< লূকঃ 24 >

1 অথ সপ্তাহপ্রথমদিনেঽতিপ্রত্যূষে তা যোষিতঃ সম্পাদিতং সুগন্ধিদ্রৱ্যং গৃহীৎৱা তদন্যাভিঃ কিযতীভিঃ স্ত্রীভিঃ সহ শ্মশানং যযুঃ|
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
2 কিন্তু শ্মশানদ্ৱারাৎ পাষাণমপসারিতং দৃষ্ট্ৱা
அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
3 তাঃ প্রৱিশ্য প্রভো র্দেহমপ্রাপ্য
அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
4 ৱ্যাকুলা ভৱন্তি এতর্হি তেজোমযৱস্ত্রান্ৱিতৌ দ্ৱৌ পুরুষৌ তাসাং সমীপে সমুপস্থিতৌ
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5 তস্মাত্তাঃ শঙ্কাযুক্তা ভূমাৱধোমুখ্যস্যস্থুঃ| তদা তৌ তা ঊচতু র্মৃতানাং মধ্যে জীৱন্তং কুতো মৃগযথ?
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6 সোত্র নাস্তি স উদস্থাৎ|
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7 পাপিনাং করেষু সমর্পিতেন ক্রুশে হতেন চ মনুষ্যপুত্রেণ তৃতীযদিৱসে শ্মশানাদুত্থাতৱ্যম্ ইতি কথাং স গলীলি তিষ্ঠন্ যুষ্মভ্যং কথিতৱান্ তাং স্মরত|
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8 তদা তস্য সা কথা তাসাং মনঃসু জাতা|
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9 অনন্তরং শ্মশানাদ্ গৎৱা তা একাদশশিষ্যাদিভ্যঃ সর্ৱ্ৱেভ্যস্তাং ৱার্ত্তাং কথযামাসুঃ|
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10 ১০ মগ্দলীনীমরিযম্, যোহনা, যাকূবো মাতা মরিযম্ তদন্যাঃ সঙ্গিন্যো যোষিতশ্চ প্রেরিতেভ্য এতাঃ সর্ৱ্ৱা ৱার্ত্তাঃ কথযামাসুঃ
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11 ১১ কিন্তু তাসাং কথাম্ অনর্থকাখ্যানমাত্রং বুদ্ধ্ৱা কোপি ন প্রত্যৈৎ|
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12 ১২ তদা পিতর উত্থায শ্মশানান্তিকং দধাৱ, তত্র চ প্রহ্ৱো ভূৎৱা পার্শ্ৱৈকস্থাপিতং কেৱলং ৱস্ত্রং দদর্শ; তস্মাদাশ্চর্য্যং মন্যমানো যদঘটত তন্মনসি ৱিচারযন্ প্রতস্থে|
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13 ১৩ তস্মিন্নেৱ দিনে দ্ৱৌ শিয্যৌ যিরূশালমশ্চতুষ্ক্রোশান্তরিতম্ ইম্মাযুগ্রামং গচ্ছন্তৌ
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14 ১৪ তাসাং ঘটনানাং কথামকথযতাং
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15 ১৫ তযোরালাপৱিচারযোঃ কালে যীশুরাগত্য তাভ্যাং সহ জগাম
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16 ১৬ কিন্তু যথা তৌ তং ন পরিচিনুতস্তদর্থং তযো র্দৃষ্টিঃ সংরুদ্ধা|
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17 ১৭ স তৌ পৃষ্টৱান্ যুৱাং ৱিষণ্ণৌ কিং ৱিচারযন্তৌ গচ্ছথঃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18 ১৮ ততস্তযোঃ ক্লিযপানামা প্রত্যুৱাচ যিরূশালমপুরেঽধুনা যান্যঘটন্ত ৎৱং কেৱলৱিদেশী কিং তদ্ৱৃত্তান্তং ন জানাসি?
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19 ১৯ স পপ্রচ্ছ কা ঘটনাঃ? তদা তৌ ৱক্তুমারেভাতে যীশুনামা যো নাসরতীযো ভৱিষ্যদ্ৱাদী ঈশ্ৱরস্য মানুষাণাঞ্চ সাক্ষাৎ ৱাক্যে কর্ম্মণি চ শক্তিমানাসীৎ
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20 ২০ তম্ অস্মাকং প্রধানযাজকা ৱিচারকাশ্চ কেনাপি প্রকারেণ ক্রুশে ৱিদ্ধ্ৱা তস্য প্রাণাননাশযন্ তদীযা ঘটনাঃ;
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21 ২১ কিন্তু য ইস্রাযেলীযলোকান্ উদ্ধারযিষ্যতি স এৱাযম্ ইত্যাশাস্মাভিঃ কৃতা| তদ্যথা তথাস্তু তস্যা ঘটনাযা অদ্য দিনত্রযং গতং|
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22 ২২ অধিকন্ত্ৱস্মাকং সঙ্গিনীনাং কিযৎস্ত্রীণাং মুখেভ্যোঽসম্ভৱৱাক্যমিদং শ্রুতং;
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23 ২৩ তাঃ প্রত্যূষে শ্মশানং গৎৱা তত্র তস্য দেহম্ অপ্রাপ্য ৱ্যাঘুট্যেৎৱা প্রোক্তৱত্যঃ স্ৱর্গীসদূতৌ দৃষ্টাৱস্মাভিস্তৌ চাৱাদিষ্টাং স জীৱিতৱান্|
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24 ২৪ ততোস্মাকং কৈশ্চিৎ শ্মশানমগম্যত তেঽপি স্ত্রীণাং ৱাক্যানুরূপং দৃষ্টৱন্তঃ কিন্তু তং নাপশ্যন্|
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25 ২৫ তদা স তাৱুৱাচ, হে অবোধৌ হে ভৱিষ্যদ্ৱাদিভিরুক্তৱাক্যং প্রত্যেতুং ৱিলম্বমানৌ;
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26 ২৬ এতৎসর্ৱ্ৱদুঃখং ভুক্ত্ৱা স্ৱভূতিপ্রাপ্তিঃ কিং খ্রীষ্টস্য ন ন্যায্যা?
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27 ২৭ ততঃ স মূসাগ্রন্থমারভ্য সর্ৱ্ৱভৱিষ্যদ্ৱাদিনাং সর্ৱ্ৱশাস্ত্রে স্ৱস্মিন্ লিখিতাখ্যানাভিপ্রাযং বোধযামাস|
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 ২৮ অথ গম্যগ্রামাভ্যর্ণং প্রাপ্য তেনাগ্রে গমনলক্ষণে দর্শিতে
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
29 ২৯ তৌ সাধযিৎৱাৱদতাং সহাৱাভ্যাং তিষ্ঠ দিনে গতে সতি রাত্রিরভূৎ; ততঃ স তাভ্যাং সার্দ্ধং স্থাতুং গৃহং যযৌ|
அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30 ৩০ পশ্চাদ্ভোজনোপৱেশকালে স পূপং গৃহীৎৱা ঈশ্ৱরগুণান্ জগাদ তঞ্চ ভংক্ত্ৱা তাভ্যাং দদৌ|
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
31 ৩১ তদা তযো র্দৃষ্টৌ প্রসন্নাযাং তং প্রত্যভিজ্ঞতুঃ কিন্তু স তযোঃ সাক্ষাদন্তর্দধে|
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
32 ৩২ ততস্তৌ মিথোভিধাতুম্ আরব্ধৱন্তৌ গমনকালে যদা কথামকথযৎ শাস্ত্রার্থঞ্চবোধযৎ তদাৱযো র্বুদ্ধিঃ কিং ন প্রাজ্ৱলৎ?
அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33 ৩৩ তৌ তৎক্ষণাদুত্থায যিরূশালমপুরং প্রত্যাযযতুঃ, তৎস্থানে শিষ্যাণাম্ একাদশানাং সঙ্গিনাঞ্চ দর্শনং জাতং|
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
34 ৩৪ তে প্রোচুঃ প্রভুরুদতিষ্ঠদ্ ইতি সত্যং শিমোনে দর্শনমদাচ্চ|
அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
35 ৩৫ ততঃ পথঃ সর্ৱ্ৱঘটনাযাঃ পূপভঞ্জনেন তৎপরিচযস্য চ সর্ৱ্ৱৱৃত্তান্তং তৌ ৱক্তুমারেভাতে|
அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
36 ৩৬ ইত্থং তে পরস্পরং ৱদন্তি তৎকালে যীশুঃ স্ৱযং তেষাং মধ্য প্রোত্থয যুষ্মাকং কল্যাণং ভূযাদ্ ইত্যুৱাচ,
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37 ৩৭ কিন্তু ভূতং পশ্যাম ইত্যনুমায তে সমুদ্ৱিৱিজিরে ত্রেষুশ্চ|
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
38 ৩৮ স উৱাচ, কুতো দুঃখিতা ভৱথ? যুষ্মাকং মনঃসু সন্দেহ উদেতি চ কুতঃ?
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
39 ৩৯ এষোহং, মম করৌ পশ্যত ৱরং স্পৃষ্ট্ৱা পশ্যত, মম যাদৃশানি পশ্যথ তাদৃশানি ভূতস্য মাংসাস্থীনি ন সন্তি|
என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40 ৪০ ইত্যুক্ত্ৱা স হস্তপাদান্ দর্শযামাস|
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 ৪১ তেঽসম্ভৱং জ্ঞাৎৱা সানন্দা ন প্রত্যযন্| ততঃ স তান্ পপ্রচ্ছ, অত্র যুষ্মাকং সমীপে খাদ্যং কিঞ্চিদস্তি?
அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
42 ৪২ ততস্তে কিযদ্দগ্ধমৎস্যং মধু চ দদুঃ
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
43 ৪৩ স তদাদায তেষাং সাক্ষাদ্ বুভুজে
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44 ৪৪ কথযামাস চ মূসাৱ্যৱস্থাযাং ভৱিষ্যদ্ৱাদিনাং গ্রন্থেষু গীতপুস্তকে চ মযি যানি সর্ৱ্ৱাণি ৱচনানি লিখিতানি তদনুরূপাণি ঘটিষ্যন্তে যুষ্মাভিঃ সার্দ্ধং স্থিৎৱাহং যদেতদ্ৱাক্যম্ অৱদং তদিদানীং প্রত্যক্ষমভূৎ|
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45 ৪৫ অথ তেভ্যঃ শাস্ত্রবোধাধিকারং দৎৱাৱদৎ,
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
46 ৪৬ খ্রীষ্টেনেত্থং মৃতিযাতনা ভোক্তৱ্যা তৃতীযদিনে চ শ্মশানাদুত্থাতৱ্যঞ্চেতি লিপিরস্তি;
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
47 ৪৭ তন্নাম্না যিরূশালমমারভ্য সর্ৱ্ৱদেশে মনঃপরাৱর্ত্তনস্য পাপমোচনস্য চ সুসংৱাদঃ প্রচারযিতৱ্যঃ,
மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
48 ৪৮ এষু সর্ৱ্ৱেষু যূযং সাক্ষিণঃ|
இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
49 ৪৯ অপরঞ্চ পশ্যত পিত্রা যৎ প্রতিজ্ঞাতং তৎ প্রেষযিষ্যামি, অতএৱ যাৱৎকালং যূযং স্ৱর্গীযাং শক্তিং ন প্রাপ্স্যথ তাৱৎকালং যিরূশালম্নগরে তিষ্ঠত|
என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
50 ৫০ অথ স তান্ বৈথনীযাপর্য্যন্তং নীৎৱা হস্তাৱুত্তোল্য আশিষ ৱক্তুমারেভে
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51 ৫১ আশিষং ৱদন্নেৱ চ তেভ্যঃ পৃথগ্ ভূৎৱা স্ৱর্গায নীতোঽভৱৎ|
இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 ৫২ তদা তে তং ভজমানা মহানন্দেন যিরূশালমং প্রত্যাজগ্মুঃ|
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
53 ৫৩ ততো নিরন্তরং মন্দিরে তিষ্ঠন্ত ঈশ্ৱরস্য প্রশংসাং ধন্যৱাদঞ্চ কর্ত্তম্ আরেভিরে| ইতি||
அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

< লূকঃ 24 >