< خروج 29 >

«و این است کاری که بدیشان می‌کنی، برای تقدیس نمودن ایشان تا بجهت من کهانت کنند: یک گوساله و دو قوچ بی‌عیب بگیر، ۱ 1
“அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்.
و نان فطیر و قرصهای فطیر سرشته به روغن ورقیقهای فطیر مسح شده به روغن. آنها را از آردنرم گندم بساز. ۲ 2
புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து,
و آنها را در یک سبد بگذار و آنهارا در سبد با گوساله و دو قوچ بگذران. ۳ 3
அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
و هارون و پسرانش را نزد دروازه خیمه اجتماع آورده، ایشان را به آب غسل ده، ۴ 4
ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி,
و آن رختها را گرفته، هارون را به پیراهن و ردای ایفود و ایفود وسینه بند آراسته کن و زنار ایفود را بر وی ببند. ۵ 5
அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி,
وعمامه را بر سرش بنه و افسر قدوسیت را برعمامه بگذار، ۶ 6
அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து,
و روغن مسح را گرفته، برسرش بریز و او را مسح کن. ۷ 7
அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
و پسرانش را نزدیک آورده، ایشان را به پیراهنها بپوشان. ۸ 8
பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
و بر ایشان، یعنی هارون و پسرانش کمربندها ببند و عمامه هارا بر ایشان بگذار و کهانت برای ایشان فریضه ابدی خواهد بود. پس هارون و پسرانش راتخصیص نما. ۹ 9
ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
و گوساله را پیش خیمه اجتماع برسان، و هارون و پسرانش دستهای خود را بر سرگوساله بگذارند. ۱۰ 10
௧0“காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
و گوساله را به حضورخداوند نزد در خیمه اجتماع ذبح کن. ۱۱ 11
௧௧பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் யெகோவாவுடைய சந்நிதானத்தில் கொன்று,
و ازخون گوساله گرفته، بر شاخهای مذبح به انگشت خود بگذار، و باقی خون را بر بنیان مذبح بریز. ۱۲ 12
௧௨அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
و همه پیه را که احشا را می‌پوشاند، و سفیدی که بر جگر است، و دو گرده را با پیهی که برآنهاست، گرفته، بر مذبح بسوزان. ۱۳ 13
௧௩குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
اما گوشت گوساله را و پوست و سرگینش را بیرون از اردو به آتش بسوزان، زیرا قربانی گناه است. ۱۴ 14
௧௪காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி.
«و یک قوچ بگیر و هارون و پسران، دستهای خود را بر سر قوچ بگذارند. ۱۵ 15
௧௫“பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
و قوچ راذبح کرده، خونش را بگیر و گرداگرد مذبح بپاش. ۱۶ 16
௧௬அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
و قوچ را به قطعه هایش ببر، و احشا وپاچه هایش را بشوی، و آنها را بر قطعه‌ها و سرش بنه. ۱۷ 17
௧௭ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து,
و تمام قوچ را بر مذبح بسوزان، زیرا برای خداوند قربانی سوختنی است، و عطر خوشبو، وقربانی آتشین برای خداوند است. ۱۸ 18
௧௮ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது யெகோவாவுக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும்.
پس قوچ دوم را بگیر و هارون و پسرانش دستهای خود رابر سر قوچ بگذارند. ۱۹ 19
௧௯“பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும்.
و قوچ را ذبح کرده، ازخونش بگیر و به نرمه گوش راست هارون، و به نرمه گوش پسرانش، و به شست دست راست ایشان، و به شست پای راست ایشان، بگذار، وباقی خون را گرداگرد مذبح بپاش. ۲۰ 20
௨0அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
و از خونی که بر مذبح است، و از روغن مسح گرفته، آن را برهارون و رخت وی و بر پسرانش و رخت پسرانش با وی بپاش، تا او و رختش و پسرانش ورخت پسرانش با وی تقدیس شوند. ۲۱ 21
௨௧பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும்.
پس پیه قوچ را، و دنبه و پیهی که احشا را می‌پوشاند، وسفیدی جگر، و دو گرده و پیهی که بر آنهاست، وساق راست را بگیر، زیرا که قوچ، قربانی تخصیص است. ۲۲ 22
௨௨அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
و یک گرده نان و یک قرص نان روغنی، و یک رقیق از سبد نان فطیر را که به حضور خداوند است، ۲۳ 23
௨௩யெகோவாவுடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
و این همه را به‌دست هارون و به‌دست پسرانش بنه، و آنها را برای هدیه جنبانیدنی به حضور خداوند بجنبان. ۲۴ 24
௨௪அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,
وآنها را از دست ایشان گرفته، برای قربانی سوختنی بر مذبح بسوزان، تا برای خداوند عطرخوشبو باشد، زیرا که این قربانی آتشین خداونداست. ۲۵ 25
௨௫பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி.
و سینه قوچ قربانی تخصیص را که برای هارون است گرفته، آن را برای هدیه جنبانیدنی به حضور خداوند بجنبان. و آن حصه تو می‌باشد. ۲۶ 26
௨௬“ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.
و سینه جنبانیدنی و ساق رفیعه را که از قوچ قربانی تخصیص هارون و پسرانش جنبانیده، وبرداشته شد، تقدیس نمای. ۲۷ 27
௨௭மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
و آن از آن هارون و پسرانش از جانب بنی‌اسرائیل به فریضه ابدی خواهد بود، زیرا که هدیه رفیعه است و هدیه رفیعه از جانب بنی‌اسرائیل از قربانی های سلامتی ایشان برای خداوند خواهد بود. ۲۸ 28
௨௮அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் யெகோவாவுடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும்.
ورخت مقدس هارون بعد از او، از آن پسرانش خواهد بود، تا در آنها مسح و تخصیص شوند. ۲۹ 29
௨௯“ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
هفت روز، آن کاهن که جانشین او می‌باشد ازپسرانش و به خیمه اجتماع داخل شده، خدمت قدس را می‌کند، آنها را بپوشد. ۳۰ 30
௩0அவனுடைய மகன்களில் அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும்.
و قوچ قربانی تخصیص را گرفته، گوشتش را در قدس آب پزکن. ۳۱ 31
௩௧“பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
و هارون و پسرانش گوشت قوچ را با نانی که در سبد است، به در خیمه اجتماع بخورند. ۳۲ 32
௩௨அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.
و آنانی که برای تخصیص و تقدیس خود بدین چیزها کفاره کرده شدند، آنها را بخورند، لیکن شخص اجنبی نخورد زیرا که مقدس است. ۳۳ 33
௩௩அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடக்கூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
و اگر چیزی از گوشت هدیه تخصیص و از نان، تاصبح باقی ماند، آن باقی را به آتش بسوزان، و آن را نخورند، زیرا که مقدس است. ۳۴ 34
௩௪பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது.
«همچنان به هارون و پسرانش عمل نما، موافق آنچه به تو امر فرموده‌ام، هفت روز ایشان را تخصیص نما. ۳۵ 35
௩௫“இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து,
و گوساله قربانی گناه را هرروز بجهت کفاره ذبح کن. و مذبح را طاهر سازبه کفاره‌ای که بر آن می‌کنی، و آن را مسح کن تامقدس شود. ۳۶ 36
௩௬பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும்.
هفت روز برای مذبح کفاره کن، وآن را مقدس ساز، و مذبح، قدس اقداس خواهدبود. هر‌که مذبح را لمس کند، مقدس باشد. ۳۷ 37
௩௭ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
واین است قربانی هایی که بر مذبح باید گذرانید: دوبره یکساله. هر روز پیوسته ۳۸ 38
௩௮“பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
یک بره را در صبح ذبح کن، و بره دیگر را در عصر ذبح نما. ۳۹ 39
௩௯ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.
و ده‌یک از آرد نرم سرشته شده با یک ربع هین روغن کوبیده، و برای هدیه ریختنی، یک ربع هین شراب برای هر بره خواهد بود. ۴۰ 40
௪0ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும்.
و بره دیگر رادر عصر ذبح کن و برای آن موافق هدیه صبح وموافق هدیه ریختنی آن بگذران، تا عطر خوشبوو قربانی آتشین برای خداوند باشد. ۴۱ 41
௪௧மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
این قربانی سوختنی دائمی، در نسلهای شما نزد دروازه خیمه اجتماع خواهد بود، به حضور خداوند، درجایی که با شما ملاقات می‌کنم تا آنجا به تو سخن گویم. ۴۲ 42
௪௨உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
و در آنجا با بنی‌اسرائیل ملاقات می‌کنم، تا از جلال من مقدس شود. ۴۳ 43
௪௩அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
و خیمه اجتماع و مذبح را مقدس می‌کنم، و هارون وپسرانش را تقدیس می‌کنم تا برای من کهانت کنند. ۴۴ 44
௪௪ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி,
و در میان بنی‌اسرائیل ساکن شده، خدای ایشان می‌باشم. ۴۵ 45
௪௫இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.
و خواهند دانست که من یهوه، خدای ایشان هستم، که ایشان را از زمین مصر بیرون آورده‌ام، تا در میان ایشان ساکن شوم. من یهوه خدای ایشان هستم. ۴۶ 46
௪௬தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய யெகோவா.

< خروج 29 >