< Лукастар 15 >

1 Авэнас Исусостэ всавэрэ стидэмаря, савэ лэнас налогуря, и бэзимахкэрэ мануша, соб тэ шунэ Лэ.
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2 Нэ фарисеенди и сиклимаренди пав Упхэнима на чялёлас, со терда Исусо, и вонэ пхэнэнас: — Вов прылэл бэзимахкэрэ манушэн и хал лэнца.
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3 Нэ Исусо пхэнда лэнди кацави дума:
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4 — Пхэнаґа, екхэстэ тумэндар исин шэл бакря, и екх лэндар хасиля. Чи на ачявэла вов енядэша тай еня бакрен дэ маля и чи на джяла тэ родэ бакря, сави хасиля?
உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5 Ай кала аракхэла бакря, баря лошаґа тховэла ла пэ пхикэ и лиджяла.
கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6 Кала авэла цэрэ, акхарэла пэхкэрэн амалэн и пашунэн и пхэнэла лэнди: «Лошавэн манца, мэ аракхлём бакря, сави хасиля».
வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7 Пхэнав тумэнди, со кади ж пэ упралима пала екхэ манушэ, саво ачявда бэзимо, будэр лошавэна, сар пала енядэша еня патявнэн манушэн, савэнди на трэбуни тэ ачявэ бэзимо.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8 Кала манушнятэ исин дэш драхмы и вой хацарэла екх лэндар, чи на пхабарэла вой лампа, на шулавэла всаворо пэкхкоро цэр и на авэла тэ родэ, соб тэ аракхэ кадыя драхма?
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9 А кала аракхэла ла, тунчи стидэла пэхкэрэн амалкэн и пашунэн джювлен тай пхэнэла: «Лошавэн манца, мэ аракхлём драхма, сави хацардом!»
கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10 Кади, пхэнав тумэнди, лошавэн ангелуря Дэвлэхкэрэ и пала екхэ манушэ, саво ачявда пэхкоро бэзимо.
௧0அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11 Инте пхэнда Исусо: — Екхэ манушэстэ сле дуй чявэ.
௧௧பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12 И тэрнэдэр лэндар пхэнда дадэсти: «Дадэ! Дэ манди тирэ барвалимастар котор, саво манди доросэлапэ». И дад розмарда вса, со лэстэ сля, пэ дон и дэня пэхкэрэ чявэнди.
௧௨அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13 Проджиля набут вряма, и цыкнэдэр чявэндар стидэня вса, со лэсти доросляпэ, и джиля дур, дэ авэр пхув. Котэ розтерда вса, со лэстэ сля, и пав диниманэ розчувэлас ловэ.
௧௩சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14 Кала вов розчута всавэрэ ловэ, дэ кодыя пхув авиля бари бокх, и чяво мэрэлас бокхатар.
௧௪எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15 Тунчи джиля и намисардапэ екхэ манушэстэ кодэла пхуятар, тэ чяравэ баличен пэ маля.
௧௫அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16 Вов мэрэлас бокхатар и сля лошало тэ ха їтханэ баличенца, нэ лэсти и кода на дэнас.
௧௬அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17 Кала чявэстэ рисиля годи, тунчи вов пхэнда: «Бут намисардэн бутярнэн мурэ дадэстэ, и вонэ хан, скици закамэна, а мэ бокхатар катэ мэрав!
௧௭அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18 Вщява, рисявава павпалэ мурэ дадэстэ и пхэнава лэсти: "Дадэ! Мэ тердом бэзимо англа Дэвлэ пэ упралима и англа тут
௧௮நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19 и на ачяв тэ акхарэпэ тирэ чявэґа. Нэ прылэ ман сар тирэ бутярнэ"».
௧௯இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20 Тунчи вщиля и джиля пэхкэрэ дадэстэ. Кала чяво сля дур цэрэстар, дад удыкхля лэ. И ачиля лэсти дор пэхкэрэ чявэ. Тунчи вов прастэня лэстэ, облиля и чюминдэня лэ.
௨0எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21 Чяво пхэнда дадэсти: «Дадэ! Мэ тердом бэзимо англа Дэвлэ пэ упралима и англа тут и на ачяв тэ акхарэпэ тирэ чявэґа».
௨௧குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22 Нэ дад пхэнда пэхкэрэ бутярнэнди: «Джян сигэдэр! Анэн фэдэр їда, сави исин, и урявэнтэ чявэ, дэнтэ лэсти ангрусни пэ ангушт и пундрангэ пэ лэхкэрэ пурэн.
௨௨அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23 Анэн парвардэ гурувэ и чинэн лэ пэ мас. Тховаґа баро скаминд и аваґа тэ лошавэ!
௨௩கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
24 Кадэва муро чяво сля муло, нэ отджювдиня, сля хацардо, нэ кана аракхляпэ». Тай ачиле тэ лошавэ.
௨௪என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 Пхурэдэр чяво сля пэ маля. Кала вов рисиля малятар и сля паша цэр, шунда, сар цэлэн и дилябэн.
௨௫அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26 Тунчи акхарда екхэ бутярнэ и пхучля: «Со када терэлпэ?»
௨௬வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27 Бутярно пхэнда лэсти: «Авиля тиро пхрал. И тиро дад прыпхэнда тэ чинэ парвардэ гурувэ, колэсти со лэхкоро чяво рисиля цэрэ джювдо».
௨௭அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
28 Тунчи пхурэдэр чяво холиля и на камля тэ заджя дэ цэр. Нэ дад выджиля цэрэстар и ачиля тэ акхарэ лэ.
௨௮அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
29 Нэ вов пхэнда дадэсти: «Акэ, мэ скици бэрш терав бути важ тут, со никала тэ ваздэ шэро, и дэ всавэрэ кандав тут. Нэ ту и цыкнорэ бузнорэ на дэнян манди, соб мэ тэ лошавав мурэ амалэнца.
௨௯அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30 А кала кадэва тиро чяво, саво протерда пэхкэрэ ловэ налаче джювленца, авиля цэрэ, ту важ лэ чиндан парвардэ гурувэ».
௩0வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31 Нэ дад пхэнда чявэсти: «Чяворо! Ту всавири вряма манца. И вса, со мандэ исин, када тиро.
௩௧அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
32 Нэ важ кода трэбуни тэ лошавэ, со тиро пхрал сля муло, нэ отджювдиня, сля хацардо, нэ аракхляпэ».
௩௨உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

< Лукастар 15 >