< ಲೂಕಃ 15 >

1 ತದಾ ಕರಸಞ್ಚಾಯಿನಃ ಪಾಪಿನಶ್ಚ ಲೋಕಾ ಉಪದೇಶ್ಕಥಾಂ ಶ್ರೋತುಂ ಯೀಶೋಃ ಸಮೀಪಮ್ ಆಗಚ್ಛನ್|
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 ತತಃ ಫಿರೂಶಿನ ಉಪಾಧ್ಯಾಯಾಶ್ಚ ವಿವದಮಾನಾಃ ಕಥಯಾಮಾಸುಃ ಏಷ ಮಾನುಷಃ ಪಾಪಿಭಿಃ ಸಹ ಪ್ರಣಯಂ ಕೃತ್ವಾ ತೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಭುಂಕ್ತೇ|
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 ತದಾ ಸ ತೇಭ್ಯ ಇಮಾಂ ದೃಷ್ಟಾನ್ತಕಥಾಂ ಕಥಿತವಾನ್,
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 ಕಸ್ಯಚಿತ್ ಶತಮೇಷೇಷು ತಿಷ್ಠತ್ಮು ತೇಷಾಮೇಕಂ ಸ ಯದಿ ಹಾರಯತಿ ತರ್ಹಿ ಮಧ್ಯೇಪ್ರಾನ್ತರಮ್ ಏಕೋನಶತಮೇಷಾನ್ ವಿಹಾಯ ಹಾರಿತಮೇಷಸ್ಯ ಉದ್ದೇಶಪ್ರಾಪ್ತಿಪರ್ಯ್ಯನತಂ ನ ಗವೇಷಯತಿ, ಏತಾದೃಶೋ ಲೋಕೋ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಕ ಆಸ್ತೇ?
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 ತಸ್ಯೋದ್ದೇಶಂ ಪ್ರಾಪ್ಯ ಹೃಷ್ಟಮನಾಸ್ತಂ ಸ್ಕನ್ಧೇ ನಿಧಾಯ ಸ್ವಸ್ಥಾನಮ್ ಆನೀಯ ಬನ್ಧುಬಾನ್ಧವಸಮೀಪವಾಸಿನ ಆಹೂಯ ವಕ್ತಿ,
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 ಹಾರಿತಂ ಮೇಷಂ ಪ್ರಾಪ್ತೋಹಮ್ ಅತೋ ಹೇತೋ ರ್ಮಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಆನನ್ದತ|
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 ತದ್ವದಹಂ ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ, ಯೇಷಾಂ ಮನಃಪರಾವರ್ತ್ತನಸ್ಯ ಪ್ರಯೋಜನಂ ನಾಸ್ತಿ, ತಾದೃಶೈಕೋನಶತಧಾರ್ಮ್ಮಿಕಕಾರಣಾದ್ ಯ ಆನನ್ದಸ್ತಸ್ಮಾದ್ ಏಕಸ್ಯ ಮನಃಪರಿವರ್ತ್ತಿನಃ ಪಾಪಿನಃ ಕಾರಣಾತ್ ಸ್ವರ್ಗೇ ಽಧಿಕಾನನ್ದೋ ಜಾಯತೇ|
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 ಅಪರಞ್ಚ ದಶಾನಾಂ ರೂಪ್ಯಖಣ್ಡಾನಾಮ್ ಏಕಖಣ್ಡೇ ಹಾರಿತೇ ಪ್ರದೀಪಂ ಪ್ರಜ್ವಾಲ್ಯ ಗೃಹಂ ಸಮ್ಮಾರ್ಜ್ಯ ತಸ್ಯ ಪ್ರಾಪ್ತಿಂ ಯಾವದ್ ಯತ್ನೇನ ನ ಗವೇಷಯತಿ, ಏತಾದೃಶೀ ಯೋಷಿತ್ ಕಾಸ್ತೇ?
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 ಪ್ರಾಪ್ತೇ ಸತಿ ಬನ್ಧುಬಾನ್ಧವಸಮೀಪವಾಸಿನೀರಾಹೂಯ ಕಥಯತಿ, ಹಾರಿತಂ ರೂಪ್ಯಖಣ್ಡಂ ಪ್ರಾಪ್ತಾಹಂ ತಸ್ಮಾದೇವ ಮಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಆನನ್ದತ|
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 ತದ್ವದಹಂ ಯುಷ್ಮಾನ್ ವ್ಯಾಹರಾಮಿ, ಏಕೇನ ಪಾಪಿನಾ ಮನಸಿ ಪರಿವರ್ತ್ತಿತೇ, ಈಶ್ವರಸ್ಯ ದೂತಾನಾಂ ಮಧ್ಯೇಪ್ಯಾನನ್ದೋ ಜಾಯತೇ|
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 ಅಪರಞ್ಚ ಸ ಕಥಯಾಮಾಸ, ಕಸ್ಯಚಿದ್ ದ್ವೌ ಪುತ್ರಾವಾಸ್ತಾಂ,
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 ತಯೋಃ ಕನಿಷ್ಠಃ ಪುತ್ರಃ ಪಿತ್ರೇ ಕಥಯಾಮಾಸ, ಹೇ ಪಿತಸ್ತವ ಸಮ್ಪತ್ತ್ಯಾ ಯಮಂಶಂ ಪ್ರಾಪ್ಸ್ಯಾಮ್ಯಹಂ ವಿಭಜ್ಯ ತಂ ದೇಹಿ, ತತಃ ಪಿತಾ ನಿಜಾಂ ಸಮ್ಪತ್ತಿಂ ವಿಭಜ್ಯ ತಾಭ್ಯಾಂ ದದೌ|
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 ಕತಿಪಯಾತ್ ಕಾಲಾತ್ ಪರಂ ಸ ಕನಿಷ್ಠಪುತ್ರಃ ಸಮಸ್ತಂ ಧನಂ ಸಂಗೃಹ್ಯ ದೂರದೇಶಂ ಗತ್ವಾ ದುಷ್ಟಾಚರಣೇನ ಸರ್ವ್ವಾಂ ಸಮ್ಪತ್ತಿಂ ನಾಶಯಾಮಾಸ|
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 ತಸ್ಯ ಸರ್ವ್ವಧನೇ ವ್ಯಯಂ ಗತೇ ತದ್ದೇಶೇ ಮಹಾದುರ್ಭಿಕ್ಷಂ ಬಭೂವ, ತತಸ್ತಸ್ಯ ದೈನ್ಯದಶಾ ಭವಿತುಮ್ ಆರೇಭೇ|
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 ತತಃ ಪರಂ ಸ ಗತ್ವಾ ತದ್ದೇಶೀಯಂ ಗೃಹಸ್ಥಮೇಕಮ್ ಆಶ್ರಯತ; ತತಃ ಸತಂ ಶೂಕರವ್ರಜಂ ಚಾರಯಿತುಂ ಪ್ರಾನ್ತರಂ ಪ್ರೇಷಯಾಮಾಸ|
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 ಕೇನಾಪಿ ತಸ್ಮೈ ಭಕ್ಷ್ಯಾದಾನಾತ್ ಸ ಶೂಕರಫಲವಲ್ಕಲೇನ ಪಿಚಿಣ್ಡಪೂರಣಾಂ ವವಾಞ್ಛ|
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 ಶೇಷೇ ಸ ಮನಸಿ ಚೇತನಾಂ ಪ್ರಾಪ್ಯ ಕಥಯಾಮಾಸ, ಹಾ ಮಮ ಪಿತುಃ ಸಮೀಪೇ ಕತಿ ಕತಿ ವೇತನಭುಜೋ ದಾಸಾ ಯಥೇಷ್ಟಂ ತತೋಧಿಕಞ್ಚ ಭಕ್ಷ್ಯಂ ಪ್ರಾಪ್ನುವನ್ತಿ ಕಿನ್ತ್ವಹಂ ಕ್ಷುಧಾ ಮುಮೂರ್ಷುಃ|
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 ಅಹಮುತ್ಥಾಯ ಪಿತುಃ ಸಮೀಪಂ ಗತ್ವಾ ಕಥಾಮೇತಾಂ ವದಿಷ್ಯಾಮಿ, ಹೇ ಪಿತರ್ ಈಶ್ವರಸ್ಯ ತವ ಚ ವಿರುದ್ಧಂ ಪಾಪಮಕರವಮ್
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 ತವ ಪುತ್ರಇತಿ ವಿಖ್ಯಾತೋ ಭವಿತುಂ ನ ಯೋಗ್ಯೋಸ್ಮಿ ಚ, ಮಾಂ ತವ ವೈತನಿಕಂ ದಾಸಂ ಕೃತ್ವಾ ಸ್ಥಾಪಯ|
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 ಪಶ್ಚಾತ್ ಸ ಉತ್ಥಾಯ ಪಿತುಃ ಸಮೀಪಂ ಜಗಾಮ; ತತಸ್ತಸ್ಯ ಪಿತಾತಿದೂರೇ ತಂ ನಿರೀಕ್ಷ್ಯ ದಯಾಞ್ಚಕ್ರೇ, ಧಾವಿತ್ವಾ ತಸ್ಯ ಕಣ್ಠಂ ಗೃಹೀತ್ವಾ ತಂ ಚುಚುಮ್ಬ ಚ|
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 ತದಾ ಪುತ್ರ ಉವಾಚ, ಹೇ ಪಿತರ್ ಈಶ್ವರಸ್ಯ ತವ ಚ ವಿರುದ್ಧಂ ಪಾಪಮಕರವಂ, ತವ ಪುತ್ರಇತಿ ವಿಖ್ಯಾತೋ ಭವಿತುಂ ನ ಯೋಗ್ಯೋಸ್ಮಿ ಚ|
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 ಕಿನ್ತು ತಸ್ಯ ಪಿತಾ ನಿಜದಾಸಾನ್ ಆದಿದೇಶ, ಸರ್ವ್ವೋತ್ತಮವಸ್ತ್ರಾಣ್ಯಾನೀಯ ಪರಿಧಾಪಯತೈನಂ ಹಸ್ತೇ ಚಾಙ್ಗುರೀಯಕಮ್ ಅರ್ಪಯತ ಪಾದಯೋಶ್ಚೋಪಾನಹೌ ಸಮರ್ಪಯತ;
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 ಪುಷ್ಟಂ ಗೋವತ್ಸಮ್ ಆನೀಯ ಮಾರಯತ ಚ ತಂ ಭುಕ್ತ್ವಾ ವಯಮ್ ಆನನ್ದಾಮ|
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 ಯತೋ ಮಮ ಪುತ್ರೋಯಮ್ ಅಮ್ರಿಯತ ಪುನರಜೀವೀದ್ ಹಾರಿತಶ್ಚ ಲಬ್ಧೋಭೂತ್ ತತಸ್ತ ಆನನ್ದಿತುಮ್ ಆರೇಭಿರೇ|
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 ತತ್ಕಾಲೇ ತಸ್ಯ ಜ್ಯೇಷ್ಠಃ ಪುತ್ರಃ ಕ್ಷೇತ್ರ ಆಸೀತ್| ಅಥ ಸ ನಿವೇಶನಸ್ಯ ನಿಕಟಂ ಆಗಚ್ಛನ್ ನೃತ್ಯಾನಾಂ ವಾದ್ಯಾನಾಞ್ಚ ಶಬ್ದಂ ಶ್ರುತ್ವಾ
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 ದಾಸಾನಾಮ್ ಏಕಮ್ ಆಹೂಯ ಪಪ್ರಚ್ಛ, ಕಿಂ ಕಾರಣಮಸ್ಯ?
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 ತತಃ ಸೋವಾದೀತ್, ತವ ಭ್ರಾತಾಗಮತ್, ತವ ತಾತಶ್ಚ ತಂ ಸುಶರೀರಂ ಪ್ರಾಪ್ಯ ಪುಷ್ಟಂ ಗೋವತ್ಸಂ ಮಾರಿತವಾನ್|
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 ತತಃ ಸ ಪ್ರಕುಪ್ಯ ನಿವೇಶನಾನ್ತಃ ಪ್ರವೇಷ್ಟುಂ ನ ಸಮ್ಮೇನೇ; ತತಸ್ತಸ್ಯ ಪಿತಾ ಬಹಿರಾಗತ್ಯ ತಂ ಸಾಧಯಾಮಾಸ|
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 ತತಃ ಸ ಪಿತರಂ ಪ್ರತ್ಯುವಾಚ, ಪಶ್ಯ ತವ ಕಾಞ್ಚಿದಪ್ಯಾಜ್ಞಾಂ ನ ವಿಲಂಘ್ಯ ಬಹೂನ್ ವತ್ಸರಾನ್ ಅಹಂ ತ್ವಾಂ ಸೇವೇ ತಥಾಪಿ ಮಿತ್ರೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಉತ್ಸವಂ ಕರ್ತ್ತುಂ ಕದಾಪಿ ಛಾಗಮೇಕಮಪಿ ಮಹ್ಯಂ ನಾದದಾಃ;
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 ಕಿನ್ತು ತವ ಯಃ ಪುತ್ರೋ ವೇಶ್ಯಾಗಮನಾದಿಭಿಸ್ತವ ಸಮ್ಪತ್ತಿಮ್ ಅಪವ್ಯಯಿತವಾನ್ ತಸ್ಮಿನ್ನಾಗತಮಾತ್ರೇ ತಸ್ಯೈವ ನಿಮಿತ್ತಂ ಪುಷ್ಟಂ ಗೋವತ್ಸಂ ಮಾರಿತವಾನ್|
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 ತದಾ ತಸ್ಯ ಪಿತಾವೋಚತ್, ಹೇ ಪುತ್ರ ತ್ವಂ ಸರ್ವ್ವದಾ ಮಯಾ ಸಹಾಸಿ ತಸ್ಮಾನ್ ಮಮ ಯದ್ಯದಾಸ್ತೇ ತತ್ಸರ್ವ್ವಂ ತವ|
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 ಕಿನ್ತು ತವಾಯಂ ಭ್ರಾತಾ ಮೃತಃ ಪುನರಜೀವೀದ್ ಹಾರಿತಶ್ಚ ಭೂತ್ವಾ ಪ್ರಾಪ್ತೋಭೂತ್, ಏತಸ್ಮಾತ್ ಕಾರಣಾದ್ ಉತ್ಸವಾನನ್ದೌ ಕರ್ತ್ತುಮ್ ಉಚಿತಮಸ್ಮಾಕಮ್|
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< ಲೂಕಃ 15 >