவனாய், கடைசி இடத்திற்கு போய் உட்கார நேரிடும்.
10 អស្មាត៑ ការណាទេវ ត្វំ និមន្ត្រិតោ គត្វាៜប្រធានស្ថាន ឧបវិឝ, តតោ និមន្ត្រយិតាគត្យ វទិឞ្យតិ, ហេ ពន្ធោ ប្រោច្ចស្ថានំ គត្វោបវិឝ, តថា សតិ ភោជនោបវិឞ្ដានាំ សកលានាំ សាក្ឞាត៑ ត្វំ មាន្យោ ភវិឞ្យសិ។
ஆகவே, உங்களை யாராவது அழைக்கும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவன் உன்னிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீ மதிப்பைப் பெறுவாய்.
11 យះ កឝ្ចិត៑ ស្វមុន្នមយតិ ស នមយិឞ្យតេ, កិន្តុ យះ កឝ្ចិត៑ ស្វំ នមយតិ ស ឧន្នមយិឞ្យតេ។
ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார்.
12 តទា ស និមន្ត្រយិតារំ ជនមបិ ជគាទ, មធ្យាហ្នេ រាត្រៅ វា ភោជ្យេ ក្ឫតេ និជពន្ធុគណោ វា ភ្រាត្ឫគណោ វា ជ្ញាតិគណោ វា ធនិគណោ វា សមីបវាសិគណោ វា ឯតាន៑ ន និមន្ត្រយ, តថា ក្ឫតេ ចេត៑ តេ ត្វាំ និមន្ត្រយិឞ្យន្តិ, តហ៌ិ បរិឝោធោ ភវិឞ្យតិ។
பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மத்தியான உணவையோ, இரவு உணவையோ கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்கவேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய், அவர்கள் உனக்குப் பதில் உதவி செய்துவிடுவார்கள்.
13 កិន្តុ យទា ភេជ្យំ ករោឞិ តទា ទរិទ្រឝុឞ្កករខញ្ជាន្ធាន៑ និមន្ត្រយ,
எனவே, நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக;
14 តត អាឝិឞំ លប្ស្យសេ, តេឞុ បរិឝោធំ កត៌្តុមឝក្នុវត្សុ ឝ្មឝានាទ្ធាម៌្មិកានាមុត្ថានកាលេ ត្វំ ផលាំ លប្ស្យសេ។
அப்பொழுது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால், அதற்கான பதில் உதவி எதையும் உனக்குச் செய்யமுடியாது. ஆனால், நீ நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அதற்கான பதில் உதவியைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.
15 អនន្តរំ តាំ កថាំ និឝម្យ ភោជនោបវិឞ្ដះ កឝ្ចិត៑ កថយាមាស, យោ ជន ឦឝ្វរស្យ រាជ្យេ ភោក្តុំ លប្ស្យតេ សឯវ ធន្យះ។
இதைக் கேட்டபோது, இயேசுவோடு பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் சாப்பிடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான்.
16 តតះ ស ឧវាច, កឝ្ចិត៑ ជនោ រាត្រៅ ភេជ្យំ ក្ឫត្វា ពហូន៑ និមន្ត្រយាមាស។
இயேசு அதற்கு மறுமொழியாக சொன்னதாவது: “ஒருவன் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, பல விருந்தினர்களை அழைத்திருந்தான்.
17 តតោ ភោជនសមយេ និមន្ត្រិតលោកាន៑ អាហ្វាតុំ ទាសទ្វារា កថយាមាស, ខទ្យទ្រវ្យាណិ សវ៌្វាណិ សមាសាទិតានិ សន្តិ, យូយមាគច្ឆត។
விருந்துக்கான வேளை வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி தனது வேலைக்காரனை அனுப்பினான்.
18 កិន្តុ តេ សវ៌្វ ឯកៃកំ ឆលំ ក្ឫត្វា ក្ឞមាំ ប្រាត៌្ហយាញ្ចក្រិរេ។ ប្រថមោ ជនះ កថយាមាស, ក្ឞេត្រមេកំ ក្រីតវានហំ តទេវ ទ្រឞ្ដុំ មយា គន្តវ្យម៑, អតឯវ មាំ ក្ឞន្តុំ តំ និវេទយ។
“ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்பொழுதுதான் நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
19 អន្យោ ជនះ កថយាមាស, ទឝវ្ឫឞានហំ ក្រីតវាន៑ តាន៑ បរីក្ឞិតុំ យាមិ តស្មាទេវ មាំ ក្ឞន្តុំ តំ និវេទយ។
“வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
20 អបរះ កថយាមាស, វ្យូឍវានហំ តស្មាត៑ ការណាទ៑ យាតុំ ន ឝក្នោមិ។
“மற்றவனோ, ‘நான் இப்பொழுதுதான் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என்னால் வரமுடியாது’ என்றான்.
21 បឝ្ចាត៑ ស ទាសោ គត្វា និជប្រភោះ សាក្ឞាត៑ សវ៌្វវ្ឫត្តាន្តំ និវេទយាមាស, តតោសៅ គ្ឫហបតិះ កុបិត្វា ស្វទាសំ វ្យាជហារ, ត្វំ សត្វរំ នគរស្យ សន្និវេឝាន៑ មាគ៌ាំឝ្ច គត្វា ទរិទ្រឝុឞ្កករខញ្ជាន្ធាន៑ អត្រានយ។
“அந்த வேலைக்காரன் திரும்பிவந்து, தனது எஜமானுக்கு நடந்தவற்றைச் சொன்னான். அப்பொழுது, அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப்போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சந்துகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் கூட்டிக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.
22 តតោ ទាសោៜវទត៑, ហេ ប្រភោ ភវត អាជ្ញានុសារេណាក្រិយត តថាបិ ស្ថានមស្តិ។
“அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால், இன்னும் இடம் இருக்கிறது’ என்றான்.
23 តទា ប្រភុះ បុន រ្ទាសាយាកថយត៑, រាជបថាន៑ វ្ឫក្ឞមូលានិ ច យាត្វា មទីយគ្ឫហបូរណាត៌្ហំ លោកានាគន្តុំ ប្រវត៌្តយ។
“அப்பொழுது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப்போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும்.
24 អហំ យុឞ្មភ្យំ កថយាមិ, បូវ៌្វនិមន្ត្រិតានមេកោបិ មមាស្យ រាត្រិភោជ្យស្យាស្វាទំ ន ប្រាប្ស្យតិ។
நான் உனக்குச் சொல்கிறேன், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் எனது விருந்தை சுவைக்கமாட்டான்’ என்றான்.”
25 អនន្តរំ ពហុឞុ លោកេឞុ យីឝោះ បឝ្ចាទ៑ វ្រជិតេឞុ សត្សុ ស វ្យាឃុដ្យ តេភ្យះ កថយាមាស,
மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது:
26 យះ កឝ្ចិន៑ មម សមីបម៑ អាគត្យ ស្វស្យ មាតា បិតា បត្នី សន្តានា ភ្រាតរោ ភគិម្យោ និជប្រាណាឝ្ច, ឯតេភ្យះ សវ៌្វេភ្យោ មយ្យធិកំ ប្រេម ន ករោតិ, ស មម ឝិឞ្យោ ភវិតុំ ន ឝក្ឞ្យតិ។
“யாராவது என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தன் உயிரையும் வெறுக்காவிட்டால், அவர்கள் என் சீடராய் இருக்கமுடியாது.
27 យះ កឝ្ចិត៑ ស្វីយំ ក្រុឝំ វហន៑ មម បឝ្ចាន្ន គច្ឆតិ, សោបិ មម ឝិឞ្យោ ភវិតុំ ន ឝក្ឞ្យតិ។
யாராவது தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றாவிட்டால் எனக்குச் சீடராயிருக்க முடியாது.
28 ទុគ៌និម៌្មាណេ កតិវ្យយោ ភវិឞ្យតិ, តថា តស្យ សមាប្តិករណាត៌្ហំ សម្បត្តិរស្តិ ន វា, ប្រថមមុបវិឝ្យ ឯតន្ន គណយតិ, យុឞ្មាកំ មធ្យ ឯតាទ្ឫឝះ កោស្តិ?
“உங்களில் யாராவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவர்கள் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பார்களோ?
29 នោចេទ៑ ភិត្តិំ ក្ឫត្វា ឝេឞេ យទិ សមាបយិតុំ ន ឝក្ឞ្យតិ,
அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள்.
30 តហ៌ិ មានុឞោយំ និចេតុម៑ អារភត សមាបយិតុំ នាឝក្នោត៑, ឥតិ វ្យាហ្ឫត្យ សវ៌្វេ តមុបហសិឞ្យន្តិ។
‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும், அதைக் கட்டிமுடிக்க அவனால் முடியவில்லை’ என்பார்கள்.
31 អបរញ្ច ភិន្នភូបតិនា សហ យុទ្ធំ កត៌្តុម៑ ឧទ្យម្យ ទឝសហស្រាណិ សៃន្យានិ គ្ឫហីត្វា វិំឝតិសហស្រេះ សៃន្យៃះ សហិតស្យ សមីបវាសិនះ សម្មុខំ យាតុំ ឝក្ឞ្យាមិ ន វេតិ ប្រថមំ ឧបវិឝ្យ ន វិចារយតិ ឯតាទ្ឫឝោ ភូមិបតិះ កះ?
“அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ?
32 យទិ ន ឝក្នោតិ តហ៌ិ រិបាវតិទូរេ តិឞ្ឋតិ សតិ និជទូតំ ប្រេឞ្យ សន្ធិំ កត៌្តុំ ប្រាត៌្ហយេត។
அவனால் அப்படி நிற்கமுடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவன் பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான்.
33 តទ្វទ៑ យុឞ្មាកំ មធ្យេ យះ កឝ្ចិន៑ មទត៌្ហំ សវ៌្វស្វំ ហាតុំ ន ឝក្នោតិ ស មម ឝិឞ្យោ ភវិតុំ ន ឝក្ឞ្យតិ។
அவ்விதமாகவே, உங்களில் யாராவது தம்மிடமுள்ள எல்லாவற்றையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடராக இருக்கமுடியாது.
34 លវណម៑ ឧត្តមម៑ ឥតិ សត្យំ, កិន្តុ យទិ លវណស្យ លវណត្វម៑ អបគច្ឆតិ តហ៌ិ តត៑ កថំ ស្វាទុយុក្តំ ភវិឞ្យតិ?
“உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்?
35 តទ ភូម្យត៌្ហម៑ អាលវាលរាឝ្យត៌្ហមបិ ភទ្រំ ន ភវតិ; លោកាស្តទ៑ ពហិះ ក្ឞិបន្តិ។ យស្យ ឝ្រោតុំ ឝ្រោត្រេ ស្តះ ស ឝ្ឫណោតុ។
அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும். “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.

< លូកះ 14 >