< lUkaH 24 >

1 atha saptAhaprathamadinE'tipratyUSE tA yOSitaH sampAditaM sugandhidravyaM gRhItvA tadanyAbhiH kiyatIbhiH strIbhiH saha zmazAnaM yayuH|
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 kintu zmazAnadvArAt pASANamapasAritaM dRSTvA
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 tAH pravizya prabhO rdEhamaprApya
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 vyAkulA bhavanti Etarhi tEjOmayavastrAnvitau dvau puruSau tAsAM samIpE samupasthitau
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 tasmAttAH zagkAyuktA bhUmAvadhOmukhyasyasthuH| tadA tau tA Ucatu rmRtAnAM madhyE jIvantaM kutO mRgayatha?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 sOtra nAsti sa udasthAt|
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 pApinAM karESu samarpitEna kruzE hatEna ca manuSyaputrENa tRtIyadivasE zmazAnAdutthAtavyam iti kathAM sa galIli tiSThan yuSmabhyaM kathitavAn tAM smarata|
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 tadA tasya sA kathA tAsAM manaHsu jAtA|
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 anantaraM zmazAnAd gatvA tA EkAdazaziSyAdibhyaH sarvvEbhyastAM vArttAM kathayAmAsuH|
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 magdalInImariyam, yOhanA, yAkUbO mAtA mariyam tadanyAH sagginyO yOSitazca prEritEbhya EtAH sarvvA vArttAH kathayAmAsuH
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 kintu tAsAM kathAm anarthakAkhyAnamAtraM buddhvA kOpi na pratyait|
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 tadA pitara utthAya zmazAnAntikaM dadhAva, tatra ca prahvO bhUtvA pArzvaikasthApitaM kEvalaM vastraM dadarza; tasmAdAzcaryyaM manyamAnO yadaghaTata tanmanasi vicArayan pratasthE|
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 tasminnEva dinE dvau ziyyau yirUzAlamazcatuSkrOzAntaritam immAyugrAmaM gacchantau
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 tAsAM ghaTanAnAM kathAmakathayatAM
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 tayOrAlApavicArayOH kAlE yIzurAgatya tAbhyAM saha jagAma
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 kintu yathA tau taM na paricinutastadarthaM tayO rdRSTiH saMruddhA|
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 sa tau pRSTavAn yuvAM viSaNNau kiM vicArayantau gacchathaH?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 tatastayOH kliyapAnAmA pratyuvAca yirUzAlamapurE'dhunA yAnyaghaTanta tvaM kEvalavidEzI kiM tadvRttAntaM na jAnAsi?
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 sa papraccha kA ghaTanAH? tadA tau vaktumArEbhAtE yIzunAmA yO nAsaratIyO bhaviSyadvAdI Izvarasya mAnuSANAnjca sAkSAt vAkyE karmmaNi ca zaktimAnAsIt
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 tam asmAkaM pradhAnayAjakA vicArakAzca kEnApi prakArENa kruzE viddhvA tasya prANAnanAzayan tadIyA ghaTanAH;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 kintu ya isrAyElIyalOkAn uddhArayiSyati sa EvAyam ityAzAsmAbhiH kRtA|tadyathA tathAstu tasyA ghaTanAyA adya dinatrayaM gataM|
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 adhikantvasmAkaM sagginInAM kiyatstrINAM mukhEbhyO'sambhavavAkyamidaM zrutaM;
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 tAH pratyUSE zmazAnaM gatvA tatra tasya dEham aprApya vyAghuTyEtvA prOktavatyaH svargIsadUtau dRSTAvasmAbhistau cAvAdiSTAM sa jIvitavAn|
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 tatOsmAkaM kaizcit zmazAnamagamyata tE'pi strINAM vAkyAnurUpaM dRSTavantaH kintu taM nApazyan|
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 tadA sa tAvuvAca, hE abOdhau hE bhaviSyadvAdibhiruktavAkyaM pratyEtuM vilambamAnau;
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 EtatsarvvaduHkhaM bhuktvA svabhUtiprAptiH kiM khrISTasya na nyAyyA?
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 tataH sa mUsAgranthamArabhya sarvvabhaviSyadvAdinAM sarvvazAstrE svasmin likhitAkhyAnAbhiprAyaM bOdhayAmAsa|
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 atha gamyagrAmAbhyarNaM prApya tEnAgrE gamanalakSaNE darzitE
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 tau sAdhayitvAvadatAM sahAvAbhyAM tiSTha dinE gatE sati rAtrirabhUt; tataH sa tAbhyAM sArddhaM sthAtuM gRhaM yayau|
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 pazcAdbhOjanOpavEzakAlE sa pUpaM gRhItvA IzvaraguNAn jagAda tanjca bhaMktvA tAbhyAM dadau|
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 tadA tayO rdRSTau prasannAyAM taM pratyabhijnjatuH kintu sa tayOH sAkSAdantardadhE|
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 tatastau mithObhidhAtum Arabdhavantau gamanakAlE yadA kathAmakathayat zAstrArthanjcabOdhayat tadAvayO rbuddhiH kiM na prAjvalat?
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 tau tatkSaNAdutthAya yirUzAlamapuraM pratyAyayatuH, tatsthAnE ziSyANAm EkAdazAnAM sagginAnjca darzanaM jAtaM|
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 tE prOcuH prabhurudatiSThad iti satyaM zimOnE darzanamadAcca|
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 tataH pathaH sarvvaghaTanAyAH pUpabhanjjanEna tatparicayasya ca sarvvavRttAntaM tau vaktumArEbhAtE|
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 itthaM tE parasparaM vadanti tatkAlE yIzuH svayaM tESAM madhya prOtthaya yuSmAkaM kalyANaM bhUyAd ityuvAca,
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 kintu bhUtaM pazyAma ityanumAya tE samudvivijirE trESuzca|
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 sa uvAca, kutO duHkhitA bhavatha? yuSmAkaM manaHsu sandEha udEti ca kutaH?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 ESOhaM, mama karau pazyata varaM spRSTvA pazyata, mama yAdRzAni pazyatha tAdRzAni bhUtasya mAMsAsthIni na santi|
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 ityuktvA sa hastapAdAn darzayAmAsa|
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 tE'sambhavaM jnjAtvA sAnandA na pratyayan| tataH sa tAn papraccha, atra yuSmAkaM samIpE khAdyaM kinjcidasti?
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 tatastE kiyaddagdhamatsyaM madhu ca daduH
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 sa tadAdAya tESAM sAkSAd bubhujE
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 kathayAmAsa ca mUsAvyavasthAyAM bhaviSyadvAdinAM granthESu gItapustakE ca mayi yAni sarvvANi vacanAni likhitAni tadanurUpANi ghaTiSyantE yuSmAbhiH sArddhaM sthitvAhaM yadEtadvAkyam avadaM tadidAnIM pratyakSamabhUt|
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 atha tEbhyaH zAstrabOdhAdhikAraM datvAvadat,
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 khrISTEnEtthaM mRtiyAtanA bhOktavyA tRtIyadinE ca zmazAnAdutthAtavyanjcEti lipirasti;
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 tannAmnA yirUzAlamamArabhya sarvvadEzE manaHparAvarttanasya pApamOcanasya ca susaMvAdaH pracArayitavyaH,
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 ESu sarvvESu yUyaM sAkSiNaH|
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 aparanjca pazyata pitrA yat pratijnjAtaM tat prESayiSyAmi, ataEva yAvatkAlaM yUyaM svargIyAM zaktiM na prApsyatha tAvatkAlaM yirUzAlamnagarE tiSThata|
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 atha sa tAn baithanIyAparyyantaM nItvA hastAvuttOlya AziSa vaktumArEbhE
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 AziSaM vadannEva ca tEbhyaH pRthag bhUtvA svargAya nItO'bhavat|
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 tadA tE taM bhajamAnA mahAnandEna yirUzAlamaM pratyAjagmuH|
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 tatO nirantaraM mandirE tiSThanta Izvarasya prazaMsAM dhanyavAdanjca karttam ArEbhirE| iti||
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< lUkaH 24 >