< લૂકઃ 24 >

1 અથ સપ્તાહપ્રથમદિનેઽતિપ્રત્યૂષે તા યોષિતઃ સમ્પાદિતં સુગન્ધિદ્રવ્યં ગૃહીત્વા તદન્યાભિઃ કિયતીભિઃ સ્ત્રીભિઃ સહ શ્મશાનં યયુઃ|
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 કિન્તુ શ્મશાનદ્વારાત્ પાષાણમપસારિતં દૃષ્ટ્વા
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 તાઃ પ્રવિશ્ય પ્રભો ર્દેહમપ્રાપ્ય
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 વ્યાકુલા ભવન્તિ એતર્હિ તેજોમયવસ્ત્રાન્વિતૌ દ્વૌ પુરુષૌ તાસાં સમીપે સમુપસ્થિતૌ
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 તસ્માત્તાઃ શઙ્કાયુક્તા ભૂમાવધોમુખ્યસ્યસ્થુઃ| તદા તૌ તા ઊચતુ ર્મૃતાનાં મધ્યે જીવન્તં કુતો મૃગયથ?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 સોત્ર નાસ્તિ સ ઉદસ્થાત્|
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 પાપિનાં કરેષુ સમર્પિતેન ક્રુશે હતેન ચ મનુષ્યપુત્રેણ તૃતીયદિવસે શ્મશાનાદુત્થાતવ્યમ્ ઇતિ કથાં સ ગલીલિ તિષ્ઠન્ યુષ્મભ્યં કથિતવાન્ તાં સ્મરત|
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 તદા તસ્ય સા કથા તાસાં મનઃસુ જાતા|
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 અનન્તરં શ્મશાનાદ્ ગત્વા તા એકાદશશિષ્યાદિભ્યઃ સર્વ્વેભ્યસ્તાં વાર્ત્તાં કથયામાસુઃ|
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 મગ્દલીનીમરિયમ્, યોહના, યાકૂબો માતા મરિયમ્ તદન્યાઃ સઙ્ગિન્યો યોષિતશ્ચ પ્રેરિતેભ્ય એતાઃ સર્વ્વા વાર્ત્તાઃ કથયામાસુઃ
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 કિન્તુ તાસાં કથામ્ અનર્થકાખ્યાનમાત્રં બુદ્ધ્વા કોપિ ન પ્રત્યૈત્|
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 તદા પિતર ઉત્થાય શ્મશાનાન્તિકં દધાવ, તત્ર ચ પ્રહ્વો ભૂત્વા પાર્શ્વૈકસ્થાપિતં કેવલં વસ્ત્રં દદર્શ; તસ્માદાશ્ચર્ય્યં મન્યમાનો યદઘટત તન્મનસિ વિચારયન્ પ્રતસ્થે|
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 તસ્મિન્નેવ દિને દ્વૌ શિય્યૌ યિરૂશાલમશ્ચતુષ્ક્રોશાન્તરિતમ્ ઇમ્માયુગ્રામં ગચ્છન્તૌ
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 તાસાં ઘટનાનાં કથામકથયતાં
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 તયોરાલાપવિચારયોઃ કાલે યીશુરાગત્ય તાભ્યાં સહ જગામ
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 કિન્તુ યથા તૌ તં ન પરિચિનુતસ્તદર્થં તયો ર્દૃષ્ટિઃ સંરુદ્ધા|
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 સ તૌ પૃષ્ટવાન્ યુવાં વિષણ્ણૌ કિં વિચારયન્તૌ ગચ્છથઃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 તતસ્તયોઃ ક્લિયપાનામા પ્રત્યુવાચ યિરૂશાલમપુરેઽધુના યાન્યઘટન્ત ત્વં કેવલવિદેશી કિં તદ્વૃત્તાન્તં ન જાનાસિ?
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 સ પપ્રચ્છ કા ઘટનાઃ? તદા તૌ વક્તુમારેભાતે યીશુનામા યો નાસરતીયો ભવિષ્યદ્વાદી ઈશ્વરસ્ય માનુષાણાઞ્ચ સાક્ષાત્ વાક્યે કર્મ્મણિ ચ શક્તિમાનાસીત્
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 તમ્ અસ્માકં પ્રધાનયાજકા વિચારકાશ્ચ કેનાપિ પ્રકારેણ ક્રુશે વિદ્ધ્વા તસ્ય પ્રાણાનનાશયન્ તદીયા ઘટનાઃ;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 કિન્તુ ય ઇસ્રાયેલીયલોકાન્ ઉદ્ધારયિષ્યતિ સ એવાયમ્ ઇત્યાશાસ્માભિઃ કૃતા| તદ્યથા તથાસ્તુ તસ્યા ઘટનાયા અદ્ય દિનત્રયં ગતં|
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 અધિકન્ત્વસ્માકં સઙ્ગિનીનાં કિયત્સ્ત્રીણાં મુખેભ્યોઽસમ્ભવવાક્યમિદં શ્રુતં;
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 તાઃ પ્રત્યૂષે શ્મશાનં ગત્વા તત્ર તસ્ય દેહમ્ અપ્રાપ્ય વ્યાઘુટ્યેત્વા પ્રોક્તવત્યઃ સ્વર્ગીસદૂતૌ દૃષ્ટાવસ્માભિસ્તૌ ચાવાદિષ્ટાં સ જીવિતવાન્|
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 તતોસ્માકં કૈશ્ચિત્ શ્મશાનમગમ્યત તેઽપિ સ્ત્રીણાં વાક્યાનુરૂપં દૃષ્ટવન્તઃ કિન્તુ તં નાપશ્યન્|
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 તદા સ તાવુવાચ, હે અબોધૌ હે ભવિષ્યદ્વાદિભિરુક્તવાક્યં પ્રત્યેતું વિલમ્બમાનૌ;
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 એતત્સર્વ્વદુઃખં ભુક્ત્વા સ્વભૂતિપ્રાપ્તિઃ કિં ખ્રીષ્ટસ્ય ન ન્યાય્યા?
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 તતઃ સ મૂસાગ્રન્થમારભ્ય સર્વ્વભવિષ્યદ્વાદિનાં સર્વ્વશાસ્ત્રે સ્વસ્મિન્ લિખિતાખ્યાનાભિપ્રાયં બોધયામાસ|
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 અથ ગમ્યગ્રામાભ્યર્ણં પ્રાપ્ય તેનાગ્રે ગમનલક્ષણે દર્શિતે
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 તૌ સાધયિત્વાવદતાં સહાવાભ્યાં તિષ્ઠ દિને ગતે સતિ રાત્રિરભૂત્; તતઃ સ તાભ્યાં સાર્દ્ધં સ્થાતું ગૃહં યયૌ|
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 પશ્ચાદ્ભોજનોપવેશકાલે સ પૂપં ગૃહીત્વા ઈશ્વરગુણાન્ જગાદ તઞ્ચ ભંક્ત્વા તાભ્યાં દદૌ|
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 તદા તયો ર્દૃષ્ટૌ પ્રસન્નાયાં તં પ્રત્યભિજ્ઞતુઃ કિન્તુ સ તયોઃ સાક્ષાદન્તર્દધે|
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 તતસ્તૌ મિથોભિધાતુમ્ આરબ્ધવન્તૌ ગમનકાલે યદા કથામકથયત્ શાસ્ત્રાર્થઞ્ચબોધયત્ તદાવયો ર્બુદ્ધિઃ કિં ન પ્રાજ્વલત્?
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 તૌ તત્ક્ષણાદુત્થાય યિરૂશાલમપુરં પ્રત્યાયયતુઃ, તત્સ્થાને શિષ્યાણામ્ એકાદશાનાં સઙ્ગિનાઞ્ચ દર્શનં જાતં|
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 તે પ્રોચુઃ પ્રભુરુદતિષ્ઠદ્ ઇતિ સત્યં શિમોને દર્શનમદાચ્ચ|
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 તતઃ પથઃ સર્વ્વઘટનાયાઃ પૂપભઞ્જનેન તત્પરિચયસ્ય ચ સર્વ્વવૃત્તાન્તં તૌ વક્તુમારેભાતે|
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 ઇત્થં તે પરસ્પરં વદન્તિ તત્કાલે યીશુઃ સ્વયં તેષાં મધ્ય પ્રોત્થય યુષ્માકં કલ્યાણં ભૂયાદ્ ઇત્યુવાચ,
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 કિન્તુ ભૂતં પશ્યામ ઇત્યનુમાય તે સમુદ્વિવિજિરે ત્રેષુશ્ચ|
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 સ ઉવાચ, કુતો દુઃખિતા ભવથ? યુષ્માકં મનઃસુ સન્દેહ ઉદેતિ ચ કુતઃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 એષોહં, મમ કરૌ પશ્યત વરં સ્પૃષ્ટ્વા પશ્યત, મમ યાદૃશાનિ પશ્યથ તાદૃશાનિ ભૂતસ્ય માંસાસ્થીનિ ન સન્તિ|
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 ઇત્યુક્ત્વા સ હસ્તપાદાન્ દર્શયામાસ|
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 તેઽસમ્ભવં જ્ઞાત્વા સાનન્દા ન પ્રત્યયન્| તતઃ સ તાન્ પપ્રચ્છ, અત્ર યુષ્માકં સમીપે ખાદ્યં કિઞ્ચિદસ્તિ?
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 તતસ્તે કિયદ્દગ્ધમત્સ્યં મધુ ચ દદુઃ
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 સ તદાદાય તેષાં સાક્ષાદ્ બુભુજે
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 કથયામાસ ચ મૂસાવ્યવસ્થાયાં ભવિષ્યદ્વાદિનાં ગ્રન્થેષુ ગીતપુસ્તકે ચ મયિ યાનિ સર્વ્વાણિ વચનાનિ લિખિતાનિ તદનુરૂપાણિ ઘટિષ્યન્તે યુષ્માભિઃ સાર્દ્ધં સ્થિત્વાહં યદેતદ્વાક્યમ્ અવદં તદિદાનીં પ્રત્યક્ષમભૂત્|
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 અથ તેભ્યઃ શાસ્ત્રબોધાધિકારં દત્વાવદત્,
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 ખ્રીષ્ટેનેત્થં મૃતિયાતના ભોક્તવ્યા તૃતીયદિને ચ શ્મશાનાદુત્થાતવ્યઞ્ચેતિ લિપિરસ્તિ;
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 તન્નામ્ના યિરૂશાલમમારભ્ય સર્વ્વદેશે મનઃપરાવર્ત્તનસ્ય પાપમોચનસ્ય ચ સુસંવાદઃ પ્રચારયિતવ્યઃ,
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 એષુ સર્વ્વેષુ યૂયં સાક્ષિણઃ|
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 અપરઞ્ચ પશ્યત પિત્રા યત્ પ્રતિજ્ઞાતં તત્ પ્રેષયિષ્યામિ, અતએવ યાવત્કાલં યૂયં સ્વર્ગીયાં શક્તિં ન પ્રાપ્સ્યથ તાવત્કાલં યિરૂશાલમ્નગરે તિષ્ઠત|
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 અથ સ તાન્ બૈથનીયાપર્ય્યન્તં નીત્વા હસ્તાવુત્તોલ્ય આશિષ વક્તુમારેભે
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 આશિષં વદન્નેવ ચ તેભ્યઃ પૃથગ્ ભૂત્વા સ્વર્ગાય નીતોઽભવત્|
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 તદા તે તં ભજમાના મહાનન્દેન યિરૂશાલમં પ્રત્યાજગ્મુઃ|
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 તતો નિરન્તરં મન્દિરે તિષ્ઠન્ત ઈશ્વરસ્ય પ્રશંસાં ધન્યવાદઞ્ચ કર્ત્તમ્ આરેભિરે| ઇતિ||
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< લૂકઃ 24 >