< ၁ ရာဇဝင်ချုပ် 29 >

1 တဖန် ဒါဝိဒ် မင်းကြီး က၊ ဘုရားသခင် ရွေးကောက် တော်မူသောငါ့ သား ရှောလမုန် သည် အသက် ငယ်၍ နု သေး၏။ အမှု မူကား ကြီး လှ၏။ တည်ဆောက်ရသောဗိမာန် သည် လူ အဘို့ မ ဟုတ်၊ ထာဝရ အရှင် ဘုရားသခင် အဘို့ ဖြစ်၏။
அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே.
2 ငါ ၏ဘုရားသခင် အိမ် တော်အဘို့ ရွှေ တန်ဆာလုပ်စရာဘို့ ရွှေ ကို၎င်း၊ ငွေ တန်ဆာလုပ်စရာဘို့ ငွေ ကို ၎င်း၊ ကြေးဝါ တန်ဆာလုပ်စရာဘို့ ကြေးဝါ ကို၎င်း၊ သံ တန်ဆာလုပ်စရာဘို့ သံ ကို၎င်း၊ သစ်သား တန်ဆာလုပ်စရာဘို့ သစ်သား ကို၎င်း၊ ရှဟံ ကျောက် နှင့် အရောင် မျိုးထွက်၍ စီ စရာဘို့ ကောင်း သောကျောက် ၊ အဘိုး ထိုက် သော ကျောက် မျိုး ၊ များစွာ သော ကျောက်ဖြူ တို့ကို၎င်း၊ တတ်နိုင်သမျှ အတိုင်းငါပြင်ဆင် ပြီ။
நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன்.
3 ငါ ၏ဘုရားသခင် အိမ် တော်၌ငါ့စိတ်နှလုံးစွဲလမ်းသောကြောင့်၊
அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன்.
4 ထိုသန့်ရှင်း သောအိမ် အဘို့ ပြင်ဆင် သော ဥစ္စာမှတပါး ကိုယ်ဥစ္စာထဲက ဩဖိရ ရွှေ အခွက် သုံးသောင်းနှင့်ကျောက်ထရံ တို့ကို မွမ်းမံ စရာဘို့ ငွေ စင် ခုနစ် သောင်းကို ငါ ၏ဘုရားသခင် အိမ် တော်အဘို့ ငါပေး ၏။
ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும்,
5 ရွှေ သည် ရွှေ တန်ဆာအဘို့ ၊ ငွေ သည် ငွေ တန်ဆာအဘို့ နှင့် ဆရာသမား လုပ် သမျှ အဘို့ ဖြစ်၏။ သို့ဖြစ်၍ ယနေ့ ထာဝရဘုရား အား ကိုယ်ဥစ္စာကို အဘယ်သူ ပူဇော် ချင်သနည်းဟု ပရိသတ် အပေါင်း တို့အား မေး တော်မူလျှင်၊
அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான்.
6 အဆွေအမျိုး တို့၏ အကြီးအကဲ များ၊ ဣသရေလ အမျိုး အသီးအသီးတို့ကို အုပ်စိုးသောမင်း များ၊ လူ တထောင် အုပ် ၊ တရာ အုပ်များ၊ ရှင်ဘုရင် ၏ အမှု တော်ကို စီရင် သောသူများတို့သည် ကြည်ညို သောစိတ် ရှိ၍၊
அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள்.
7 ဘုရားသခင် ၏အိမ် တော်မှုကို ဆောင်ရွက် ရာဘို့ ရွှေ အခွက် ငါး သောင်းနှင့် ရွှေဒင်္ဂါး တသောင်း ၊ ငွေ အခွက် တသိန်း ၊ ကြေးဝါ အခွက် တသိန်း ရှစ် သောင်း၊ သံ အခွက် တသန်း ကို လှူ ကြ၏။
அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
8 ကျောက်မြတ် ရှိ သောသူတို့ သည်လည်း ဂေရရှုံ အမျိုးသားယေဟေလ လက် ဖြင့် ထာဝရဘုရား ၏ အိမ် တော်ဘဏ္ဍာ ထဲသို့ သွင်း ကြ၏။
அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள்.
9 လူ များတို့သည် စုံလင် သောနှလုံး ၊ ကြည်ညို သောစိတ် သဘောရှိ၍ ထာဝရဘုရား အား ပူဇော်သောကြောင့် ဝမ်းမြောက် ကြ၏။ ဒါဝိဒ် မင်းကြီး သည်လည်း အလွန်တရာ ဝမ်းမြောက် တော်မူ၏။
தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
10 ၁၀ ထိုအခါ ဒါဝိဒ် က၊ အကျွန်ုပ် တို့အဘ ဣသရေလ ၏ဘုရားသခင် ထာဝရဘုရား ၊ ကိုယ်တော်သည် ကမ္ဘာ အဆက်ဆက်မင်္ဂလာ ရှိတော်မူစေသတည်း။
அங்கிருந்த மக்கள் சபைக்கு முன்னிலையில் தாவீது யெகோவாவைத் துதித்தான். அவன், “யெகோவாவே, நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் எங்கள் முற்பிதாவான இஸ்ரயேலின் இறைவனாய் இருப்பவரே, உமக்கே துதி உண்டாவதாக.
11 ၁၁ အိုထာဝရဘုရား ၊ ကိုယ်တော် သည် ဘုန်း တန်ခိုး အာနုဘော်၊ အောင်မြင်ခြင်းအခွင့်၊ အာဏာတော်နှင့် ပြည့်စုံတော်မူ၏။ ကောင်းကင် မြေကြီး ၌ ရှိရှိသမျှ ကို ပိုင်တော်မူ၏။ အိုထာဝရဘုရား ၊ ကိုယ်တော် သည် အစိုးရတော်မူ၏။ ခပ်သိမ်း သောသူတို့၏ အထွဋ် ၊ မြင့်မြတ်တော်မူ ၏။
யெகோவாவே, மேன்மையும், வல்லமையும், மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே. வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே. நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
12 ၁၂ ဂုဏ် အသရေနှင့် စည်းစိမ် ဥစ္စာသည် ကျေးဇူးတော်ကြောင့်သာ ဖြစ်၏။ ကိုယ်တော် သည် ခပ်သိမ်း သောသူတို့ ကို အုပ်စိုး တော်မူ၏။ ခွန်အား အစွမ်း သတ္တိကို ပေးပိုင်တော်မူ၏။ ခပ်သိမ်း သောသူတို့အား ကြီးမြတ် သော အခွင့်နှင့် ခိုင်ခံ့ သော အခွင့်ကိုပေး ပိုင်တော်မူ၏။
செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன; எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே. எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும் பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.
13 ၁၃ သို့ဖြစ်၍ အကျွန်ုပ် တို့၏ ဘုရားသခင် ၊ ကျေးဇူး တော်ကြီးလှပါသည်ဟု အကျွန်ုပ် တို့သည် ဝန်ခံ၍ ဘုန်း ကြီးသော နာမ တော်ကို ချီးမွမ်း ကြပါ၏။
எங்கள் இறைவனே, இப்பொழுது உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது மகிமையுள்ள பெயருக்கும் துதி செலுத்துகிறோம்.
14 ၁၄ သို့ရာတွင် ကြည်ညို သောစိတ်နှင့် ဤမျှလောက်ပူဇော်နိုင် အောင် အကျွန်ုပ် နှင့် အကျွန်ုပ် ၏လူ တို့သည် အဘယ်သို့ သောသူဖြစ်ပါသနည်း။ ခပ်သိမ်း သောအရာတို့ သည် တန်ခိုးတော်ကြောင့်ဖြစ်ပါ၏။ အကျွန်ုပ်တို့သည် ကိုယ်တော် ၏ဥစ္စာထဲက သာ ကိုယ်တော် အား ပူဇော် ပါ၏။
“இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம்.
15 ၁၅ အကျွန်ုပ် တို့သည် ဘိုးဘေး များကဲ့သို့ ရှေ့ တော်၌ ဧည့်သည် အာဂန္တုဖြစ်ပါ၏။ မြေကြီး ပေါ် မှာ နေရသော ကာလ သည် အရိပ် ကဲ့သို့ ဖြစ်ပါ၏။ မှီခို ရာမ ရှိပါ။
நாங்கள் உமக்கு முன்பாக எங்களுடைய முற்பிதாக்களைப் போலவே அந்நியரும், வழிப்போக்கருமாய் இருக்கிறோம். பூமியிலே எங்கள் நாட்கள் எதிர்பார்பற்ற நிழலைப்போல இருக்கிறது.
16 ၁၆ အကျွန်ုပ် တို့၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ၊ ကိုယ်တော် ၏နာမ အဘို့ ကိုယ်တော် ၏အိမ် ကို တည်ဆောက် ခြင်းအလိုငှါ ၊ အကျွန်ုပ်တို့ ပြင်ဆင် သော ဤ ဘဏ္ဍာ ရှိသမျှ သည် တန်ခိုးတော်ကြောင့်ဖြစ်ပါ၏။ အလုံးစုံ တို့ကို ကိုယ်တော် ပိုင်တော်မူ၏။
யெகோவாவாகிய எங்கள் இறைவனே, உமது பரிசுத்த பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் ஏராளமாய் கொடுத்திருக்கும் இந்த நிறைவு உமது கரத்திலிருந்தே வருகின்றன; இவை எல்லாம் உமக்கே சொந்தமானவை.
17 ၁၇ အကျွန်ုပ် တို့၏ ဘုရားသခင် ၊ ကိုယ်တော် သည် စိတ် နှလုံးကို စစ် ၍ ဖြောင့်မတ် ခြင်းသဘောကို နှစ်သက် တော်မူသည်ကို အကျွန်ုပ်သိ ပါ၏။ အကျွန်ုပ် မူကား ဖြောင့်မတ် ခြင်းသဘော၊ ကြည်ညို သောစိတ်ရှိသည်နှင့် ဤ ဘဏ္ဍာရှိသမျှ ကို ပူဇော်ပါ၏။ စည်းဝေးလျက်ရှိသောကိုယ်တော် ၏ လူ တို့သည် ကြည်ညို သောစိတ် နှင့် ပူဇော်ကြသည်ကို မြင် ၍ဝမ်းမြောက် ပါ၏။
என் இறைவனே, நீர் இருதயத்தை சோதிக்கிறவர் என்றும், உத்தமத்தில் மகிழ்ச்சிகொள்பவர் என்றும் நான் அறிவேன். இப்பொருட்கள் எல்லாவற்றையும் நான் விருப்பத்துடனும், உண்மையான நோக்கத்துடனும் கொடுத்திருக்கிறேன். இங்கிருக்கும் உமது மக்கள் எவ்வளவு விருப்பத்துடன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
18 ၁၈ အကျွန်ုပ် တို့ ဘိုးဘေး အာဗြဟံ ၊ ဣဇာက် ၊ ဣသရေလ တို့၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ၊ ကိုယ်တော် ၏ လူ တို့သည် ဤ အမှုအရာများကို၊ အစဉ် အောက်မေ့စွဲလမ်း သောစိတ် သဘောရှိမည်အကြောင်း၊ သူ တို့စိတ် နှလုံးသည် ကိုယ်တော် ဘက်၌ တည်ကြည် မည်အကြောင်းကယ်မ သနားတော်မူပါ။
எங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்களின் உள்ளத்தில் இந்த ஆசையை என்றென்றைக்கும் வைத்திரும். அவர்கள் இருதயத்தை உமக்கு உண்மையுள்ளதாக வைத்திரும்.
19 ၁၉ အကျွန်ုပ် ၏သား ရှောလမုန် သည်လည်း ကိုယ်တော် ၏သက်သေခံ ချက်၊ ထုံးဖွဲ့ ချက်ပညတ် တရားတို့ကို စောင့်ရှောက် ၍ ၊ အကျွန်ုပ် ပြင်ဆင် သော အမှုကို အကုန်အစင် ပြီးစီးစေလျက်၊ ဗိမာန် တော်ကို တည်ဆောက် နိုင် မည်အကြောင်း ၊ စုံလင် သော စိတ် နှလုံးကိုပေး သနား တော်မူပါဟု၊ ပရိသတ် အပေါင်း တို့ရှေ့ မှာ ထာဝရဘုရား ကို ကောင်းကြီး ပေးလျက် မြွက်ဆို ၏။
எனது மகன் சாலொமோன் உம்முடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், நியமங்களையும் முழுமனதுடன் செய்யும் எல்லா ஆற்றலைக் கொடும். நான் ஆயத்தம் செய்த, இந்தப் பெரிய ஆலயத்தைக் கட்டும்படி வேண்டிய எல்லாவற்றையும் செய்ய மனப்பக்குவத்தைக் கொடும்.”
20 ၂၀ ပရိသတ် အပေါင်း တို့အား လည်း၊ သင် တို့၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ကို ကောင်းကြီး ပေးကြလော့ဟု မိန့် တော်မူသည်အတိုင်း ၊ ပရိသတ် အပေါင်း တို့သည် ဘိုးဘေး တို့၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ကို ကောင်းကြီး ပေးလျက် ဦးချ ၍ ထာဝရဘုရား ကို၎င်း ၊ ရှင် ဘုရင်ကို၎င်းရှိခိုး ကြ၏။
அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள்.
21 ၂၁ နက်ဖြန် နေ့၌ လည်း ယဇ် ပူဇော်ခြင်း အမှုကိုပြု၍ နွား တထောင် ၊ သိုး တထောင် ၊ သိုးသငယ် တထောင် တို့ကို မီး ရှို့သဖြင့်၊ သွန်းလောင်း ရာ ပူဇော်သက္ကာတို့နှင့်တကွဣသရေလ အမျိုးတမျိုးလုံး အတွက် ထာဝရဘုရား အား များစွာ သော ယဇ် ကို ပူဇော် ကြ၏။
அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள்.
22 ၂၂ ထို နေ့ခြင်းတွင် ထာဝရဘုရား ရှေ့ တော်၌ စား သောက် ၍ ပျော်မွေ့ ခြင်းကို ပြုလျက်ဒါဝိဒ် ၏ သား တော် ရှောလမုန် ကို ရှင် ဘုရင်အရာ၌ ဒုတိယ အကြိမ် ချီးမြှောက် ၍ ထာဝရဘုရား အောက်မှာ မင်း ဖြစ်စေခြင်းငှါ၎င်း၊ ဇာဒုတ် ကိုယဇ်ပုရောဟိတ် ဖြစ်စေခြင်းငှါ၎င်း ဘိသိက် ပေးကြ၏။
அந்த நாளிலே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பெருமகிழ்ச்சியுடன் சாப்பிட்டு குடித்தார்கள். அதன்பின் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகத் தாவீதின் மகன் சாலொமோனை ஆளுநனாய் இருக்கும்படியும், சாதோக்கை ஆசாரியனாக இருக்கும்படியும் இரண்டாம் முறையாக அபிஷேகம்பண்ணி ஏற்றுக்கொண்டார்கள்.
23 ၂၃ ထိုအခါရှောလမုန် သည် ခမည်းတော် ဒါဝိဒ် ကိုယ်စား ရှင်ဘုရင် အရာကိုခံ၍ ထာဝရဘုရား ၏ ရာဇ ပလ္လင် တော်ပေါ် မှာ ထိုင် လျက် ဘုန်း ကြီးတော်မူ၏။ ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့သည် စကားတော်ကို နားထောင် ကြ၏။
எனவே சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் இடத்தில் யெகோவாவின் அரியணையில் அரசனாய் அமர்ந்திருந்தான். அவன் செழிப்படைந்தான்; எல்லா இஸ்ரயேலரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
24 ၂၄ မှူးတော် မတ်တော်၊ အရာ ကြီးသော သူအပေါင်း တို့နှင့် ဒါဝိဒ် မင်းကြီး ၏သား တော်အပေါင်း တို့သည် ရှောလမုန် မင်းကြီး ၏ အုပ်စိုး ခြင်းကို ဝန်ခံကြ၏။
எல்லா அதிகாரிகளும், செல்வாக்குள்ளவர்களும் தாவீதின் மற்ற எல்லா மகன்களும்கூட அரசன் சாலொமோனுக்கு கீழ்ப்படிவதாக வாக்குக்கொடுத்தனர்.
25 ၂၅ ထာဝရဘုရား သည် ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့ရှေ့ မှာ ရှောလမုန် ကိုအလွန် ချီးမြှောက် ၍ ဣသရေလ ရှင်ဘုရင် တယောက် မျှ မ ခံစဖူးသော ဘုန်း အာနုဘော်တော်ကိုပေး သနားတော်မူ၏။
யெகோவா சாலொமோனை எல்லா இஸ்ரயேலரின் பார்வையிலும் மிகவும் உயர்த்தினார். இஸ்ரயேலில் ஒரு அரசனும் முன் ஒருபோதும் பெற்றிருக்காத அரச மகத்துவத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.
26 ၂၆ ယေရှဲ ၏သား ဒါဝိဒ် သည် ဣသရေလ နိုင်ငံလုံး ကို အစိုးရသောမင်း ဖြစ်တော်မူ၏။
இவ்விதமாக ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாயிருந்தான்.
27 ၂၇ ဟေဗြုန် မြို့၌ ခုနစ် နှစ် ၊ ယေရုရှလင် မြို့၌ သုံး ဆယ်သုံး နှစ်မင်းပြု ၍ဣသရေလ နိုင်ငံကို စိုးစံ သော နှစ် ပေါင်းကား အနှစ် လေး ဆယ်တည်း။
அவன் இஸ்ரயேலை நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். எப்ரோனில் ஏழு வருடமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் ஆட்சிசெய்தான்.
28 ၂၈ ဒါဝိဒ်သည် အသက် ကြီးရင့်၍ နေ့ရက် ကာလ ပြည့်စုံ ခြင်း၊ ဘုန်း စည်းစိမ် ကြွယ်ဝခြင်းရှိလျက် အနိစ္စ ရောက်၍ သား တော်ရှောလမုန် သည် ခမည်းတော် အရာ ၌ နန်းထိုင် လေ၏။
அவன் நீடித்த வாழ்வையும், செல்வத்தையும், கனத்தையும் அனுபவித்தவனாக நல்ல முதிர்வயதில் இறந்தான். அவனுடைய இடத்தில் அவன் மகன் சாலொமோன் அரசனாக இருந்தான்.
29 ၂၉
தாவீது அரசனின் ஆட்சிக்காலத்தில் தொடக்கமுதல் முடிவுவரை நடந்த நிகழ்ச்சிகள் யாவும் தரிசனக்காரனான சாமுயேலின் பதிவேடுகளிலும், இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், தரிசனக்காரனான காத்தின் பதிவேடுகளிலும் எழுதப்பட்டுள்ளன.
30 ၃၀ ဒါဝိဒ် မင်းကြီး ပြုမူသော အမှုအရာ အစ အဆုံး ရှိသမျှ၊ အစိုးရ ခြင်း၊ တန်ခိုး ကြီးခြင်းနှင့်တကွ၊ ကိုယ်တော်မှစ၍ ဣသရေလ ပြည်၊ အခြားတပါးသောတိုင်းပြည် များတို့၌ ဖြစ်လေသမျှ သောအမှုအရာအလုံးစုံတို့သည် ပရောဖက် ရှမွေလ ၏ကျမ်းစာ ၊ ပရောဖက် နာသန် ၏ကျမ်းစာ ၊ ပရောဖက် ဂဒ် ၏ကျမ်းစာ တို့၌ ရေး ထားလျက်ရှိ၏။
அத்துடன் அவனுடைய ஆட்சியைப்பற்றிய விபரமும், அவனுடைய வல்லமையும், இஸ்ரயேலையும், மற்ற எல்லா நாட்டு அரசுகளையும் சுற்றியிருந்த சூழ்நிலைகளும் எழுதப்பட்டுள்ளன.

< ၁ ရာဇဝင်ချုပ် 29 >