< لاویان 9 >
و واقع شد که در روز هشتم، موسی هارون و پسرانش و مشایخ اسرائیل را خواند. | ۱ 1 |
௧எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து,
وهارون را گفت: «گوسالهای نرینه برای قربانی گناه، و قوچی بجهت قربانی سوختنی، هر دو رابی عیب بگیر، و به حضور خداوند بگذران. | ۲ 2 |
௨ஆரோனை நோக்கி: “நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
وبنیاسرائیل را خطاب کرده، بگو: بزغاله نرینه برای قربانی گناه، و گوساله و برهای هر دو یک ساله و بیعیب برای قربانی سوختنی بگیرید. | ۳ 3 |
௩மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
وگاوی و قوچی برای ذبیحه سلامتی، تا به حضورخداوند ذبح شود، و هدیه آردی سرشته شده به روغن را، زیرا که امروز خداوند بر شما ظاهر خواهد شد.» | ۴ 4 |
௪சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல்” என்றான்.
پس آنچه را که موسیامر فرموده بود پیش خیمه اجتماع آوردند. و تمامی جماعت نزدیک شده، به حضور خداوندایستادند. | ۵ 5 |
௫மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, யெகோவாவுடைய சந்நிதியில் நின்றார்கள்.
و موسی گفت: «این است کاری که خداوند امر فرموده است که بکنید، و جلال خداوند بر شما ظاهر خواهد شد.» | ۶ 6 |
௬அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.
و موسی هارون را گفت: «نزدیک مذبح بیا و قربانی گناه خود و قربانی سوختنی خود را بگذران، و برای خود و برای قوم کفاره کن، و قربانی قوم را بگذران و بجهت ایشان کفاره کن، چنانکه خداوند امرفرموده است.» | ۷ 7 |
௭மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான்.
و هارون به مذبح نزدیک آمده، گوساله قربانی گناه را که برای خودش بود ذبح کرد. | ۸ 8 |
௮அப்பொழுது ஆரோன் பலிபீடத்தின் அருகில் வந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
وپسران هارون خون را نزد او آوردند و انگشت خود را به خون فرو برده، آن را بر شاخهای مذبح مالید و خون را بر بنیان مذبح ریخت. | ۹ 9 |
௯ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
و پیه وگردهها و سفیدی جگر از قربانی گناه را بر مذبح سوزانید، چنانکه خداوند موسی را امر فرموده بود. | ۱۰ 10 |
௧0பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து,
و گوشت و پوست را بیرون لشکرگاه به آتش سوزانید. | ۱۱ 11 |
௧௧மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
و قربانی سوختنی را ذبح کرد، و پسران هارون خون را به او سپردند، و آن را به اطراف مذبح پاشید. | ۱۲ 12 |
௧௨பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
و قربانی را به قطعه هایش و سرش به او سپردند، و آن را بر مذبح سوزانید. | ۱۳ 13 |
௧௩சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து,
و احشا و پاچهها را شست و آنها را بر قربانی سوختنی بر مذبح سوزانید. | ۱۴ 14 |
௧௪குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான்.
و قربانی قوم رانزدیک آورد، و بز قربانی گناه را که برای قوم بودگرفته، آن را ذبح کرد و آن را مثل اولین برای گناه گذرانید. | ۱۵ 15 |
௧௫பின்பு அவன் மக்களின் பலியைக்கொண்டுவந்து, மக்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
و قربانی سوختنی را نزدیک آورده، آن را به حسب قانون گذرانید. | ۱۶ 16 |
௧௬சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, முறைப்படி அதைப் பலியிட்டு,
و هدیه آردی رانزدیک آورده، مشتی از آن برداشت، و آن را علاوه بر قربانی سوختنی صبح بر مذبح سوزانید. | ۱۷ 17 |
௧௭உணவுபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் எரித்தான்.
و گاو و قوچ ذبیحه سلامتی را که برای قوم بودذبح کرد، و پسران هارون خون را به او سپردند وآن را به اطراف مذبح پاشید. | ۱۸ 18 |
௧௮பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
و پیه گاو و دنبه قوچ و آنچه احشا را میپوشاند و گردهها وسفیدی جگر را. | ۱۹ 19 |
௧௯காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
و پیه را بر سینهها نهادند، وپیه را بر مذبح سوزانید. | ۲۰ 20 |
௨0கொழுப்பை மார்புப்பகுதிகளின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
و هارون سینهها و ران راست را برای هدیه جنبانیدنی به حضور خداوندجنبانید، چنانکه موسیامر فرموده بود. | ۲۱ 21 |
௨௧மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
پس هارون دستهای خود را به سوی قوم برافراشته، ایشان را برکت داد، و از گذرانیدن قربانی گناه وقربانی سوختنی و ذبایح سلامتی بزیر آمد. | ۲۲ 22 |
௨௨பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
وموسی و هارون به خیمه اجتماع داخل شدند، وبیرون آمده، قوم را برکت دادند و جلال خداوندبر جمیع قوم ظاهر شد. | ۲۳ 23 |
௨௩பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது.
و آتش از حضورخداوند بیرون آمده، قربانی سوختنی و پیه را برمذبح بلعید، و چون تمامی قوم این را دیدند، صدای بلند کرده، به روی درافتادند. | ۲۴ 24 |
௨௪அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து யெகோவாவைப் பணிந்துகொண்டனர்.