< માર્કઃ 6 >

1 અનન્તરં સ તત્સ્થાનાત્ પ્રસ્થાય સ્વપ્રદેશમાગતઃ શિષ્યાશ્ચ તત્પશ્ચાદ્ ગતાઃ|
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
2 અથ વિશ્રામવારે સતિ સ ભજનગૃહે ઉપદેષ્ટુમારબ્ધવાન્ તતોઽનેકે લોકાસ્તત્કથાં શ્રુત્વા વિસ્મિત્ય જગદુઃ, અસ્ય મનુજસ્ય ઈદૃશી આશ્ચર્ય્યક્રિયા કસ્માજ્ જાતા? તથા સ્વકરાભ્યામ્ ઇત્થમદ્ભુતં કર્મ્મ કર્ત્તામ્ એતસ્મૈ કથં જ્ઞાનં દત્તમ્?
ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3 કિમયં મરિયમઃ પુત્રસ્તજ્ઞા નો? કિમયં યાકૂબ્-યોસિ-યિહુદા-શિમોનાં ભ્રાતા નો? અસ્ય ભગિન્યઃ કિમિહાસ્માભિઃ સહ નો? ઇત્થં તે તદર્થે પ્રત્યૂહં ગતાઃ|
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
4 તદા યીશુસ્તેભ્યોઽકથયત્ સ્વદેશં સ્વકુટુમ્બાન્ સ્વપરિજનાંશ્ચ વિના કુત્રાપિ ભવિષ્યદ્વાદી અસત્કૃતો ન ભવતિ|
இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
5 અપરઞ્ચ તેષામપ્રત્યયાત્ સ વિસ્મિતઃ કિયતાં રોગિણાં વપુઃષુ હસ્તમ્ અર્પયિત્વા કેવલં તેષામારોગ્યકરણાદ્ અન્યત્ કિમપિ ચિત્રકાર્ય્યં કર્ત્તાં ન શક્તઃ|
அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
6 અથ સ ચતુર્દિક્સ્થ ગ્રામાન્ ભ્રમિત્વા ઉપદિષ્ટવાન્
அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
7 દ્વાદશશિષ્યાન્ આહૂય અમેધ્યભૂતાન્ વશીકર્ત્તાં શક્તિં દત્ત્વા તેષાં દ્વૌ દ્વૌ જનો પ્રેષિતવાન્|
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
8 પુનરિત્યાદિશદ્ યૂયમ્ એકૈકાં યષ્ટિં વિના વસ્ત્રસંપુટઃ પૂપઃ કટિબન્ધે તામ્રખણ્ડઞ્ચ એષાં કિમપિ મા ગ્રહ્લીત,
வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
9 માર્ગયાત્રાયૈ પાદેષૂપાનહૌ દત્ત્વા દ્વે ઉત્તરીયે મા પરિધદ્વ્વં|
காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
10 અપરમપ્યુક્તં તેન યૂયં યસ્યાં પુર્ય્યાં યસ્ય નિવેશનં પ્રવેક્ષ્યથ તાં પુરીં યાવન્ન ત્યક્ષ્યથ તાવત્ તન્નિવેશને સ્થાસ્યથ|
௧0பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
11 તત્ર યદિ કેપિ યુષ્માકમાતિથ્યં ન વિદધતિ યુષ્માકં કથાશ્ચ ન શૃણ્વન્તિ તર્હિ તત્સ્થાનાત્ પ્રસ્થાનસમયે તેષાં વિરુદ્ધં સાક્ષ્યં દાતું સ્વપાદાનાસ્ફાલ્ય રજઃ સમ્પાતયત; અહં યુષ્માન્ યથાર્થં વચ્મિ વિચારદિને તન્નગરસ્યાવસ્થાતઃ સિદોમામોરયો ર્નગરયોરવસ્થા સહ્યતરા ભવિષ્યતિ|
௧௧யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12 અથ તે ગત્વા લોકાનાં મનઃપરાવર્ત્તનીઃ કથા પ્રચારિતવન્તઃ|
௧௨அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
13 એવમનેકાન્ ભૂતાંશ્ચ ત્યાજિતવન્તસ્તથા તૈલેન મર્દ્દયિત્વા બહૂન્ જનાનરોગાનકાર્ષુઃ|
௧௩அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
14 ઇત્થં તસ્ય સુખ્યાતિશ્ચતુર્દિશો વ્યાપ્તા તદા હેરોદ્ રાજા તન્નિશમ્ય કથિતવાન્, યોહન્ મજ્જકઃ શ્મશાનાદ્ ઉત્થિત અતોહેતોસ્તેન સર્વ્વા એતા અદ્ભુતક્રિયાઃ પ્રકાશન્તે|
௧௪இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
15 અન્યેઽકથયન્ અયમ્ એલિયઃ, કેપિ કથિતવન્ત એષ ભવિષ્યદ્વાદી યદ્વા ભવિષ્યદ્વાદિનાં સદૃશ એકોયમ્|
௧௫சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
16 કિન્તુ હેરોદ્ ઇત્યાકર્ણ્ય ભાષિતવાન્ યસ્યાહં શિરશ્છિન્નવાન્ સ એવ યોહનયં સ શ્મશાનાદુદતિષ્ઠત્|
௧௬ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
17 પૂર્વ્વં સ્વભ્રાતુઃ ફિલિપસ્ય પત્ન્યા ઉદ્વાહં કૃતવન્તં હેરોદં યોહનવાદીત્ સ્વભાતૃવધૂ ર્ન વિવાહ્યા|
௧௭ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
18 અતઃ કારણાત્ હેરોદ્ લોકં પ્રહિત્ય યોહનં ધૃત્વા બન્ધનાલયે બદ્ધવાન્|
௧௮யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
19 હેરોદિયા તસ્મૈ યોહને પ્રકુપ્ય તં હન્તુમ્ ઐચ્છત્ કિન્તુ ન શક્તા,
௧௯ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
20 યસ્માદ્ હેરોદ્ તં ધાર્મ્મિકં સત્પુરુષઞ્ચ જ્ઞાત્વા સમ્મન્ય રક્ષિતવાન્; તત્કથાં શ્રુત્વા તદનુસારેણ બહૂનિ કર્મ્માણિ કૃતવાન્ હૃષ્ટમનાસ્તદુપદેશં શ્રુતવાંશ્ચ|
௨0ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
21 કિન્તુ હેરોદ્ યદા સ્વજન્મદિને પ્રધાનલોકેભ્યઃ સેનાનીભ્યશ્ચ ગાલીલ્પ્રદેશીયશ્રેષ્ઠલોકેભ્યશ્ચ રાત્રૌ ભોજ્યમેકં કૃતવાન્
௨௧ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
22 તસ્મિન્ શુભદિને હેરોદિયાયાઃ કન્યા સમેત્ય તેષાં સમક્ષં સંનૃત્ય હેરોદસ્તેન સહોપવિષ્ટાનાઞ્ચ તોષમજીજનત્ તતા નૃપઃ કન્યામાહ સ્મ મત્તો યદ્ યાચસે તદેવ તુભ્યં દાસ્યે|
௨௨ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
23 શપથં કૃત્વાકથયત્ ચેદ્ રાજ્યાર્દ્ધમપિ યાચસે તદપિ તુભ્યં દાસ્યે|
௨௩நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
24 તતઃ સા બહિ ર્ગત્વા સ્વમાતરં પપ્રચ્છ કિમહં યાચિષ્યે? તદા સાકથયત્ યોહનો મજ્જકસ્ય શિરઃ|
௨௪அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25 અથ તૂર્ણં ભૂપસમીપમ્ એત્ય યાચમાનાવદત્ ક્ષણેસ્મિન્ યોહનો મજ્જકસ્ય શિરઃ પાત્રે નિધાય દેહિ, એતદ્ યાચેઽહં|
௨௫உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26 તસ્માત્ ભૂપોઽતિદુઃખિતઃ, તથાપિ સ્વશપથસ્ય સહભોજિનાઞ્ચાનુરોધાત્ તદનઙ્ગીકર્ત્તું ન શક્તઃ|
௨௬அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
27 તત્ક્ષણં રાજા ઘાતકં પ્રેષ્ય તસ્ય શિર આનેતુમાદિષ્ટવાન્|
௨௭உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
28 તતઃ સ કારાગારં ગત્વા તચ્છિરશ્છિત્વા પાત્રે નિધાયાનીય તસ્યૈ કન્યાયૈ દત્તવાન્ કન્યા ચ સ્વમાત્રે દદૌ|
௨௮அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 અનનતરં યોહનઃ શિષ્યાસ્તદ્વાર્ત્તાં પ્રાપ્યાગત્ય તસ્ય કુણપં શ્મશાનેઽસ્થાપયન્|
௨௯அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30 અથ પ્રેષિતા યીશોઃ સન્નિધૌ મિલિતા યદ્ યચ્ ચક્રુઃ શિક્ષયામાસુશ્ચ તત્સર્વ્વવાર્ત્તાસ્તસ્મૈ કથિતવન્તઃ|
௩0அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31 સ તાનુવાચ યૂયં વિજનસ્થાનં ગત્વા વિશ્રામ્યત યતસ્તત્સન્નિધૌ બહુલોકાનાં સમાગમાત્ તે ભોક્તું નાવકાશં પ્રાપ્તાઃ|
௩௧அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
32 તતસ્તે નાવા વિજનસ્થાનં ગુપ્તં ગગ્મુઃ|
௩௨அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
33 તતો લોકનિવહસ્તેષાં સ્થાનાન્તરયાનં દદર્શ, અનેકે તં પરિચિત્ય નાનાપુરેભ્યઃ પદૈર્વ્રજિત્વા જવેન તૈષામગ્રે યીશોઃ સમીપ ઉપતસ્થુઃ|
௩௩அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
34 તદા યીશુ ર્નાવો બહિર્ગત્ય લોકારણ્યાનીં દૃષ્ટ્વા તેષુ કરુણાં કૃતવાન્ યતસ્તેઽરક્ષકમેષા ઇવાસન્ તદા સ તાન નાનાપ્રસઙ્ગાન્ ઉપદિષ્ટવાન્|
௩௪இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
35 અથ દિવાન્તે સતિ શિષ્યા એત્ય યીશુમૂચિરે, ઇદં વિજનસ્થાનં દિનઞ્ચાવસન્નં|
௩௫அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
36 લોકાનાં કિમપિ ખાદ્યં નાસ્તિ, અતશ્ચતુર્દિક્ષુ ગ્રામાન્ ગન્તું ભોજ્યદ્રવ્યાણિ ક્રેતુઞ્ચ ભવાન્ તાન્ વિસૃજતુ|
௩௬சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37 તદા સ તાનુવાચ યૂયમેવ તાન્ ભોજયત; તતસ્તે જગદુ ર્વયં ગત્વા દ્વિશતસંખ્યકૈ ર્મુદ્રાપાદૈઃ પૂપાન્ ક્રીત્વા કિં તાન્ ભોજયિષ્યામઃ?
௩௭அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
38 તદા સ તાન્ પૃષ્ઠવાન્ યુષ્માકં સન્નિધૌ કતિ પૂપા આસતે? ગત્વા પશ્યત; તતસ્તે દૃષ્ટ્વા તમવદન્ પઞ્ચ પૂપા દ્વૌ મત્સ્યૌ ચ સન્તિ|
௩௮அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
39 તદા સ લોકાન્ શસ્પોપરિ પંક્તિભિરુપવેશયિતુમ્ આદિષ્ટવાન્,
௩௯அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
40 તતસ્તે શતં શતં જનાઃ પઞ્ચાશત્ પઞ્ચાશજ્જનાશ્ચ પંક્તિભિ ર્ભુવિ સમુપવિવિશુઃ|
௪0அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
41 અથ સ તાન્ પઞ્ચપૂપાન્ મત્સ્યદ્વયઞ્ચ ધૃત્વા સ્વર્ગં પશ્યન્ ઈશ્વરગુણાન્ અન્વકીર્ત્તયત્ તાન્ પૂપાન્ ભંક્ત્વા લોકેભ્યઃ પરિવેષયિતું શિષ્યેભ્યો દત્તવાન્ દ્વા મત્સ્યૌ ચ વિભજ્ય સર્વ્વેભ્યો દત્તવાન્|
௪௧அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
42 તતઃ સર્વ્વે ભુક્ત્વાતૃપ્યન્|
௪௨எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
43 અનન્તરં શિષ્યા અવશિષ્ટૈઃ પૂપૈ ર્મત્સ્યૈશ્ચ પૂર્ણાન્ દ્વદશ ડલ્લકાન્ જગૃહુઃ|
௪௩மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
44 તે ભોક્તારઃ પ્રાયઃ પઞ્ચ સહસ્રાણિ પુરુષા આસન્|
௪௪அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
45 અથ સ લોકાન્ વિસૃજન્નેવ નાવમારોઢું સ્વસ્માદગ્રે પારે બૈત્સૈદાપુરં યાતુઞ્ચ શ્ષ્યિન્ વાઢમાદિષ્ટવાન્|
௪௫அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
46 તદા સ સર્વ્વાન્ વિસૃજ્ય પ્રાર્થયિતું પર્વ્વતં ગતઃ|
௪௬அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
47 તતઃ સન્ધ્યાયાં સત્યાં નૌઃ સિન્ધુમધ્ય ઉપસ્થિતા કિન્તુ સ એકાકી સ્થલે સ્થિતઃ|
௪௭மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
48 અથ સમ્મુખવાતવહનાત્ શિષ્યા નાવં વાહયિત્વા પરિશ્રાન્તા ઇતિ જ્ઞાત્વા સ નિશાચતુર્થયામે સિન્ધૂપરિ પદ્ભ્યાં વ્રજન્ તેષાં સમીપમેત્ય તેષામગ્રે યાતુમ્ ઉદ્યતઃ|
௪௮அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
49 કિન્તુ શિષ્યાઃ સિન્ધૂપરિ તં વ્રજન્તં દૃષ્ટ્વા ભૂતમનુમાય રુરુવુઃ,
௪௯அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
50 યતઃ સર્વ્વે તં દૃષ્ટ્વા વ્યાકુલિતાઃ| અતએવ યીશુસ્તત્ક્ષણં તૈઃ સહાલપ્ય કથિતવાન્, સુસ્થિરા ભૂત, અયમહં મા ભૈષ્ટ|
௫0அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
51 અથ નૌકામારુહ્ય તસ્મિન્ તેષાં સન્નિધિં ગતે વાતો નિવૃત્તઃ; તસ્માત્તે મનઃસુ વિસ્મિતા આશ્ચર્ય્યં મેનિરે|
௫௧அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
52 યતસ્તે મનસાં કાઠિન્યાત્ તત્ પૂપીયમ્ આશ્ચર્ય્યં કર્મ્મ ન વિવિક્તવન્તઃ|
௫௨அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
53 અથ તે પારં ગત્વા ગિનેષરત્પ્રદેશમેત્ય તટ ઉપસ્થિતાઃ|
௫௩அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
54 તેષુ નૌકાતો બહિર્ગતેષુ તત્પ્રદેશીયા લોકાસ્તં પરિચિત્ય
௫௪அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
55 ચતુર્દિક્ષુ ધાવન્તો યત્ર યત્ર રોગિણો નરા આસન્ તાન્ સર્વ્વાન ખટ્વોપરિ નિધાય યત્ર કુત્રચિત્ તદ્વાર્ત્તાં પ્રાપુઃ તત્ સ્થાનમ્ આનેતુમ્ આરેભિરે|
௫௫அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
56 તથા યત્ર યત્ર ગ્રામે યત્ર યત્ર પુરે યત્ર યત્ર પલ્લ્યાઞ્ચ તેન પ્રવેશઃ કૃતસ્તદ્વર્ત્મમધ્યે લોકાઃ પીડિતાન્ સ્થાપયિત્વા તસ્ય ચેલગ્રન્થિમાત્રં સ્પ્રષ્ટુમ્ તેષામર્થે તદનુજ્ઞાં પ્રાર્થયન્તઃ યાવન્તો લોકાઃ પસ્પૃશુસ્તાવન્ત એવ ગદાન્મુક્તાઃ|
௫௬இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.

< માર્કઃ 6 >